|
Post by Sumi on Apr 26, 2012 8:33:47 GMT 5.5
* அவரவர் கடமையை சரிவர செய்தாலே மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை அனைத்தும் உண்டாகிவிடும். * மனசுத்தத்தோடு மகிழ்ச்சியாக இருங்கள். எங்கு சென்றாலும் அங்கு நல்லமுறையில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள். * மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அதே நிலையிலிருந்து அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தலைவர்களின் கடமை. * தேவைக்கு குறைவாகச் செலவு செய்து எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து அதைத் தர்மத்துக்கு செலவழிப்பது தான் தனக்கு மிஞ்சிய தர்மம் என்பதன் பொருள். * துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடுகிறது. * நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபடப் பழக வேண்டும். * வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அதன் ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கத்தினால் அழகு ஏற்படுகிறது.
|
|
|
Post by krsiyer on Apr 26, 2012 11:19:33 GMT 5.5
Well said Maha Periva ! Thanks for sharing jaya jaya sankara, hara hara sankara
|
|