|
Post by madambakkamshanks on Jan 28, 2014 7:20:51 GMT 5.5
காஞ்சியில் அருள்புரியும்மாமுனியே (நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே )
காஞ்சியில் அருள்புரியும்மாமுனியே - உந்தன் காலடி பணிந்தோம் காப்பீரே காஞ்சி மாநகரமதுஉள்ளவரையில் -உந்தன் காமகோடி பீடம் அது அருள் சுரக்கும்
நெற்றியின் வெண்ணீரை கண்டதுமே - அது வெற்றியை தந்திடுமே வாழ்வினிலே பற்றிட உந்தன் பொற்பாதம் அது பெற்றுத் தந்திடுமே நற்கதியே
அபயத் திருகரத்தினை கண்டதுமே - வாழ்வில் ஜெயம் வந்து சேர்ந்திடுமே ஜகத் குருவே சகாயம் நீர் புரிந்திடுவீர் சற்குருவே - என் அபயக் குரல் கேட்டு அருள் புரிவீர்
பழி பாவச் செயல்கள் நான்பல புரிந்தேன் - உன் விழி பார்வையால் என்னை வழி நடத்து சுழி போட்டு உன் பெயரை சொல்லி மகிழ்ந்தேன் - என் வழி மாற்றி வழி காட்டு உன் வேல் விழியால்
ஹர ஹர சங்கரஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கரஹர ஹர சங்கர காமாக்ஷிசங்கரகாமகோடி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர - தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 05.02.2013
|
|
|
Post by soundaryasatheesh on Jul 16, 2014 19:33:07 GMT 5.5
Awesome!! Periyava sharanam!"
|
|