Post by Sumi on Jan 20, 2014 20:42:49 GMT 5.5
Email message forwarded by our respected member Sri Ramanathan
பாரதி என்றால் ஒளியில் களிப்பவள். ஞான ஒளி ஆடாது, அசையாது, பிசிறின்றி, கூராக, ஒருமுகப்பட்டு நிற்பதான ஆன்ம களிப்பு. அப்படித்தான் பாரதி ஸ்வாமிகள் உள்நோக்கி ஒரே முக பட்டிருந்தார். ஸரஸ்-வதி என்றால் நீர் நிலையில் நித்யவாஸம் செய்பவள். நீர் நிலை நானா திசையிலும் பாய்ந்து பயிரும் உயிரும் தழைக்க செய்யத்தானே இருக்கிறது? அப்படியே சரஸ்வதி ஸ்வாமிகள் நானா துறைகளிலும் பிரவேசித்து ப்ரவஹித்து பல்வகை மாந்தருக்கும் அறிவூட்டுகிறார்.
இதனை பெரியவாளிடம் வாய்மொழியாக சொல்ல கூச்சமாக இருந்ததால் கடிதமாக எழுதி அனுப்பினேன்.
அடுத்த முறை-ஒரு காலை வேளை-பெரியவாளின் தரிசனத்திற்கு போகும்போது கடிதம் பற்றி அவர் என்ன சொல்வார் என்பதே நினைப்பாக இருந்தது.
முகாமில் பெரியவாள் இல்லை. சுற்றுப்புறங்களுக்கு விஜயம் செய்ய சென்றிருப்பதாக தெரிந்தது. அவரது திரும்புகைக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நண்பகலும் வந்து விட்டது. எனக்கோ அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் அலுவலகம் திரும்ப வேண்டிய நிர்பந்தம்.
அயனான கட்டத்தில் பெரியவாள் வந்து சேர்ந்தார். போன இடத்தில் விழுப்பு பட்டு விட்டதோ என்னவோ, நேரே கிணற்றடிக்கு சென்றார்.
கிங்கரர் கடத்தை கயிற்றில் சுருக்கிட்டு கிணற்றில் விட்டார்.
'உச்சி சூர்யன் கிணத்துலே தெரியறதா, பாரு' என்று அவரிடம் பெரியவாள் கூறினார்.
'தெரியறது'
பெரியவாள் என்னை பார்த்தார், 'ஏதாவது தோண்றதா?' என்று கேட்டார்.
அத்வைத சாஸ்திரத்தில் இரண்டு விதமான கொள்கைகள். ஒரே சூரியன் பல நீர்த்துளிகளில் ஒவ்வொன்றுக்குள்ளும் பிரதிபலிப்பது போல, ஏக சைதன்யமே, அனேக ஜீவ அந்தகரணம் உள்ளும் பிரதிபலிக்கிறது என்று ஒரு கொள்கை - 'பிரதிபிம்ப வாதம்' என்பது. பிரதிபலிப்பு என்பது சரியல்ல. அந்த சைதன்யம் ஒன்றே தான் அசலாக அனைத்து ஜீவர்களின் உள்ளும் உறைவது என கருதும் மாற்று கொள்கை காரர்கள் அதற்கும் உவமை கூறுவார்கள். எங்கும் விரிந்த ஆகாசமே தான் சாக்ஷாத்தாக அனேக காலி கடமுள்ளும் இருப்பது போல, கிணற்றுக்குள்ளேயே கடத்தை முழுக்கும் போது அசல் அந்த நீரேதான் கடத்துக்குள் இருப்பது போல என்பார்கள். இக்கொள்கை 'அவத்சேத வாதம்' எனப்படும்.
இங்கே கிணற்றில் சூரியனின் பிரதிபிம்பம்; கிங்கரர் கடத்தை கட்டி இறக்குகிறார்.
டக்கென்று புத்தியில் பொறி தட்ட 'பிரதிபிம்ப வாதம், அவத்சேத வாதம் இரண்டுக்கும் திருஷ்டாந்தம் தெரிகிறது' என்றேன்.
'அது இல்லை' என்னும் பாவனையில் பெரியவாள் தலை அசைத்தார்.
கிணற்றை பார்த்தார். சூரியனை பார்த்தார். என்னை குறுகுறு என்று பார்த்து, 'சரஸ்லே பா' என்றார்.
அப்படியே ஸ்நானத்திற்கு போய்விட்டார்.
ரோமாஞ்சம் அடைந்தேன். மஹா பெரியவாள் எனும் கருணா சரசுக்குள் பிம்பமிட்டு பிரகாசிக்கும் ஞான பா(னு)வாகவே பாரதி சுவாமிகளை உணர்ந்தேன்.
மறுபாதி - அந்த ஞான ஜோதியுள்ளும் இந்த கருணைக் கசிவு உண்டென்பது - தன்னால் மனத்தில் மேவியது.
ஆம், இரு சந்திரசேகரர்களும் சங்கர நாராயண மூர்த்தத்தை பொய்கையார் மெய்ம்மையால் பாடியவாறு,
இருவரங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்தென்றும் உளன்
நன்றி: அண்ணா ஸ்ரீ ரா. கணபதி அவர்கள், கருணைக்கடலில் சில அலைகள் புத்தகத்தில்.
பாரதி என்றால் ஒளியில் களிப்பவள். ஞான ஒளி ஆடாது, அசையாது, பிசிறின்றி, கூராக, ஒருமுகப்பட்டு நிற்பதான ஆன்ம களிப்பு. அப்படித்தான் பாரதி ஸ்வாமிகள் உள்நோக்கி ஒரே முக பட்டிருந்தார். ஸரஸ்-வதி என்றால் நீர் நிலையில் நித்யவாஸம் செய்பவள். நீர் நிலை நானா திசையிலும் பாய்ந்து பயிரும் உயிரும் தழைக்க செய்யத்தானே இருக்கிறது? அப்படியே சரஸ்வதி ஸ்வாமிகள் நானா துறைகளிலும் பிரவேசித்து ப்ரவஹித்து பல்வகை மாந்தருக்கும் அறிவூட்டுகிறார்.
இதனை பெரியவாளிடம் வாய்மொழியாக சொல்ல கூச்சமாக இருந்ததால் கடிதமாக எழுதி அனுப்பினேன்.
அடுத்த முறை-ஒரு காலை வேளை-பெரியவாளின் தரிசனத்திற்கு போகும்போது கடிதம் பற்றி அவர் என்ன சொல்வார் என்பதே நினைப்பாக இருந்தது.
முகாமில் பெரியவாள் இல்லை. சுற்றுப்புறங்களுக்கு விஜயம் செய்ய சென்றிருப்பதாக தெரிந்தது. அவரது திரும்புகைக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நண்பகலும் வந்து விட்டது. எனக்கோ அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் அலுவலகம் திரும்ப வேண்டிய நிர்பந்தம்.
அயனான கட்டத்தில் பெரியவாள் வந்து சேர்ந்தார். போன இடத்தில் விழுப்பு பட்டு விட்டதோ என்னவோ, நேரே கிணற்றடிக்கு சென்றார்.
கிங்கரர் கடத்தை கயிற்றில் சுருக்கிட்டு கிணற்றில் விட்டார்.
'உச்சி சூர்யன் கிணத்துலே தெரியறதா, பாரு' என்று அவரிடம் பெரியவாள் கூறினார்.
'தெரியறது'
பெரியவாள் என்னை பார்த்தார், 'ஏதாவது தோண்றதா?' என்று கேட்டார்.
அத்வைத சாஸ்திரத்தில் இரண்டு விதமான கொள்கைகள். ஒரே சூரியன் பல நீர்த்துளிகளில் ஒவ்வொன்றுக்குள்ளும் பிரதிபலிப்பது போல, ஏக சைதன்யமே, அனேக ஜீவ அந்தகரணம் உள்ளும் பிரதிபலிக்கிறது என்று ஒரு கொள்கை - 'பிரதிபிம்ப வாதம்' என்பது. பிரதிபலிப்பு என்பது சரியல்ல. அந்த சைதன்யம் ஒன்றே தான் அசலாக அனைத்து ஜீவர்களின் உள்ளும் உறைவது என கருதும் மாற்று கொள்கை காரர்கள் அதற்கும் உவமை கூறுவார்கள். எங்கும் விரிந்த ஆகாசமே தான் சாக்ஷாத்தாக அனேக காலி கடமுள்ளும் இருப்பது போல, கிணற்றுக்குள்ளேயே கடத்தை முழுக்கும் போது அசல் அந்த நீரேதான் கடத்துக்குள் இருப்பது போல என்பார்கள். இக்கொள்கை 'அவத்சேத வாதம்' எனப்படும்.
இங்கே கிணற்றில் சூரியனின் பிரதிபிம்பம்; கிங்கரர் கடத்தை கட்டி இறக்குகிறார்.
டக்கென்று புத்தியில் பொறி தட்ட 'பிரதிபிம்ப வாதம், அவத்சேத வாதம் இரண்டுக்கும் திருஷ்டாந்தம் தெரிகிறது' என்றேன்.
'அது இல்லை' என்னும் பாவனையில் பெரியவாள் தலை அசைத்தார்.
கிணற்றை பார்த்தார். சூரியனை பார்த்தார். என்னை குறுகுறு என்று பார்த்து, 'சரஸ்லே பா' என்றார்.
அப்படியே ஸ்நானத்திற்கு போய்விட்டார்.
ரோமாஞ்சம் அடைந்தேன். மஹா பெரியவாள் எனும் கருணா சரசுக்குள் பிம்பமிட்டு பிரகாசிக்கும் ஞான பா(னு)வாகவே பாரதி சுவாமிகளை உணர்ந்தேன்.
மறுபாதி - அந்த ஞான ஜோதியுள்ளும் இந்த கருணைக் கசிவு உண்டென்பது - தன்னால் மனத்தில் மேவியது.
ஆம், இரு சந்திரசேகரர்களும் சங்கர நாராயண மூர்த்தத்தை பொய்கையார் மெய்ம்மையால் பாடியவாறு,
இருவரங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்தென்றும் உளன்
நன்றி: அண்ணா ஸ்ரீ ரா. கணபதி அவர்கள், கருணைக்கடலில் சில அலைகள் புத்தகத்தில்.