Post by radha on Dec 8, 2013 0:35:48 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
தினமலர் -- கல்கி செய்தி
அருள்வாக்கு - சிவோஹம்!
ஜனவரி 24,2012,00:
ஒரே ஆகாசம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆகாசம் எல்லாவற்றிற்கும் இடம் கொடுக்கிறது. எங்கும் பரவி இருக்கிற இந்த ஆகாசத்திற்கு "மஹாகாசம்' என்று பெயர்.
திறந்த வெளியில் காலியாகப் பல குடங்களை வைத்தால் அவற்றுக்குள்ளும் ஆகாசம்தான் இருக்கிறது. குடத்திற்குள் இருக்கிற ஆகாசத்திற்கு "கடாகாசம்' என்று பெயர்.
கடம் என்றால் குடம். கடம் உடைந்து போனால் கடாகாசமும் போய் விடுமா? போகாது. கடாகாசமாகத் தனியாகத் தெரிந்தது மஹாகாசத்தில் கலந்து விடும்.
கடம் உடையாதபொழுது அந்த ஆகாசம் தனியாகச் சின்னதாக இருக்கிறது போல நமக்குத் தோன்றுகிறது. உடைந்து விட்டால் கடாகாசம் மஹாகாசமே ஆகிவிடுகிறது.
கடம் இருக்கிற அளவு எதுவோ அதற்குத் தகுந்தபடி இப்படிப்பட்ட பேதங்கள் ஏற்படுகின்றன. அதேமாதிரி பரமாத்மா அந்தந்த மனஸுக்குத் தக்கபடி வித்தியாஸமாகத் தோன்றுகின்றார்.
செம்பில் இருக்கிற ஜலம் பெரிய செம்பாயிருந்தால் பெரியதாகவும் சின்ன செம்பாயிருந்தால் சின்னதாகவும் தோன்றுகிறது. செம்பை உடைத்துவிட்டால் அந்த பேதங்களெல்லாம் போய்விடுகின்றன.
அதைப் போல மனஸ் போய் விட்டால் பேதபுத்தியும் போய்விடுகிறது. இப்படிச் சொல்வதுதான் அவச்சின்னவாதம் என்பது.
பரமாத்மாவே ஜீவாத்மா மாதிரி தோன்றுவதை இப்படி இரண்டு விதங்களில் விளக்கியிருக்கிறது.
ஆக பிரம்மத்துக்கு வேறாக ஒன்று இருக்கவே இல்லை. பரமாத்மாவுக்கு வேறானவனில்லை ஜீவாத்மா.
பரமாத்மாவே தான் வேறு மாதிரியான ஜீவாத்மாவாக நம்முடைய அஞ்ஞானம் மறைக்கிற வரையில் தோன்றுகிறான்.
மஹாகாசம், கிணற்று ஜலம் இவை மாதிரி நமக்குள்ளும் ஏக சைதன்யம் தவிர வேறு எதுவுமே இல்லை. பிரம்மம், சிவம் என்பதெல்லாம் அதைத்தான்.
வேறு வேறு போலத் தெரிந்தாலும், இப்படி இருக்கிற எல்லாமும் அந்த ஒன்றே என்ற ஞாபகத்தை உண்டாக்கிக் கொள்வதற்காகத் தான்.
"அஹம் பிரஹ்மாஸ்மி', "சிவோஹம்' என்று சொல்வது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.
தினமலர் -- கல்கி செய்தி
அருள்வாக்கு - சிவோஹம்!
ஜனவரி 24,2012,00:
ஒரே ஆகாசம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆகாசம் எல்லாவற்றிற்கும் இடம் கொடுக்கிறது. எங்கும் பரவி இருக்கிற இந்த ஆகாசத்திற்கு "மஹாகாசம்' என்று பெயர்.
திறந்த வெளியில் காலியாகப் பல குடங்களை வைத்தால் அவற்றுக்குள்ளும் ஆகாசம்தான் இருக்கிறது. குடத்திற்குள் இருக்கிற ஆகாசத்திற்கு "கடாகாசம்' என்று பெயர்.
கடம் என்றால் குடம். கடம் உடைந்து போனால் கடாகாசமும் போய் விடுமா? போகாது. கடாகாசமாகத் தனியாகத் தெரிந்தது மஹாகாசத்தில் கலந்து விடும்.
கடம் உடையாதபொழுது அந்த ஆகாசம் தனியாகச் சின்னதாக இருக்கிறது போல நமக்குத் தோன்றுகிறது. உடைந்து விட்டால் கடாகாசம் மஹாகாசமே ஆகிவிடுகிறது.
கடம் இருக்கிற அளவு எதுவோ அதற்குத் தகுந்தபடி இப்படிப்பட்ட பேதங்கள் ஏற்படுகின்றன. அதேமாதிரி பரமாத்மா அந்தந்த மனஸுக்குத் தக்கபடி வித்தியாஸமாகத் தோன்றுகின்றார்.
செம்பில் இருக்கிற ஜலம் பெரிய செம்பாயிருந்தால் பெரியதாகவும் சின்ன செம்பாயிருந்தால் சின்னதாகவும் தோன்றுகிறது. செம்பை உடைத்துவிட்டால் அந்த பேதங்களெல்லாம் போய்விடுகின்றன.
அதைப் போல மனஸ் போய் விட்டால் பேதபுத்தியும் போய்விடுகிறது. இப்படிச் சொல்வதுதான் அவச்சின்னவாதம் என்பது.
பரமாத்மாவே ஜீவாத்மா மாதிரி தோன்றுவதை இப்படி இரண்டு விதங்களில் விளக்கியிருக்கிறது.
ஆக பிரம்மத்துக்கு வேறாக ஒன்று இருக்கவே இல்லை. பரமாத்மாவுக்கு வேறானவனில்லை ஜீவாத்மா.
பரமாத்மாவே தான் வேறு மாதிரியான ஜீவாத்மாவாக நம்முடைய அஞ்ஞானம் மறைக்கிற வரையில் தோன்றுகிறான்.
மஹாகாசம், கிணற்று ஜலம் இவை மாதிரி நமக்குள்ளும் ஏக சைதன்யம் தவிர வேறு எதுவுமே இல்லை. பிரம்மம், சிவம் என்பதெல்லாம் அதைத்தான்.
வேறு வேறு போலத் தெரிந்தாலும், இப்படி இருக்கிற எல்லாமும் அந்த ஒன்றே என்ற ஞாபகத்தை உண்டாக்கிக் கொள்வதற்காகத் தான்.
"அஹம் பிரஹ்மாஸ்மி', "சிவோஹம்' என்று சொல்வது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.