Post by radha on Nov 9, 2013 1:37:06 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
MONTHLY ARCHIVES: NOVEMBER 2013--BALHANUMAN.BLOB
37-சந்திரசேகரம்–இந்திரா-செளந்தர்ராஜன்
Indira Soundarajan, Maha Periyavaa, Spiritual November 8, 2013
பெரியவரின் அந்த பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம்.
1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய், 2.அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள், 3.அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினை, 4.வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு, 5.உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசி.
6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடு, 7.அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய், 8.நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள், 9.உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார், 10.ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.
இதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதை நம்மால் பின்பற்ற முடியாது? இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும்? மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், இது போதுமா? இந்த பத்தைச் செய்தபடி எதை வேண்டுமானால் செய்து கொண்டு வாழலாமா என்று இடக்காக கேட்கக் கூடாது. இந்த பத்தின் வழி வாழப் பழகிவிட்டால் இடக்கு முடக்கான சிந்தனைகளே முதலில் தோன்றாது. வாழ்க்கை நிறைந்த மன நிம்மதியோடு ஒரு தெளிவுக்கு மாறுவதையும் உணரலாம். இதை வைராக்கியமாகப் பின்பற்ற வேண்டும். அதுதான் இதில் முக்கியம்.
இந்த பத்து கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு என்று இருக்கிறதல்லவா? அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ‘ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி’ என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே! இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.
கோவிந்த நாமம்தான் அது! ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…’ – இதுதான் பெரியவருக்கே தியான மந்திரம்! இந்த கோவிந்த நாமத்துக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்பதை அவரே திவ்யமாக எடுத்தும் காட்டுகிறார். அதை அவர் பாஷையிலே கேட்பது ஒரு அலாதி சுகம் அல்லவா?
இதை வாசிப்பவர்களில் பெரியவர் உபன்யாசம் கேட்டவர்கள் எவராவது இருந்தால், அவர்கள் அப்படியே அவர் குரலை கற்பனை செய்து கொள்ளுங்கள். அவரே இந்த தீபம் இதழ் வாயிலாக கோவிந்த நாம சிறப்பைச் சொல்ல மோட்சத்திலே இருந்து வந்தது போல் இருக்கும். இனி அவர் சொன்னது சொன்னபடி…
ராமாயாணத்தில் ஸ்ரீராமபட்டாபிஷேகம் மாதிரி, பாகவதத்தில் பகவானுக்கு பட்டாபிஷேகமான சந்தர்ப்பத்தில் சூட்டப்பட்ட பேர் ‘கோவிந்த’ என்பதே! ராமர் மாதிரி கிருஷ்ணர் பெரிய ராஜ்யத்துக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் பண்ணிக் கொள்ளாவிட்டாலும், தேவராஜாவாலேயே பட்டாபிஷேகம் பெற்றதால் இதற்கு ரொம்ப முக்கியத்துவமுண்டு. ‘கோவிந்த ராஜா’ என்று, கிருஷ்ணனுடைய பல பெயர்களில் இதற்கு மட்டும்தான் ‘ராஜா’ சேர்க்கிறோம்.
எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு. ஆண்டாள், திருப்பாவையில் குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்று கூப்பிடுகிறாள். இங்கே பகவானுக்குக் கூட குறை இருந்தது போல ஒரு தொனி இருப்பதை உணர முடிகிறதல்லவா? சாதாரண மனுஷன் குறைபட்டுக் கொண்டே இருக்கும் சுபாவமுள்ளவன். அதனால் அப்படியில்லாத ஒருவனை ‘குறைவில்லாத மனுஷ்யா’ என்று விசேஷித்தால் அது பொருந்தும்.
பகவானைப் பார்த்து ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? இப்படிச் சொல்வதாலேயே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி பகவானுக்கும் குறையிருந்த மாதிரி தான் எண்ண வேண்டி உள்ளது.
யோசித்துப் பார்த்ததில் பகவானுக்கு வாஸ்தவமாகவே பூர்வத்தில் ஒரு குறை இருந்து அது கோவிந்தனாக அவன் ஆன போதுதான் தீர்ந்தது என்று தெரிந்தது.
ராம பட்டாபிஷேகம் என்றேனே… அதிலேதான் குறை!
சக்ரவர்த்தியாக ராமன் முடி சூடியதில் என்ன குறை என்றால், இதை வால்மீகி தம்முடைய ராமாயணத்தில் வர்ணித்திருக்கிற தினுசிலேதான் குறை ஏற்பட்டுவிட்டது.
‘வசிஷ்ட வாம தேவாதி ரிஷிகள் எட்டு பேர்’ ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு பட்டாபிஷேகம் பண்ணினார்கள். ‘அது எப்படி இருந்தது தெரியுமா? அஷ்ட வசுக்கள் தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் பண்ணினது போல்’ என்று வால்மீகி வர்ணிக்கிறார்.
‘வசுவோ வாசவம்யதா.’ அதாவது, வாசவன் எனப்படும் இந்திரனுக்கு வசுக்கள் பண்ணியது போல் என்று அர்த்தம்.
இந்த உதாரணம்தான், ராமருக்கு குறை உண்டாக்கிவிட்டது. எதனாலென்றால், இந்திரன் சீரழிந்த கதையை இதே வால்மீகி பால காண்டத்தில் சொல்லியுள்ளார். கௌதம பத்னியாகிய அகலிகையிடம் தப்பாக நடந்துகொண்டு மகாபாபம் பண்ணினவன் இந்திரன். அதற்காக சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டு அவமானப்பட்டவனும் கூட. ஆனால் ராமரோ, அகலிகைக்கு தன் பாதங்களாலேயே புனருத்தாரணம் தந்தவராவார்.
கதை இப்படியிருக்க, ராமர் பட்டாபிஷேகத்துக்கு இந்திர பட்டாபிஷேகத்தையா உதாரணம் சொல்வது? ஒரு ஏகபத்தினி விரதனை ஒரு பாவியானவனோடு ஒப்பிடலாமா? ஆனால், வால்மீகி பாத்திரங்களின் குணாம்சத்தை ஒப்பிட்டு இப்படிச் சொல்லவில்லை. பட்டாபிஷேக கோலாகலத்தைப் பார்த்ததும் அவருக்கு இந்திரனுக்கான பட்டாபிஷேக கோலாகலம் நினைவுக்கு வரவும் அந்த விமரிசையான தன்மையை உத்தேசித்து ஒப்பிட்டுவிட்டார். அங்கே எட்டு வசுக்கள்; இங்கே எட்டு ரிஷிகள். நன்றாக ஒத்துப் போனதும் ஒரு காரணம்.
ஆனால், இந்தக் குறை கிருஷ்ணனிடம் நீங்குகிறது. எப்படித் தெரியுமா? கிருஷ்ணன், கோவர்த்தன கிரியை சுண்டுவிரலால் தூக்கி இந்திரன் பெய்வித்த மழையில் இருந்து யாதவர்கள் அவ்வளவு பேரையும் காப்பாற்றவும், இந்திரன் தன் தவறை உணர்ந்து கிருஷ்ணன் காலில் விழுந்து மன்னிப்பு கோருகிறான். இதைத்தான் ஆண்டாளும் உணர்ந்து, ‘குறைவொன்று மில்லாத கோவிந்தா’ என்று சொன்னாள்.
குறையில்லாத என்றாலே பரிபூர்ண வஸ்து என்று பொருள். இதனால்தான் கிருஷ்ணாவதாரத்தை பூர்ணாவதாரம் என்றும் சொல்கிறோம். இப்படிப்பட்ட கோவிந்த நாமாவுக்குள்ள அனேக சிறப்புகளில் இன்னொரு சிறப்பு, ஆதிசங்கர பகவத்பாதாளுக்கும் மிகப் பிடித்த நாமம் இதுதான்.
‘பஜகோவிந்தம்’ என்பது, அவருடைய சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி அல்லது ஷட்பதீ ஸ்தோத்திரம் போன்று ஒரு ஸ்வாமியை ஸ்தோத்தரிக்கும் பிரார்த்தனை இல்லை. வைஷ்ணவர், சைவர் என்று பேதமில்லாதபடி சகல ஜனங்களுக்குமானது இது.
இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ‘பரமாத்மாவை பஜியுங்கள்’ என்று பொதுவாகச் சொல்லாமல், ‘கோவிந்தனைப் பஜியுங்கள்’ என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயர் எத்தனை உயர்ந்ததாக, அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்?
கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கு மிக ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டு. அதில் முதல் மூன்றில் ஒரு முறையாகவும், அதாவது ‘அச்சுத, அனந்த, கோவிந்த’ என்பதில் ஒரு முறையும், பின் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர என்பதில் ஒரு தடவையும் என்று இரு தடவை இடம்பெறும் ஒரே நாமம் கோவிந்தாதான்! அதனாலேயே இதை ஆசார்யாளும் ‘பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்’ என்று மூன்று முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.
ஒன்றை மூன்று முறை சொல்வது என்பது சத்யப் பிரமாணத்திற்காக என்றால், கோவிந்த நாமமே சத்யப் பிரமாணம் என்றாகிறது. இந்த சத்யப் பிரமாண நாமாவை பகவத் பாதாள் மட்டுமல்ல; ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் அழைத்து இந்தப் பிரமாண கதியை உறுதி செய்கிறாள்.
‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று ஒரு இடத்திலும், ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும், ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறாள்.”
இப்படி கோவிந்த நாமச் சிறப்பை பெரியவர் தகுந்த உதாரணங்களோடு கூறிடும் போதுதான், நமக்கும் அதன் பிரமாண சக்தி புரிய வருகிறது. அதே சமயம் இன்று இத்தனை உயர்ந்த கோவிந்த நாமத்தை, சிலர் மிக மலிவாக ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டாலோ இல்லை பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்போதோ ‘எல்லாம் போச்சு… கோவிந்தா’ எனச் சொல்வதைப் பார்க்கிறோம். யார் முதலில் இதைச் சொல்லி பின் இது எப்படிப் பரவியது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
பெரும் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், தன் மனதைத் தட்டி எழுப்பி தான் நிமிர்ந்து நின்றிட கோவிந்த நாமா மட்டுமே உதவும் என்று நம்பியே அவர் ‘கோவிந்தா கோவிந்தா’ என்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடிப்படை புரியாமல், ஏமாந்தவர்கள் ஏமாற்றியவர்களைப் பார்த்துச் சொல்லும் ஒன்றாக இது காலப்போக்கில் மாறி விட்டது.
அது இந்த நாமத்திற்கு மட்டுமில்லை. நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருமண் காப்புக்கும் பொருந்தும். அமிர்தத்தை விஷமாக நினைத்துக் கொண்டு குடிப்பதால் அது விஷமாகி விடாது. அது தன் அமிர்த குணத்தைக் காட்டி எப்படி குடித்தவரைக் காப்பாற்றுமோ அப்படி கோவிந்த நாமத்தின் பொருளை உணராமலும், திருமண் காப்பின் அருமை தெரியாமலும் அதை தவறாக சிலர் பயன்படுத்தினாலும் அவர்களுக்கும் இது மறைமுகமாக நன்மையையே தான் செய்கிறது. அது மட்டுமல்ல! இத்தனை ஏமாற்றம் மிகுந்த வாழ்க்கையும் ஏமாற்றமும் எதனால் ஏற்பட்டது? அந்த கோவிந்தனை நினைக்க வேண்டிய நேரத்தில் நினைக்காமல் போனதால்தானே என்றும் அந்த ஏமாந்த தருணம் எடுத்துரைக்கிறது.
அதனாலேயே இதனை ‘பவக்கடல் கடையும் பகவத் மத்து’ என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார். அதாவது, பவம் என்றால் சம்சாரம்; ஜலதி என்றால் சமுத்திரம். பவஜலதி என்றால் சம்சார சாகரம். ‘பவஜலதி மதன மந்தர’ என்கிறார் பகவத் பாதர். அதாவது, சம்சார சாகரத்தைக் கடையும் மந்தர மலையாக பகவான் இருக்கிறானாம்!
அமிர்தம் கடைந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேவ அசுரர்கள் வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்திர மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தபோது, கீழே மத்தைத் தாங்கும் ஆமையாகப் போய் நின்றவன் பகவான். இதுதான் கூர்மாவதாரம்!
இங்கே மத்தாகிய மலைக்கு உதவுபவன், நமது சம்சார சாகரத்தைக் கடைவதில் அந்த மலையாகவே மாறிவிடுகிறான். அதில்தான் சூட்சுமம் உள்ளது. பெரியவர் இப்படிச் சொல்லி வருவதன் பின்னே நமக்கெல்லாம் ஒரு பெரும் தீர்வும் மனத்தெளிவும் ஏற்படுகிறது. இன்று பலரும் மாயையால் உந்தப்பட்டு சில பாவங்களைச் செய்துவிட்டு, ‘ஐய்யயோ இப்படி ஆகிவிட்டதே’ என்கிற வருத்தத்தில் இருக்கிறோம். இன்னும் சிலர், நாம் பாவியாகி விட்டோம். நமக்கு எந்த நல்லதும் கிடைக்காது. எனவே இன்னமும் பாவங்கள் செய்து அதிலேயே மூழ்கிப் போய்விடுவோம்” என்று வெகு தவறான பாதையில் போய் விட்டதையும் பார்க்கிறோம்.
இன்னும் சிலரோ செய்த பாவத்துக்கு எது சரியான பரிகாரம் என்று கேட்கிறவர்களாகவும், பரிகாரம் செய்யத் தயாராகவும் உள்ளனர்.
ஒருவராவது, ‘நான் பாவியில்லை. பெரும் புண்ணியன். என் போல ஒருவரைப் பார்க்க முடியாது’ என்று நெஞ்சை நிமிர்த்துவதே இல்லை.
இந்தக் கலியுகத்தில், இந்த பூமியில் பாவம் செய்யாமல் வாழ முடியாது என்பதே யதார்த்தம். அதற்காக, பாவங்களைச் செய்துகொண்டே போவது தான் வாழ்க்கையா என்றால், அதுவுமல்ல!
பின் எது வாழ்க்கை? ஏன் பாவிகளாக இருக்கிறோம்?
மிகத் தெளிவாக பெரியவர் இதற்கான பதிலை இந்த அமிர்தம் கடையும் சம்பவத்தோடு சேர்த்து கூறப்போவதைக் கேட்போமா?
- தொடரும்…
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
SSRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.
MONTHLY ARCHIVES: NOVEMBER 2013--BALHANUMAN.BLOB
37-சந்திரசேகரம்–இந்திரா-செளந்தர்ராஜன்
Indira Soundarajan, Maha Periyavaa, Spiritual November 8, 2013
பெரியவரின் அந்த பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம்.
1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய், 2.அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள், 3.அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினை, 4.வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு, 5.உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசி.
6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடு, 7.அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய், 8.நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள், 9.உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார், 10.ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.
இதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதை நம்மால் பின்பற்ற முடியாது? இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும்? மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், இது போதுமா? இந்த பத்தைச் செய்தபடி எதை வேண்டுமானால் செய்து கொண்டு வாழலாமா என்று இடக்காக கேட்கக் கூடாது. இந்த பத்தின் வழி வாழப் பழகிவிட்டால் இடக்கு முடக்கான சிந்தனைகளே முதலில் தோன்றாது. வாழ்க்கை நிறைந்த மன நிம்மதியோடு ஒரு தெளிவுக்கு மாறுவதையும் உணரலாம். இதை வைராக்கியமாகப் பின்பற்ற வேண்டும். அதுதான் இதில் முக்கியம்.
இந்த பத்து கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு என்று இருக்கிறதல்லவா? அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ‘ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி’ என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே! இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.
கோவிந்த நாமம்தான் அது! ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…’ – இதுதான் பெரியவருக்கே தியான மந்திரம்! இந்த கோவிந்த நாமத்துக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்பதை அவரே திவ்யமாக எடுத்தும் காட்டுகிறார். அதை அவர் பாஷையிலே கேட்பது ஒரு அலாதி சுகம் அல்லவா?
இதை வாசிப்பவர்களில் பெரியவர் உபன்யாசம் கேட்டவர்கள் எவராவது இருந்தால், அவர்கள் அப்படியே அவர் குரலை கற்பனை செய்து கொள்ளுங்கள். அவரே இந்த தீபம் இதழ் வாயிலாக கோவிந்த நாம சிறப்பைச் சொல்ல மோட்சத்திலே இருந்து வந்தது போல் இருக்கும். இனி அவர் சொன்னது சொன்னபடி…
ராமாயாணத்தில் ஸ்ரீராமபட்டாபிஷேகம் மாதிரி, பாகவதத்தில் பகவானுக்கு பட்டாபிஷேகமான சந்தர்ப்பத்தில் சூட்டப்பட்ட பேர் ‘கோவிந்த’ என்பதே! ராமர் மாதிரி கிருஷ்ணர் பெரிய ராஜ்யத்துக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் பண்ணிக் கொள்ளாவிட்டாலும், தேவராஜாவாலேயே பட்டாபிஷேகம் பெற்றதால் இதற்கு ரொம்ப முக்கியத்துவமுண்டு. ‘கோவிந்த ராஜா’ என்று, கிருஷ்ணனுடைய பல பெயர்களில் இதற்கு மட்டும்தான் ‘ராஜா’ சேர்க்கிறோம்.
எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு. ஆண்டாள், திருப்பாவையில் குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்று கூப்பிடுகிறாள். இங்கே பகவானுக்குக் கூட குறை இருந்தது போல ஒரு தொனி இருப்பதை உணர முடிகிறதல்லவா? சாதாரண மனுஷன் குறைபட்டுக் கொண்டே இருக்கும் சுபாவமுள்ளவன். அதனால் அப்படியில்லாத ஒருவனை ‘குறைவில்லாத மனுஷ்யா’ என்று விசேஷித்தால் அது பொருந்தும்.
பகவானைப் பார்த்து ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? இப்படிச் சொல்வதாலேயே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி பகவானுக்கும் குறையிருந்த மாதிரி தான் எண்ண வேண்டி உள்ளது.
யோசித்துப் பார்த்ததில் பகவானுக்கு வாஸ்தவமாகவே பூர்வத்தில் ஒரு குறை இருந்து அது கோவிந்தனாக அவன் ஆன போதுதான் தீர்ந்தது என்று தெரிந்தது.
ராம பட்டாபிஷேகம் என்றேனே… அதிலேதான் குறை!
சக்ரவர்த்தியாக ராமன் முடி சூடியதில் என்ன குறை என்றால், இதை வால்மீகி தம்முடைய ராமாயணத்தில் வர்ணித்திருக்கிற தினுசிலேதான் குறை ஏற்பட்டுவிட்டது.
‘வசிஷ்ட வாம தேவாதி ரிஷிகள் எட்டு பேர்’ ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு பட்டாபிஷேகம் பண்ணினார்கள். ‘அது எப்படி இருந்தது தெரியுமா? அஷ்ட வசுக்கள் தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் பண்ணினது போல்’ என்று வால்மீகி வர்ணிக்கிறார்.
‘வசுவோ வாசவம்யதா.’ அதாவது, வாசவன் எனப்படும் இந்திரனுக்கு வசுக்கள் பண்ணியது போல் என்று அர்த்தம்.
இந்த உதாரணம்தான், ராமருக்கு குறை உண்டாக்கிவிட்டது. எதனாலென்றால், இந்திரன் சீரழிந்த கதையை இதே வால்மீகி பால காண்டத்தில் சொல்லியுள்ளார். கௌதம பத்னியாகிய அகலிகையிடம் தப்பாக நடந்துகொண்டு மகாபாபம் பண்ணினவன் இந்திரன். அதற்காக சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டு அவமானப்பட்டவனும் கூட. ஆனால் ராமரோ, அகலிகைக்கு தன் பாதங்களாலேயே புனருத்தாரணம் தந்தவராவார்.
கதை இப்படியிருக்க, ராமர் பட்டாபிஷேகத்துக்கு இந்திர பட்டாபிஷேகத்தையா உதாரணம் சொல்வது? ஒரு ஏகபத்தினி விரதனை ஒரு பாவியானவனோடு ஒப்பிடலாமா? ஆனால், வால்மீகி பாத்திரங்களின் குணாம்சத்தை ஒப்பிட்டு இப்படிச் சொல்லவில்லை. பட்டாபிஷேக கோலாகலத்தைப் பார்த்ததும் அவருக்கு இந்திரனுக்கான பட்டாபிஷேக கோலாகலம் நினைவுக்கு வரவும் அந்த விமரிசையான தன்மையை உத்தேசித்து ஒப்பிட்டுவிட்டார். அங்கே எட்டு வசுக்கள்; இங்கே எட்டு ரிஷிகள். நன்றாக ஒத்துப் போனதும் ஒரு காரணம்.
ஆனால், இந்தக் குறை கிருஷ்ணனிடம் நீங்குகிறது. எப்படித் தெரியுமா? கிருஷ்ணன், கோவர்த்தன கிரியை சுண்டுவிரலால் தூக்கி இந்திரன் பெய்வித்த மழையில் இருந்து யாதவர்கள் அவ்வளவு பேரையும் காப்பாற்றவும், இந்திரன் தன் தவறை உணர்ந்து கிருஷ்ணன் காலில் விழுந்து மன்னிப்பு கோருகிறான். இதைத்தான் ஆண்டாளும் உணர்ந்து, ‘குறைவொன்று மில்லாத கோவிந்தா’ என்று சொன்னாள்.
குறையில்லாத என்றாலே பரிபூர்ண வஸ்து என்று பொருள். இதனால்தான் கிருஷ்ணாவதாரத்தை பூர்ணாவதாரம் என்றும் சொல்கிறோம். இப்படிப்பட்ட கோவிந்த நாமாவுக்குள்ள அனேக சிறப்புகளில் இன்னொரு சிறப்பு, ஆதிசங்கர பகவத்பாதாளுக்கும் மிகப் பிடித்த நாமம் இதுதான்.
‘பஜகோவிந்தம்’ என்பது, அவருடைய சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி அல்லது ஷட்பதீ ஸ்தோத்திரம் போன்று ஒரு ஸ்வாமியை ஸ்தோத்தரிக்கும் பிரார்த்தனை இல்லை. வைஷ்ணவர், சைவர் என்று பேதமில்லாதபடி சகல ஜனங்களுக்குமானது இது.
இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ‘பரமாத்மாவை பஜியுங்கள்’ என்று பொதுவாகச் சொல்லாமல், ‘கோவிந்தனைப் பஜியுங்கள்’ என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயர் எத்தனை உயர்ந்ததாக, அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்?
கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கு மிக ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டு. அதில் முதல் மூன்றில் ஒரு முறையாகவும், அதாவது ‘அச்சுத, அனந்த, கோவிந்த’ என்பதில் ஒரு முறையும், பின் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர என்பதில் ஒரு தடவையும் என்று இரு தடவை இடம்பெறும் ஒரே நாமம் கோவிந்தாதான்! அதனாலேயே இதை ஆசார்யாளும் ‘பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்’ என்று மூன்று முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.
ஒன்றை மூன்று முறை சொல்வது என்பது சத்யப் பிரமாணத்திற்காக என்றால், கோவிந்த நாமமே சத்யப் பிரமாணம் என்றாகிறது. இந்த சத்யப் பிரமாண நாமாவை பகவத் பாதாள் மட்டுமல்ல; ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் அழைத்து இந்தப் பிரமாண கதியை உறுதி செய்கிறாள்.
‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று ஒரு இடத்திலும், ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும், ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறாள்.”
இப்படி கோவிந்த நாமச் சிறப்பை பெரியவர் தகுந்த உதாரணங்களோடு கூறிடும் போதுதான், நமக்கும் அதன் பிரமாண சக்தி புரிய வருகிறது. அதே சமயம் இன்று இத்தனை உயர்ந்த கோவிந்த நாமத்தை, சிலர் மிக மலிவாக ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டாலோ இல்லை பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்போதோ ‘எல்லாம் போச்சு… கோவிந்தா’ எனச் சொல்வதைப் பார்க்கிறோம். யார் முதலில் இதைச் சொல்லி பின் இது எப்படிப் பரவியது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
பெரும் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், தன் மனதைத் தட்டி எழுப்பி தான் நிமிர்ந்து நின்றிட கோவிந்த நாமா மட்டுமே உதவும் என்று நம்பியே அவர் ‘கோவிந்தா கோவிந்தா’ என்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடிப்படை புரியாமல், ஏமாந்தவர்கள் ஏமாற்றியவர்களைப் பார்த்துச் சொல்லும் ஒன்றாக இது காலப்போக்கில் மாறி விட்டது.
அது இந்த நாமத்திற்கு மட்டுமில்லை. நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருமண் காப்புக்கும் பொருந்தும். அமிர்தத்தை விஷமாக நினைத்துக் கொண்டு குடிப்பதால் அது விஷமாகி விடாது. அது தன் அமிர்த குணத்தைக் காட்டி எப்படி குடித்தவரைக் காப்பாற்றுமோ அப்படி கோவிந்த நாமத்தின் பொருளை உணராமலும், திருமண் காப்பின் அருமை தெரியாமலும் அதை தவறாக சிலர் பயன்படுத்தினாலும் அவர்களுக்கும் இது மறைமுகமாக நன்மையையே தான் செய்கிறது. அது மட்டுமல்ல! இத்தனை ஏமாற்றம் மிகுந்த வாழ்க்கையும் ஏமாற்றமும் எதனால் ஏற்பட்டது? அந்த கோவிந்தனை நினைக்க வேண்டிய நேரத்தில் நினைக்காமல் போனதால்தானே என்றும் அந்த ஏமாந்த தருணம் எடுத்துரைக்கிறது.
அதனாலேயே இதனை ‘பவக்கடல் கடையும் பகவத் மத்து’ என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார். அதாவது, பவம் என்றால் சம்சாரம்; ஜலதி என்றால் சமுத்திரம். பவஜலதி என்றால் சம்சார சாகரம். ‘பவஜலதி மதன மந்தர’ என்கிறார் பகவத் பாதர். அதாவது, சம்சார சாகரத்தைக் கடையும் மந்தர மலையாக பகவான் இருக்கிறானாம்!
அமிர்தம் கடைந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேவ அசுரர்கள் வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்திர மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தபோது, கீழே மத்தைத் தாங்கும் ஆமையாகப் போய் நின்றவன் பகவான். இதுதான் கூர்மாவதாரம்!
இங்கே மத்தாகிய மலைக்கு உதவுபவன், நமது சம்சார சாகரத்தைக் கடைவதில் அந்த மலையாகவே மாறிவிடுகிறான். அதில்தான் சூட்சுமம் உள்ளது. பெரியவர் இப்படிச் சொல்லி வருவதன் பின்னே நமக்கெல்லாம் ஒரு பெரும் தீர்வும் மனத்தெளிவும் ஏற்படுகிறது. இன்று பலரும் மாயையால் உந்தப்பட்டு சில பாவங்களைச் செய்துவிட்டு, ‘ஐய்யயோ இப்படி ஆகிவிட்டதே’ என்கிற வருத்தத்தில் இருக்கிறோம். இன்னும் சிலர், நாம் பாவியாகி விட்டோம். நமக்கு எந்த நல்லதும் கிடைக்காது. எனவே இன்னமும் பாவங்கள் செய்து அதிலேயே மூழ்கிப் போய்விடுவோம்” என்று வெகு தவறான பாதையில் போய் விட்டதையும் பார்க்கிறோம்.
இன்னும் சிலரோ செய்த பாவத்துக்கு எது சரியான பரிகாரம் என்று கேட்கிறவர்களாகவும், பரிகாரம் செய்யத் தயாராகவும் உள்ளனர்.
ஒருவராவது, ‘நான் பாவியில்லை. பெரும் புண்ணியன். என் போல ஒருவரைப் பார்க்க முடியாது’ என்று நெஞ்சை நிமிர்த்துவதே இல்லை.
இந்தக் கலியுகத்தில், இந்த பூமியில் பாவம் செய்யாமல் வாழ முடியாது என்பதே யதார்த்தம். அதற்காக, பாவங்களைச் செய்துகொண்டே போவது தான் வாழ்க்கையா என்றால், அதுவுமல்ல!
பின் எது வாழ்க்கை? ஏன் பாவிகளாக இருக்கிறோம்?
மிகத் தெளிவாக பெரியவர் இதற்கான பதிலை இந்த அமிர்தம் கடையும் சம்பவத்தோடு சேர்த்து கூறப்போவதைக் கேட்போமா?
- தொடரும்…
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
SSRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.