Post by radha on Nov 9, 2013 1:50:05 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
`ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்'
- முருகப் பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
பலன் தரும் சஷ்டி விரத ஸ்லோகம்
பாகாராதிஸுதாமுகாப்ஜமதுபம் பாலேந்து மௌளீஸ்வரம்
லோகாநுக்ரஹ காரணம் ஸிவஸுதம் லோகேஸதத்வப்ரதம்
ராகாசந்த்ர ஸமானசாருவதனம் ரம்போருவல்லீஸ்வரம்
ஹ்ரீங்காரப்ரணவ ஸ்வரூபலஹரீம் ஸ்ரீ கார்த்திகேயம் பஜே
-சுப்ரமண்ய பஞ்சகம்
பொருள்: பாகன் என்ற அசுரனைக் கொன்று உலகத்துக்கு நன்மை அருளிய சுப்ரமண்யரே நமஸ்காரம். இந்திரனின் மகளான தேவஸேனையின் முகமாகிய தாமரைக்கு வண்டு போன்று விளங்குபவரே, பாலசந்திரனை தலையில் ஆபரணமாய் தரித்தவரே, நமஸ்காரம்.
உலகமனைத்தையும் பாதுகாப்பவரே, பரமசிவனின் புதல்வரே, சிருஷ்டிகர்த்தாவாகிய பிரம்மதேவனுக்கு பிரணவார்த்தத்தை உபதேசித்தவரே, நமஸ்காரம்.
பௌர்ணமி நிலவைப் போன்ற பிரகாசமான அழகிய திருமுகத்தையுடையவரே, வள்ளியின் மணாளரே, ஹ்ரீங்காரத்துடன் கூடிய பிரணவ வடிவாக விளங்குகிறவரே, கார்த்திகேயா, நமஸ்காரம்.
- இத்துதியை கந்த சஷ்டி ஆறு நாட்களும் பாராயணம் செய்தால், ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும், கடன்கள் நிவர்த்தியாகும், மனக்கவலைகள விலகும்
சஷ்டி கவசத்தில் புதிரான வரிகள்
கந்தசஷ்டி கவசம் பாடும்போது, "ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியும் சௌவும் கிளரொளி ஐயும் நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்' என்ற வரிகள் வருகின்றன. இதன் பொருள் பலருக்கும் தெரியவில்லை. ஐயும்(ஐம்), கிலியும் (க்லீம்) சௌவும் (ஸெளம்)ஆகியவை "பீஜாக்ஷரங்கள்' எனப்படும். இதை "பீஜம்+அட்சரம்' என பிரிப்பர். "பீஜம்' என்றால் "உயிர்ப்புள்ள விதை'. "அட்சரம்' என்றால் "எழுத்து'. "<உயிர்ப்புள்ள எழுத்து விதைகள்' ஒன்று சேர்ந்தால் அது "மந்திரம்' ஆகிறது. அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது வளர்ந்து பக்தியின் <உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன் இறைவனின் காலடியை அடைவான்.
"ஐம், க்லீம் என்ற மந்திர எழுத்துக் களும், உயிர்களை எல்லாம் உய்விக்கும் ஒளிபொருந்திய "ஸெள' என்ற மந்திர எழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்...இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் (சரவணபவ, குமாராயநம) மூலாதார எழுத்துக்குரிய நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே! என் மனக்கண் முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும்,' 'என்பது இந்த வரிகளின் பொருள். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான "சரவணபவ' உடன் "ஓம் ஐம் சரவணபவாய நம', "ஓம் க்லீம் சிகாயை வஷட்', "ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ'என்று மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக்கூடாது. ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, தகுந்த நியமநிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும். இது சாத்தியம் இல்லை என்பதால், கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள், தனது பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்து விட்டார். இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நமது முக்திக்காக நம் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
அறுபடை வீடுகள்
* திருப்பரங்குன்றம்-சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
* திருச்செந்தூர்-அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
* பழனி-மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணி நின்ற திருத்தலமிது.
* சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.
* திருத்தணி-சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
* பழமுதிர்சோலை-அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.
சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி:
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலும் நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு போருக்குப்பின் அமைதி நிலவுவதாக கருதப்படுகிறது. எனவே அங்கு சூரசம்ஹாரம் நடத்துவதில்லை.
Source:- Malaimalar
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
`ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்'
- முருகப் பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
பலன் தரும் சஷ்டி விரத ஸ்லோகம்
பாகாராதிஸுதாமுகாப்ஜமதுபம் பாலேந்து மௌளீஸ்வரம்
லோகாநுக்ரஹ காரணம் ஸிவஸுதம் லோகேஸதத்வப்ரதம்
ராகாசந்த்ர ஸமானசாருவதனம் ரம்போருவல்லீஸ்வரம்
ஹ்ரீங்காரப்ரணவ ஸ்வரூபலஹரீம் ஸ்ரீ கார்த்திகேயம் பஜே
-சுப்ரமண்ய பஞ்சகம்
பொருள்: பாகன் என்ற அசுரனைக் கொன்று உலகத்துக்கு நன்மை அருளிய சுப்ரமண்யரே நமஸ்காரம். இந்திரனின் மகளான தேவஸேனையின் முகமாகிய தாமரைக்கு வண்டு போன்று விளங்குபவரே, பாலசந்திரனை தலையில் ஆபரணமாய் தரித்தவரே, நமஸ்காரம்.
உலகமனைத்தையும் பாதுகாப்பவரே, பரமசிவனின் புதல்வரே, சிருஷ்டிகர்த்தாவாகிய பிரம்மதேவனுக்கு பிரணவார்த்தத்தை உபதேசித்தவரே, நமஸ்காரம்.
பௌர்ணமி நிலவைப் போன்ற பிரகாசமான அழகிய திருமுகத்தையுடையவரே, வள்ளியின் மணாளரே, ஹ்ரீங்காரத்துடன் கூடிய பிரணவ வடிவாக விளங்குகிறவரே, கார்த்திகேயா, நமஸ்காரம்.
- இத்துதியை கந்த சஷ்டி ஆறு நாட்களும் பாராயணம் செய்தால், ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும், கடன்கள் நிவர்த்தியாகும், மனக்கவலைகள விலகும்
சஷ்டி கவசத்தில் புதிரான வரிகள்
கந்தசஷ்டி கவசம் பாடும்போது, "ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியும் சௌவும் கிளரொளி ஐயும் நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்' என்ற வரிகள் வருகின்றன. இதன் பொருள் பலருக்கும் தெரியவில்லை. ஐயும்(ஐம்), கிலியும் (க்லீம்) சௌவும் (ஸெளம்)ஆகியவை "பீஜாக்ஷரங்கள்' எனப்படும். இதை "பீஜம்+அட்சரம்' என பிரிப்பர். "பீஜம்' என்றால் "உயிர்ப்புள்ள விதை'. "அட்சரம்' என்றால் "எழுத்து'. "<உயிர்ப்புள்ள எழுத்து விதைகள்' ஒன்று சேர்ந்தால் அது "மந்திரம்' ஆகிறது. அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது வளர்ந்து பக்தியின் <உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன் இறைவனின் காலடியை அடைவான்.
"ஐம், க்லீம் என்ற மந்திர எழுத்துக் களும், உயிர்களை எல்லாம் உய்விக்கும் ஒளிபொருந்திய "ஸெள' என்ற மந்திர எழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்...இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் (சரவணபவ, குமாராயநம) மூலாதார எழுத்துக்குரிய நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே! என் மனக்கண் முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும்,' 'என்பது இந்த வரிகளின் பொருள். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான "சரவணபவ' உடன் "ஓம் ஐம் சரவணபவாய நம', "ஓம் க்லீம் சிகாயை வஷட்', "ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ'என்று மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக்கூடாது. ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, தகுந்த நியமநிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும். இது சாத்தியம் இல்லை என்பதால், கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள், தனது பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்து விட்டார். இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நமது முக்திக்காக நம் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
அறுபடை வீடுகள்
* திருப்பரங்குன்றம்-சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
* திருச்செந்தூர்-அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
* பழனி-மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணி நின்ற திருத்தலமிது.
* சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.
* திருத்தணி-சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
* பழமுதிர்சோலை-அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.
சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி:
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலும் நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு போருக்குப்பின் அமைதி நிலவுவதாக கருதப்படுகிறது. எனவே அங்கு சூரசம்ஹாரம் நடத்துவதில்லை.
Source:- Malaimalar
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM