Post by uma2806 on Nov 5, 2013 11:47:55 GMT 5.5
அறநூல் நுட்பம் - சந்திரமௌலி - அணுக்கத் தொண்டர் - மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் ஆறாம் பகுதியிலிருந்து
ஸ்ரீமஹாஸ்வாமிகள் ஒரு சமயம் மதனபள்ளிக்கு சமீபத்தில் உள்ள ‘சின்ன திப்ப ஸமுத்ரம்’ என்னும் கிராமத்தில் – பழைய பிள்ளையார் கோவில் ஒன்றில் முகாமிட்டிருந்தார்கள்.
‘சின்ன திப்ப ஸமுத்ரம்’ என்னும் அவ்வூரை அங்கு எல்லோரும் முழுப்பெயரையும் சொல்லாமல் CTS என்று தான் சொல்வார்கள். ஸ்ரீசங்கரஜயந்தி வரப்போகும் தருணம். இதை உத்தேசித்து நானும், எங்கள் குடும்ப நண்பரும் ஸ்ரீபெரியவாளிடம் மிகவும் பக்தியுள்ளவருமான ஸ்ரீகல்லூரி வீரபத்ர சாஸ்திரிகள் அவர்களும் சென்னையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டு CTS ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம். ஸ்ரீகல்லூரி வீரபத்ர சாஸ்திரிகள், அவர் சகோதரர் இருவருமே சம்ஸ்கிருத விற்பன்னர்கள். ஆந்திரக்காரர்கள். அவர்களுடைய வித்வத்தைப் பற்றி ஸ்ரீபூஜ்ய பாதாள் அவர்களுக்கும் நன்கு தெரியும். அவர் அடிக்கடி வந்து ஸ்ரீபெரியவாளைச் சந்தித்துப் போவது வழக்கம்.
நாங்கள் சென்ற இரண்டு தினங்களுக்குப் பிறகு ஸ்ரீசங்கர ஜயந்தி வர இருந்தது. அதுசமயம் ஸ்ரீபெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர்களாக மூன்றுபேர் தான் இருந்தனர். ஆனால், தரிசனத்துக்கு தினமும் முப்பது நாற்பது பேர் வருவார்கள்.
அவ்வூரில் ஒரு தணிகர் இருந்தார். பெரிய குடும்பம். அவர் ஸ்ரீபெரியவாளின் பரம பக்தர். ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்து கொள்ள வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவர் வீட்டில்தான் சாப்பாடு, தங்குவது என்று ஏற்பாடு.
ஸ்ரீபெரியவாள் தங்கியிருந்த இடத்தில் சங்கர ஜயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீகல்லூரி வீரபத்ர சாஸ்திரிகளை பெரியவா ‘வாக்யார்த்தம்’ சொல்லும்படி ஆக்ஞாபித்தார்கள்.
ஸ்ரீபெரியவாளே, கடபயாதி ஸங்க்யை பிரகாரம், ஸ்ரீபகவத்பாதாளுக்கு சங்கரன் என்று பெயரிட்டதைச் சொன்னார்கள். விரைதானம் கொடுக்கப்பட்டது. பிறகு எல்லாரும் தணிகர் வீட்டிற்குப் போய் போஜனம் செய்தோம்.
மறுநாள் அந்தப் பெரிய மனிதர் வீட்டில் – அவருடைய பேரனுக்கு உபநயனம். உபநயனத்தன்று காலை ஸ்ரீபெரியவா இராமகிருஷ்ணன், ஸ்ரீகண்டன் என்ற அணுக்கத் தொண்டர்கள் இருவரையும் கூப்பிட்டு, “இன்று அவர்கள் வீட்டில் உபநயனம். இங்கு வந்திருப்பவர்கள் உபநயன வீட்டில் சாப்பிட வேண்டாம் என்று சொல்லிவிடு. நீங்கள் இருவருமே இவர்கள் எல்லாருக்கும் சமைத்து இவ்விடத்திலேயே சாப்பாடு போட்டுவிடுங்கோ” என்று உத்தரவு ஆயிற்று. அந்தத் தணிகருக்கும் விஷயம் தெரிவிக்கும்படிச் சொன்னார்கள்.
தணிகருக்கு மகா அதிர்ச்சி. "நாம் என்ன தவறு செய்தோம்?” என்ற கவலை. ‘சங்கர பக்தர்களுக்கு உணவு படைத்த புண்ணியம் கிடைக்கக் கூடாதா?” என்ற ஏக்கம்.
வாய்விட்டுக் கதற வேண்டும் போலிருந்தது அவருக்கு. இந்தத் தகவல், மஹா பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டது. மஹா பெரியவா சொன்ன பதில்: “உபநயன வீட்டில் ‘நாந்தி சிராத்தம்’ செய்வார்கள். ‘நாந்தி’ செய்யும் வீட்டில் மற்றவர்கள் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரம். அதனால் இங்கேயே ஏற்பாடு செய்யச் சொன்னேன்”.
இந்த சாஸ்திர சம்பந்தமான காரியத்தை எல்லா மக்களுக்காகவும் ஸ்ரீபெரியவா செய்து காட்டினார்கள் என்பதில் ஐயமில்லை. சாஸ்திரம் படித்த எத்தனை பேருக்கு இந்த நுணுக்கம் தெரியும்?
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
ஸ்ரீமஹாஸ்வாமிகள் ஒரு சமயம் மதனபள்ளிக்கு சமீபத்தில் உள்ள ‘சின்ன திப்ப ஸமுத்ரம்’ என்னும் கிராமத்தில் – பழைய பிள்ளையார் கோவில் ஒன்றில் முகாமிட்டிருந்தார்கள்.
‘சின்ன திப்ப ஸமுத்ரம்’ என்னும் அவ்வூரை அங்கு எல்லோரும் முழுப்பெயரையும் சொல்லாமல் CTS என்று தான் சொல்வார்கள். ஸ்ரீசங்கரஜயந்தி வரப்போகும் தருணம். இதை உத்தேசித்து நானும், எங்கள் குடும்ப நண்பரும் ஸ்ரீபெரியவாளிடம் மிகவும் பக்தியுள்ளவருமான ஸ்ரீகல்லூரி வீரபத்ர சாஸ்திரிகள் அவர்களும் சென்னையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டு CTS ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம். ஸ்ரீகல்லூரி வீரபத்ர சாஸ்திரிகள், அவர் சகோதரர் இருவருமே சம்ஸ்கிருத விற்பன்னர்கள். ஆந்திரக்காரர்கள். அவர்களுடைய வித்வத்தைப் பற்றி ஸ்ரீபூஜ்ய பாதாள் அவர்களுக்கும் நன்கு தெரியும். அவர் அடிக்கடி வந்து ஸ்ரீபெரியவாளைச் சந்தித்துப் போவது வழக்கம்.
நாங்கள் சென்ற இரண்டு தினங்களுக்குப் பிறகு ஸ்ரீசங்கர ஜயந்தி வர இருந்தது. அதுசமயம் ஸ்ரீபெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர்களாக மூன்றுபேர் தான் இருந்தனர். ஆனால், தரிசனத்துக்கு தினமும் முப்பது நாற்பது பேர் வருவார்கள்.
அவ்வூரில் ஒரு தணிகர் இருந்தார். பெரிய குடும்பம். அவர் ஸ்ரீபெரியவாளின் பரம பக்தர். ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்து கொள்ள வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவர் வீட்டில்தான் சாப்பாடு, தங்குவது என்று ஏற்பாடு.
ஸ்ரீபெரியவாள் தங்கியிருந்த இடத்தில் சங்கர ஜயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீகல்லூரி வீரபத்ர சாஸ்திரிகளை பெரியவா ‘வாக்யார்த்தம்’ சொல்லும்படி ஆக்ஞாபித்தார்கள்.
ஸ்ரீபெரியவாளே, கடபயாதி ஸங்க்யை பிரகாரம், ஸ்ரீபகவத்பாதாளுக்கு சங்கரன் என்று பெயரிட்டதைச் சொன்னார்கள். விரைதானம் கொடுக்கப்பட்டது. பிறகு எல்லாரும் தணிகர் வீட்டிற்குப் போய் போஜனம் செய்தோம்.
மறுநாள் அந்தப் பெரிய மனிதர் வீட்டில் – அவருடைய பேரனுக்கு உபநயனம். உபநயனத்தன்று காலை ஸ்ரீபெரியவா இராமகிருஷ்ணன், ஸ்ரீகண்டன் என்ற அணுக்கத் தொண்டர்கள் இருவரையும் கூப்பிட்டு, “இன்று அவர்கள் வீட்டில் உபநயனம். இங்கு வந்திருப்பவர்கள் உபநயன வீட்டில் சாப்பிட வேண்டாம் என்று சொல்லிவிடு. நீங்கள் இருவருமே இவர்கள் எல்லாருக்கும் சமைத்து இவ்விடத்திலேயே சாப்பாடு போட்டுவிடுங்கோ” என்று உத்தரவு ஆயிற்று. அந்தத் தணிகருக்கும் விஷயம் தெரிவிக்கும்படிச் சொன்னார்கள்.
தணிகருக்கு மகா அதிர்ச்சி. "நாம் என்ன தவறு செய்தோம்?” என்ற கவலை. ‘சங்கர பக்தர்களுக்கு உணவு படைத்த புண்ணியம் கிடைக்கக் கூடாதா?” என்ற ஏக்கம்.
வாய்விட்டுக் கதற வேண்டும் போலிருந்தது அவருக்கு. இந்தத் தகவல், மஹா பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டது. மஹா பெரியவா சொன்ன பதில்: “உபநயன வீட்டில் ‘நாந்தி சிராத்தம்’ செய்வார்கள். ‘நாந்தி’ செய்யும் வீட்டில் மற்றவர்கள் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரம். அதனால் இங்கேயே ஏற்பாடு செய்யச் சொன்னேன்”.
இந்த சாஸ்திர சம்பந்தமான காரியத்தை எல்லா மக்களுக்காகவும் ஸ்ரீபெரியவா செய்து காட்டினார்கள் என்பதில் ஐயமில்லை. சாஸ்திரம் படித்த எத்தனை பேருக்கு இந்த நுணுக்கம் தெரியும்?
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!