Post by radha on Nov 4, 2013 0:55:56 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:- Dinamalar
15. முருகனுக்கொரு நாள்...
முருகனுக்கொரு நாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக்கொருநாள் திருநாள்
நல்ல கார்த்திகை பெருநாள் ஒரு நாள் (முருக)
வைகாசி விசாக திருநாள்
வண்ணக்கதிர் வேலன் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்
சோம வாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொரு திருநாள்
கந்தன் கருணைபொழிகின்ற பெருநாள் (முருக)
சரவணன் பிறந்த திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒரு நாள்
கந்தனின் காலடி ஆடிடும் பெருநாள்
வள்ளி குமரனின் மண நாள்
நம் வாழ்வின் சுடர் ஒளி பெருநாள் (முருக)
16. ஒருமுகமாய் நின்று...
ஒருமுகமாய் நின்று பலமுகம் பார்த்தாலும்
திருமுகம் போலாகுமா.... முருகா உன்
ஆறுமுகம் போலாகுமா
இனிக்கும் மதுவை வைத்த விழிகளுண்டு... அன்பு
இன்பமெல்லாம் உதிர்க்கும் கருணையிலே
பனிக்கும் கதிரவன் போல் இருக்கும் கந்தனே
பாதம் தொட்டால் மணக்கும் படைப்பு அதில் சிரிக்கும்
கருவாகி உருவாகி காக்கும் அருளாகி
பொதுவாகி நலமாகி போற்றும் பொருளாகி
மலைகண்ட இதயமெல்லாம்குடி கொண்ட வேலவனே
வணங்கி நின்றால் இரங்கிவரம் கொடுக்கும் சிவனே
17. கருணை முகங்கள் ஓராறு....
கருணை முகங்கள் ஓராறு காக்கும் கரங்களோ ஈராறு
முருகன் வாழும் வீடாறு
முகம் பார்த்து இறங்க வேராறு கந்தன்
துணை அன்றி ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை தீர்ப்பது குகன் வேலை
வேலை போற்றுதல் வாழ்வின் வேலை (கருணை)
அடியார்கள் அகமே அவன் கோவில்
அன்பே ஆலய தலைவாயில்
குடியாய் இருப்பவன் குறைதீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்
18. வேல் வந்து வினை தீர்க்க....
வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
பால் கொண்டு நீராடி பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில்
கந்தன் எனை கண்டானடி எந்தன் சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி (வேல்)
19. முருகா உந்தன் சிரிப்பு...
முருகா உந்தன் சிரிப்பு முத்தமிழின் உயிர் சிரிப்பு
குமரா உந்தன் சிரிப்பு
குழந்தையின் முதல் சிரிப்பு
கண்களிலே பொங்கி வரும் அருள் சிரிப்பு
உந்தன் கைகளில் தாங்கிவரும் வேல் சிரிப்பு
புன்னகையில் ஏந்தி வரும் பால் சிரிப்பு
அந்த பழனியிலே தோன்றிவரும் சிரிப்பு
தத்துவங்கள் பேசி வரும் தவச்சிரிப்பு
என்றும் தென் கடலில் அலைபாயும் புன் சிரிப்பு
எத்திசையும் கொடிபறக்கும் புகழ் சிரிப்பு
கருணை பொழிந்து கொண்டே
மணம் கொடுக்கும் உன் சிரிப்பு
20. ஆயிரம் கோடி நிலவுகள்...
ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு
அந்த ஆதிசிவன் பிள்ளைமேனி முழுவதும் திருநீறு
வாவையூரனை கீரி கிழித்திடவேலோடு
பன்னிரு கையென வந்திருக்கிற இடம் திருச்செந்தூரு
கோவண சண்முக சுவாமியின் மார்களில் பாலோடும்
அவன் குங்கும தாமரை கண்களில் சங்கத்தமிழ் ஓடும்
தாய் பராசக்தி அவள் தந்த அருளோடும்
அவன் வண்ணச்சிறு அடி வைத்த இடம் ஒரு பூவாகும் (ஆயிரம்)
நம்பிதொழுகிற நெஞ்சின் கவலைகள் தூளாகும்
மனம் நாடபிறந்த அவன் ஞானசுந்தரி களியாகும்
கோயில்படிகளில் வேலும் மயிலும் விளையாடும்
அந்த கூத்துக்கு தகுந்த மாதிரி சேவல் இசைபாடும்
குன்னடி என்றென்ன பிரமிக்கச் சிலையானவன்
தந்தைகுந்தி குனிந்திட மந்திரம் சொல்லி உருவானவன்
வண்ணகுமரிகள் நெஞ்சத்து நல்ல துணையானவன்
பல குன்றுகளின் சிறுதுண்டுடன் நின்றுதவமானவன்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Source:- Dinamalar
15. முருகனுக்கொரு நாள்...
முருகனுக்கொரு நாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக்கொருநாள் திருநாள்
நல்ல கார்த்திகை பெருநாள் ஒரு நாள் (முருக)
வைகாசி விசாக திருநாள்
வண்ணக்கதிர் வேலன் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்
சோம வாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொரு திருநாள்
கந்தன் கருணைபொழிகின்ற பெருநாள் (முருக)
சரவணன் பிறந்த திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒரு நாள்
கந்தனின் காலடி ஆடிடும் பெருநாள்
வள்ளி குமரனின் மண நாள்
நம் வாழ்வின் சுடர் ஒளி பெருநாள் (முருக)
16. ஒருமுகமாய் நின்று...
ஒருமுகமாய் நின்று பலமுகம் பார்த்தாலும்
திருமுகம் போலாகுமா.... முருகா உன்
ஆறுமுகம் போலாகுமா
இனிக்கும் மதுவை வைத்த விழிகளுண்டு... அன்பு
இன்பமெல்லாம் உதிர்க்கும் கருணையிலே
பனிக்கும் கதிரவன் போல் இருக்கும் கந்தனே
பாதம் தொட்டால் மணக்கும் படைப்பு அதில் சிரிக்கும்
கருவாகி உருவாகி காக்கும் அருளாகி
பொதுவாகி நலமாகி போற்றும் பொருளாகி
மலைகண்ட இதயமெல்லாம்குடி கொண்ட வேலவனே
வணங்கி நின்றால் இரங்கிவரம் கொடுக்கும் சிவனே
17. கருணை முகங்கள் ஓராறு....
கருணை முகங்கள் ஓராறு காக்கும் கரங்களோ ஈராறு
முருகன் வாழும் வீடாறு
முகம் பார்த்து இறங்க வேராறு கந்தன்
துணை அன்றி ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை தீர்ப்பது குகன் வேலை
வேலை போற்றுதல் வாழ்வின் வேலை (கருணை)
அடியார்கள் அகமே அவன் கோவில்
அன்பே ஆலய தலைவாயில்
குடியாய் இருப்பவன் குறைதீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்
18. வேல் வந்து வினை தீர்க்க....
வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
பால் கொண்டு நீராடி பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில்
கந்தன் எனை கண்டானடி எந்தன் சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி (வேல்)
19. முருகா உந்தன் சிரிப்பு...
முருகா உந்தன் சிரிப்பு முத்தமிழின் உயிர் சிரிப்பு
குமரா உந்தன் சிரிப்பு
குழந்தையின் முதல் சிரிப்பு
கண்களிலே பொங்கி வரும் அருள் சிரிப்பு
உந்தன் கைகளில் தாங்கிவரும் வேல் சிரிப்பு
புன்னகையில் ஏந்தி வரும் பால் சிரிப்பு
அந்த பழனியிலே தோன்றிவரும் சிரிப்பு
தத்துவங்கள் பேசி வரும் தவச்சிரிப்பு
என்றும் தென் கடலில் அலைபாயும் புன் சிரிப்பு
எத்திசையும் கொடிபறக்கும் புகழ் சிரிப்பு
கருணை பொழிந்து கொண்டே
மணம் கொடுக்கும் உன் சிரிப்பு
20. ஆயிரம் கோடி நிலவுகள்...
ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு
அந்த ஆதிசிவன் பிள்ளைமேனி முழுவதும் திருநீறு
வாவையூரனை கீரி கிழித்திடவேலோடு
பன்னிரு கையென வந்திருக்கிற இடம் திருச்செந்தூரு
கோவண சண்முக சுவாமியின் மார்களில் பாலோடும்
அவன் குங்கும தாமரை கண்களில் சங்கத்தமிழ் ஓடும்
தாய் பராசக்தி அவள் தந்த அருளோடும்
அவன் வண்ணச்சிறு அடி வைத்த இடம் ஒரு பூவாகும் (ஆயிரம்)
நம்பிதொழுகிற நெஞ்சின் கவலைகள் தூளாகும்
மனம் நாடபிறந்த அவன் ஞானசுந்தரி களியாகும்
கோயில்படிகளில் வேலும் மயிலும் விளையாடும்
அந்த கூத்துக்கு தகுந்த மாதிரி சேவல் இசைபாடும்
குன்னடி என்றென்ன பிரமிக்கச் சிலையானவன்
தந்தைகுந்தி குனிந்திட மந்திரம் சொல்லி உருவானவன்
வண்ணகுமரிகள் நெஞ்சத்து நல்ல துணையானவன்
பல குன்றுகளின் சிறுதுண்டுடன் நின்றுதவமானவன்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM