தெய்வத்தின் குரல் - அனைவருக்கும் பொருந்தும் அறிவுரைகள்!
Nov 3, 2013 20:11:43 GMT 5.5
sjayaramann likes this
Post by Kanchi Periva on Nov 3, 2013 20:11:43 GMT 5.5
Source: Email message forwarded by our respected member Sri Ramanathan
ஒவ்வொரு நாளும் பிரம்மச்சாரிகள் அக்னி காரியம், அதாவது ஸமிதாதனம் (சுள்ளிகளை மந்திரபூர்வமாக ஹோமம்) பண்ண வேண்டும். பிக்ஷ£சர்யம் (பி¬க்ஷ எடுத்தல்) செய்ய வேண்டும். அலவணமாக ( உப்பில்லாமல்) சாப்பிட வேண்டும். பிரம்மசாரிகளில் பிராம்மணன் பலாச (புரச) தண்டமும், க்ஷத்ரியன அச்வத்த (அரசு) தண்டமும், வைசியன் அத்தி தண்டமும் வைத்துக் கொள்ள வேண்டும். ச்ருத தாரணத்துக்காகத் தண்டம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எதை அத்தியயனம் பண்ணுகிறானோ அதைக் கெட்டியாக இருத்திக் கொள்வதற்கு அப்படிச் செய்ய வேண்டும். இடிதாங்கி, ஏரியல் என்றெல்லாம் இல்லையா?அப்படி மநுஷ்யனுக்கானது இந்த தண்டம். இடிதாங்கி Scientific தான். வேதத்திலுள்ள எல்லா மந்திரங்களும் மறவாமல் மனதில் இருக்கும்படி பாதுகாக்க தண்டம் வேண்டும். வேத மந்திர சக்தியை தாரணம் பண்ணுவதற்கு அந்த தண்டத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. வேதநிதி அகலாமல் இருக்க அதை வைத்துக் கொள்ள வேண்டும். பிரம்மச்சாரி மேலே கிருஷ்ணாஜினம் (மான்தோல்) போட்டுக் கொள்ள வேண்டும். மேல் வேஷ்டி போட்டுக்கொள்ளக் கூடாது. எலெக்ட்ரீஷியன் மரத்தின் மேல் நிற்கவேண்டும்;ரப்பர் Gloves போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஆத்மிக மின்ஸாரத்துக்கு பெரியவர்கள் இந்த விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
இப்பொழுது நாம் ஒரு நாள் உபாகர்மாவைத் தான் பண்ணுகிறோம். அப்புறம் தொடர்ந்து வேதம் படிப்பதில்லை. உத்ஸர்ஜனமும் (ஒரு வேதப்பகுதியைப் படித்து முடிப்பது) பண்ணுவதில்லை. அது பண்ணாததற்குப் பிராயச்சித்தமாக 'காமோகார்ஷீத்'ஜபம் பண்ணுகிறோம்;"நான் பாபம் பண்ணவில்லை;காமம் பண்ணியது, கோபம் பண்ணியது;என்னிடம் வராதே;நமஸ்காரம் பண்ணுகிறேன்!" என்று சொல்லுகிறோம். அந்த மந்திரத்துக்கு அதுதான் அர்த்தம். உத்ஸர்ஜனம் பண்ணினால் இந்த ஜபம் அவசியம் இல்லை.
கால நியமம், விரத நியமம், ஆஹார நியமம் முதலியவைகளை அநுஷ்டிப்பது பிரம்மச்சரியம். அத்யயனத்தில் ஸ்வர லோபம், வர்ண லோபம் முதலான உச்சாரணத் தப்புக்கள் ஏற்படக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக ஆவணியவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுவதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் காயத்ரி ஹோமம் பண்ண வேண்டும். இப்பொழுது ஹோமமாக பிரதம சிராவணக்காரர்கள் (தலைப்பூணூல் பையன்கள்) மட்டும் பண்ணுகிறார்கள் மற்றவர்கள் ஹோமமின்றி ஜபம் மாத்திரம் செய்கிறார்கள். இப்படியின்றி எல்லாருமே ஹோமம் செய்ய வேண்டும். வெறும் ஜபம் பண்ணினால் தூக்கம் வருகிறது. அதனால் லோபம் வருகிறது. ஒரு காரியம் இருந்தால் தூக்கம் வராது. அதற்காகவாவது ஸமித்தினால் ஹோமம் பண்ணலாம். பலாஸ ஸமித்தால் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அச்வத்த ஸமித்தால் பண்ணவேண்டும். கடைசி பக்ஷம் தர்ப்பையினாலாவது பண்ண வேண்டும்.
பிரம்மச்சாரி சாப்பிடுவதற்கு கணக்கு இல்லை. வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனாலும் நாக்கு ருசியைக் குறைக்க வேண்டும். இவன் இஷ்டப்படியான சமையலாக இருக்கக்கூடாது, பி¬க்ஷயில் எது கிடைக்கிறதோ அதையே சாப்பிட வேண்டும் என்பதும் இவனை பி¬க்ஷ எடுக்க வைத்ததற்கு ஒரு காரணம். மூல காரணம், பிச்சை எடுப்பதால் இவனுக்கு விநயம் ஏற்படும் என்பதே.ருசி பார்க்கக் கூடாது என்றாலும் ஆஹாரத்தின் அளவுக்கு கட்டுப்பாடு இல்லை. பிரம்மச்சாரி வயிறாரச் சாப்பிட வேண்டும். பட்டினி முதலிய உபவாஸங்களை பிரம்மச்சாரிக்கு சாஸ்திரங்கள் விதிக்கவில்லை. வளர்கிற பருவத்தில் அவன் புஷ்டியாக இருக்க வேண்டும். அதே ஸமயம் ஸத்வ குணத்தோடு, முரடாக இல்லாமல் இருக்க வேண்டும். குரு சுச்ருஷை இப்படிப்பட்ட ஸத்வ குணத்தை ஊட்டவே ஏற்பட்டது. தனது வேத சாகையையும், சதுர்தச வித்யைகளில் மற்றவற்றையும் பன்னிரண்டு வருஷ குருகுல வாஸத்தில் கற்றுத் தேற வேண்டும். பிறகு ஸமாவர்த்தனம் பண்ணிக் கொண்டு அகத்துக்குத் திரும்பிப் போய் விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.
இரண்டு தெய்வக்குழந்தைகள் மநுஷ்ய ரூபத்தில் அவதாரம் பண்ணினபோது உபநயன ஸம்ஸ்கார விசேஷத்தாலேயே தங்கள் அவதார காரியத்தைப் பண்ணிக் காட்டின என்று நான் நினைப்பது வழக்கம். வேத மதம் நலிவடைந்தபோது அதை புத்துயிர் கொடுத்து ஸ்தாபித்த சங்கரரும் ஞானஸம்பந்தரும்தான் அந்த குழந்தைகள்.
ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுக்கு பால்யத்திலேயே உபநயனமானதைப் பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. "நான்மறை ஞஆன ஸம்பந்தன்"என்று அவரே வர்ணித்துக் கொண்டிருப்பதிலிருந்து நாலு வேதங்களையும் அவர் அத்யயனம் பண்ணினார் என்று தெரிகிறது. ஆசாரியாளுக்கும், ஞானஸம்பந்தருக்கும் ஒரு தரம் கேட்டாலே பாடமாய் விடும். 'ஏக ஸந்தக்ராஹி'கள். அதனால் ஒரிரு வருஷங்களுக்குள் அத்யயனம் பூர்த்தி பண்ணிவிட்டார்கள். கற்றுக்கொள்ளாமலே, தாங்களாக ஸகல வித்தைகளையும் தெரிந்து கொள்ளக் கூடியவர். அந்த இருவருள் ஒருவர் (சங்கரர்) பரமேச்வர அவதாரம்;மற்றவர் ( (ஸம்பந்தர்) ஸுப்ரமண்யரின் அவதாரம். அப்படியிருந்தும் அவர்கள் உபநயன ஸம்ஸ்காரமாகி, காயத்ரீ மந்திர உபதேசம் பெற்ற பின்பே அவதார காரியத்தை விசேஷமாகச் செய்து காட்டினார்கள் என்றால், இது அந்த ஸம்ஸ்காரத்தின் அவசியத்தை ஸாதாரண மநுஷ்யர்களான நமக்கு அழுத்தமாகத் தெரிவிப்பதற்குத்தான்.
ராஜசூடாமணி தீக்ஷிதரென்று ஒரு கவி இருந்தார். அவர், "காயத்ரீ என்னை அடையுமுன்னே ஸரஸ்வதி என்னிடம் வந்து விட்டாள்"என்று ஒரு ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார். காயத்ரீ உபதேசம் பெறுகிற எட்டாவது வயசுக்கு முன்பே அவர் கவிபாட ஆரம்பித்து விட்டார். அதைத்தான் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்!ஞான ஸம்பந்தரும் மூன்றாம் வயசிலேயே 'தோடுடைய செவியன்'என்று பாடினவர்தான். அப்போதே அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார். ஆனாலும் பூணூல் போட்டுக் கொண்டு காயத்ரீ உபதேசம் வாங்கிக் கொண்டார்;அந்த பலத்தினாலேயே மேற்கொண்டு பெரிய பெரிய காரியங்களைப் பண்ணி வைதிக தர்மத்தை நிலைநாட்டினதாகக் காண்பித்தார் - என்பதிலிருந்து நமக்கெல்லாம் உபநயன ஸம்ஸ்காரத்திலும், அதற்கப்புறம் காயத்ரீ ஜபம் செய்வதிலும் கண்ணைத் திறந்து விட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
பிராமணர்கள் சாப்பிடும் முன்,"ஜலபரிஷேஸனம் என்ற முறையில் உள்ளங்கையில் சிறிது தண்ணீர் விட்டு உறிஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள். வலக்கை ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் சேர்த்து வைத்து, மற்ற விரல்களை நீட்டி, உள்ளங்கையில் சிறிது தண்ணீர் ஊற்றி, உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்து, மூன்று முறை உறிஞ்சிக் குடிப்பதே ஜலபரிஷேஸனம். இதற்கு காரணம் தெரியுமா!சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பொது விதி. இவ்வாறு செய்தால் ஜீரணம் கெட்டு விடும். பற்களால் உணவைச் அரைத்து சாப்பிடும்போது, சுரக்கிற <உமிழ்நீரே, உணவைக் கரைக்க போதுமானது. சாப்பிடும் முன், கை கால் கழுவி, வாய் கொப்பளிப்பதும் இதனால் தான். அதிலும் ஓரளவு தண்ணீர் வாயில் ஒட்டிக்கொள்ளும் சரி..விக்கல் வந்து விட்டது, உணவு காரமாக இருக்கிறது... அப்போது என்ன செய்ய என்ற கேள்வி எழும். இதற்கு தீர்வு, உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விக்கல் வர காரணம் என்ன தெரியுமா?சாப்பிடும் போது வேலை, தொழில், வியாபாரம், இன்ன பிற விஷயங்களைச் சிந்திப்பது தான். எனவே, சாப்பிடும் சமயத்தில் சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். இதனால் தான் சாப்பிடும் முன், நாக்கு நனையுமளவு மிகக்குறைந்த அளவு தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். ஜலபரிஷேஸனம் என்ற ஆன்மிகச் சடங்கு செய்பவர்களை கேலி செய்பவர்கள், இனியாவது, இதிலுள்ள அறிவியல் காரணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு அந்தணர்களில் திருமணமானப் பெண்கள் புடவை அணியும் பாணி மடிசார் எனப்படும்...பழைய பழக்கங்களின்படி திருமணமானதும் பிராமணப் பெண்கள் தினமும் இந்தப் பாணியில்தான் புடவை அணியவேண்டும்...சமையலும் குளித்துவிட்டு மடியாக, சுத்தமாக இந்தப்பாணி புடவைக் கட்டிக்கொண்டுதான் செய்யவேண்டும்...மடியை சார்ந்த பாணி என்பதால் மடிசார் கட்டு என்பர்...இந்த பாணியில் இருவகை உண்டு...வைணவ மதத்தினர் (ஐயங்கார்) புடவையின் மேல் தலைப்பை இடது பக்கமாகவும், சைவ மதத்தினர் (ஐயர்) வலது பக்கமாகவும் மடித்து அணிவர்...மடிசார் கட்டுவதற்குப் புடவையின் நீளம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால் ஒன்பது கெஜம் நீளமுள்ளப் புடவையே கன கச்சிதமான மடிசார் கட்டுக்குப் பயன்படுகிறது...தற்காலத்தில் தினமும் மடிசார் கட்டுவதில்லை...விசேட காலங்களில்தான் கட்டுகின்றனர்...சம்பிரதாயமானது அல்ல என்றாலும் சற்று எளிதான முறையில் ஆறு கெஜம் நீள புடவையிலும் மடிசார் கட்டும் முறை தற்போது நடைமுறையிலுள்ளது...முறையான மடிசார் பாணியில் கட்டியப் புடவை எந்தச் சூழ்நிலையிலும் பெண்களின் உடலிலிருந்து நழுவாது,வழுவாது, அவிழாது, பறக்காது என்பதே சிறப்பாகும்...பட்டு, பருத்தி முதலான எல்லாவிதமான துணிகளிலும் மடிசார் புடவைகள் ஆயத்தமாகக் கிடைக்கின்றன.
கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை "பந்தி என்கிறார்கள். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி என்பது தமிழில் "பந்தி ஆனது. "பங்க்தி என்றால் "சேர்ந்து உண்ணுதல். மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம். அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர் என்பர். நம்மோடு சேர்ந்து சாப்பிடுபவர்களின் குணம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் எல்லார் உணவின் மீதும் பரவும். எனவே,நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நம் எல்லாருக்குமே நல்லது.
பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.
குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.
ஒவ்வொரு நாளும் பிரம்மச்சாரிகள் அக்னி காரியம், அதாவது ஸமிதாதனம் (சுள்ளிகளை மந்திரபூர்வமாக ஹோமம்) பண்ண வேண்டும். பிக்ஷ£சர்யம் (பி¬க்ஷ எடுத்தல்) செய்ய வேண்டும். அலவணமாக ( உப்பில்லாமல்) சாப்பிட வேண்டும். பிரம்மசாரிகளில் பிராம்மணன் பலாச (புரச) தண்டமும், க்ஷத்ரியன அச்வத்த (அரசு) தண்டமும், வைசியன் அத்தி தண்டமும் வைத்துக் கொள்ள வேண்டும். ச்ருத தாரணத்துக்காகத் தண்டம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எதை அத்தியயனம் பண்ணுகிறானோ அதைக் கெட்டியாக இருத்திக் கொள்வதற்கு அப்படிச் செய்ய வேண்டும். இடிதாங்கி, ஏரியல் என்றெல்லாம் இல்லையா?அப்படி மநுஷ்யனுக்கானது இந்த தண்டம். இடிதாங்கி Scientific தான். வேதத்திலுள்ள எல்லா மந்திரங்களும் மறவாமல் மனதில் இருக்கும்படி பாதுகாக்க தண்டம் வேண்டும். வேத மந்திர சக்தியை தாரணம் பண்ணுவதற்கு அந்த தண்டத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. வேதநிதி அகலாமல் இருக்க அதை வைத்துக் கொள்ள வேண்டும். பிரம்மச்சாரி மேலே கிருஷ்ணாஜினம் (மான்தோல்) போட்டுக் கொள்ள வேண்டும். மேல் வேஷ்டி போட்டுக்கொள்ளக் கூடாது. எலெக்ட்ரீஷியன் மரத்தின் மேல் நிற்கவேண்டும்;ரப்பர் Gloves போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஆத்மிக மின்ஸாரத்துக்கு பெரியவர்கள் இந்த விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
இப்பொழுது நாம் ஒரு நாள் உபாகர்மாவைத் தான் பண்ணுகிறோம். அப்புறம் தொடர்ந்து வேதம் படிப்பதில்லை. உத்ஸர்ஜனமும் (ஒரு வேதப்பகுதியைப் படித்து முடிப்பது) பண்ணுவதில்லை. அது பண்ணாததற்குப் பிராயச்சித்தமாக 'காமோகார்ஷீத்'ஜபம் பண்ணுகிறோம்;"நான் பாபம் பண்ணவில்லை;காமம் பண்ணியது, கோபம் பண்ணியது;என்னிடம் வராதே;நமஸ்காரம் பண்ணுகிறேன்!" என்று சொல்லுகிறோம். அந்த மந்திரத்துக்கு அதுதான் அர்த்தம். உத்ஸர்ஜனம் பண்ணினால் இந்த ஜபம் அவசியம் இல்லை.
கால நியமம், விரத நியமம், ஆஹார நியமம் முதலியவைகளை அநுஷ்டிப்பது பிரம்மச்சரியம். அத்யயனத்தில் ஸ்வர லோபம், வர்ண லோபம் முதலான உச்சாரணத் தப்புக்கள் ஏற்படக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக ஆவணியவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுவதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் காயத்ரி ஹோமம் பண்ண வேண்டும். இப்பொழுது ஹோமமாக பிரதம சிராவணக்காரர்கள் (தலைப்பூணூல் பையன்கள்) மட்டும் பண்ணுகிறார்கள் மற்றவர்கள் ஹோமமின்றி ஜபம் மாத்திரம் செய்கிறார்கள். இப்படியின்றி எல்லாருமே ஹோமம் செய்ய வேண்டும். வெறும் ஜபம் பண்ணினால் தூக்கம் வருகிறது. அதனால் லோபம் வருகிறது. ஒரு காரியம் இருந்தால் தூக்கம் வராது. அதற்காகவாவது ஸமித்தினால் ஹோமம் பண்ணலாம். பலாஸ ஸமித்தால் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அச்வத்த ஸமித்தால் பண்ணவேண்டும். கடைசி பக்ஷம் தர்ப்பையினாலாவது பண்ண வேண்டும்.
பிரம்மச்சாரி சாப்பிடுவதற்கு கணக்கு இல்லை. வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனாலும் நாக்கு ருசியைக் குறைக்க வேண்டும். இவன் இஷ்டப்படியான சமையலாக இருக்கக்கூடாது, பி¬க்ஷயில் எது கிடைக்கிறதோ அதையே சாப்பிட வேண்டும் என்பதும் இவனை பி¬க்ஷ எடுக்க வைத்ததற்கு ஒரு காரணம். மூல காரணம், பிச்சை எடுப்பதால் இவனுக்கு விநயம் ஏற்படும் என்பதே.ருசி பார்க்கக் கூடாது என்றாலும் ஆஹாரத்தின் அளவுக்கு கட்டுப்பாடு இல்லை. பிரம்மச்சாரி வயிறாரச் சாப்பிட வேண்டும். பட்டினி முதலிய உபவாஸங்களை பிரம்மச்சாரிக்கு சாஸ்திரங்கள் விதிக்கவில்லை. வளர்கிற பருவத்தில் அவன் புஷ்டியாக இருக்க வேண்டும். அதே ஸமயம் ஸத்வ குணத்தோடு, முரடாக இல்லாமல் இருக்க வேண்டும். குரு சுச்ருஷை இப்படிப்பட்ட ஸத்வ குணத்தை ஊட்டவே ஏற்பட்டது. தனது வேத சாகையையும், சதுர்தச வித்யைகளில் மற்றவற்றையும் பன்னிரண்டு வருஷ குருகுல வாஸத்தில் கற்றுத் தேற வேண்டும். பிறகு ஸமாவர்த்தனம் பண்ணிக் கொண்டு அகத்துக்குத் திரும்பிப் போய் விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.
இரண்டு தெய்வக்குழந்தைகள் மநுஷ்ய ரூபத்தில் அவதாரம் பண்ணினபோது உபநயன ஸம்ஸ்கார விசேஷத்தாலேயே தங்கள் அவதார காரியத்தைப் பண்ணிக் காட்டின என்று நான் நினைப்பது வழக்கம். வேத மதம் நலிவடைந்தபோது அதை புத்துயிர் கொடுத்து ஸ்தாபித்த சங்கரரும் ஞானஸம்பந்தரும்தான் அந்த குழந்தைகள்.
ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுக்கு பால்யத்திலேயே உபநயனமானதைப் பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. "நான்மறை ஞஆன ஸம்பந்தன்"என்று அவரே வர்ணித்துக் கொண்டிருப்பதிலிருந்து நாலு வேதங்களையும் அவர் அத்யயனம் பண்ணினார் என்று தெரிகிறது. ஆசாரியாளுக்கும், ஞானஸம்பந்தருக்கும் ஒரு தரம் கேட்டாலே பாடமாய் விடும். 'ஏக ஸந்தக்ராஹி'கள். அதனால் ஒரிரு வருஷங்களுக்குள் அத்யயனம் பூர்த்தி பண்ணிவிட்டார்கள். கற்றுக்கொள்ளாமலே, தாங்களாக ஸகல வித்தைகளையும் தெரிந்து கொள்ளக் கூடியவர். அந்த இருவருள் ஒருவர் (சங்கரர்) பரமேச்வர அவதாரம்;மற்றவர் ( (ஸம்பந்தர்) ஸுப்ரமண்யரின் அவதாரம். அப்படியிருந்தும் அவர்கள் உபநயன ஸம்ஸ்காரமாகி, காயத்ரீ மந்திர உபதேசம் பெற்ற பின்பே அவதார காரியத்தை விசேஷமாகச் செய்து காட்டினார்கள் என்றால், இது அந்த ஸம்ஸ்காரத்தின் அவசியத்தை ஸாதாரண மநுஷ்யர்களான நமக்கு அழுத்தமாகத் தெரிவிப்பதற்குத்தான்.
ராஜசூடாமணி தீக்ஷிதரென்று ஒரு கவி இருந்தார். அவர், "காயத்ரீ என்னை அடையுமுன்னே ஸரஸ்வதி என்னிடம் வந்து விட்டாள்"என்று ஒரு ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார். காயத்ரீ உபதேசம் பெறுகிற எட்டாவது வயசுக்கு முன்பே அவர் கவிபாட ஆரம்பித்து விட்டார். அதைத்தான் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்!ஞான ஸம்பந்தரும் மூன்றாம் வயசிலேயே 'தோடுடைய செவியன்'என்று பாடினவர்தான். அப்போதே அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார். ஆனாலும் பூணூல் போட்டுக் கொண்டு காயத்ரீ உபதேசம் வாங்கிக் கொண்டார்;அந்த பலத்தினாலேயே மேற்கொண்டு பெரிய பெரிய காரியங்களைப் பண்ணி வைதிக தர்மத்தை நிலைநாட்டினதாகக் காண்பித்தார் - என்பதிலிருந்து நமக்கெல்லாம் உபநயன ஸம்ஸ்காரத்திலும், அதற்கப்புறம் காயத்ரீ ஜபம் செய்வதிலும் கண்ணைத் திறந்து விட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
பிராமணர்கள் சாப்பிடும் முன்,"ஜலபரிஷேஸனம் என்ற முறையில் உள்ளங்கையில் சிறிது தண்ணீர் விட்டு உறிஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள். வலக்கை ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் சேர்த்து வைத்து, மற்ற விரல்களை நீட்டி, உள்ளங்கையில் சிறிது தண்ணீர் ஊற்றி, உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்து, மூன்று முறை உறிஞ்சிக் குடிப்பதே ஜலபரிஷேஸனம். இதற்கு காரணம் தெரியுமா!சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பொது விதி. இவ்வாறு செய்தால் ஜீரணம் கெட்டு விடும். பற்களால் உணவைச் அரைத்து சாப்பிடும்போது, சுரக்கிற <உமிழ்நீரே, உணவைக் கரைக்க போதுமானது. சாப்பிடும் முன், கை கால் கழுவி, வாய் கொப்பளிப்பதும் இதனால் தான். அதிலும் ஓரளவு தண்ணீர் வாயில் ஒட்டிக்கொள்ளும் சரி..விக்கல் வந்து விட்டது, உணவு காரமாக இருக்கிறது... அப்போது என்ன செய்ய என்ற கேள்வி எழும். இதற்கு தீர்வு, உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விக்கல் வர காரணம் என்ன தெரியுமா?சாப்பிடும் போது வேலை, தொழில், வியாபாரம், இன்ன பிற விஷயங்களைச் சிந்திப்பது தான். எனவே, சாப்பிடும் சமயத்தில் சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். இதனால் தான் சாப்பிடும் முன், நாக்கு நனையுமளவு மிகக்குறைந்த அளவு தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். ஜலபரிஷேஸனம் என்ற ஆன்மிகச் சடங்கு செய்பவர்களை கேலி செய்பவர்கள், இனியாவது, இதிலுள்ள அறிவியல் காரணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு அந்தணர்களில் திருமணமானப் பெண்கள் புடவை அணியும் பாணி மடிசார் எனப்படும்...பழைய பழக்கங்களின்படி திருமணமானதும் பிராமணப் பெண்கள் தினமும் இந்தப் பாணியில்தான் புடவை அணியவேண்டும்...சமையலும் குளித்துவிட்டு மடியாக, சுத்தமாக இந்தப்பாணி புடவைக் கட்டிக்கொண்டுதான் செய்யவேண்டும்...மடியை சார்ந்த பாணி என்பதால் மடிசார் கட்டு என்பர்...இந்த பாணியில் இருவகை உண்டு...வைணவ மதத்தினர் (ஐயங்கார்) புடவையின் மேல் தலைப்பை இடது பக்கமாகவும், சைவ மதத்தினர் (ஐயர்) வலது பக்கமாகவும் மடித்து அணிவர்...மடிசார் கட்டுவதற்குப் புடவையின் நீளம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால் ஒன்பது கெஜம் நீளமுள்ளப் புடவையே கன கச்சிதமான மடிசார் கட்டுக்குப் பயன்படுகிறது...தற்காலத்தில் தினமும் மடிசார் கட்டுவதில்லை...விசேட காலங்களில்தான் கட்டுகின்றனர்...சம்பிரதாயமானது அல்ல என்றாலும் சற்று எளிதான முறையில் ஆறு கெஜம் நீள புடவையிலும் மடிசார் கட்டும் முறை தற்போது நடைமுறையிலுள்ளது...முறையான மடிசார் பாணியில் கட்டியப் புடவை எந்தச் சூழ்நிலையிலும் பெண்களின் உடலிலிருந்து நழுவாது,வழுவாது, அவிழாது, பறக்காது என்பதே சிறப்பாகும்...பட்டு, பருத்தி முதலான எல்லாவிதமான துணிகளிலும் மடிசார் புடவைகள் ஆயத்தமாகக் கிடைக்கின்றன.
கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை "பந்தி என்கிறார்கள். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி என்பது தமிழில் "பந்தி ஆனது. "பங்க்தி என்றால் "சேர்ந்து உண்ணுதல். மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம். அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர் என்பர். நம்மோடு சேர்ந்து சாப்பிடுபவர்களின் குணம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் எல்லார் உணவின் மீதும் பரவும். எனவே,நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நம் எல்லாருக்குமே நல்லது.
பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.
குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.