Post by uma2806 on Oct 28, 2013 11:57:36 GMT 5.5
மஹாபெரியவா தரிசன அனுபவங்கள் - ஆறாம் பகுதியிலிருந்து - ஸ்ரீமதி இந்திரா பாலசுப்ரமணியன், தானே மேற்கு.
பெரியவர் பக்தர்களில் என் அம்மாவின் சித்தியும் சித்தப்பாவும் முக்கியமானவர்கள். சித்தப்பா பம்பாயில் வியாபாரம் செய்து வந்தார். திடீரென நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் நொடித்துப் போய் சென்னை வந்தது. பெரியவர் அப்போது சென்னையில் முகாமிட்டிருந்தார். சித்தி நாளின் பெரும்பகுதியை மடத்திலேயே செலவழித்தார். இந்த நேரத்தில் சித்தியின் இருபது வயது பிள்ளை மரணமடைந்தான். என்றாலும் சித்தி மடத்தில் பூ ஆய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்தார்.
அந்தச் சமயங்களில் பூஜை செய்து கொண்டிருக்கும் பெரியவர் காமாக்ஷி மாதிரியும், சிவன், பெருமாள் மாதிரியும் மாறி மாறி காட்சி தருவாராம். மீண்டும் பார்த்தால் புன்னகையுடன் சன்னியாசியாக இருப்பாராம்.
சித்தியின் பெண் சிறு குழந்தை. ஒருநாள் உடையில் தீப்பிடித்துக் கொண்டது. சித்தி பெரியவரை நினைத்து தீயை அணைத்து உடையை அகற்றினால் உடம்பில் சிறுகாயம்கூட இல்லை. பிறகு பெரியவர் உத்திரவுப்படி மீண்டும் சித்தி, சித்தப்பா, பம்பாய் சென்று வியாபாரம் ஆரம்பித்தனர். அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்து வைப்பதற்காகவே அனுப்பினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பெரிய பெண்ணுக்கு வரன் பார்க்கும்போது பெரியவர், “நீ இப்போ கஷ்டப்படுகிறாயே! நாளைக்கு உன் பிள்ளைக்கும் இப்படித்தானே கேட்பே?” என்றார்.
சித்தி, “நான் எதுவுமே கேட்க மாட்டேன்” என்றார். அப்படியே நடந்து கொண்டார். தவிர கடைசிவரை நகைகள் எதுவும் அணியாமல் வைராக்யத்துடன் வாழ்ந்தார். பிறகு பிள்ளையிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காஞ்சி வந்தார்கள். பெரியவர் அவர்களுக்கு மடத்திலேயே இடம் கொடுத்திருந்தார். தினம் மூன்று வேளை பெரியவர் தரிசனம். சிறிது காலத்திற்குப் பிறகு அவர்கள் வெளியில் வீடு எடுத்து வசித்தனர்.
ஒருமுறை நான் காஞ்சி சென்றபோது சித்தியின் பெண் தன் கணவருக்கு பை-பாஸ் ஆபரேஷன் செய்யச் சொல்வதாகச் சொன்னாள்.
“ஆபரேஷன் பண்ணித்தான் ஆகணும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆபரேஷன் இல்லாமலே பெரியவா குணப்படுத்தணும்” என்றாள். மகான் ஆசீர்வதித்தார். டாக்டர்களே ஆச்சர்யப்படும் விதத்தில் அவரும் ஆபரேஷன் இன்றி குணமடைந்தார்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
பெரியவர் பக்தர்களில் என் அம்மாவின் சித்தியும் சித்தப்பாவும் முக்கியமானவர்கள். சித்தப்பா பம்பாயில் வியாபாரம் செய்து வந்தார். திடீரென நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் நொடித்துப் போய் சென்னை வந்தது. பெரியவர் அப்போது சென்னையில் முகாமிட்டிருந்தார். சித்தி நாளின் பெரும்பகுதியை மடத்திலேயே செலவழித்தார். இந்த நேரத்தில் சித்தியின் இருபது வயது பிள்ளை மரணமடைந்தான். என்றாலும் சித்தி மடத்தில் பூ ஆய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்தார்.
அந்தச் சமயங்களில் பூஜை செய்து கொண்டிருக்கும் பெரியவர் காமாக்ஷி மாதிரியும், சிவன், பெருமாள் மாதிரியும் மாறி மாறி காட்சி தருவாராம். மீண்டும் பார்த்தால் புன்னகையுடன் சன்னியாசியாக இருப்பாராம்.
சித்தியின் பெண் சிறு குழந்தை. ஒருநாள் உடையில் தீப்பிடித்துக் கொண்டது. சித்தி பெரியவரை நினைத்து தீயை அணைத்து உடையை அகற்றினால் உடம்பில் சிறுகாயம்கூட இல்லை. பிறகு பெரியவர் உத்திரவுப்படி மீண்டும் சித்தி, சித்தப்பா, பம்பாய் சென்று வியாபாரம் ஆரம்பித்தனர். அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்து வைப்பதற்காகவே அனுப்பினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பெரிய பெண்ணுக்கு வரன் பார்க்கும்போது பெரியவர், “நீ இப்போ கஷ்டப்படுகிறாயே! நாளைக்கு உன் பிள்ளைக்கும் இப்படித்தானே கேட்பே?” என்றார்.
சித்தி, “நான் எதுவுமே கேட்க மாட்டேன்” என்றார். அப்படியே நடந்து கொண்டார். தவிர கடைசிவரை நகைகள் எதுவும் அணியாமல் வைராக்யத்துடன் வாழ்ந்தார். பிறகு பிள்ளையிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காஞ்சி வந்தார்கள். பெரியவர் அவர்களுக்கு மடத்திலேயே இடம் கொடுத்திருந்தார். தினம் மூன்று வேளை பெரியவர் தரிசனம். சிறிது காலத்திற்குப் பிறகு அவர்கள் வெளியில் வீடு எடுத்து வசித்தனர்.
ஒருமுறை நான் காஞ்சி சென்றபோது சித்தியின் பெண் தன் கணவருக்கு பை-பாஸ் ஆபரேஷன் செய்யச் சொல்வதாகச் சொன்னாள்.
“ஆபரேஷன் பண்ணித்தான் ஆகணும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆபரேஷன் இல்லாமலே பெரியவா குணப்படுத்தணும்” என்றாள். மகான் ஆசீர்வதித்தார். டாக்டர்களே ஆச்சர்யப்படும் விதத்தில் அவரும் ஆபரேஷன் இன்றி குணமடைந்தார்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!