Post by radha on Oct 28, 2013 0:43:36 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
நவ., 2 - தீபாவளி
நீதிக்குப்பின் பாசம் என்ற, உயர்ந்த நீதியை, தீபாவளி திருநாள் நமக்கு போதிக்கிறது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தவறு செய்தால், தண்டனை நிச்சயம் என்பதை எடுத்துக்காட்டும் விழா தான், தீபாவளி. தேவர்களுக்கு இடையூறு செய்த இரண்யாட்சன் என்ற அசுரன், பாதாள லோகத்தில், ஒளிந்து கொண்டான். அவனைக் கொல்ல, பெருமாள் வராக அவதாரமெடுத்து, பூமிக்குள் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தால், பவுமன் என்ற, மகன் பிறந்தான். பொறுமை மிக்க பூமாதேவிக்கு மகனாக பிறந்திருந்தாலும், கெட்ட குணங்களைக் கொண்ட வனாக இருந்தான் பவுமன். இவன் மனிதர்களிலேயே, மிக மோசமானவன் என்பதால், "நரகாசுரன்' என்று அழைக்கப்பட்டான். "அசுர குணம் கொண்ட மனிதன்' என்பது இதற்குப் பொருள்.
பவுமன், காமரூபம் (அசாம்) பகுதியில் இருந்த, "ப்ராக் ஜோதிஷபுரம்' என்ற ஊரில், வசித்து வந்தான். ஜோதிஷபுரம் என்றால், பிரகாசமான பட்டணம் என்று அர்த்தம். "ப்ராக்' என்றால் கிழக்கு. இந்நகரம், தற் போது, கவுகாத்தி எனப்படுகிறது. அவனது, கொடுங் கோல் ஆட்சியில், அதர்மமும், அநீதியும் தலைவிரித்தாடின. இவன், பிரம்மாவைக் குறித்து தவம் செய்து, அசுரபலம் பெற்றான். ஆணவத்தால், தேவலோகத்திற்குச் சென்று, இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், அவன் தாயின் குண்டலங்களையும் அபகரித்து வந்தான்.
பெருமாளுக்கு பிறந்த பிள்ளை என்பதால், அவனை, யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. இருப்பினும், அவனது, அட்டூழியத்தைப் பொறுக்க முடியாத பிரம்மா, பெருமாளிடம் புகார் செய்தார்.பெருமாளாலும், அவனை ஏதும் செய்ய முடியாத நிலை. ஏனெனில், நரகாசுரன், தன் தாயைத் தவிர,வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். இதையடுத்து, கிருஷ்ணாவதாரம் எடுத்தார் பெருமாள். அந்தப் பிறப்பில், நரகாசுரனின் தாயான பூமாதேவியை, சத்தியபாமாவாகப் பிறக்கச் செய்து, திருமணம் செய்து கொண்டார்.
அவள் தேரோட்டு வதில், வல்லவள். கிருஷ்ணர், அவளை, தனக்கு சாரதியாக நியமித்து, நரகாசுரனுடன் போருக்கு சென்றார். சத்யபாமாவுக்கு, தான் போரிடப்போவது, தன் மகனுடன் தான் என்பது, தெரியாது.
கிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில், அவர், நரகாசுரனால் தாக்கப் பட்டு, மூர்ச்சையடைபவர் போல் நடித்தார். பதறிப் போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற, தன் மகன் மீது, அம்பு தொடுத் தாள்; நரகாசுரன் இறந்தான்.
அதன்பிறகே, இறந்தது தன் மகன் என்பது, அவளுக்கு தெரிய வந்து, வருத்தமடைந்தாள். அதே நேரம், அவனது மரணத்தை, உலகமே தீபமேற்றிக் கொண்டாடுவதைப் பார்த்தாள். இதனால், தன் மகன் இறந்த நாளை, மகனின் பெயரால், "நரக சதுர்த்தசி' என்று பெயரிட்டு கொண்டாட, பெருமாளிடம் அனுமதி கேட்டாள். நரகாசுரன் இறந்த அன்று, மக்கள் தீபங்களை வரிசையாக ஏற்றியதால், "தீபாவளி' என்று பெயர் வந்தது. தீபம் + ஆவளி என்று இதைப் பிரிப்பர். "ஆவளி' என்றால், வரிசை என்று பொருள்.
பூமாதேவிக்கு, பசுக்கள் என்றால் மிகவும் இஷ்டம். அவள், பசு வடிவில் பெருமாளை வழிபட்டிருக் கிறாள். எனவே, தீபாவளியன்று பசுக்களுக்கு பூஜை செய்து, புல்லும், வாழைப் பழமும் கொடுக்க வேண்டும். இதனால், பிதுர்களின், ஆசி நமக்கு கிடைக்கும்.
தெய்வம் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தவறு செய்தால், தண்டனை உண்டு என்பதை, புராணங்கள், திட்டவட்டமாக தெரிவிக்கின்றன. நாமும், நம் பிள்ளைகள் செய்யும் தவறுகளை, பக்குவமாக எடுத்துக் கூறி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அதுதான், நிஜமான தீபாவளி.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
நவ., 2 - தீபாவளி
நீதிக்குப்பின் பாசம் என்ற, உயர்ந்த நீதியை, தீபாவளி திருநாள் நமக்கு போதிக்கிறது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தவறு செய்தால், தண்டனை நிச்சயம் என்பதை எடுத்துக்காட்டும் விழா தான், தீபாவளி. தேவர்களுக்கு இடையூறு செய்த இரண்யாட்சன் என்ற அசுரன், பாதாள லோகத்தில், ஒளிந்து கொண்டான். அவனைக் கொல்ல, பெருமாள் வராக அவதாரமெடுத்து, பூமிக்குள் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தால், பவுமன் என்ற, மகன் பிறந்தான். பொறுமை மிக்க பூமாதேவிக்கு மகனாக பிறந்திருந்தாலும், கெட்ட குணங்களைக் கொண்ட வனாக இருந்தான் பவுமன். இவன் மனிதர்களிலேயே, மிக மோசமானவன் என்பதால், "நரகாசுரன்' என்று அழைக்கப்பட்டான். "அசுர குணம் கொண்ட மனிதன்' என்பது இதற்குப் பொருள்.
பவுமன், காமரூபம் (அசாம்) பகுதியில் இருந்த, "ப்ராக் ஜோதிஷபுரம்' என்ற ஊரில், வசித்து வந்தான். ஜோதிஷபுரம் என்றால், பிரகாசமான பட்டணம் என்று அர்த்தம். "ப்ராக்' என்றால் கிழக்கு. இந்நகரம், தற் போது, கவுகாத்தி எனப்படுகிறது. அவனது, கொடுங் கோல் ஆட்சியில், அதர்மமும், அநீதியும் தலைவிரித்தாடின. இவன், பிரம்மாவைக் குறித்து தவம் செய்து, அசுரபலம் பெற்றான். ஆணவத்தால், தேவலோகத்திற்குச் சென்று, இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், அவன் தாயின் குண்டலங்களையும் அபகரித்து வந்தான்.
பெருமாளுக்கு பிறந்த பிள்ளை என்பதால், அவனை, யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. இருப்பினும், அவனது, அட்டூழியத்தைப் பொறுக்க முடியாத பிரம்மா, பெருமாளிடம் புகார் செய்தார்.பெருமாளாலும், அவனை ஏதும் செய்ய முடியாத நிலை. ஏனெனில், நரகாசுரன், தன் தாயைத் தவிர,வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். இதையடுத்து, கிருஷ்ணாவதாரம் எடுத்தார் பெருமாள். அந்தப் பிறப்பில், நரகாசுரனின் தாயான பூமாதேவியை, சத்தியபாமாவாகப் பிறக்கச் செய்து, திருமணம் செய்து கொண்டார்.
அவள் தேரோட்டு வதில், வல்லவள். கிருஷ்ணர், அவளை, தனக்கு சாரதியாக நியமித்து, நரகாசுரனுடன் போருக்கு சென்றார். சத்யபாமாவுக்கு, தான் போரிடப்போவது, தன் மகனுடன் தான் என்பது, தெரியாது.
கிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில், அவர், நரகாசுரனால் தாக்கப் பட்டு, மூர்ச்சையடைபவர் போல் நடித்தார். பதறிப் போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற, தன் மகன் மீது, அம்பு தொடுத் தாள்; நரகாசுரன் இறந்தான்.
அதன்பிறகே, இறந்தது தன் மகன் என்பது, அவளுக்கு தெரிய வந்து, வருத்தமடைந்தாள். அதே நேரம், அவனது மரணத்தை, உலகமே தீபமேற்றிக் கொண்டாடுவதைப் பார்த்தாள். இதனால், தன் மகன் இறந்த நாளை, மகனின் பெயரால், "நரக சதுர்த்தசி' என்று பெயரிட்டு கொண்டாட, பெருமாளிடம் அனுமதி கேட்டாள். நரகாசுரன் இறந்த அன்று, மக்கள் தீபங்களை வரிசையாக ஏற்றியதால், "தீபாவளி' என்று பெயர் வந்தது. தீபம் + ஆவளி என்று இதைப் பிரிப்பர். "ஆவளி' என்றால், வரிசை என்று பொருள்.
பூமாதேவிக்கு, பசுக்கள் என்றால் மிகவும் இஷ்டம். அவள், பசு வடிவில் பெருமாளை வழிபட்டிருக் கிறாள். எனவே, தீபாவளியன்று பசுக்களுக்கு பூஜை செய்து, புல்லும், வாழைப் பழமும் கொடுக்க வேண்டும். இதனால், பிதுர்களின், ஆசி நமக்கு கிடைக்கும்.
தெய்வம் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தவறு செய்தால், தண்டனை உண்டு என்பதை, புராணங்கள், திட்டவட்டமாக தெரிவிக்கின்றன. நாமும், நம் பிள்ளைகள் செய்யும் தவறுகளை, பக்குவமாக எடுத்துக் கூறி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அதுதான், நிஜமான தீபாவளி.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM