Post by radha on Oct 26, 2013 6:40:20 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
தினமலர் -- குமுதம் பக்தி செய்தி
தீயவை போக்கும் தீப ஒளி
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களாலும் மிகவும் விரும்பிக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஆசியாவிலேயே மிக அதிகமானோர் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் இந்தப் பண்டிகையை இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
தீபாவளித் திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என பாகவத புராணம் சொல்கிறது.
முதல்நாள் தன்திரயோசதி அல்லது தந்தேரஸ்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது இந்த நாளில்தான் தன்வந்திரி அமிர்த கலசத்துடன் தோன்றினார். அதோடு, செல்வத்துக்கு அதிபதியான அன்னை மகாலட்சுமி அவதரித்த தினமும் இதுதான். அதனால் இந்த திரயோதசி நாள் "தன்' அதாவது செல்வம் வளம் சேர்க்கும் நாளாக கருதப்படுகிறது. அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வ வளம் என்றும் நிலைத்து நிற்கும் என புராணங்கள் கூறுகின்றன. அதனால் வட மாநிலங்களில் அன்று மகாலட்சுமிபூஜை செய்யப்படுகிறது.
இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி: அன்றுதான் சென்னகங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் என்ற அசுரன் பூமித்தாய்க்கு பிறந்தவன். அவன் தேவர்களுக்கும், மக்களுக்கும் சொல்லொணா கொடுமைகள் செய்து வந்தான்.
மக்கள் படும் துயரைப் பார்க்க முடியாத மகாவிஷ்ணு கிருஷ்ணாவரதாரத்தில் அவனை கொல்ல முயன்றார். ஆனால் அவன் தன் தாயான பூமிதேவியைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றவன். நரகாசுரனின் அம்பு பட்டு கிருஷ்ணர் மயக்கமடைந்து விட்டார். அதனால் மிகவும் கோபம் கொண்ட சத்யபாமா, நரகாசுரனை போருக்கு அழைத்தாள்.
சத்யபாமா பூமிதேவியின் அவதாரம் என்பதை உணராத நரகாசுரன், பெண் தானே என்று அவளுடன் அலட்சியமாகப் போர் செய்தான். அன்னையில் அம்புக்கு பலியாகி விழும்போது தான் அவனுக்கு சத்யபாமா தன் தாய் என்ற உண்மை தெரிகிறது.
அப்போது அவளிடம், "அம்மா! நான் மறைந்த இந்த நாள் மக்களுக்கு என்றும் நினைவில் நிற்க வேண்டம் என்னுடைய பிடியிலிருந்து பூமியும், தேவர்களும் மீண்டதன் அடையாளமாக இந்த நாளை இனிப்பு சாப்பிட்டும், வெடி போட்டும் கொண்டாட வேண்டும். அன்று கடவுளை நினைத்து வணங்குபவர்கள் கேட்கும் வரங்கள் நீ தர வேண்டும்' என வேண்டிக் கொண்டான்.
கிருஷ்ணரும், அன்னை சத்யபாமாவும் அவ்வாறே நடக்கும் என்று வரம் கொடுத்தனர். அன்று முதல் நரக சதுர்த்தசி தினம், தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
மூன்றாம் நாள் அமாவாசை: வட மாநிலங்களில் இந்நாளே பெரிய தீபாவளி என்ற அழைக்கப்படுகிறது. ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாளே இந்நாள் ஆகும். அமாவாசை அன்று பொழுது சாயும் வேளையில் அவர் வரப் போவதாக முன்னரே வானர வீரர் அனுமன் வந்து பரதனிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த பரதன், ஸ்ரீராமருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வீடு தோறும் விளக்கேற்றி வைக்கச் செய்தார். அந்த ஒளியில் அயோத்தி மாநகரமே சொர்க்கம் போல மின்னியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
நான்காம் நாள் கோவர்த்தன பூஜை: கிருஷ்ணர் கோகுலத்தில் பால லீலைகள் புரியும் சமயம். அங்குள்ள யாதவர்கள் ஆண்டு தோறும் நல்ல மழை பொழிந்து, தங்களுக்கு நல்வாழ்வு அளித்ததற்காக இந்திரனுக்கு பூஜை செய்வது வழக்கம். அதனால் இந்திரனுக்கு தானே எல்லாவற்றிற்கும் காரணம் என்ற அகந்தை ஏற்பட்டது. அதை அழிக்க நினைத்தார் பகவான் கிருஷ்ணர். அதனால் மக்களிடம் நம் கோகுலம் செழிப்பாக இருக்க காரணம் இந்திரன் இல்லை. நமக்கு மிக அருகிலேயே இருக்கும் கோவர்த்தன மலை தான். நாம் இந்த வருடம் அந்த மலைக்கு பூஜை செய்வோம் என்றார். கோபாலர்களும் ஏற்றுக்கொண்டு அவ்வாறே செய்தனர்.
இதனால் கடுங்கோபம் கொண்ட இந்திரன் வருணனை ஏவி விட்டு கோகுலத்தின் மீது அடாது மழை பொழிய செய்ய, அனைவரும் பாதிப்புக்குள்ளாயினர்.அவர்களை காக்க கோவர்த்தன மலையையே தன்னுடைய சுண்டு விரலால் குடையாதக தூக்கி அனைவரையும் காத்து அருளினார் கிருஷ்ணர். அது நிகழ்ந்தது இந்த நாளில் தான். அதைகொண்டாடும் விதமாக இந்த நாளின் போது பகவான் கிருஷ்ணருக்கு பூஜை செய்து, அவருக்கு பிடித்த பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்கøதீள நிவேதனம் செய்கின்றனர். அவ்வாறு செய்தால் வீட்டில் ருள் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
ஐந்தாம்நாள் பாயி தூஜ் அல்லது யமதுவிதியை: அன்று தான் யமன் தன்னுடைய சகோதரியான யமுனாவை காண பூலோகத்திற்குவந்தார். யமுனை அவனை வரவேற்கு பல வித இனிப்பு பலகாரங்களையும், அன்னங்களையும் படைத்து அவரை உண்ணச் செய்தாள். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த மயன் நீ எனக்கு உபசாரம் செய்த இந்த நாளில் எந்த சகோதரி தன்னுடன் பிறந்தவனுக்கு விருந்து வைத்து அவன் மனம் குளிரும் விதம் செய்கிறாளோ அவளுக்கு சர்வ மங்களமும் கிட்டும் அவளுடைய தாலி பாக்கியம் நீடித்து இருக்கும் என்று வரம் அருளினார். அதனால் இன்றும் வடமாநிலங்களில் யம துவிதியை அன்று தங்களுடைய சகோதரர்களை வீட்டு அழைத்து புது உடைகள் அளித்து, அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்கள் செய்து கொடுக்கிறார்கள். இதனால் தங்களுக்கு சகல சௌபாக்கியமும் கிட்டும் என்பது அவர்கள் நம்பிக்கை.
தீபாவளிக்கு முந்தைய நாள் மகாலஷ்மிக்கு மிக உகந்த நாளாகும். அன்று அவளை பூஜித்தால் வீட்டில் செல்வம் வற்றாது பெருகும்.
லக்ஷ்மி பூஜை செய்யும் முறை: ஒரு பெரிய பலகையை சுத்தம் செய்து வைத்து அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். பின்னர் ஒரு பித்தளை, தாமிரம் அல்லது வெள்ளிச்செம்பில் (மண் கலசமும் வைக்கலாம்) முக்கால் அளவு தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு பாக்கு, இரு வெற்றிலை, ஒரு ரூபாய் நாணயம் இவைகளை போட வேண்டும். பின்னர் கலசத்தின் மேல் ஐந்து மாவிலைகளை செருகி அதில் தேங்காயை வைக்க வேண்டும். அரிசியில் மேல் குங்குமம் கொண்டு ஒரு தாமரை பூக்கோலமிட வேண்டும். பரப்பப்பட்ட அரிசியின் மேல் லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகர் படத்தை வைக்க வேண்டும். ஒருதட்டில் மலர்கள், முந்திரி, திராட்சை, கற்கண்டு, பேரீச்சம், பழம் என உலர்ந்த பழங்களை நிவேதானத்துக்துக்கு எடுத்து வைத்து கொள்ள வேண்டும். வசதி இருப்பவர்கள் அத்திப்பழம், பாதாம் பருப்பு இவைகளையும் சேர்த்து கொள்ளலாம். அகல் விளக்குகள் ஐந்தும், (மண் அகல்தான், பீங்கான் கூடாது) மற்றும் வீட்டில் எப்போதும் ஏற்றும் குத்து விளக்கில் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான நீர் நிரப்பி, அதில் கங்கையை வந்து சேருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை பயன்படுத்தி அரிசியில் அட்சதையும், குங்குமம் கொண்டு சிவப்பு அரிசியும் தயார் செய்து கொள்ள வேண்டும். முதலில் விநாயகரை வணங்கி அவரது படத்திற்கு பூக்கள் அட்சதைகள் போட வேண்டும். ரோஜா இதழ்கள் இல்லை என்றால் மல்லிகை மலர்களை கொண்டும், மகாலட்சுமிக்கு அஷ்டோத்திரம் சொல்லி, அர்ச்சனை செய்ய வேண்டும். முடிந்த பின் சரஸ்வதி நாமாவளியை சொல்லி சரஸ்வதிக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனைமுடிந்த பின் அரைத்த சந்தனம், குங்குமம் முதலியவைகளை அன்னையில் படத்திற்கு இட வேண்டும். ஊதுபத்தி ஏற்றி படங்களுக்கு காட்ட வேண்டும். பின்னர் கற்பூரம் காட்ட வேண்டும்.
கற்பூரம் காட்டி முடித்த உடன் பாத்திரத்தில் இருக்கும்தண்ணீரை கையில் சிறிது ஊற்றி கொண்டு நிவேதனத்துக்கான பொருட்களை சுற்றி தெளிக்க வேண்டும். பின்னர் நிவேதனத்திற்காக வைத்திருக்கும் பொருட்களை படைக்கவேண்டும். பிரசாதத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொண்டு காலையில் தினமும் எழுந்த உடன் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக உண்ண வேண்டும். இதைகுடும்பத்தார் மட்டுமே உண்ண வேண்டும்.
தீபாவளி என்பது தீயவை அழிந்து நல்லவை நிறையும் நாள். இந்த வருடம் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தீபாவளி வருகிறது. அன்று விடியற்காலையில் எழுந்து புனித நீராடி, புத்தாடை அணிந்து கவனமாக வெடிகள் வெடித்து பலகாரங்கள் உண்டு மகிழ்வுடன் இருப்போம். மகாலக்ஷ்மியின் அருள் பெறுவோம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
தினமலர் -- குமுதம் பக்தி செய்தி
தீயவை போக்கும் தீப ஒளி
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களாலும் மிகவும் விரும்பிக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஆசியாவிலேயே மிக அதிகமானோர் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் இந்தப் பண்டிகையை இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
தீபாவளித் திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என பாகவத புராணம் சொல்கிறது.
முதல்நாள் தன்திரயோசதி அல்லது தந்தேரஸ்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது இந்த நாளில்தான் தன்வந்திரி அமிர்த கலசத்துடன் தோன்றினார். அதோடு, செல்வத்துக்கு அதிபதியான அன்னை மகாலட்சுமி அவதரித்த தினமும் இதுதான். அதனால் இந்த திரயோதசி நாள் "தன்' அதாவது செல்வம் வளம் சேர்க்கும் நாளாக கருதப்படுகிறது. அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வ வளம் என்றும் நிலைத்து நிற்கும் என புராணங்கள் கூறுகின்றன. அதனால் வட மாநிலங்களில் அன்று மகாலட்சுமிபூஜை செய்யப்படுகிறது.
இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி: அன்றுதான் சென்னகங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் என்ற அசுரன் பூமித்தாய்க்கு பிறந்தவன். அவன் தேவர்களுக்கும், மக்களுக்கும் சொல்லொணா கொடுமைகள் செய்து வந்தான்.
மக்கள் படும் துயரைப் பார்க்க முடியாத மகாவிஷ்ணு கிருஷ்ணாவரதாரத்தில் அவனை கொல்ல முயன்றார். ஆனால் அவன் தன் தாயான பூமிதேவியைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றவன். நரகாசுரனின் அம்பு பட்டு கிருஷ்ணர் மயக்கமடைந்து விட்டார். அதனால் மிகவும் கோபம் கொண்ட சத்யபாமா, நரகாசுரனை போருக்கு அழைத்தாள்.
சத்யபாமா பூமிதேவியின் அவதாரம் என்பதை உணராத நரகாசுரன், பெண் தானே என்று அவளுடன் அலட்சியமாகப் போர் செய்தான். அன்னையில் அம்புக்கு பலியாகி விழும்போது தான் அவனுக்கு சத்யபாமா தன் தாய் என்ற உண்மை தெரிகிறது.
அப்போது அவளிடம், "அம்மா! நான் மறைந்த இந்த நாள் மக்களுக்கு என்றும் நினைவில் நிற்க வேண்டம் என்னுடைய பிடியிலிருந்து பூமியும், தேவர்களும் மீண்டதன் அடையாளமாக இந்த நாளை இனிப்பு சாப்பிட்டும், வெடி போட்டும் கொண்டாட வேண்டும். அன்று கடவுளை நினைத்து வணங்குபவர்கள் கேட்கும் வரங்கள் நீ தர வேண்டும்' என வேண்டிக் கொண்டான்.
கிருஷ்ணரும், அன்னை சத்யபாமாவும் அவ்வாறே நடக்கும் என்று வரம் கொடுத்தனர். அன்று முதல் நரக சதுர்த்தசி தினம், தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
மூன்றாம் நாள் அமாவாசை: வட மாநிலங்களில் இந்நாளே பெரிய தீபாவளி என்ற அழைக்கப்படுகிறது. ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாளே இந்நாள் ஆகும். அமாவாசை அன்று பொழுது சாயும் வேளையில் அவர் வரப் போவதாக முன்னரே வானர வீரர் அனுமன் வந்து பரதனிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த பரதன், ஸ்ரீராமருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வீடு தோறும் விளக்கேற்றி வைக்கச் செய்தார். அந்த ஒளியில் அயோத்தி மாநகரமே சொர்க்கம் போல மின்னியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
நான்காம் நாள் கோவர்த்தன பூஜை: கிருஷ்ணர் கோகுலத்தில் பால லீலைகள் புரியும் சமயம். அங்குள்ள யாதவர்கள் ஆண்டு தோறும் நல்ல மழை பொழிந்து, தங்களுக்கு நல்வாழ்வு அளித்ததற்காக இந்திரனுக்கு பூஜை செய்வது வழக்கம். அதனால் இந்திரனுக்கு தானே எல்லாவற்றிற்கும் காரணம் என்ற அகந்தை ஏற்பட்டது. அதை அழிக்க நினைத்தார் பகவான் கிருஷ்ணர். அதனால் மக்களிடம் நம் கோகுலம் செழிப்பாக இருக்க காரணம் இந்திரன் இல்லை. நமக்கு மிக அருகிலேயே இருக்கும் கோவர்த்தன மலை தான். நாம் இந்த வருடம் அந்த மலைக்கு பூஜை செய்வோம் என்றார். கோபாலர்களும் ஏற்றுக்கொண்டு அவ்வாறே செய்தனர்.
இதனால் கடுங்கோபம் கொண்ட இந்திரன் வருணனை ஏவி விட்டு கோகுலத்தின் மீது அடாது மழை பொழிய செய்ய, அனைவரும் பாதிப்புக்குள்ளாயினர்.அவர்களை காக்க கோவர்த்தன மலையையே தன்னுடைய சுண்டு விரலால் குடையாதக தூக்கி அனைவரையும் காத்து அருளினார் கிருஷ்ணர். அது நிகழ்ந்தது இந்த நாளில் தான். அதைகொண்டாடும் விதமாக இந்த நாளின் போது பகவான் கிருஷ்ணருக்கு பூஜை செய்து, அவருக்கு பிடித்த பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்கøதீள நிவேதனம் செய்கின்றனர். அவ்வாறு செய்தால் வீட்டில் ருள் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
ஐந்தாம்நாள் பாயி தூஜ் அல்லது யமதுவிதியை: அன்று தான் யமன் தன்னுடைய சகோதரியான யமுனாவை காண பூலோகத்திற்குவந்தார். யமுனை அவனை வரவேற்கு பல வித இனிப்பு பலகாரங்களையும், அன்னங்களையும் படைத்து அவரை உண்ணச் செய்தாள். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த மயன் நீ எனக்கு உபசாரம் செய்த இந்த நாளில் எந்த சகோதரி தன்னுடன் பிறந்தவனுக்கு விருந்து வைத்து அவன் மனம் குளிரும் விதம் செய்கிறாளோ அவளுக்கு சர்வ மங்களமும் கிட்டும் அவளுடைய தாலி பாக்கியம் நீடித்து இருக்கும் என்று வரம் அருளினார். அதனால் இன்றும் வடமாநிலங்களில் யம துவிதியை அன்று தங்களுடைய சகோதரர்களை வீட்டு அழைத்து புது உடைகள் அளித்து, அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்கள் செய்து கொடுக்கிறார்கள். இதனால் தங்களுக்கு சகல சௌபாக்கியமும் கிட்டும் என்பது அவர்கள் நம்பிக்கை.
தீபாவளிக்கு முந்தைய நாள் மகாலஷ்மிக்கு மிக உகந்த நாளாகும். அன்று அவளை பூஜித்தால் வீட்டில் செல்வம் வற்றாது பெருகும்.
லக்ஷ்மி பூஜை செய்யும் முறை: ஒரு பெரிய பலகையை சுத்தம் செய்து வைத்து அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். பின்னர் ஒரு பித்தளை, தாமிரம் அல்லது வெள்ளிச்செம்பில் (மண் கலசமும் வைக்கலாம்) முக்கால் அளவு தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு பாக்கு, இரு வெற்றிலை, ஒரு ரூபாய் நாணயம் இவைகளை போட வேண்டும். பின்னர் கலசத்தின் மேல் ஐந்து மாவிலைகளை செருகி அதில் தேங்காயை வைக்க வேண்டும். அரிசியில் மேல் குங்குமம் கொண்டு ஒரு தாமரை பூக்கோலமிட வேண்டும். பரப்பப்பட்ட அரிசியின் மேல் லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகர் படத்தை வைக்க வேண்டும். ஒருதட்டில் மலர்கள், முந்திரி, திராட்சை, கற்கண்டு, பேரீச்சம், பழம் என உலர்ந்த பழங்களை நிவேதானத்துக்துக்கு எடுத்து வைத்து கொள்ள வேண்டும். வசதி இருப்பவர்கள் அத்திப்பழம், பாதாம் பருப்பு இவைகளையும் சேர்த்து கொள்ளலாம். அகல் விளக்குகள் ஐந்தும், (மண் அகல்தான், பீங்கான் கூடாது) மற்றும் வீட்டில் எப்போதும் ஏற்றும் குத்து விளக்கில் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான நீர் நிரப்பி, அதில் கங்கையை வந்து சேருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை பயன்படுத்தி அரிசியில் அட்சதையும், குங்குமம் கொண்டு சிவப்பு அரிசியும் தயார் செய்து கொள்ள வேண்டும். முதலில் விநாயகரை வணங்கி அவரது படத்திற்கு பூக்கள் அட்சதைகள் போட வேண்டும். ரோஜா இதழ்கள் இல்லை என்றால் மல்லிகை மலர்களை கொண்டும், மகாலட்சுமிக்கு அஷ்டோத்திரம் சொல்லி, அர்ச்சனை செய்ய வேண்டும். முடிந்த பின் சரஸ்வதி நாமாவளியை சொல்லி சரஸ்வதிக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனைமுடிந்த பின் அரைத்த சந்தனம், குங்குமம் முதலியவைகளை அன்னையில் படத்திற்கு இட வேண்டும். ஊதுபத்தி ஏற்றி படங்களுக்கு காட்ட வேண்டும். பின்னர் கற்பூரம் காட்ட வேண்டும்.
கற்பூரம் காட்டி முடித்த உடன் பாத்திரத்தில் இருக்கும்தண்ணீரை கையில் சிறிது ஊற்றி கொண்டு நிவேதனத்துக்கான பொருட்களை சுற்றி தெளிக்க வேண்டும். பின்னர் நிவேதனத்திற்காக வைத்திருக்கும் பொருட்களை படைக்கவேண்டும். பிரசாதத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொண்டு காலையில் தினமும் எழுந்த உடன் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக உண்ண வேண்டும். இதைகுடும்பத்தார் மட்டுமே உண்ண வேண்டும்.
தீபாவளி என்பது தீயவை அழிந்து நல்லவை நிறையும் நாள். இந்த வருடம் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தீபாவளி வருகிறது. அன்று விடியற்காலையில் எழுந்து புனித நீராடி, புத்தாடை அணிந்து கவனமாக வெடிகள் வெடித்து பலகாரங்கள் உண்டு மகிழ்வுடன் இருப்போம். மகாலக்ஷ்மியின் அருள் பெறுவோம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM