Post by uma2806 on Oct 24, 2013 14:33:41 GMT 5.5
குருர் ப்ரம்மா! எஸ்.வெங்கடகிருஷ்ணன், சென்னை-88 அவர்களின் அனுபவம்
மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் - ஆறாம் பகுதியிலிருந்து - பக்கம் 166
என் தம்பி சந்தானத்துக்கு விவாகமாகி ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும் புத்திரப்பேறு உண்டாகவில்லை.
திருமணமான மூன்றாவது வருஷத்திலிருந்தே, பிள்ளைப் பேறு குறித்த கவலை வந்துவிட்டது. எங்கள் தாயார் அடிக்கடி புலம்பத் தொடங்கினாள். ”நம்ம குடும்பத்திலே யாருக்கும் பிள்ளை பிறக்காமல் இருந்ததில்லே… “ அதாவது, மருமகள் பரம்பரைதான் இந்தக் குறைக்குக் காரணம் என்று மாமியார்த்தனமான குற்றச்சாட்டு!
“உங்கள் இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை” என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள். ஜோஸியர்கள் பலவிதம். ‘குழந்தை பிறக்கும்’ என்றோ, ’பிறக்காது’ என்றோ சொல்லாமல் அந்தரத்தில் தொங்க விட்டார்கள்.
வீட்டுக்கு வந்த ஒரு பெரியவர், ‘மகாப் பெரியவாளைப் பார்த்துட்டு வாங்களேன்’ என்று யோசனை கூறினார்.
அடுத்த வாரம் நாங்கள் காஞ்சிப் பெரியவரின் திருமுன்னிலையில் நின்றோம்.
“என் தம்பி… சந்தானம்… கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு… பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். சந்ததி உண்டாகணும்….”
சந்தானமும் சுசீலாவும் கண்களில் ஆவல் பொங்க நின்றார்கள்.
அன்றைய தினம், பெரியவா ரொம்ப சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் குறும்பு, நகைச்சுவை, விளையாட்டு எல்லாம் இருந்தன. (பெரியவா அப்படி இருந்ததைக் கண்டு, நீண்ட காலப் பணியாளர்களே ஆச்சரியம் தெரிவித்தார்கள்!)
“நான் மந்திரவாதி இல்லே… ஆரூடம் சொல்றவன் இல்லே… டாக்டர் இல்லே… தெய்வக்ஞன் இல்லே! பிரும்மா எழுதியிருக்கிறபடிதான் எல்லாம் நடக்கிறது என்கிறது சாஸ்திரம். அலைஞ்சதெல்லாம் போதும்… சிவா-ராமான்னு சொல்லிண்டு இருங்கோ…”
பிரசாதம் பெற்றுக்கொண்டு திரும்பினோம்.
பெரியவா என்ன சொன்னா? வீட்டில் இருந்து கொண்டு ‘நாமஜபம் செய்’ என்றார்களா? அதுவே, விரும்பிய பலனைக் கொடுக்கும் என்றார்களா? இல்லே…
சந்தானத்துக்கு வயது நாற்பதை எட்டிக் கொண்டிருந்தது. இனியும், சுசீலா தாய்மை அடைவாள் என்று எதிர்பார்த்து ஏமாறக்கூடாது.
‘ஆதரவற்றோர் இல்லம்’ சென்று, அழகான ஆண் குழந்தையை முறைப்படி பெற்றுக்கொண்டு வந்தார்கள், தம்பதி.
ஆரம்பத்தில், ‘இது யாரோ’ என்று ஒதுங்கியிருந்த எங்கள் அம்மா, சமாதானமாகி, ‘பேரனை’ தோளில் போட்டுக் கொஞ்சத் தொடங்கிவிட்டாள்!
ஆனால், பிரும்மா, தோளில் போட்டுக் கொஞ்சவில்லை. புதுப் புது வியாதிகள்; மருந்துகள். கொழுகொழுவென்று வளர்ந்த காஷ்யப், அப்த பூர்த்திக்குப் பின் குச்சி குச்சியாகிவிட்டான்.
‘பிள்ளை இல்லாமலே இருந்திருக்கலாமே?’ என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டோம். அவ்வளவு வேதனை.
‘பெரியவாளிடம் போய்க் கேட்போமே?’
நல்ல யோசனை. பெரியவாளின் அருட்பார்வை பட்டாலே, குழந்தையின் நோய்கள் நீங்கிவிடும்.
பெரியவாள் சந்நிதி.
“நாலு வயசாறது.. நடக்கவே வரலே…” சுசீலா அழுதாள்.
பதில் ஏதும் வரவில்லை. ஒரு மணி நேரம் காத்திருந்து பார்த்தார்கள்.
பெரியவாள், விச்ராந்திக்குப் போய்விட்டார்கள்.
“அப்புறமா வாங்கோ” என்று சிப்பந்திகள் கூறினார்கள்.
பெரியவாளிடம் பிரசாதம் பெற்றுக் கொள்ளாமல், ஊருக்குத் திரும்புவதில்லை என்ற தீர்மானம்.
மறுநாள் காலை. இரண்டு மணி நேரம் நின்றும் பெரியவாள் பார்வை படவில்லை.
அன்று மாலையில், சந்தானமும் சுசீலாவும் குழந்தை காஷ்யப்புடன் பெரியவா எதிரே நெருங்கி வந்து கொண்டிருந்தபோதே, பெரியவா கையைச் சொடுக்கி அழைத்தார்கள். ஜாடையாலேயே ‘குழந்தையைக் கீழே கிடத்து’ என்று உத்திரவு.
“இந்தக் குழந்தைக்கு உடம்பு சரியில்லே; உனக்கு மனசு சரியில்லே.. குழந்தை பொழைச்சுக்கணும். நீயும் நிம்மதியா இருக்கணும். குழந்தைக்கும் உங்களுக்கும் ஒத்துக்கல்லே. குழந்தைகிட்ட பாசம் இ..ரு..ந்..த..து..”
சுசீலாவுக்கு நெஞ்சு தடக், தடக் என்று அடித்துக் கொண்டது. பெரியவாளுக்கு எக்ஸ்ரே கண்களா?
”இ..ரு..ந்…த…து…”
இதற்கு என்ன அர்த்தம்?
பெரியவா, சற்று தூரத்திலிருந்த பணக்காரத் தோற்றத்திலிருந்த ஒரு தம்பதியை அழைத்தார்கள். “இவாளுக்கு இந்தக் குழந்தையை ஸ்வீகாரமா கொடுத்துடேன்..”
திடுக்!
“எஸ்டேட் ஓனர்… நன்னா வைத்யம் செய்வார்…”
சுசீலாவும் சந்தானமும், காஷ்யப்பை எடுத்து, அந்தத் தம்பதிகள் கையில் கொடுத்தார்கள். கண்களில் தண்ணீர் வரத்தான் செய்தது. ஆனால் வைத்துக் கொஞ்சி, சீராட்ட முடியவில்லையே? காஷ்யப் கைமாறிப் போனான். இதற்காகத்தான், பிரசாதம் கொடுக்காமல், சந்தானம் தம்பதியை தாமதப்படுத்தினார்களோ? வீட்டுக்கு வந்தார்கள். அம்மா பிழியப் பிழிய அழுதாள்.
“பெரியவா சொன்னதை நாம் புரிஞ்சுக்கல்லே. அலைஞ்சதெல்லாம் போதும்னார். நீ போய், அவாளுடைய உத்திரவு இல்லாமெ, ஒரு குழந்தையை எடுத்துண்டு வந்தே… சந்ததிப் பிராப்தி இல்லேங்கிறதை, பெரியவா சொன்னதை, நாம புரிஞ்சுக்கல்லே…”
காலம் காயங்களை ஆற்றியது.
இதுவரை சொன்னது பெரியவாள் தரிசனத்தின் ஃபிளாஷ்-பேக்!
எனக்கு ஷஷ்டியப்தபூர்த்தி. பெரியவாளிடம் ஆசி பெறுவதற்காகக் குடும்பத்தினர் எல்லோரும் சென்றிருந்தோம்.
எங்கள் முன்னே, பத்துப் பனிரெண்டு வயதுப் பையன், புதுப் பூணூலுடன் போய்க் கொண்டிருந்தான். கையில் மஞ்சள் சரடு.
பின்னாலிருந்து ஒரு பெண் குரல் அழைத்தது; ‘டேய்… பரத்வாஜ்…”
சுசீலா திரும்பினாள். வேர் விட்டாற்போல் நின்றாள். பரத்வாஞை அழைத்த அம்மாளை நிறுத்தி, “நீங்க… நீங்க… காஷ்யப்… காஷ்… யப்…”
“அதோ, அவன் தான்! பரத்வாஜ் என்று பெயர் வைக்கும்படி, அப்பவே பெரியவா உத்தரவு… போனவாரம் தான் உபநயனம் ஆச்சு. ஆமா, நீங்க யாரு?”
“நாங்க, மெட்ராஸ். பெரியவாளை தரிசிக்க வந்தோம்..”
“ஓகோ…”
மஹாபெரியவாள், பக்தர்களுக்குத் தரிசனம் கொடுக்க எழுந்தருளினார்கள்.
நமஸ்கரித்து எழுந்தோம். பெரியவாளுக்கு ஒரு முகம்தான் இருந்தது. சுசீலா நமஸ்காரம் செய்துவிட்டுப் பெரியவாளைப் பார்த்துப் பிரமித்து நின்றாள். அவளுக்கு நான்கு முகங்கள் தெரிந்தனவாம்!
பிரம்மாவோ?
“எத்தனையோ வருஷத்துக்கு முன்னே சில நிமிஷங்கள் மட்டுமே பார்த்த அந்த அம்மாளை, நீ எப்படி அடையாளம் கண்டுபிடிச்சே?”
“அந்த அம்மாளின் உதட்டோரத்திலே, இடது பக்கம் குந்துமணி அளவுக்கு மச்சம் இருந்ததை அப்போதே பார்த்தேன்…”
பிரும்மாவின் சிருஷ்டியில் எத்தனையோ அதிசயங்கள்! பெரியவாளின் திருஷ்டியில் எத்தனையோ ஆச்சரியங்கள்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் - ஆறாம் பகுதியிலிருந்து - பக்கம் 166
என் தம்பி சந்தானத்துக்கு விவாகமாகி ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும் புத்திரப்பேறு உண்டாகவில்லை.
திருமணமான மூன்றாவது வருஷத்திலிருந்தே, பிள்ளைப் பேறு குறித்த கவலை வந்துவிட்டது. எங்கள் தாயார் அடிக்கடி புலம்பத் தொடங்கினாள். ”நம்ம குடும்பத்திலே யாருக்கும் பிள்ளை பிறக்காமல் இருந்ததில்லே… “ அதாவது, மருமகள் பரம்பரைதான் இந்தக் குறைக்குக் காரணம் என்று மாமியார்த்தனமான குற்றச்சாட்டு!
“உங்கள் இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை” என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள். ஜோஸியர்கள் பலவிதம். ‘குழந்தை பிறக்கும்’ என்றோ, ’பிறக்காது’ என்றோ சொல்லாமல் அந்தரத்தில் தொங்க விட்டார்கள்.
வீட்டுக்கு வந்த ஒரு பெரியவர், ‘மகாப் பெரியவாளைப் பார்த்துட்டு வாங்களேன்’ என்று யோசனை கூறினார்.
அடுத்த வாரம் நாங்கள் காஞ்சிப் பெரியவரின் திருமுன்னிலையில் நின்றோம்.
“என் தம்பி… சந்தானம்… கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு… பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். சந்ததி உண்டாகணும்….”
சந்தானமும் சுசீலாவும் கண்களில் ஆவல் பொங்க நின்றார்கள்.
அன்றைய தினம், பெரியவா ரொம்ப சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் குறும்பு, நகைச்சுவை, விளையாட்டு எல்லாம் இருந்தன. (பெரியவா அப்படி இருந்ததைக் கண்டு, நீண்ட காலப் பணியாளர்களே ஆச்சரியம் தெரிவித்தார்கள்!)
“நான் மந்திரவாதி இல்லே… ஆரூடம் சொல்றவன் இல்லே… டாக்டர் இல்லே… தெய்வக்ஞன் இல்லே! பிரும்மா எழுதியிருக்கிறபடிதான் எல்லாம் நடக்கிறது என்கிறது சாஸ்திரம். அலைஞ்சதெல்லாம் போதும்… சிவா-ராமான்னு சொல்லிண்டு இருங்கோ…”
பிரசாதம் பெற்றுக்கொண்டு திரும்பினோம்.
பெரியவா என்ன சொன்னா? வீட்டில் இருந்து கொண்டு ‘நாமஜபம் செய்’ என்றார்களா? அதுவே, விரும்பிய பலனைக் கொடுக்கும் என்றார்களா? இல்லே…
சந்தானத்துக்கு வயது நாற்பதை எட்டிக் கொண்டிருந்தது. இனியும், சுசீலா தாய்மை அடைவாள் என்று எதிர்பார்த்து ஏமாறக்கூடாது.
‘ஆதரவற்றோர் இல்லம்’ சென்று, அழகான ஆண் குழந்தையை முறைப்படி பெற்றுக்கொண்டு வந்தார்கள், தம்பதி.
ஆரம்பத்தில், ‘இது யாரோ’ என்று ஒதுங்கியிருந்த எங்கள் அம்மா, சமாதானமாகி, ‘பேரனை’ தோளில் போட்டுக் கொஞ்சத் தொடங்கிவிட்டாள்!
ஆனால், பிரும்மா, தோளில் போட்டுக் கொஞ்சவில்லை. புதுப் புது வியாதிகள்; மருந்துகள். கொழுகொழுவென்று வளர்ந்த காஷ்யப், அப்த பூர்த்திக்குப் பின் குச்சி குச்சியாகிவிட்டான்.
‘பிள்ளை இல்லாமலே இருந்திருக்கலாமே?’ என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டோம். அவ்வளவு வேதனை.
‘பெரியவாளிடம் போய்க் கேட்போமே?’
நல்ல யோசனை. பெரியவாளின் அருட்பார்வை பட்டாலே, குழந்தையின் நோய்கள் நீங்கிவிடும்.
பெரியவாள் சந்நிதி.
“நாலு வயசாறது.. நடக்கவே வரலே…” சுசீலா அழுதாள்.
பதில் ஏதும் வரவில்லை. ஒரு மணி நேரம் காத்திருந்து பார்த்தார்கள்.
பெரியவாள், விச்ராந்திக்குப் போய்விட்டார்கள்.
“அப்புறமா வாங்கோ” என்று சிப்பந்திகள் கூறினார்கள்.
பெரியவாளிடம் பிரசாதம் பெற்றுக் கொள்ளாமல், ஊருக்குத் திரும்புவதில்லை என்ற தீர்மானம்.
மறுநாள் காலை. இரண்டு மணி நேரம் நின்றும் பெரியவாள் பார்வை படவில்லை.
அன்று மாலையில், சந்தானமும் சுசீலாவும் குழந்தை காஷ்யப்புடன் பெரியவா எதிரே நெருங்கி வந்து கொண்டிருந்தபோதே, பெரியவா கையைச் சொடுக்கி அழைத்தார்கள். ஜாடையாலேயே ‘குழந்தையைக் கீழே கிடத்து’ என்று உத்திரவு.
“இந்தக் குழந்தைக்கு உடம்பு சரியில்லே; உனக்கு மனசு சரியில்லே.. குழந்தை பொழைச்சுக்கணும். நீயும் நிம்மதியா இருக்கணும். குழந்தைக்கும் உங்களுக்கும் ஒத்துக்கல்லே. குழந்தைகிட்ட பாசம் இ..ரு..ந்..த..து..”
சுசீலாவுக்கு நெஞ்சு தடக், தடக் என்று அடித்துக் கொண்டது. பெரியவாளுக்கு எக்ஸ்ரே கண்களா?
”இ..ரு..ந்…த…து…”
இதற்கு என்ன அர்த்தம்?
பெரியவா, சற்று தூரத்திலிருந்த பணக்காரத் தோற்றத்திலிருந்த ஒரு தம்பதியை அழைத்தார்கள். “இவாளுக்கு இந்தக் குழந்தையை ஸ்வீகாரமா கொடுத்துடேன்..”
திடுக்!
“எஸ்டேட் ஓனர்… நன்னா வைத்யம் செய்வார்…”
சுசீலாவும் சந்தானமும், காஷ்யப்பை எடுத்து, அந்தத் தம்பதிகள் கையில் கொடுத்தார்கள். கண்களில் தண்ணீர் வரத்தான் செய்தது. ஆனால் வைத்துக் கொஞ்சி, சீராட்ட முடியவில்லையே? காஷ்யப் கைமாறிப் போனான். இதற்காகத்தான், பிரசாதம் கொடுக்காமல், சந்தானம் தம்பதியை தாமதப்படுத்தினார்களோ? வீட்டுக்கு வந்தார்கள். அம்மா பிழியப் பிழிய அழுதாள்.
“பெரியவா சொன்னதை நாம் புரிஞ்சுக்கல்லே. அலைஞ்சதெல்லாம் போதும்னார். நீ போய், அவாளுடைய உத்திரவு இல்லாமெ, ஒரு குழந்தையை எடுத்துண்டு வந்தே… சந்ததிப் பிராப்தி இல்லேங்கிறதை, பெரியவா சொன்னதை, நாம புரிஞ்சுக்கல்லே…”
காலம் காயங்களை ஆற்றியது.
இதுவரை சொன்னது பெரியவாள் தரிசனத்தின் ஃபிளாஷ்-பேக்!
எனக்கு ஷஷ்டியப்தபூர்த்தி. பெரியவாளிடம் ஆசி பெறுவதற்காகக் குடும்பத்தினர் எல்லோரும் சென்றிருந்தோம்.
எங்கள் முன்னே, பத்துப் பனிரெண்டு வயதுப் பையன், புதுப் பூணூலுடன் போய்க் கொண்டிருந்தான். கையில் மஞ்சள் சரடு.
பின்னாலிருந்து ஒரு பெண் குரல் அழைத்தது; ‘டேய்… பரத்வாஜ்…”
சுசீலா திரும்பினாள். வேர் விட்டாற்போல் நின்றாள். பரத்வாஞை அழைத்த அம்மாளை நிறுத்தி, “நீங்க… நீங்க… காஷ்யப்… காஷ்… யப்…”
“அதோ, அவன் தான்! பரத்வாஜ் என்று பெயர் வைக்கும்படி, அப்பவே பெரியவா உத்தரவு… போனவாரம் தான் உபநயனம் ஆச்சு. ஆமா, நீங்க யாரு?”
“நாங்க, மெட்ராஸ். பெரியவாளை தரிசிக்க வந்தோம்..”
“ஓகோ…”
மஹாபெரியவாள், பக்தர்களுக்குத் தரிசனம் கொடுக்க எழுந்தருளினார்கள்.
நமஸ்கரித்து எழுந்தோம். பெரியவாளுக்கு ஒரு முகம்தான் இருந்தது. சுசீலா நமஸ்காரம் செய்துவிட்டுப் பெரியவாளைப் பார்த்துப் பிரமித்து நின்றாள். அவளுக்கு நான்கு முகங்கள் தெரிந்தனவாம்!
பிரம்மாவோ?
“எத்தனையோ வருஷத்துக்கு முன்னே சில நிமிஷங்கள் மட்டுமே பார்த்த அந்த அம்மாளை, நீ எப்படி அடையாளம் கண்டுபிடிச்சே?”
“அந்த அம்மாளின் உதட்டோரத்திலே, இடது பக்கம் குந்துமணி அளவுக்கு மச்சம் இருந்ததை அப்போதே பார்த்தேன்…”
பிரும்மாவின் சிருஷ்டியில் எத்தனையோ அதிசயங்கள்! பெரியவாளின் திருஷ்டியில் எத்தனையோ ஆச்சரியங்கள்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!