|
Post by madambakkamshanks on Oct 19, 2013 11:21:16 GMT 5.5
(அய்கிரி நந்தினி - மெட்டு )
அனுதினம் வழிபட அவரவர் வினைகளை அகற்றியே அருள்வார் மஹா ஸ்வாமி ஆதவன் போல் இவர் பார்வையினாலே ஆதங்கம் தீர்த்தே ஆதரிப்பார்
இன்முகத்தோடு இனிதாய் பேசி இன்னல்கள் தீர்ப்பார் மஹா ஸ்வாமி ஈசனின் அம்சமாய் ஈவார் முக்தியே ஈடில்லா அருளை பொழிவாரே
உண்மையின் உருவமாய் உழன்றார் உலகில் உதாரண புருஷனாய் மஹா ஸ்வாமி ஊர்தோறும் நடந்தார் உற்சவச் சிலையாய் ஊற்றாய் அருள்மழை பொழிந்திடவே
என்றும் இவரை எண்ணிய உடனே எண்ணங்கள் ஈடேற செய்திடுவார் ஏக்கங்கள் போக்கி ஏற்றங்கள் அளிப்பார் ஏகபாத சிவனாய் மஹா ஸ்வாமி
ஐம்பூதம் அடக்கி ஐந்தொழில் புரிவார் ஐயங்கள் தீர்ப்பார் மஹா ஸ்வாமி ஐங்கரன் போல அபயக் கரம்காட்டி ஐஸ்வர்யம் அளிப்பார் மஹா ஸ்வாமி
ஒருமுறை வணங்கிட ஒருகுறை இன்றி ஒப்பற்ற வாழ்வை அருள்வாரே ஓங்கார நாதனாய் ஓசை யின்றி ஓர் துயர் தீர்ப்பார் மஹா ஸ்வாமி
-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்
|
|
|
Post by soundaryasatheesh on Jul 28, 2014 19:28:35 GMT 5.5
Amazing!! Beautiful!!
|
|
|
Post by kahanam on Jul 31, 2014 12:31:53 GMT 5.5
Akaaraadhi Maha Petriyava Akshara MaNa Maalai! Superb! Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|