Post by radha on Oct 17, 2013 10:54:30 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
சிவலிங்கத்தை பூஜிக்கும் சிவசக்தி
ஐக்ய ஸ்வரூபிணி பாட்டு.
நவராத்திரி பக்திப் பாடல்
- நிறைவு நாள்.
சிவசக்தி தாயே வருக
உன் சீர்பாடி தொழுதோம் வருக
நவராத்ரி நிறைவானதம்மா
வரும் காலம் நாளும் உனதாகுமே. (சி).
ஸ்ரீசக்தி மலர்ப்பாதம் போற்றி
ஓம்சக்தி மணிப்பாதம் போற்றி
அருள்சக்தி திருப்பாதம் போற்றி
சிவசக்தி பொற்பாதம் போற்றி
சிவலிங்க பூஜை புரிக
தெய்வ சன்மார்க்கம் தேடிப்பெறுக
உவமைக்கும் பொருளேது அம்மா
என் உயிரே உணர்வே உமையன்னையே. (சி).(ஸ்ரீ).
ஒன்றாய்ப் பூத்தாய் திருவே நன்மை
ஒவ்வொன்றும் படைக்கும் கருவே
நல்வாழ்வு உன் பார்வையம்மா
மனம் நாடும் பாடும் ஜெகதீஸ்வரி. (சி). (ஸ்ரீ).
தெய்வீகத்தாய் உன்காட்சி அன்பின்
திறம்பாடும் அருளின் மாட்சி
கண்டார்க்கு கொண்டாட்டம் அம்மா
சிவகனியே மணியே பரமேஸ்வரி. (சி).(ஸ்ரீ).
, நாமகளே சரஸ்வதியே, நவராத்திரி பக்திப் பாடல் - ஒன்பதாம் நாள்
நவராத்திரி பக்திப் பாடல்
- ஒன்பதாம் நாள்.
நாமகளே சரஸ்வதியே
நான்முகனின் நாயகியே
நாடிவந்தோம் சன்னதியே
நம்பி வந்தோம் அம்பிகையே. (நா).
அம்புடன் வில் சங்கு சக்ரம்
மணிசூலம் உடையவளே
சும்பன் வதம் புரிந்தவளே
சுடர்விழியே மலர்மகளே. (நா).
கௌரி அன்னை மேனியிலே
கருவாகி மலர்ந்தவளே
நவராத்ரி ஒன்பதாம் நாள்
நலம் கூட்டும் கலைமகளே. (நா).
தாயே நீ அன்பு வைத்தால்
பார் முழுதும் எனைப்புகழும்
ஏழிசையும் என்பாட்டும்
என்றென்றும் நிலைத்திருக்கும். (நா).
, வெள்ளைத் தாமரைப் பூவில் நவராத்திரி பக்திப் பாடல்-எட்டாம் நாள்
நவராத்திரி பக்திப் பாடல்
- எட்டாம் நாள்
வெள்ளைத் தாமரைப்
பூவில் பொருந்திய
தேவியை வாழ்த்துங்கடி
நம் தேவியை வாழ்த்துங்கடி
வீணையை ஏந்தும்
சரஸ்வதி தாயை
பாடிக்கும்மியடி புகழ்
பாடிக் கும்மியடி. (வெ).
நவராத்திரியின் எட்டாம் நாளின்
அம்பிகை பாருங்கடி
அருள் அம்பிகை பாருங்கடி. (ந).
ரக்தபீஜனை வென்றவள் மேன்மையை
சொல்லிக்கும்மியடி
சீர்சொல்லிக் கும்மியடி. (வெ).
எண்ணும் எழுத்தும்
பெண்ணால் வந்தது
எங்கும் கூறுங்கடி
அடி எங்கும் கூறுங்கடி. (எண்).
அன்னை சரஸ்வதி
அறிவின் தெய்வம்
ஆடிக்கும்மியடி
கொண்டாடிக் கும்மியடி. (வெ).
மாவில் சித்திரக்கோலம்
வரைந்து சுழன்று
வாருங்கடி சுற்றிச்சுழன்று வாருங்கடி. (மா).
மங்கள நாயகி பொன்னடி சேர்ந்து
மகிழ்ந்து கும்மியடி
மனம் மகிழ்ந்து கும்மியடி. (வெ).
சரஸ்வதி தாயே கலைமகள் நீயே, நவராத்திரி பக்திப் பாடல் - ஏழாம் நாள்
நவராத்திரி பக்திப் பாடல்
- ஏழாம் நாள்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி பக்திப் பாடல்,
அருள்மிகு சரசுவதி அம்மன் பாட்டு.
சரஸ்வதி தாயே
கலைமகள் நீயே
அருள் நவராத்திரி
ஆண்டருள் வாயே
ஏழாம் நாள் இன்று
உன்திருக்காட்சி-இன்னும்
இருநாள் உனதருளாட்சி. (ச).
கல்விக்கலைகள்
தரும் தாட்சாயிணி
காதல் நான்முகன்
மகிழும் நாயகி. (கல்வி).
சண்டன் முண்டன்
அசுரரை வென்றாய்
பொன் எழில் மின்னிடும்
கீதமும் தந்தாய். (ச).
கன்னி பூஜையும்
சுவாசினி பூஜையும்
கருதிப் புரிந்தோம்
கனிந்தருள் அம்மா. (கன்னி).
என்னை படைத்தாய்
இசையும் படைத்தாய்
இணைத்தாய் தாயே
உனக்கிணை வருமா. (ச).
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
சிவலிங்கத்தை பூஜிக்கும் சிவசக்தி
ஐக்ய ஸ்வரூபிணி பாட்டு.
நவராத்திரி பக்திப் பாடல்
- நிறைவு நாள்.
சிவசக்தி தாயே வருக
உன் சீர்பாடி தொழுதோம் வருக
நவராத்ரி நிறைவானதம்மா
வரும் காலம் நாளும் உனதாகுமே. (சி).
ஸ்ரீசக்தி மலர்ப்பாதம் போற்றி
ஓம்சக்தி மணிப்பாதம் போற்றி
அருள்சக்தி திருப்பாதம் போற்றி
சிவசக்தி பொற்பாதம் போற்றி
சிவலிங்க பூஜை புரிக
தெய்வ சன்மார்க்கம் தேடிப்பெறுக
உவமைக்கும் பொருளேது அம்மா
என் உயிரே உணர்வே உமையன்னையே. (சி).(ஸ்ரீ).
ஒன்றாய்ப் பூத்தாய் திருவே நன்மை
ஒவ்வொன்றும் படைக்கும் கருவே
நல்வாழ்வு உன் பார்வையம்மா
மனம் நாடும் பாடும் ஜெகதீஸ்வரி. (சி). (ஸ்ரீ).
தெய்வீகத்தாய் உன்காட்சி அன்பின்
திறம்பாடும் அருளின் மாட்சி
கண்டார்க்கு கொண்டாட்டம் அம்மா
சிவகனியே மணியே பரமேஸ்வரி. (சி).(ஸ்ரீ).
, நாமகளே சரஸ்வதியே, நவராத்திரி பக்திப் பாடல் - ஒன்பதாம் நாள்
நவராத்திரி பக்திப் பாடல்
- ஒன்பதாம் நாள்.
நாமகளே சரஸ்வதியே
நான்முகனின் நாயகியே
நாடிவந்தோம் சன்னதியே
நம்பி வந்தோம் அம்பிகையே. (நா).
அம்புடன் வில் சங்கு சக்ரம்
மணிசூலம் உடையவளே
சும்பன் வதம் புரிந்தவளே
சுடர்விழியே மலர்மகளே. (நா).
கௌரி அன்னை மேனியிலே
கருவாகி மலர்ந்தவளே
நவராத்ரி ஒன்பதாம் நாள்
நலம் கூட்டும் கலைமகளே. (நா).
தாயே நீ அன்பு வைத்தால்
பார் முழுதும் எனைப்புகழும்
ஏழிசையும் என்பாட்டும்
என்றென்றும் நிலைத்திருக்கும். (நா).
, வெள்ளைத் தாமரைப் பூவில் நவராத்திரி பக்திப் பாடல்-எட்டாம் நாள்
நவராத்திரி பக்திப் பாடல்
- எட்டாம் நாள்
வெள்ளைத் தாமரைப்
பூவில் பொருந்திய
தேவியை வாழ்த்துங்கடி
நம் தேவியை வாழ்த்துங்கடி
வீணையை ஏந்தும்
சரஸ்வதி தாயை
பாடிக்கும்மியடி புகழ்
பாடிக் கும்மியடி. (வெ).
நவராத்திரியின் எட்டாம் நாளின்
அம்பிகை பாருங்கடி
அருள் அம்பிகை பாருங்கடி. (ந).
ரக்தபீஜனை வென்றவள் மேன்மையை
சொல்லிக்கும்மியடி
சீர்சொல்லிக் கும்மியடி. (வெ).
எண்ணும் எழுத்தும்
பெண்ணால் வந்தது
எங்கும் கூறுங்கடி
அடி எங்கும் கூறுங்கடி. (எண்).
அன்னை சரஸ்வதி
அறிவின் தெய்வம்
ஆடிக்கும்மியடி
கொண்டாடிக் கும்மியடி. (வெ).
மாவில் சித்திரக்கோலம்
வரைந்து சுழன்று
வாருங்கடி சுற்றிச்சுழன்று வாருங்கடி. (மா).
மங்கள நாயகி பொன்னடி சேர்ந்து
மகிழ்ந்து கும்மியடி
மனம் மகிழ்ந்து கும்மியடி. (வெ).
சரஸ்வதி தாயே கலைமகள் நீயே, நவராத்திரி பக்திப் பாடல் - ஏழாம் நாள்
நவராத்திரி பக்திப் பாடல்
- ஏழாம் நாள்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி பக்திப் பாடல்,
அருள்மிகு சரசுவதி அம்மன் பாட்டு.
சரஸ்வதி தாயே
கலைமகள் நீயே
அருள் நவராத்திரி
ஆண்டருள் வாயே
ஏழாம் நாள் இன்று
உன்திருக்காட்சி-இன்னும்
இருநாள் உனதருளாட்சி. (ச).
கல்விக்கலைகள்
தரும் தாட்சாயிணி
காதல் நான்முகன்
மகிழும் நாயகி. (கல்வி).
சண்டன் முண்டன்
அசுரரை வென்றாய்
பொன் எழில் மின்னிடும்
கீதமும் தந்தாய். (ச).
கன்னி பூஜையும்
சுவாசினி பூஜையும்
கருதிப் புரிந்தோம்
கனிந்தருள் அம்மா. (கன்னி).
என்னை படைத்தாய்
இசையும் படைத்தாய்
இணைத்தாய் தாயே
உனக்கிணை வருமா. (ச).
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM