Post by uma2806 on Oct 16, 2013 16:43:56 GMT 5.5
பால் தயிராகிறது – தயிர் பாலாகுமா? - ஸ்ரீமடம் பாலு அவர்களின் அனுபவம் - மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் ஆறாம் பகுதியிலிருந்து...
கல்வித்துறையில் பெரிய அதிகாரத்திலிருந்த அன்பர் தரிசனத்துக்கு வந்தார். அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர்.
இந்தத் தடவை இரண்டு ஆங்கிலேய மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். இங்கிலாந்திலிருந்து மாணவர்கள் தன்னை நாடி வந்திருக்கிறார்கள் என்பதால் உள்ளூர ஒரு பெருமிதம்.
தலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று அகந்தை.
“இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்துகொண்டிருக்கிறார்கள். பல சப்ஜெக்ட்களில் புகுந்து விளையாடுகிறார்கள்… இங்கிலீஷ்காரர்களே ரொம்ப புத்திசாலிகள்! இவர்கள் ரெண்டுபேரும் ரொம்ப ரொம்ப இண்டலிஜெண்ட்! பி.எச்.டி. வாங்கியிருக்கிறார்கள். இங்கிலீஷில் தான் வருஷந்தோறும் புதுப்புது சொற்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. புதிய புதிய விஞ்ஞானச் சொற்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் அந்த பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல் ப்யூராகவே இருந்திண்டிருக்கு…”
அன்பரின் ஆங்கிலத் தோத்திரம் முடிவடைவதாக இல்லை.
மஹாப் பெரியவாள் முன்னிலையில் பேசும்போது ஓர் அடக்கம் வேண்டும். ஆங்கிலத்தைப் புகழ்வதில் தவறு இல்லை; ஆனால் தலைகால் தெரியாமல் சொற்களைக் குவித்துக்கொண்டே போகக்கூடாது.
அவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம் பேச்சை நிறுத்தியபோது, பெரியவா பேசத் தொடங்கினர்கள்.
”ஆமாம்… இங்கிலீஷ்காரன் ரொம்ப புத்திசாலிதான்! நாம் பாலைத் தயிராக மாற்றுகிறோம். அது ஸ்வபாவ மாறுதல், ஆனால் தயிரைப் பாலாக மாற்றுவதில்லை. மாற்ற முடியாது. அதனாலே, அக்ஞானிகளான நாம் அந்த மாதிரியெல்லாம் முயற்சி பண்றதில்லே. இங்கிலீஷ்காரன் புத்திசாலியோன்னோ… ‘இதோ, நான் தயிரைப் பாலாக்கிக் காட்டறேன்’னான்! Butter Milk-ன்னு ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சுட்டான்! பார்த்தியா… எவ்வளவு சுலபமா, butter-ஐ milk ஆக்கிவிட்டான்! நாம் என்னமோ அதை மோர் என்று சொல்றோம்; மில்க்ன்னு சொல்றதில்லே..”
அருகில் இருந்தவர்கள் மென்மையாகச் சிரித்தார்கள்.
ஆங்கிலேய மாணவர்கள் ‘பெரியவாள் என்ன சொன்னார்கள்’ என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
“மைகாட்! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் ரிசர்ச் (Better) ரிசர்ச்!” என்று சொல்லி பெரியவாள் உரையின் நயத்தை ரசித்தார்கள்.
கல்வி அதிகாரியின் முகத்தில், வெண்ணெய் – இல்லை – விளக்கெண்ணெய் வழிந்தது!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
கல்வித்துறையில் பெரிய அதிகாரத்திலிருந்த அன்பர் தரிசனத்துக்கு வந்தார். அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர்.
இந்தத் தடவை இரண்டு ஆங்கிலேய மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். இங்கிலாந்திலிருந்து மாணவர்கள் தன்னை நாடி வந்திருக்கிறார்கள் என்பதால் உள்ளூர ஒரு பெருமிதம்.
தலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று அகந்தை.
“இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்துகொண்டிருக்கிறார்கள். பல சப்ஜெக்ட்களில் புகுந்து விளையாடுகிறார்கள்… இங்கிலீஷ்காரர்களே ரொம்ப புத்திசாலிகள்! இவர்கள் ரெண்டுபேரும் ரொம்ப ரொம்ப இண்டலிஜெண்ட்! பி.எச்.டி. வாங்கியிருக்கிறார்கள். இங்கிலீஷில் தான் வருஷந்தோறும் புதுப்புது சொற்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. புதிய புதிய விஞ்ஞானச் சொற்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் அந்த பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல் ப்யூராகவே இருந்திண்டிருக்கு…”
அன்பரின் ஆங்கிலத் தோத்திரம் முடிவடைவதாக இல்லை.
மஹாப் பெரியவாள் முன்னிலையில் பேசும்போது ஓர் அடக்கம் வேண்டும். ஆங்கிலத்தைப் புகழ்வதில் தவறு இல்லை; ஆனால் தலைகால் தெரியாமல் சொற்களைக் குவித்துக்கொண்டே போகக்கூடாது.
அவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம் பேச்சை நிறுத்தியபோது, பெரியவா பேசத் தொடங்கினர்கள்.
”ஆமாம்… இங்கிலீஷ்காரன் ரொம்ப புத்திசாலிதான்! நாம் பாலைத் தயிராக மாற்றுகிறோம். அது ஸ்வபாவ மாறுதல், ஆனால் தயிரைப் பாலாக மாற்றுவதில்லை. மாற்ற முடியாது. அதனாலே, அக்ஞானிகளான நாம் அந்த மாதிரியெல்லாம் முயற்சி பண்றதில்லே. இங்கிலீஷ்காரன் புத்திசாலியோன்னோ… ‘இதோ, நான் தயிரைப் பாலாக்கிக் காட்டறேன்’னான்! Butter Milk-ன்னு ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சுட்டான்! பார்த்தியா… எவ்வளவு சுலபமா, butter-ஐ milk ஆக்கிவிட்டான்! நாம் என்னமோ அதை மோர் என்று சொல்றோம்; மில்க்ன்னு சொல்றதில்லே..”
அருகில் இருந்தவர்கள் மென்மையாகச் சிரித்தார்கள்.
ஆங்கிலேய மாணவர்கள் ‘பெரியவாள் என்ன சொன்னார்கள்’ என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
“மைகாட்! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் ரிசர்ச் (Better) ரிசர்ச்!” என்று சொல்லி பெரியவாள் உரையின் நயத்தை ரசித்தார்கள்.
கல்வி அதிகாரியின் முகத்தில், வெண்ணெய் – இல்லை – விளக்கெண்ணெய் வழிந்தது!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!