Post by radha on Oct 13, 2013 5:05:02 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
கல்வி கண் திறக்கும் கலைவாணி
இந்துக்களின் வழிபாடுகளில் முக்கிய இடம் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள், திதிகளுக்கு ஏற்ப விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம், தை மாதம் தை அமாவாசை என்று வழிபடுகிறோம். அந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு விழா ஸ்ரீசக்கர நாயகியான அம்பாளுக்காக எடுக்கப்படும் விழா. நவமி முடிந்த அடுத்த நாள் தசமியாகும்.
ஒன்பது நாள் நவராத்திரி விழா விஜயதசமியுடன் சேர்த்து தசரா என்று அழைப்பார்கள். தசம் என்றால் பத்து. பத்து நாட்கள் நடக்கும் விழா என்பதால் தசரா என்று அழைக்கப்படுகிறது. இந்த பத்து நாட்களில் கடைசி மூன்று நாட்கள் மிகவும் விசேஷம். அதாவது அஷ்டமி, நவமி, தசமி ஆகிய இந்த மூன்று திதிகளையும் மிக முக்கியமானதாக கருதி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. சாதாரணமாக நம் இல்லங்களில் எந்த நல்ல காரியங்கள், விசேஷங்கள், முக்கிய பேச்சுவார்த்தைகளைகூட இந்த இரண்டு திதிகளில் செய்ய மாட்டோம். ஆனாலும் இறைவன் எல்லா திதிகளிலும் உறைகின்றான் என்பதை உணர்த்தவே நவராத்திரியில் மேற்சொன்ன திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள், முக்கிய விசேஷங்களில் நாம் அஷ்டமி, நவமி திதிகளை விலக்கி வைக்கின்றோம். இந்த முறை காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு அப்படியே வழிவழியாக வருகிறது. ஆனால் அஷ்டமி, நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம். பைரவர், சரபேஸ்வரர், வாராஹி போன்ற தெய்வங்களுக்கு அஷ்டமி திதியில் பூஜைகள், ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்களுக்கும் இந்த இரண்டு திதிகளில் முக்கிய பூஜைகள் நடைபெறும்.
பொதுவாக பிறந்தநாள் கொண்டாடும் போது நட்சத்திரத்தை வைத்து ஜெயந்தி என்று கொண்டாடுவார்கள். ஆனால் ராமர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ஸ்ரீராமநவமி என்றும், கிருஷ்ணர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். இதன்மூலம் இந்த திதிகளும் சிறப்பு பெறுகிறது. ஆதிசக்தியாம் அம்பாளை வணங்குவதற்கு ஒன்பது இரவுகளை முன்னோர்கள், மூத்தோர்கள் தேர்வு செய்தனர். இதற்காக புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்களை கணக்கிட்டனர். காரணம் இரவுக்கு அதிபதி சந்திரன்.
மேலும் அமாவாசையில் இருந்து சந்திரன் வளர்பிறையில் இருப்பதாகவும் அம்பாளின் அம்சமாக சந்திரன் திகழ்வதாலும் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர். இந்த காலகட்டத்தில் அம்பாளை வணங்குவதால் நம் அறியாமை எனும் இருள் நீங்கி பக்தியும், புக்தியும், ஞானமும், செல்வமும், ஒருங்கே வந்து சேரும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் மட்டும் இன்றி எல்லா கோயில்களிலும் சிறப்பான அபிஷேக ஆராதனைகளும் சுவாமி புறப்பாடும் இருக்கும். அம்மன், அம்பாள் ஸ்தலங்கள் நவதிருப்பதிகள், திவ்ய தேசங்கள் போன்றவற்றில் உற்சவங்களும், பிரம்மோற்சவங்களும் நடைபெறும்.
அம்பாள் தினமும் ஒரு வாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்சத்தில் அலங்கார ரூபிணியாக அருள்பாலிப்பாள். கவுரி அம்மனாகவும், சரஸ்வதியாகவும், பத்மாசினியாகவும் மகேஸ்வரியாகவும், ராஜராஜேஸ்வரியாகவும், மீனாட்சியாகவும், காமாட்சியாகவும், அன்னபூரணியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் வலம் வருவாள். இந்த நவமி மகா நவமி என்றும், ஆயுதபூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் சிறிய கடை முதல் பெரிய தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் ஆயுதபூஜை மிக விமரிசையாக கொண்டாடப்படும். புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து மாணவர்கள் வணங்குவார்கள். எல்லா துறைகளில் இருப்பவர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் பொருட்களை வைத்து வணங்குவார்கள். இயந்திரங்களுக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து தமக்கு வாழ்வளிப்பதற்காக அதற்கு நன்றிக்கடன் செலுத்துவார்கள். லாரி, பஸ், கார், சைக்கிள், பைக், ஸ்கூட்டர் முதற்கொண்டு எல்லா வாகனங்களுக்கும் பூ, மாலை சாற்றி மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து திருஷ்டி கழித்து எலுமிச்சம் பழத்தில் ஏற்றி வாகன ஓட்டத்தை தொடங்குவார்கள்.
தசரா என்ற பண்டிகை வழிபாட்டின் தத்துவம், நோக்கம் எல்லாமே அன்னை பராசக்தி எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறாள். எல்லா உருவங்களிலும் அவளின் சக்தி வெளிப்படுகிறது என்பதை உணர்த்தவே பல்வேறு விதமான பொம்மைகளை கொலு என்ற பெயரில் வைத்து வணங்கும் கலாசாரமும் ஏற்பட்டது. இந்த ஒன்பது இரவுகளிலும் தனி சக்தியாக விளங்கும். ஜெகன் மாதா பத்தாம் நாள் விஜயதசமியன்று ஈஸ்வரனை வணங்கி சிவசக்தி சொரூபமாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்த நாரீஸ்வரராக உருவெடுக்கிறாள் என்பதை உணர்த்துவதே இந்த பண்டிகையின் புராண வரலாறு. நவராத்திரியிலும், ஆயுத பூஜையன்றும், விஜயதசமியன்றும் அந்த பரம்பொருளை வணங்கி பிரார்த்திப்போமாக.
வெற்றிகள் அருளும் விஜயதசமி
நவராத்திரி நவமி முடிந்தவுடன் வரும் தசமி விஜயதசமி என்று சிறப்பிக்கப்படுகிறது. நவராத்திரியில் துர்காதேவி, மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து, ஒன்பதாம் நாள் போரில் வென்று வெற்றிக்கொடி நாட்டினாள். இது நவமி திதியில் நிகழ்ந்தது. இது முடிந்த மறுநாள் தேவர்கள் இந்த வெற்றியை ஆயுதபூஜை செய்து கொண்டாடியதால் விஜயதசமி என்று வழங்கலாயிற்று. ‘விஜயீ‘ என்றால் வெற்றி என்று பொருள். விஜயீபவ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் வாழ்த்துவது இந்த நோக்கத்தில்தான்.
இதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகும். அன்றைய தினம் புதிதாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள். புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஏதாவது புதிய பொருட்கள் வாங்குவார்கள். ஒப்பந்தங்கள் போடுவார்கள். இயல், இசை, நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வணங்குவார்கள். இசைக் கலைஞர்கள் முதல் நாள் பூஜை செய்த தங்களின் வாத்தியத்தை இசைத்து வழிபடுவார்கள். அகண்ட இசைக்கச்சேரிகளும் அன்றைய தினம் நடக்கும். அவரவர்கள் சார்ந்துள்ள தொழில்களில் அன்றைய தினம் புதிதாக ஆரம்பம் செய்வார்கள். இதற்கு காரணம் இது வெற்றியை குறிக்கும் தினம். ஆகையால் எல்லா செயல்களும் வெற்றி பெற வேண்டும். ஒன்றுக்கு பத்தாக பெருக வேண்டும். வாழ்வில் வளமும் நலமும் சேர வேண்டும் என்று பூஜை செய்து வேண்டி கொள்வார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பலன் தரும் மந்திரம் -சகல கலைகளிலும் கீர்த்தி பெற...
எம்பெருமான் காமேகேசன் குணநலையென்றும்
இடைவிடாதுன்நாவும் ஜபிப்பதனால் தாயே
செம்பருத்திப் பூவொத்துச் செபித்ததிரு நாவும்
செக்கரெனத் தான் சிவந்து திகழ்கின்றதம்மா!
அம்மென்னும் ஒலி உதவு நாவதனில் வதியும்
அழகுவெள்ளை ஸ்படிகமெனத் திகழும் கலை வாணி
தம்முடைய நாவதனில் வதிவதனால் தாயே
சரஸ்வதியும் செக்கரெனச் சிவந்தனளோ சொல்வாய்
ஆதிசங்கரரின் ஸௌந்தர்ய லஹரி 64ம் ஸ்லோகம்.
அவிஶ்ரான்தம் பத்யுர்குணகண கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா |
யதக்ராஸீனாயாஃ ஸ்படிகத்றுஷ-தச்சச்சவிமயி
ஸரஸ்வத்யா மூர்திஃ பரிணமதி மாணிக்யவபுஷா || 64 ||
பொதுப்பொருள்: காமேஸ்வரனின் திருநாமத்தை சதாசர்வ காலமும் ஜெபித்து செம்பருத்திப்பூவைப் போல் சிவந்த நாவினைக் கொண்ட அம்பிகையே, உன் நாவில் உறையும் ஸ்படிகமணி போன்ற நிறம் கொண்ட சரஸ்வதி தேவியும், அதனாலேயே வெண்ணிறத்திலிருந்து செக்கச் செவேல் என சிவந்து திகழ வைத்த அம்பிகையே எனைக் காப்பாய், என் கலை காப்பாய்.
(இத்துதியை சரஸ்வதி பூஜை(13.10.13) அன்று பாராயணம் செய்தால்
கலைமகளின் அருளால் நமக்கு சகல கலைகளும் சித்திக்கும்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பூஜை விபரங்கள்
பத்ரகாளி அஷ்டமி : 12-10-2013
சரஸ்வதி, ஆயுத பூஜை : 13-10-2013
விஜயதசமி : 14-10-2013
ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்
காலை : 8.00 - 10.00
பகல் : 2.00 - 4.00
இரவு : 9.00 - 10.00
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
கல்வி கண் திறக்கும் கலைவாணி
இந்துக்களின் வழிபாடுகளில் முக்கிய இடம் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள், திதிகளுக்கு ஏற்ப விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம், தை மாதம் தை அமாவாசை என்று வழிபடுகிறோம். அந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு விழா ஸ்ரீசக்கர நாயகியான அம்பாளுக்காக எடுக்கப்படும் விழா. நவமி முடிந்த அடுத்த நாள் தசமியாகும்.
ஒன்பது நாள் நவராத்திரி விழா விஜயதசமியுடன் சேர்த்து தசரா என்று அழைப்பார்கள். தசம் என்றால் பத்து. பத்து நாட்கள் நடக்கும் விழா என்பதால் தசரா என்று அழைக்கப்படுகிறது. இந்த பத்து நாட்களில் கடைசி மூன்று நாட்கள் மிகவும் விசேஷம். அதாவது அஷ்டமி, நவமி, தசமி ஆகிய இந்த மூன்று திதிகளையும் மிக முக்கியமானதாக கருதி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. சாதாரணமாக நம் இல்லங்களில் எந்த நல்ல காரியங்கள், விசேஷங்கள், முக்கிய பேச்சுவார்த்தைகளைகூட இந்த இரண்டு திதிகளில் செய்ய மாட்டோம். ஆனாலும் இறைவன் எல்லா திதிகளிலும் உறைகின்றான் என்பதை உணர்த்தவே நவராத்திரியில் மேற்சொன்ன திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள், முக்கிய விசேஷங்களில் நாம் அஷ்டமி, நவமி திதிகளை விலக்கி வைக்கின்றோம். இந்த முறை காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு அப்படியே வழிவழியாக வருகிறது. ஆனால் அஷ்டமி, நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம். பைரவர், சரபேஸ்வரர், வாராஹி போன்ற தெய்வங்களுக்கு அஷ்டமி திதியில் பூஜைகள், ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்களுக்கும் இந்த இரண்டு திதிகளில் முக்கிய பூஜைகள் நடைபெறும்.
பொதுவாக பிறந்தநாள் கொண்டாடும் போது நட்சத்திரத்தை வைத்து ஜெயந்தி என்று கொண்டாடுவார்கள். ஆனால் ராமர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ஸ்ரீராமநவமி என்றும், கிருஷ்ணர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். இதன்மூலம் இந்த திதிகளும் சிறப்பு பெறுகிறது. ஆதிசக்தியாம் அம்பாளை வணங்குவதற்கு ஒன்பது இரவுகளை முன்னோர்கள், மூத்தோர்கள் தேர்வு செய்தனர். இதற்காக புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்களை கணக்கிட்டனர். காரணம் இரவுக்கு அதிபதி சந்திரன்.
மேலும் அமாவாசையில் இருந்து சந்திரன் வளர்பிறையில் இருப்பதாகவும் அம்பாளின் அம்சமாக சந்திரன் திகழ்வதாலும் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர். இந்த காலகட்டத்தில் அம்பாளை வணங்குவதால் நம் அறியாமை எனும் இருள் நீங்கி பக்தியும், புக்தியும், ஞானமும், செல்வமும், ஒருங்கே வந்து சேரும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் மட்டும் இன்றி எல்லா கோயில்களிலும் சிறப்பான அபிஷேக ஆராதனைகளும் சுவாமி புறப்பாடும் இருக்கும். அம்மன், அம்பாள் ஸ்தலங்கள் நவதிருப்பதிகள், திவ்ய தேசங்கள் போன்றவற்றில் உற்சவங்களும், பிரம்மோற்சவங்களும் நடைபெறும்.
அம்பாள் தினமும் ஒரு வாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்சத்தில் அலங்கார ரூபிணியாக அருள்பாலிப்பாள். கவுரி அம்மனாகவும், சரஸ்வதியாகவும், பத்மாசினியாகவும் மகேஸ்வரியாகவும், ராஜராஜேஸ்வரியாகவும், மீனாட்சியாகவும், காமாட்சியாகவும், அன்னபூரணியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் வலம் வருவாள். இந்த நவமி மகா நவமி என்றும், ஆயுதபூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் சிறிய கடை முதல் பெரிய தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் ஆயுதபூஜை மிக விமரிசையாக கொண்டாடப்படும். புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து மாணவர்கள் வணங்குவார்கள். எல்லா துறைகளில் இருப்பவர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் பொருட்களை வைத்து வணங்குவார்கள். இயந்திரங்களுக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து தமக்கு வாழ்வளிப்பதற்காக அதற்கு நன்றிக்கடன் செலுத்துவார்கள். லாரி, பஸ், கார், சைக்கிள், பைக், ஸ்கூட்டர் முதற்கொண்டு எல்லா வாகனங்களுக்கும் பூ, மாலை சாற்றி மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து திருஷ்டி கழித்து எலுமிச்சம் பழத்தில் ஏற்றி வாகன ஓட்டத்தை தொடங்குவார்கள்.
தசரா என்ற பண்டிகை வழிபாட்டின் தத்துவம், நோக்கம் எல்லாமே அன்னை பராசக்தி எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறாள். எல்லா உருவங்களிலும் அவளின் சக்தி வெளிப்படுகிறது என்பதை உணர்த்தவே பல்வேறு விதமான பொம்மைகளை கொலு என்ற பெயரில் வைத்து வணங்கும் கலாசாரமும் ஏற்பட்டது. இந்த ஒன்பது இரவுகளிலும் தனி சக்தியாக விளங்கும். ஜெகன் மாதா பத்தாம் நாள் விஜயதசமியன்று ஈஸ்வரனை வணங்கி சிவசக்தி சொரூபமாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்த நாரீஸ்வரராக உருவெடுக்கிறாள் என்பதை உணர்த்துவதே இந்த பண்டிகையின் புராண வரலாறு. நவராத்திரியிலும், ஆயுத பூஜையன்றும், விஜயதசமியன்றும் அந்த பரம்பொருளை வணங்கி பிரார்த்திப்போமாக.
வெற்றிகள் அருளும் விஜயதசமி
நவராத்திரி நவமி முடிந்தவுடன் வரும் தசமி விஜயதசமி என்று சிறப்பிக்கப்படுகிறது. நவராத்திரியில் துர்காதேவி, மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து, ஒன்பதாம் நாள் போரில் வென்று வெற்றிக்கொடி நாட்டினாள். இது நவமி திதியில் நிகழ்ந்தது. இது முடிந்த மறுநாள் தேவர்கள் இந்த வெற்றியை ஆயுதபூஜை செய்து கொண்டாடியதால் விஜயதசமி என்று வழங்கலாயிற்று. ‘விஜயீ‘ என்றால் வெற்றி என்று பொருள். விஜயீபவ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் வாழ்த்துவது இந்த நோக்கத்தில்தான்.
இதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகும். அன்றைய தினம் புதிதாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள். புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஏதாவது புதிய பொருட்கள் வாங்குவார்கள். ஒப்பந்தங்கள் போடுவார்கள். இயல், இசை, நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வணங்குவார்கள். இசைக் கலைஞர்கள் முதல் நாள் பூஜை செய்த தங்களின் வாத்தியத்தை இசைத்து வழிபடுவார்கள். அகண்ட இசைக்கச்சேரிகளும் அன்றைய தினம் நடக்கும். அவரவர்கள் சார்ந்துள்ள தொழில்களில் அன்றைய தினம் புதிதாக ஆரம்பம் செய்வார்கள். இதற்கு காரணம் இது வெற்றியை குறிக்கும் தினம். ஆகையால் எல்லா செயல்களும் வெற்றி பெற வேண்டும். ஒன்றுக்கு பத்தாக பெருக வேண்டும். வாழ்வில் வளமும் நலமும் சேர வேண்டும் என்று பூஜை செய்து வேண்டி கொள்வார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பலன் தரும் மந்திரம் -சகல கலைகளிலும் கீர்த்தி பெற...
எம்பெருமான் காமேகேசன் குணநலையென்றும்
இடைவிடாதுன்நாவும் ஜபிப்பதனால் தாயே
செம்பருத்திப் பூவொத்துச் செபித்ததிரு நாவும்
செக்கரெனத் தான் சிவந்து திகழ்கின்றதம்மா!
அம்மென்னும் ஒலி உதவு நாவதனில் வதியும்
அழகுவெள்ளை ஸ்படிகமெனத் திகழும் கலை வாணி
தம்முடைய நாவதனில் வதிவதனால் தாயே
சரஸ்வதியும் செக்கரெனச் சிவந்தனளோ சொல்வாய்
ஆதிசங்கரரின் ஸௌந்தர்ய லஹரி 64ம் ஸ்லோகம்.
அவிஶ்ரான்தம் பத்யுர்குணகண கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா |
யதக்ராஸீனாயாஃ ஸ்படிகத்றுஷ-தச்சச்சவிமயி
ஸரஸ்வத்யா மூர்திஃ பரிணமதி மாணிக்யவபுஷா || 64 ||
பொதுப்பொருள்: காமேஸ்வரனின் திருநாமத்தை சதாசர்வ காலமும் ஜெபித்து செம்பருத்திப்பூவைப் போல் சிவந்த நாவினைக் கொண்ட அம்பிகையே, உன் நாவில் உறையும் ஸ்படிகமணி போன்ற நிறம் கொண்ட சரஸ்வதி தேவியும், அதனாலேயே வெண்ணிறத்திலிருந்து செக்கச் செவேல் என சிவந்து திகழ வைத்த அம்பிகையே எனைக் காப்பாய், என் கலை காப்பாய்.
(இத்துதியை சரஸ்வதி பூஜை(13.10.13) அன்று பாராயணம் செய்தால்
கலைமகளின் அருளால் நமக்கு சகல கலைகளும் சித்திக்கும்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பூஜை விபரங்கள்
பத்ரகாளி அஷ்டமி : 12-10-2013
சரஸ்வதி, ஆயுத பூஜை : 13-10-2013
விஜயதசமி : 14-10-2013
ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்
காலை : 8.00 - 10.00
பகல் : 2.00 - 4.00
இரவு : 9.00 - 10.00
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM