Post by palgunan on Oct 10, 2013 13:36:17 GMT 5.5
மூலம்: மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் (தொகுதி-7)
உத்தராயண புண்யகாலம் நாலு நாளில் என்ற நல்ல சமயத்தில், மகா வேதனையைத் தரும் அந்தச் சம்பவம் நிகழந்துவிட்டது. காஞ்சிபுரம் அஷ்டபுஜம் தெரு சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி. ""டாக்டரைப் பார்த்து விட்டு விட்டு வரலாம் என்று போய்க்கொண்டிருந்தபோது பட்டப்பகல்வேளையில் நட்ட நடுத்தெருவில் நிகழந்துவிட்டது. கழுத்தில் ஏதோ உரசினார்ப்போல் இருந்தது சரஸ்வதி அம்மாளுக்கு. 'என்ன, இப்படி' ? என்று என்று எண்ணி கையால் கழுத்தைத் தடவிப் பார்த்தபோது ,
திடுக்...!
மஞ்சள் சரட்டில் கோர்த்திருந்த திருமாங்கல்யம் பறிபோயிருந்தது.
ஒட்டி உரசினார்ப்போல் சைக்கிளில் வேகமாகச் சென்று மறைந்தானே பாவி! அவன் வேலையாகத் இருக்கும்?
வீட்டுக்கு வந்து பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும் பெரியவா பாதுகையின் மேலிருந்த ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து மஞ்சள் சரத்தில் கட்டி கழுத்தில் போட்டுக்கொண்டாகிவிட்டது. உடனே நகைக் கடைக்குப்போய் திருமாங்கல்யம் வாங்கிக்கொண்டு வந்து சரத்தில் கோர்த்து கழுத்தில் போட்டுக்கொள்ளலாம் --என்பதெல்லாம் நடைமுறைப் படுத்த முடியாத செயல்திட்டம்.
எப்படியும் பெரியவாளிடம் சொன்னால்தான் மனம் நிம்மதி அடையும்.
மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதலாகவே இருந்தது.முஹுர்த்தனாள் .சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.மங்களகரமான அந்த நேரத்தில் ' என் திருமாங்கல்யம் திருடுபோய்விட்டது என்று சொல்வது அநாகரிகம்.
ஓரமாக நின்றுகொண்டிருந்தாள், அந்த அம்மாள். பெரியவா கண்களுக்கு ஒரு கூடப்பட்டுவிடும்.
சேவையாளர் ஸ்ரிகண்டனிடம் " அவ என்னமோ சொல்றா, கேளு" என்று ஆக்ஞை.
ஸ்ரிகண்டனிடம் நடந்தவற்றை கண்களில் நீர்ததும்பக்கொட்டித்தீர்த்துவிட்டாள், சரஸ்வதி.
செய்தி, பெரியவா திருச்செவிகளை எட்டிவிட்டது.
சரஸ்வதி அம்மாள் நின்றுகொண்டே இருந்தால் பிரசாதம் வங்கிக்கொள்ளவேன்டாமா!
ஐந்து நிமிஷமாயிற்று.
பெரியவாள் தொட்டுக்கொடுப்பதற்காக பிரசாடத் தட்டை நீட்டினார், ஸ்ரீகண்டன்.
"எடுத்துகங்கோ".....
பார்த்தால், மஞ்சள் சரத்தில் கோர்த்த திருமாங்கல்யம், குங்குமம்,விபூதி, அக்ஷதை, புஷ்பம் ...அம்மாளுக்குப் பரவசம்..எப்போக் கட்டிக்கறது?- பெரியவாளிடமே கேள்வி!
"கனுப்பொங்கல் அன்னிக்கு, மஞ்சள் தீட்டிக்கிண்டப் பிறகு.."
அதன்படியே செய்து தரிசனத்துக்குப் போனாள். அம்மாள்.
வெறுங்கையுடன் போகலாமா? நூறு கிராம் டைமண்டு கல்கண்டு வாங்கிக் கொண்டு போனாள்.
"நமஸ்காரம், கல்கண்டு சமர்ப்பணம்"
"திருமாங்கல்யம் கட்டிண்டூட்டேன் "...
கல்கண்டுத் தட்டை அருகில் இழுத்து ஒரு டயமண்டை வாயில் போட்டுக்கொண்டார்கள், பெரியவா
" எல்லாருக்கும் கொடு திருமாங்கல்யதாரணம் ஆனவுடன் ஸ்வீட் கொடுக்கனுமில்லையா?"...
சரஸ்வதி அம்மாளுக்கு பெரியவா ஜெகத்குருவாகப் படவில்லை; ஜெகன்மாதாவாகக் காட்சி கொடுத்தார்..
இந்த சரஸ்வதிக்கு என்ன அந்த சரஸ்வதிக்கும் பெரியவா, ' தாயார்' ஸ்தானம் தான்!!
".
உத்தராயண புண்யகாலம் நாலு நாளில் என்ற நல்ல சமயத்தில், மகா வேதனையைத் தரும் அந்தச் சம்பவம் நிகழந்துவிட்டது. காஞ்சிபுரம் அஷ்டபுஜம் தெரு சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி. ""டாக்டரைப் பார்த்து விட்டு விட்டு வரலாம் என்று போய்க்கொண்டிருந்தபோது பட்டப்பகல்வேளையில் நட்ட நடுத்தெருவில் நிகழந்துவிட்டது. கழுத்தில் ஏதோ உரசினார்ப்போல் இருந்தது சரஸ்வதி அம்மாளுக்கு. 'என்ன, இப்படி' ? என்று என்று எண்ணி கையால் கழுத்தைத் தடவிப் பார்த்தபோது ,
திடுக்...!
மஞ்சள் சரட்டில் கோர்த்திருந்த திருமாங்கல்யம் பறிபோயிருந்தது.
ஒட்டி உரசினார்ப்போல் சைக்கிளில் வேகமாகச் சென்று மறைந்தானே பாவி! அவன் வேலையாகத் இருக்கும்?
வீட்டுக்கு வந்து பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும் பெரியவா பாதுகையின் மேலிருந்த ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து மஞ்சள் சரத்தில் கட்டி கழுத்தில் போட்டுக்கொண்டாகிவிட்டது. உடனே நகைக் கடைக்குப்போய் திருமாங்கல்யம் வாங்கிக்கொண்டு வந்து சரத்தில் கோர்த்து கழுத்தில் போட்டுக்கொள்ளலாம் --என்பதெல்லாம் நடைமுறைப் படுத்த முடியாத செயல்திட்டம்.
எப்படியும் பெரியவாளிடம் சொன்னால்தான் மனம் நிம்மதி அடையும்.
மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதலாகவே இருந்தது.முஹுர்த்தனாள் .சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.மங்களகரமான அந்த நேரத்தில் ' என் திருமாங்கல்யம் திருடுபோய்விட்டது என்று சொல்வது அநாகரிகம்.
ஓரமாக நின்றுகொண்டிருந்தாள், அந்த அம்மாள். பெரியவா கண்களுக்கு ஒரு கூடப்பட்டுவிடும்.
சேவையாளர் ஸ்ரிகண்டனிடம் " அவ என்னமோ சொல்றா, கேளு" என்று ஆக்ஞை.
ஸ்ரிகண்டனிடம் நடந்தவற்றை கண்களில் நீர்ததும்பக்கொட்டித்தீர்த்துவிட்டாள், சரஸ்வதி.
செய்தி, பெரியவா திருச்செவிகளை எட்டிவிட்டது.
சரஸ்வதி அம்மாள் நின்றுகொண்டே இருந்தால் பிரசாதம் வங்கிக்கொள்ளவேன்டாமா!
ஐந்து நிமிஷமாயிற்று.
பெரியவாள் தொட்டுக்கொடுப்பதற்காக பிரசாடத் தட்டை நீட்டினார், ஸ்ரீகண்டன்.
"எடுத்துகங்கோ".....
பார்த்தால், மஞ்சள் சரத்தில் கோர்த்த திருமாங்கல்யம், குங்குமம்,விபூதி, அக்ஷதை, புஷ்பம் ...அம்மாளுக்குப் பரவசம்..எப்போக் கட்டிக்கறது?- பெரியவாளிடமே கேள்வி!
"கனுப்பொங்கல் அன்னிக்கு, மஞ்சள் தீட்டிக்கிண்டப் பிறகு.."
அதன்படியே செய்து தரிசனத்துக்குப் போனாள். அம்மாள்.
வெறுங்கையுடன் போகலாமா? நூறு கிராம் டைமண்டு கல்கண்டு வாங்கிக் கொண்டு போனாள்.
"நமஸ்காரம், கல்கண்டு சமர்ப்பணம்"
"திருமாங்கல்யம் கட்டிண்டூட்டேன் "...
கல்கண்டுத் தட்டை அருகில் இழுத்து ஒரு டயமண்டை வாயில் போட்டுக்கொண்டார்கள், பெரியவா
" எல்லாருக்கும் கொடு திருமாங்கல்யதாரணம் ஆனவுடன் ஸ்வீட் கொடுக்கனுமில்லையா?"...
சரஸ்வதி அம்மாளுக்கு பெரியவா ஜெகத்குருவாகப் படவில்லை; ஜெகன்மாதாவாகக் காட்சி கொடுத்தார்..
இந்த சரஸ்வதிக்கு என்ன அந்த சரஸ்வதிக்கும் பெரியவா, ' தாயார்' ஸ்தானம் தான்!!
".