Post by uma2806 on Oct 3, 2013 15:10:56 GMT 5.5
இரண்டு கண்களிலும் பார்வையை முழுவதுமாக இழந்திருந்த சீனிவாச ஐயர், தன் பால்ய காலத்து நண்பன் ஹைதராபாத் மூர்த்தி வற்புறுத்திக் கூப்பிட்டதன் பேரில் காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் பெரியவர் தரிசனத்துக்காகச் சென்றிருந்தார். சென்னையில் இருக்கின்ற பிரபலமான கண் மருத்துவமனைகள் பலவற்றின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியும் பலன் ஒன்றுமில்லை. ‘இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை போலும்’ என்பதாகத் தீர்மானித்து, சொச்ச நாட்களை இருள் சாம்ராஜ்யத்துக்குள் ஓட்டிக் கொண்டு வந்தார். மனைவி கிரிஜா அல்லது மகன்களின் உதவி இல்லாமல் சீனிவாச ஐயரால் எதுவுமே செய்ய இயலாது. இதுதான் நிலைமை!
சீனிவாச ஐயர், அவரது மனைவி கிரிஜா, மகன்கள் கோபி, ஜெயராஜ் மற்றும் ஹைதராபாத் மூர்த்தி ஆகிய ஐவரும் காஞ்சி ஸ்ரீமடத்துக்குச் சென்றிருந்தனர். மூர்த்திக்கு ஏற்கனவே பெரியவா உத்தரவு கொடுத்து விட்டமையால், ‘தான் வந்த காரியம் பூர்த்தி ஆகி விட்டது’ என்கிற சந்தோஷத்துடன் அவர் வெளியே சென்று விட்டார். எஞ்சிய நால்வரும் தங்களது தரிசனம் முடிந்ததும் பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு சென்னை புறப்படுவதற்காக வெளியே வந்தனர்.
அப்போது ஸ்ரீமடத்தின் உள்ளிருந்து சீடன் ஒருவன் வேகமாக இவர்களை நோக்கி வந்து, பெரியவா அழைப்பதாகத் தெரிவித்தான்.
ஆச்சரியப்பட்டுத் திரும்பினார்கள். உள்ளே போனார்கள். கூட்டம் அதிகமில்லை. பெரியவாளின் சிஷ்யர்கள் தவிர, ஓரிரு பக்தர்கள் மட்டுமே இருந்தார்கள். மிகவும் ஏகாந்தமாக பெரியவா வீற்றிருந்தார்.
”சென்னையில் இருந்து காலையில் காஞ்சிபுரம் புறப்பட்டுப் போன பெற்றோர் மற்றும் தம்பிகள் எவரும் இன்னும் வீடு திரும்பவில்லையே! என்ன காரணமாக இருக்கும்?” என்று சுந்தர்ராமன் குழம்பிக் கொண்டிருந்தபோது, அவரது தம்பி கோபி சரியாக வீட்டுக்குள் நுழைந்தான். வந்தவன் எல்லா விவரத்தையும் ஒரே மூச்சில் சொன்னான்.
இதைக் கேட்ட சுந்தர்ராமனுக்குத் தன் தந்தையாருக்குப் பார்வை கிடைப்பதில் பெரியவா காட்டும் அக்கறையை நினைத்து சந்தோஷப் பட்டாலும், இது சாத்தியமா என்கிற கேள்வி திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. காரணம் – தந்தையுடன் பல கண் மருத்துவமனைகளுக்குப் போன அனுபவம் இந்த சுந்தர்ராமனுக்கு உண்டு. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த ‘நெகட்டிவ்’ பதிலை எப்படி எல்லாம் அவர்கள் விளக்கிச் சொன்னார்கள் என்பதில் இருந்து
மருத்துவமனை கொடுத்த ரிப்போர்ட் அனைத்துமே அத்துப்படி!
பெரியவா மேல் அபார நம்பிக்கை திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்துக்கு உண்டாயிற்றே! எனவே, ‘பெரியவா சொன்னால் அதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது’ என்று தீர்மானமாக நம்பிய சுந்தர்ராமன், “சரி.. நாளை விடிகாலைல நான் காஞ்சிபுரம் பொறப்பட்டுப் போறேன்” என்று தம்பியிடம் சொன்னார்.
அதன்படி மறுநாள் அதிகாலை சீக்கிரம் விழித்தெழுந்தார். குளித்து முடித்து, தன் தந்தையார் கண் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனை ரிப்போர்ட்டுகளையும் – ஒரு பேப்பர்கூட விடாமல் – ஒரு ஃபைலில் போட்டு எடுத்துக் கொண்டு, காஞ்சிபுரம் புறப்பட்டார் சுந்தர்ராமன்.
காலை சுமார் ஒன்பது மணி இருக்கும். அன்றைக்கு ஸ்ரீமடத்தில் ஓரளவு பக்தர்கள் கூட்டம் தென்பட்டது. ‘ஜய ஜய சங்கர’ கோஷத்துடன் பக்தி மணம் கமழ்ந்தது. மிகவும் காஷுவலான ஒரு பொஸிஷனில் பெரியவா அமர்ந்து, அருகில் இருந்த ஒரு பக்தருடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். சீனிவாச ஐயர், கிரிஜா ஆகியோரும் பெரியவாளுக்கு முன்பாக அமர்ந்திருந்தனர்.
அப்போது சுந்தர்ராமனைப் பார்த்து, “வா, திருவள்ளூர் ராமசந்திர ஐயரின் கொள்ளுப் பேரனா நீ?” என்று ஆச்சரியம் விலகாமல் கேட்டார் மஹா பெரியவா.
தலை அசைத்த சுந்தர்ராமன், உடனே பெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தரையில் இருந்து எழுந்தவர், “அப்பாவுக்குக் கண் ஆபரேஷன் பண்ணலாம்னு பெரியவா அபிப்ராயப்பட்டேளாம்.. இதெல்லாம் மெட்ராஸ்ல இருக்கிற டாக்டர்ஸ் அப்பாவை செக் பண்ணி, ‘இனிமே பார்வை வர்றதுக்கு வாய்ப்பே இல்லை’னு சொல்லிக் கொடுத்த ரெக்கார்ட்ஸ்” என்று சொல்லி விட்டு, அந்த ஃபைலை பெரியவாளின் பார்வைக்காக அவருக்கு முன்னே வைத்தார்.
அந்த ஃபைலைப் பெரியவா பார்க்க வேண்டும் என்பதற்காக அதன் முடிச்சைப் பிரித்து, எடுத்துப் படிப்பதற்கு வசதியாக வைத்தார் சுந்தர்ராமன்.
தன் வலக் கையால் சுந்தர்ராமனுக்கு ஜாடை காண்பித்தார் பெரியவா. அதாவது, ‘இந்த ஃபைல் – பேப்பர் கட்டு இதெல்லாம் வெச்சுண்டு ஒண்ணும் பண்ண வேண்டாம்’ என்பது அதன் பொருள். பிறகு, தன் இடக் கையால் அந்த ஃபைலை ஓரிரு இஞ்ச் தொலைவுக்குத் தூரத் தள்ளினார். அந்த ஃபைலின் மீது பெரியவா பார்வை பதியவே இல்லை.
பெரியவா சந்நிதானத்தில் கூடி இருந்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அத்தனை டாக்டர்கள் கொடுத்த ஒட்டு மொத்த மருத்துவ ரிப்போர்ட்டுகளைப் பெரியவா சீண்டக்கூட இல்லை. கூட்டத்தினரிடையே நிமிர்ந்து பார்த்தார். பார்வையை இங்கும் அங்கும் ஓட்டினார். பிறகு, அங்கு நின்றிருந்த ஒரு ஆசாமியை – தன் இடக்கை விரல் ஒன்றை நீட்டித் தன் அருகே வருமாறு சைகை செய்தார். அழைப்புக்கு உள்ளான நபர் மிகுந்த பவ்யமாக பெரியவா முன்னால் வந்து நின்றார்.
தன் முன்னால் வந்து நின்றவரை தீர்க்கமாகப் பார்த்தார் பெரியவா. பிறகு அவரிடம், “இவனுக்குக் கண் ஆபரேஷன் பண்ணணும். நீதான் பண்ணணும்” என்றார்.
வந்து நின்றவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன்னைப் பார்த்துதான் சொல்கிறாரா அல்லது தனக்குப் பின்னால் நிற்கும் வேறு எவரையாவது பார்த்துப் பெரியவா சொல்கிறாரா என்கிற சந்தேகம் அந்த அன்பருக்கு வந்தது. பின்னால் திரும்பியும் பார்க்கச் செய்தார்.
“உன்னைத்தான் சொல்றேன். நீ கண் டாக்டர்தானே? நீதான் இவனுக்கு ஆபரேஷன் பண்ணணும்.” – பெரியவா.
பக்தர்கள் கூட்டம் இந்த நிகழ்வை மிகவும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. பெரியவா சந்நிதியில் அவ்வப்போது இது போன்ற அற்புதங்கள் நிகழும் என்பதை அறியாதவர்களா அவர்கள்!
அப்போதுதான் சுந்தர்ராமன் – கண் டாக்டர் என்று பெரியவாளால் அடையாளம் காண்பிக்கப்பட்ட அந்த நபரை உற்றுப் பார்க்கிறார். பெரியவா உத்தரவிட்ட அந்த நபரின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு டாக்டர் என்பதை நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. அந்தக் கண் டாக்டரின் பெயர் – பாலசுப்ரமணியன்.
டாக்டர் பாலசுப்ரமணியனுக்கு ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. “ஏதோ ஹை லெவல்ல – பெரிய பெரிய ஆஸ்பத்திரி போயும் இந்த கண் பிராப்ளம் முடியல போலிருக்கு. அதான், பெரியவாகிட்ட வந்திருக்கு.”
ஒரு கட்டத்தில் சுந்தர்ராமனுக்கு பயமாகக்கூட இருந்தது. பெரியவா ஒரு மகத்தான சக்தி என்றாலும், இந்தக் கத்துக்குட்டி டாக்டர் எதையாவது செய்யப் போய், தந்தையின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று பயந்தார். இப்போதாவது பார்வை இல்லை என்றாலும், வீட்டுக்குள் ஓரளவு நடமாடிக் கொண்டிருக்கிறார். இவர் செய்யப் போகும் ஆபரேஷனுக்குப் பிறகு அதற்கும் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தார்.
ஆனால், இதை எப்படிப் பெரியவாளிடம் வெளிப்படுத்துவது? பரப்பிரம்மத்தின் ஆணைக்கு நாம் பதில் பேச முடியுமா?
என்றாலும், ஓரிரண்டு அடி முன்னால் வைத்து நடந்து டாக்டர் பாலசுப்ரமணியனை நெருங்கினார் சுந்தர்ராமன். மெள்ள அவரிடம், “ஃபைலைப் பார்த்தேளா? மெட்ராஸ்ல எத்தனை டாக்டர்ஸ் தெரியுமா? எல்லாருமே சொல்லி வைத்தாற்போல ‘உங்க அப்பாவோட கண்ல ஒளி வர்றதுக்கு வாய்ப்பே இல்லை’ன்னு எழுதிக் கொடுத்திருக்கா. காலம் முழுக்க அவர் இப்படியேதான் இருக்கணும்னு அந்த ரிப்போர்ட் சொல்றது. எங்க அப்பாவோட விதி” என்றார் சன்னமாக.
டாக்டர் பாலசுப்ரமணியனுக்குத் தயக்கம். பெரியவா உத்தரவிடுகிறார். ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டியவரின் பையனோ, சவால் விடுவது போல் பேசுகிறார்.
கண் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டிய சீனிவாச ஐயர், எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். பெரியவாளின் திருநாமத்தை, காயத்ரி மந்திரம் போல் மனதுக்குள்ளே உச்சரித்துக் கொண்டிருக்கிறார். பெரியவாளின் திருவிளையாடல் மகனுக்குப் புரியவில்லை என்றாலும், தந்தைக்குப் புரியாதா?
சீனிவாச ஐயரின் மனைவியான கிரிஜா, பெரியவா திருவருளால் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்குக் கொள்கிறார்.
சுந்தர்ராமன் ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறார்.
கையைப் பிசைந்து கொண்டு டாக்டர் நிற்கிறார். அவருடைய முகம் ஏகத்துக்கும் கலவரமாகி இருக்கிறது. தான் தொழிலுக்கு வந்து சில காலமே ஆகிறது. இந்த நிலையில் தன் ஒருவனால் எப்படி – எவருமே முடியாது என்று சொன்ன இந்த ஆபரேஷனை செய்ய முடியும் என்கிற தயக்கம். பயம்.
சுவாரஸ்யமான ஒரு சினிமா காட்சியை நேரில் பார்ப்பது போல் அங்கு கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன ஆகுமோ என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
சற்று நேரத்துக்கு எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த ருத்திராட்சத்தை ‘சரசர’வென்று உருட்டிக் கொண்டே இருந்தார் பெரியவா. பேரமைதி நிலவியது அங்கே.
அந்த சூழ்நிலையின் அமைதியைப் பெரியவாதான் ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு உடைத்தார்.
“நான் சொல்றேன், நீ பண்ணு”.
அவ்வளவுதான். டாக்டர் பாலசுப்ரமணியன் முகத்தில் திடீரென்று அப்படி ஒரு பிரகாசம் எப்படி வந்தது என்பதை அங்கு நின்றிருந்த எவரும் அறியார்! மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு டாக்டர் என்பது போன்ற பொலிவு, ஒரு கணத்தில் டாக்டரின் முகத்தில் வந்தது. தனக்குள் ஏதோ ஒரு சக்தி வந்து இறங்கியதைப் போல் உணர்ந்தார் டாக்டர்.
சுந்தர்ராமன் உட்பட அங்கே கூடிஇருந்த அனைவரும் இந்த வித்தியாசமான காட்சியைக் கண்டனர்.
டாக்டர் பாலசுப்ரமணியன், பெரியவாளின் அருகே வந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். பெரியவா பிரசாதம் கொடுத்தார்.
பிறகு, சுந்தர்ராமனைப் பார்த்து, “வாங்க, உங்க அப்பாவைக் கூட்டிக்கிட்டு… என் கிளினிக் போகலாம்” என்று கன கம்பீரமாகச் சொன்னவர், வேக வேகமாக வெளியே நடந்தார்.
அந்த நேரத்தில் டாக்டர் பாலசுப்ரமணியனின் மிடுக்கான நடையையும், வேகத்தையும் பார்த்தால், அவரை ஏற்கனவே அறிந்தவர்கள் பிரமித்துத் தான் போவார்கள். காரணம் – இவர் பழைய டாக்டர் பாலசுப்ரமணியன் அல்ல. பெரியவாளின் கடைக்கண் ஆசி பெற்ற பாலசுப்ரமணியன்.
டாக்டரைத் தொடர்ந்து வெளியே நடந்தது சீனிவாச ஐயரின் குடும்பம்.
இவர்கள் நடந்து செல்வதை ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார் மஹா பெரியவா.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! அடுத்த வெளியீட்டில் மீதிப் பகுதி................
சீனிவாச ஐயர், அவரது மனைவி கிரிஜா, மகன்கள் கோபி, ஜெயராஜ் மற்றும் ஹைதராபாத் மூர்த்தி ஆகிய ஐவரும் காஞ்சி ஸ்ரீமடத்துக்குச் சென்றிருந்தனர். மூர்த்திக்கு ஏற்கனவே பெரியவா உத்தரவு கொடுத்து விட்டமையால், ‘தான் வந்த காரியம் பூர்த்தி ஆகி விட்டது’ என்கிற சந்தோஷத்துடன் அவர் வெளியே சென்று விட்டார். எஞ்சிய நால்வரும் தங்களது தரிசனம் முடிந்ததும் பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு சென்னை புறப்படுவதற்காக வெளியே வந்தனர்.
அப்போது ஸ்ரீமடத்தின் உள்ளிருந்து சீடன் ஒருவன் வேகமாக இவர்களை நோக்கி வந்து, பெரியவா அழைப்பதாகத் தெரிவித்தான்.
ஆச்சரியப்பட்டுத் திரும்பினார்கள். உள்ளே போனார்கள். கூட்டம் அதிகமில்லை. பெரியவாளின் சிஷ்யர்கள் தவிர, ஓரிரு பக்தர்கள் மட்டுமே இருந்தார்கள். மிகவும் ஏகாந்தமாக பெரியவா வீற்றிருந்தார்.
”சென்னையில் இருந்து காலையில் காஞ்சிபுரம் புறப்பட்டுப் போன பெற்றோர் மற்றும் தம்பிகள் எவரும் இன்னும் வீடு திரும்பவில்லையே! என்ன காரணமாக இருக்கும்?” என்று சுந்தர்ராமன் குழம்பிக் கொண்டிருந்தபோது, அவரது தம்பி கோபி சரியாக வீட்டுக்குள் நுழைந்தான். வந்தவன் எல்லா விவரத்தையும் ஒரே மூச்சில் சொன்னான்.
இதைக் கேட்ட சுந்தர்ராமனுக்குத் தன் தந்தையாருக்குப் பார்வை கிடைப்பதில் பெரியவா காட்டும் அக்கறையை நினைத்து சந்தோஷப் பட்டாலும், இது சாத்தியமா என்கிற கேள்வி திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. காரணம் – தந்தையுடன் பல கண் மருத்துவமனைகளுக்குப் போன அனுபவம் இந்த சுந்தர்ராமனுக்கு உண்டு. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த ‘நெகட்டிவ்’ பதிலை எப்படி எல்லாம் அவர்கள் விளக்கிச் சொன்னார்கள் என்பதில் இருந்து
மருத்துவமனை கொடுத்த ரிப்போர்ட் அனைத்துமே அத்துப்படி!
பெரியவா மேல் அபார நம்பிக்கை திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்துக்கு உண்டாயிற்றே! எனவே, ‘பெரியவா சொன்னால் அதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது’ என்று தீர்மானமாக நம்பிய சுந்தர்ராமன், “சரி.. நாளை விடிகாலைல நான் காஞ்சிபுரம் பொறப்பட்டுப் போறேன்” என்று தம்பியிடம் சொன்னார்.
அதன்படி மறுநாள் அதிகாலை சீக்கிரம் விழித்தெழுந்தார். குளித்து முடித்து, தன் தந்தையார் கண் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனை ரிப்போர்ட்டுகளையும் – ஒரு பேப்பர்கூட விடாமல் – ஒரு ஃபைலில் போட்டு எடுத்துக் கொண்டு, காஞ்சிபுரம் புறப்பட்டார் சுந்தர்ராமன்.
காலை சுமார் ஒன்பது மணி இருக்கும். அன்றைக்கு ஸ்ரீமடத்தில் ஓரளவு பக்தர்கள் கூட்டம் தென்பட்டது. ‘ஜய ஜய சங்கர’ கோஷத்துடன் பக்தி மணம் கமழ்ந்தது. மிகவும் காஷுவலான ஒரு பொஸிஷனில் பெரியவா அமர்ந்து, அருகில் இருந்த ஒரு பக்தருடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். சீனிவாச ஐயர், கிரிஜா ஆகியோரும் பெரியவாளுக்கு முன்பாக அமர்ந்திருந்தனர்.
அப்போது சுந்தர்ராமனைப் பார்த்து, “வா, திருவள்ளூர் ராமசந்திர ஐயரின் கொள்ளுப் பேரனா நீ?” என்று ஆச்சரியம் விலகாமல் கேட்டார் மஹா பெரியவா.
தலை அசைத்த சுந்தர்ராமன், உடனே பெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தரையில் இருந்து எழுந்தவர், “அப்பாவுக்குக் கண் ஆபரேஷன் பண்ணலாம்னு பெரியவா அபிப்ராயப்பட்டேளாம்.. இதெல்லாம் மெட்ராஸ்ல இருக்கிற டாக்டர்ஸ் அப்பாவை செக் பண்ணி, ‘இனிமே பார்வை வர்றதுக்கு வாய்ப்பே இல்லை’னு சொல்லிக் கொடுத்த ரெக்கார்ட்ஸ்” என்று சொல்லி விட்டு, அந்த ஃபைலை பெரியவாளின் பார்வைக்காக அவருக்கு முன்னே வைத்தார்.
அந்த ஃபைலைப் பெரியவா பார்க்க வேண்டும் என்பதற்காக அதன் முடிச்சைப் பிரித்து, எடுத்துப் படிப்பதற்கு வசதியாக வைத்தார் சுந்தர்ராமன்.
தன் வலக் கையால் சுந்தர்ராமனுக்கு ஜாடை காண்பித்தார் பெரியவா. அதாவது, ‘இந்த ஃபைல் – பேப்பர் கட்டு இதெல்லாம் வெச்சுண்டு ஒண்ணும் பண்ண வேண்டாம்’ என்பது அதன் பொருள். பிறகு, தன் இடக் கையால் அந்த ஃபைலை ஓரிரு இஞ்ச் தொலைவுக்குத் தூரத் தள்ளினார். அந்த ஃபைலின் மீது பெரியவா பார்வை பதியவே இல்லை.
பெரியவா சந்நிதானத்தில் கூடி இருந்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அத்தனை டாக்டர்கள் கொடுத்த ஒட்டு மொத்த மருத்துவ ரிப்போர்ட்டுகளைப் பெரியவா சீண்டக்கூட இல்லை. கூட்டத்தினரிடையே நிமிர்ந்து பார்த்தார். பார்வையை இங்கும் அங்கும் ஓட்டினார். பிறகு, அங்கு நின்றிருந்த ஒரு ஆசாமியை – தன் இடக்கை விரல் ஒன்றை நீட்டித் தன் அருகே வருமாறு சைகை செய்தார். அழைப்புக்கு உள்ளான நபர் மிகுந்த பவ்யமாக பெரியவா முன்னால் வந்து நின்றார்.
தன் முன்னால் வந்து நின்றவரை தீர்க்கமாகப் பார்த்தார் பெரியவா. பிறகு அவரிடம், “இவனுக்குக் கண் ஆபரேஷன் பண்ணணும். நீதான் பண்ணணும்” என்றார்.
வந்து நின்றவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன்னைப் பார்த்துதான் சொல்கிறாரா அல்லது தனக்குப் பின்னால் நிற்கும் வேறு எவரையாவது பார்த்துப் பெரியவா சொல்கிறாரா என்கிற சந்தேகம் அந்த அன்பருக்கு வந்தது. பின்னால் திரும்பியும் பார்க்கச் செய்தார்.
“உன்னைத்தான் சொல்றேன். நீ கண் டாக்டர்தானே? நீதான் இவனுக்கு ஆபரேஷன் பண்ணணும்.” – பெரியவா.
பக்தர்கள் கூட்டம் இந்த நிகழ்வை மிகவும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. பெரியவா சந்நிதியில் அவ்வப்போது இது போன்ற அற்புதங்கள் நிகழும் என்பதை அறியாதவர்களா அவர்கள்!
அப்போதுதான் சுந்தர்ராமன் – கண் டாக்டர் என்று பெரியவாளால் அடையாளம் காண்பிக்கப்பட்ட அந்த நபரை உற்றுப் பார்க்கிறார். பெரியவா உத்தரவிட்ட அந்த நபரின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு டாக்டர் என்பதை நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. அந்தக் கண் டாக்டரின் பெயர் – பாலசுப்ரமணியன்.
டாக்டர் பாலசுப்ரமணியனுக்கு ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. “ஏதோ ஹை லெவல்ல – பெரிய பெரிய ஆஸ்பத்திரி போயும் இந்த கண் பிராப்ளம் முடியல போலிருக்கு. அதான், பெரியவாகிட்ட வந்திருக்கு.”
ஒரு கட்டத்தில் சுந்தர்ராமனுக்கு பயமாகக்கூட இருந்தது. பெரியவா ஒரு மகத்தான சக்தி என்றாலும், இந்தக் கத்துக்குட்டி டாக்டர் எதையாவது செய்யப் போய், தந்தையின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று பயந்தார். இப்போதாவது பார்வை இல்லை என்றாலும், வீட்டுக்குள் ஓரளவு நடமாடிக் கொண்டிருக்கிறார். இவர் செய்யப் போகும் ஆபரேஷனுக்குப் பிறகு அதற்கும் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தார்.
ஆனால், இதை எப்படிப் பெரியவாளிடம் வெளிப்படுத்துவது? பரப்பிரம்மத்தின் ஆணைக்கு நாம் பதில் பேச முடியுமா?
என்றாலும், ஓரிரண்டு அடி முன்னால் வைத்து நடந்து டாக்டர் பாலசுப்ரமணியனை நெருங்கினார் சுந்தர்ராமன். மெள்ள அவரிடம், “ஃபைலைப் பார்த்தேளா? மெட்ராஸ்ல எத்தனை டாக்டர்ஸ் தெரியுமா? எல்லாருமே சொல்லி வைத்தாற்போல ‘உங்க அப்பாவோட கண்ல ஒளி வர்றதுக்கு வாய்ப்பே இல்லை’ன்னு எழுதிக் கொடுத்திருக்கா. காலம் முழுக்க அவர் இப்படியேதான் இருக்கணும்னு அந்த ரிப்போர்ட் சொல்றது. எங்க அப்பாவோட விதி” என்றார் சன்னமாக.
டாக்டர் பாலசுப்ரமணியனுக்குத் தயக்கம். பெரியவா உத்தரவிடுகிறார். ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டியவரின் பையனோ, சவால் விடுவது போல் பேசுகிறார்.
கண் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டிய சீனிவாச ஐயர், எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். பெரியவாளின் திருநாமத்தை, காயத்ரி மந்திரம் போல் மனதுக்குள்ளே உச்சரித்துக் கொண்டிருக்கிறார். பெரியவாளின் திருவிளையாடல் மகனுக்குப் புரியவில்லை என்றாலும், தந்தைக்குப் புரியாதா?
சீனிவாச ஐயரின் மனைவியான கிரிஜா, பெரியவா திருவருளால் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்குக் கொள்கிறார்.
சுந்தர்ராமன் ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறார்.
கையைப் பிசைந்து கொண்டு டாக்டர் நிற்கிறார். அவருடைய முகம் ஏகத்துக்கும் கலவரமாகி இருக்கிறது. தான் தொழிலுக்கு வந்து சில காலமே ஆகிறது. இந்த நிலையில் தன் ஒருவனால் எப்படி – எவருமே முடியாது என்று சொன்ன இந்த ஆபரேஷனை செய்ய முடியும் என்கிற தயக்கம். பயம்.
சுவாரஸ்யமான ஒரு சினிமா காட்சியை நேரில் பார்ப்பது போல் அங்கு கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன ஆகுமோ என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
சற்று நேரத்துக்கு எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த ருத்திராட்சத்தை ‘சரசர’வென்று உருட்டிக் கொண்டே இருந்தார் பெரியவா. பேரமைதி நிலவியது அங்கே.
அந்த சூழ்நிலையின் அமைதியைப் பெரியவாதான் ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு உடைத்தார்.
“நான் சொல்றேன், நீ பண்ணு”.
அவ்வளவுதான். டாக்டர் பாலசுப்ரமணியன் முகத்தில் திடீரென்று அப்படி ஒரு பிரகாசம் எப்படி வந்தது என்பதை அங்கு நின்றிருந்த எவரும் அறியார்! மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு டாக்டர் என்பது போன்ற பொலிவு, ஒரு கணத்தில் டாக்டரின் முகத்தில் வந்தது. தனக்குள் ஏதோ ஒரு சக்தி வந்து இறங்கியதைப் போல் உணர்ந்தார் டாக்டர்.
சுந்தர்ராமன் உட்பட அங்கே கூடிஇருந்த அனைவரும் இந்த வித்தியாசமான காட்சியைக் கண்டனர்.
டாக்டர் பாலசுப்ரமணியன், பெரியவாளின் அருகே வந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். பெரியவா பிரசாதம் கொடுத்தார்.
பிறகு, சுந்தர்ராமனைப் பார்த்து, “வாங்க, உங்க அப்பாவைக் கூட்டிக்கிட்டு… என் கிளினிக் போகலாம்” என்று கன கம்பீரமாகச் சொன்னவர், வேக வேகமாக வெளியே நடந்தார்.
அந்த நேரத்தில் டாக்டர் பாலசுப்ரமணியனின் மிடுக்கான நடையையும், வேகத்தையும் பார்த்தால், அவரை ஏற்கனவே அறிந்தவர்கள் பிரமித்துத் தான் போவார்கள். காரணம் – இவர் பழைய டாக்டர் பாலசுப்ரமணியன் அல்ல. பெரியவாளின் கடைக்கண் ஆசி பெற்ற பாலசுப்ரமணியன்.
டாக்டரைத் தொடர்ந்து வெளியே நடந்தது சீனிவாச ஐயரின் குடும்பம்.
இவர்கள் நடந்து செல்வதை ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார் மஹா பெரியவா.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! அடுத்த வெளியீட்டில் மீதிப் பகுதி................