Post by radha on Oct 1, 2013 1:59:06 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SOURCE:_ AMMAN DARSANAM.OCT.13
கே.சுவர்ணா
அருவமாய் உள்ள இறைவன் உயிர்களின் நலன் கருதி எடுத்துக் கொண்ட உருவமே சக்தியின் வடிவம். உலகம் அனைத்தையும் தன்னுள் கொண்டு எல்லையில்லா மகிமை உடையவளாய்த் திகழ்பவள் பராசக்தி.
இவள் சத்வ, ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களையும் கொண்ட சரஸ்வதி, மகாலட்சுமி, மகாகாளி ஆகியோரைச் சிருஷ்டிக்கிறாள். மூவரையும் முத்தொழிலில் ஈடுபடச் செய்து அவர்கள் மூலம் உலகைப் படைத்து, காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்திட ஸ்திரீ புருஷர்களைப் படைக்க ஆக்ஞையிடுகிறாள். குணச்சேர்க்கையின் பொருட்டு ரஜோ குண சரஸ்வதியும், சத்வகுண பிரம்மனும் இணைந்து படைத்தலையும், தமோகுண விஷ்ணுவும், சத்வகுண லட்சுமியும் இணைந்து காத்தலையும், ரஜோகுண ருத்திரனும் தமோகுண பார்வதியும் இணைந்து அழித்தலையும் செய்யத்தொடங்கினர் என்பதை தேவி சப்தகதி ப்ரதானி ரகஸ்யம் கூறுகிறது. “சர்வம் சக்திமயம். அனைத்து சக்திகளும் துர்க்கையே” என்பதை உணர்த்தும் பண்டிகையே நவராத்திரி.
மகிஷாசுரன் என்ற அசுர சக்தியைக் கண்டு மும்மூர்த்திகளும் திகைக்க பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் தங்கள் ரூபங்களை ஓருருவாக்கிய சக்தியே துர்க்கா தேவி.
சக்தியானவள் நவராத்திரியின் முதல் மூன்று நாள்களில் துர்க்கையாக இருந்து மகிஷாசுரனையும், அடுத்த மூன்று நாள்களில் மகாலட்சுமியாக இருந்து தூம்பரலோசனையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியாக இருந்து நிசும்பர்களையும் வதம் செய்து நவமியன்று தேவர்கள் தன்னை வழிபட விஜயதசமியன்று தேவர்களிடமிருந்து விடைபெற்றுப் ஸ்ரீபுவனேஸ்வரி வாசம் செய்யும் மணித்வீபத்தைச் சென்றடைந்தாள்.
நவராத்திரி விழாவின் முதல் நாளில் ஹஸ்த நட்சத்திரம் இருந்தால் அந்த நாள் தேவி வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. ஹஸ்த நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் போது இந்த விரதம் மேற்கொண்டால் உலக இன்பங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அம்பிகையானவள் மனோன்மணி, சர்வபூததமனி, பலப்பிரதமனி, பலவிக்ரனி, கலவிகரணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை என்ற நவசக்திகளாக இருந்து நம்மைக் காத்து வருகிறாள்.
மனோன்மணி என்பவள் பக்குவம் எய்திய உயிர்களை விடுவித்து சிவத்துடன் சேர்ப்பவளாக விளங்குகிறாள். நன்மை செய்பவருக்குத் துணையாக இருந்து ஊக்கம் தருகிறாள். தீய செயல்கள் செய்பவருக்குக் கஷ்டத்தைக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறாள்.
சர்வபூததமனி என்பவள் உலகிலுள்ள அனைத்து உயிர்களுடனும் ஒன்றிக் கலந்து அவர்களிடமுள்ள குறைபாடுகளையும், பாபங்களையும் நீக்கி அனைவரையும் திருந்தச் செய்து கை கொடுக்கும் அன்னையாகத் திகழ்கிறாள்.
பலப்பிரதமனி என்னும் தேவியானவள் சூரியனிடத்தில் பதிந்து நின்று பூமியில் உள்ள தீய, நச்சுக்கிருமிகளை நாசம் செய்து மக்களுக்குத் தேவையான பொருள்கள் பெருகி வளரச் செய்கிறாள். சூரியனின் முழுச் சக்தியும் தேவியின் உடைமைதான்.
பலவிகரணி என்பவள் சந்திரனிடமிருந்து அமுதத்துளிகளைப் பொழியச் செய்து தாவரங்களைச் செழிக்கச் செய்கிறாள். அதுபோலவே அனைவருக்கும் கல்வி, செல்வம், வீரம், பக்தி, அன்பு என்ற அமுதத்துளிகளையும் பொழிகிறாள்.
கலவிகரணி என்பவள் பூமியில் உள்ள மனிதர், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றை ஏற்று அவை தன்னில் கலந்து இணைய இடம் தந்து நிற்கிறாள். உலகுக்கு ஒளிதரும் சூரியன், சந்திரன் இரண்டையும் இயக்கும் சக்தியாக அவற்றை ஏற்று வழி நடத்துகிறாள்.
காளி என்னும் சக்தியானவள் காற்றில் கலந்து மூச்சுக்காற்றாய் உயிர்களுக்கு நலம் தந்து உயிர்களின் ஆதார சக்தியாய் விளங்குகிறாள். தன்னையே தியானம் செய்யும் நல்ல உள்ளம் படைத்த பக்தர்களிடம் உயிருக்கு உயிராய் இருந்து இயக்குகிறாள்.
ரவுத்திரி என்பவள் தீக்கு வெப்பத்தைத் தந்து ஜீவராசிகளுக்கு நன்மை புரிகிறாள். மனிதர்களின் தீய எண்ணங்களைப் பொசுக்கி நல்ல எண்ணங்களைச் செயல்படுத்தும் சக்தியாக விளங்குகிறாள்.
சேட்டை என்பவள் நீரில் நின்று நீருக்குச் சுவையையும், குளிர்ச்சியையும் தருகிறாள். உலக உயிர்களின் உடலில் கலந்து உயிரூட்டுவது நீரே. நீருக்கு சுவையே உயிர்நாடி. அந்நீரைப் பாரபட்சமின்றிப் பொழிபவள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிலும் கலந்து எல்லா உயிர்களுக்கும் உதவும் வகையில் அவற்றைப் பக்குவப்படுத்தி இயக்குகிறாள்.
இவ்வாறு தானே முன் நின்று மக்களை வழி நடத்துபவள் அம்பிகையே. நவராத்திரி வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது கொலு. கொலுவில் தெய்வ உருவங்களும் நடுவில் அம்பிகையின் கலசமும் வைக்கப்படுகின்றன.
பிரளய காலத்தில் உலகம் நீரால் சூழப்பட்டிருப்பதைக் குறிக்கும் விதமாகத் தரையில் தெப்பக்குளம் அமைத்து அதில் நீர் வாழ் ஜந்துகள்தான் தோன்றின என்பதைக் காட்டுவதற்காக மீன், ஆமை போன்ற பொம்மைகள் மிதக்க விடப்படுகின்றன.
இயற்கையைச் சித்திரிக்கும் செடி, கொடிகள் நிறைந்த பூங்காக்களும், மலைகளும் அமைக்கப்படுகின்றன. கல்விக்கு உதவும் புத்தகங்கள், எழுது கருவிகள், கலையைக் குறிப்பிடும் இசைக் கருவிகள், ஓவியங்கள், வீரத்தைக் குறிக்கும் ஆயுதங்கள், மக்கள் வாழ்வை வளப்படுத்தும் தொழிற் கருவிகள் பூஜையில் வைக்கப்படுகின்றன. நவராத்திரி நாள்களில் கன்னிப் பெண்களும், சுமங்கலிப் பெண்களும் பூஜிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு நவராத்திரிப் பண்டிகை பக்தி, பண்பாடு, கலாசாரம், கலைத்திறன், விருந்தோம்பல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முழுமையான பண்டிகையாகத் திகழ்கிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE:_ AMMAN DARSANAM.OCT.13
கே.சுவர்ணா
அருவமாய் உள்ள இறைவன் உயிர்களின் நலன் கருதி எடுத்துக் கொண்ட உருவமே சக்தியின் வடிவம். உலகம் அனைத்தையும் தன்னுள் கொண்டு எல்லையில்லா மகிமை உடையவளாய்த் திகழ்பவள் பராசக்தி.
இவள் சத்வ, ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களையும் கொண்ட சரஸ்வதி, மகாலட்சுமி, மகாகாளி ஆகியோரைச் சிருஷ்டிக்கிறாள். மூவரையும் முத்தொழிலில் ஈடுபடச் செய்து அவர்கள் மூலம் உலகைப் படைத்து, காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்திட ஸ்திரீ புருஷர்களைப் படைக்க ஆக்ஞையிடுகிறாள். குணச்சேர்க்கையின் பொருட்டு ரஜோ குண சரஸ்வதியும், சத்வகுண பிரம்மனும் இணைந்து படைத்தலையும், தமோகுண விஷ்ணுவும், சத்வகுண லட்சுமியும் இணைந்து காத்தலையும், ரஜோகுண ருத்திரனும் தமோகுண பார்வதியும் இணைந்து அழித்தலையும் செய்யத்தொடங்கினர் என்பதை தேவி சப்தகதி ப்ரதானி ரகஸ்யம் கூறுகிறது. “சர்வம் சக்திமயம். அனைத்து சக்திகளும் துர்க்கையே” என்பதை உணர்த்தும் பண்டிகையே நவராத்திரி.
மகிஷாசுரன் என்ற அசுர சக்தியைக் கண்டு மும்மூர்த்திகளும் திகைக்க பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் தங்கள் ரூபங்களை ஓருருவாக்கிய சக்தியே துர்க்கா தேவி.
சக்தியானவள் நவராத்திரியின் முதல் மூன்று நாள்களில் துர்க்கையாக இருந்து மகிஷாசுரனையும், அடுத்த மூன்று நாள்களில் மகாலட்சுமியாக இருந்து தூம்பரலோசனையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியாக இருந்து நிசும்பர்களையும் வதம் செய்து நவமியன்று தேவர்கள் தன்னை வழிபட விஜயதசமியன்று தேவர்களிடமிருந்து விடைபெற்றுப் ஸ்ரீபுவனேஸ்வரி வாசம் செய்யும் மணித்வீபத்தைச் சென்றடைந்தாள்.
நவராத்திரி விழாவின் முதல் நாளில் ஹஸ்த நட்சத்திரம் இருந்தால் அந்த நாள் தேவி வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. ஹஸ்த நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் போது இந்த விரதம் மேற்கொண்டால் உலக இன்பங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அம்பிகையானவள் மனோன்மணி, சர்வபூததமனி, பலப்பிரதமனி, பலவிக்ரனி, கலவிகரணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை என்ற நவசக்திகளாக இருந்து நம்மைக் காத்து வருகிறாள்.
மனோன்மணி என்பவள் பக்குவம் எய்திய உயிர்களை விடுவித்து சிவத்துடன் சேர்ப்பவளாக விளங்குகிறாள். நன்மை செய்பவருக்குத் துணையாக இருந்து ஊக்கம் தருகிறாள். தீய செயல்கள் செய்பவருக்குக் கஷ்டத்தைக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறாள்.
சர்வபூததமனி என்பவள் உலகிலுள்ள அனைத்து உயிர்களுடனும் ஒன்றிக் கலந்து அவர்களிடமுள்ள குறைபாடுகளையும், பாபங்களையும் நீக்கி அனைவரையும் திருந்தச் செய்து கை கொடுக்கும் அன்னையாகத் திகழ்கிறாள்.
பலப்பிரதமனி என்னும் தேவியானவள் சூரியனிடத்தில் பதிந்து நின்று பூமியில் உள்ள தீய, நச்சுக்கிருமிகளை நாசம் செய்து மக்களுக்குத் தேவையான பொருள்கள் பெருகி வளரச் செய்கிறாள். சூரியனின் முழுச் சக்தியும் தேவியின் உடைமைதான்.
பலவிகரணி என்பவள் சந்திரனிடமிருந்து அமுதத்துளிகளைப் பொழியச் செய்து தாவரங்களைச் செழிக்கச் செய்கிறாள். அதுபோலவே அனைவருக்கும் கல்வி, செல்வம், வீரம், பக்தி, அன்பு என்ற அமுதத்துளிகளையும் பொழிகிறாள்.
கலவிகரணி என்பவள் பூமியில் உள்ள மனிதர், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றை ஏற்று அவை தன்னில் கலந்து இணைய இடம் தந்து நிற்கிறாள். உலகுக்கு ஒளிதரும் சூரியன், சந்திரன் இரண்டையும் இயக்கும் சக்தியாக அவற்றை ஏற்று வழி நடத்துகிறாள்.
காளி என்னும் சக்தியானவள் காற்றில் கலந்து மூச்சுக்காற்றாய் உயிர்களுக்கு நலம் தந்து உயிர்களின் ஆதார சக்தியாய் விளங்குகிறாள். தன்னையே தியானம் செய்யும் நல்ல உள்ளம் படைத்த பக்தர்களிடம் உயிருக்கு உயிராய் இருந்து இயக்குகிறாள்.
ரவுத்திரி என்பவள் தீக்கு வெப்பத்தைத் தந்து ஜீவராசிகளுக்கு நன்மை புரிகிறாள். மனிதர்களின் தீய எண்ணங்களைப் பொசுக்கி நல்ல எண்ணங்களைச் செயல்படுத்தும் சக்தியாக விளங்குகிறாள்.
சேட்டை என்பவள் நீரில் நின்று நீருக்குச் சுவையையும், குளிர்ச்சியையும் தருகிறாள். உலக உயிர்களின் உடலில் கலந்து உயிரூட்டுவது நீரே. நீருக்கு சுவையே உயிர்நாடி. அந்நீரைப் பாரபட்சமின்றிப் பொழிபவள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிலும் கலந்து எல்லா உயிர்களுக்கும் உதவும் வகையில் அவற்றைப் பக்குவப்படுத்தி இயக்குகிறாள்.
இவ்வாறு தானே முன் நின்று மக்களை வழி நடத்துபவள் அம்பிகையே. நவராத்திரி வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது கொலு. கொலுவில் தெய்வ உருவங்களும் நடுவில் அம்பிகையின் கலசமும் வைக்கப்படுகின்றன.
பிரளய காலத்தில் உலகம் நீரால் சூழப்பட்டிருப்பதைக் குறிக்கும் விதமாகத் தரையில் தெப்பக்குளம் அமைத்து அதில் நீர் வாழ் ஜந்துகள்தான் தோன்றின என்பதைக் காட்டுவதற்காக மீன், ஆமை போன்ற பொம்மைகள் மிதக்க விடப்படுகின்றன.
இயற்கையைச் சித்திரிக்கும் செடி, கொடிகள் நிறைந்த பூங்காக்களும், மலைகளும் அமைக்கப்படுகின்றன. கல்விக்கு உதவும் புத்தகங்கள், எழுது கருவிகள், கலையைக் குறிப்பிடும் இசைக் கருவிகள், ஓவியங்கள், வீரத்தைக் குறிக்கும் ஆயுதங்கள், மக்கள் வாழ்வை வளப்படுத்தும் தொழிற் கருவிகள் பூஜையில் வைக்கப்படுகின்றன. நவராத்திரி நாள்களில் கன்னிப் பெண்களும், சுமங்கலிப் பெண்களும் பூஜிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு நவராத்திரிப் பண்டிகை பக்தி, பண்பாடு, கலாசாரம், கலைத்திறன், விருந்தோம்பல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முழுமையான பண்டிகையாகத் திகழ்கிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM