Post by radha on Sept 30, 2013 7:44:14 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
3-பெரியவா பாத்துப்பா…
Krishnamurthy Krishnaiyer, Maha Periyavaa, Spiritual September 28, 2013
Periyavaa2
அதி மஹா ருத்ரம் நடத்தி (1988) மூணு மாசத்துல கடன் எல்லாம் அடஞ்சுடுத்துன்னு மாமா சொன்னார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் பண்ணின பிசினஸ்ல நிச்சயமா அம்பத்தி ரெண்டாயிரம் ரூவா அத்தன சீக்கரத்துல லாபமா வந்திருக்காது. அப்பிடின்னா, பெரியவா தான் ராமன் தன்னோட தாசனுக்காக கடனை தீர்த்த மாதிரி ஏதோ பண்ணிருக்கான்னு புரிஞ்சுண்டேன். அதுக்கப்றம் எனக்கெதுக்கு பிசினஸ்? மிச்சம் இருந்ததையெல்லாம் என் ஃப்ரெண்ட் கிட்ட கொடுத்தேன். ஒரு லட்சம் கெடச்சுது. நான், என் மனசுக்குள்ள பெரியவாட்ட சொன்னேன் – பெரியவா, நீங்க ஏழை சந்நியாசி கிழவன்னு சொன்னேளே, இப்போ நீங்க லட்சாதிபதின்னு. அந்த பணத்தை என் பிள்ளையும், மாமாவுமா பல விதத்துல இன்வெஸ்ட் பண்ணி பெருக்கினா. அப்புறம் நானும் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். எல்லாமா போட்டுத்தான் இந்த இடத்தை வாங்கினேன். மாமா கூட கேட்டா ‘இந்த வயசுல யானை வாங்கலாமா’ன்னு. நான் சொன்னேன் ‘எல்லாம் பெரியவா பாத்துப்பா’ன்னு. நான் இங்க வந்து பாத்தப்போ அவ்ளோ லக்ஷ்மிகரமா இருந்தது. தென்னை, வாழை, பசு மாடு, கன்னுக்குட்டி, சாணம், பின்னாடியே கொள்ளிடம்….எனக்கு ரொம்ப பிடிச்சுடுத்து. இங்க லலிதைக்கு கோவில் வரப்போறதுன்னு நெனைக்கும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா, முதல்ல எனக்கு ஆஸ்ரமம், பாடசாலை மட்டும் தான் மனசுல இருந்தது. அதுக்கு ஒரு ஸ்கெட்ச் போடச் சொல்லி பெங்களூருல அபர்ணாங்கற பொண்ணு கிட்ட சொன்னேன். அவ ஆர்க்கிடெக்சர் படிச்சுருந்தா. ஒரு காலேண்டர்ல ஆஸ்ரமம், சுத்திவர காடு, மான், முயல்கள் எல்லாம் படமா போட்டு இருந்தது. அதையும் அவகிட்ட கொடுத்தேன். அவ என்ன போட்டு கொண்டு வந்து கொடுத்தா தெரியுமா? அம்பாளோட ஸ்ரீ சக்ரம் ! இப்போ சொல்லுங்கோ, இதெல்லாம் யாரு பண்றா? நானா? எல்லாமே பெரியவாதான். அவர்தான் எல்லாத்தையும் பாத்துப் பாத்துப் பண்றார்.
நீங்களே சொல்லுங்கோ, யாராவது இந்த மாமிக்காக ஏதாவது பண்ணுவாளா? எல்லாரும் யாருக்காக பண்றா? பெரியவாளுக்காக. அவர்தான் சூட்ஷுமமா இருந்து இத்தனை கார்யங்களையும் கவனிச்சு நடத்திண்டு இருக்கார். இது ஒரு பெரிய அதிசயம் இல்லையா? எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையெல்லாம் வரது. ஆனா, ஒவ்வொரு தடவையும் பெரியவா தன்னோட பக்தாள்ல யாரையாவது அனுப்ச்சு வேண்டியதை செய்ய வச்சுடறா. அவா எல்லாம் எங்கிட்ட என்ன சொல்றா தெரியுமா? மாமி, நீங்க கவலை படாதீங்கோ. நாங்க பாத்துக்கறோம்னு.
Rama_Hanuman-001
ராமாயணத்துல கிஷ்கிந்தா காண்டத்துலதான் ஹனுமார் ராமர்ட்ட அடைக்கலமாறார். அதுமாதிரி நானும் கிட்டத்தட்ட என்னோட முப்பதாவது ப்ராயத்துல தான் பெரியவாட்ட சரணடைஞ்சேன். ஆனா, அவரைப்போல வல்லமை எல்லாம் எனக்கு கெடயாது. இப்போ, நீங்களெல்லாம் அந்த வாயு புத்ரனோட சேர்ந்தவா எல்லாரும் ராம சேனைல சேர்ந்துண்ட மாதிரி பெரியவாட்ட சரணாகதி ஆயுட்டேள். எனக்கு இப்போ உங்களைப் போல கோடிக் கணக்கான குழந்தைகள். பெரியவா குடும்பம் பெரிசாய்டுத்து. அவாளுக்கு உங்களை எல்லாம் காப்பாத்தற பொறுப்பு வந்துடுத்து (இதை சொல்லும் போது சிரிக்கிறார்). நீங்களெல்லாம் தான் எனக்கு கெடச்ச பெரிய நிதி. நீங்க எல்லாரும் பரம க்ஷேமமா இருப்பேள்.
இன்னும், எத்தனையோ வருஷமா எனக்கு சப்போர்ட் பண்ணிண்டு இருக்கறவாள பத்தி சொல்லணும். இப்போ, பாராயணத்துக்கு நாழி ஆய்டுத்து. அப்புறம் பேசறேன்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
3-பெரியவா பாத்துப்பா…
Krishnamurthy Krishnaiyer, Maha Periyavaa, Spiritual September 28, 2013
Periyavaa2
அதி மஹா ருத்ரம் நடத்தி (1988) மூணு மாசத்துல கடன் எல்லாம் அடஞ்சுடுத்துன்னு மாமா சொன்னார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் பண்ணின பிசினஸ்ல நிச்சயமா அம்பத்தி ரெண்டாயிரம் ரூவா அத்தன சீக்கரத்துல லாபமா வந்திருக்காது. அப்பிடின்னா, பெரியவா தான் ராமன் தன்னோட தாசனுக்காக கடனை தீர்த்த மாதிரி ஏதோ பண்ணிருக்கான்னு புரிஞ்சுண்டேன். அதுக்கப்றம் எனக்கெதுக்கு பிசினஸ்? மிச்சம் இருந்ததையெல்லாம் என் ஃப்ரெண்ட் கிட்ட கொடுத்தேன். ஒரு லட்சம் கெடச்சுது. நான், என் மனசுக்குள்ள பெரியவாட்ட சொன்னேன் – பெரியவா, நீங்க ஏழை சந்நியாசி கிழவன்னு சொன்னேளே, இப்போ நீங்க லட்சாதிபதின்னு. அந்த பணத்தை என் பிள்ளையும், மாமாவுமா பல விதத்துல இன்வெஸ்ட் பண்ணி பெருக்கினா. அப்புறம் நானும் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். எல்லாமா போட்டுத்தான் இந்த இடத்தை வாங்கினேன். மாமா கூட கேட்டா ‘இந்த வயசுல யானை வாங்கலாமா’ன்னு. நான் சொன்னேன் ‘எல்லாம் பெரியவா பாத்துப்பா’ன்னு. நான் இங்க வந்து பாத்தப்போ அவ்ளோ லக்ஷ்மிகரமா இருந்தது. தென்னை, வாழை, பசு மாடு, கன்னுக்குட்டி, சாணம், பின்னாடியே கொள்ளிடம்….எனக்கு ரொம்ப பிடிச்சுடுத்து. இங்க லலிதைக்கு கோவில் வரப்போறதுன்னு நெனைக்கும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா, முதல்ல எனக்கு ஆஸ்ரமம், பாடசாலை மட்டும் தான் மனசுல இருந்தது. அதுக்கு ஒரு ஸ்கெட்ச் போடச் சொல்லி பெங்களூருல அபர்ணாங்கற பொண்ணு கிட்ட சொன்னேன். அவ ஆர்க்கிடெக்சர் படிச்சுருந்தா. ஒரு காலேண்டர்ல ஆஸ்ரமம், சுத்திவர காடு, மான், முயல்கள் எல்லாம் படமா போட்டு இருந்தது. அதையும் அவகிட்ட கொடுத்தேன். அவ என்ன போட்டு கொண்டு வந்து கொடுத்தா தெரியுமா? அம்பாளோட ஸ்ரீ சக்ரம் ! இப்போ சொல்லுங்கோ, இதெல்லாம் யாரு பண்றா? நானா? எல்லாமே பெரியவாதான். அவர்தான் எல்லாத்தையும் பாத்துப் பாத்துப் பண்றார்.
நீங்களே சொல்லுங்கோ, யாராவது இந்த மாமிக்காக ஏதாவது பண்ணுவாளா? எல்லாரும் யாருக்காக பண்றா? பெரியவாளுக்காக. அவர்தான் சூட்ஷுமமா இருந்து இத்தனை கார்யங்களையும் கவனிச்சு நடத்திண்டு இருக்கார். இது ஒரு பெரிய அதிசயம் இல்லையா? எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையெல்லாம் வரது. ஆனா, ஒவ்வொரு தடவையும் பெரியவா தன்னோட பக்தாள்ல யாரையாவது அனுப்ச்சு வேண்டியதை செய்ய வச்சுடறா. அவா எல்லாம் எங்கிட்ட என்ன சொல்றா தெரியுமா? மாமி, நீங்க கவலை படாதீங்கோ. நாங்க பாத்துக்கறோம்னு.
Rama_Hanuman-001
ராமாயணத்துல கிஷ்கிந்தா காண்டத்துலதான் ஹனுமார் ராமர்ட்ட அடைக்கலமாறார். அதுமாதிரி நானும் கிட்டத்தட்ட என்னோட முப்பதாவது ப்ராயத்துல தான் பெரியவாட்ட சரணடைஞ்சேன். ஆனா, அவரைப்போல வல்லமை எல்லாம் எனக்கு கெடயாது. இப்போ, நீங்களெல்லாம் அந்த வாயு புத்ரனோட சேர்ந்தவா எல்லாரும் ராம சேனைல சேர்ந்துண்ட மாதிரி பெரியவாட்ட சரணாகதி ஆயுட்டேள். எனக்கு இப்போ உங்களைப் போல கோடிக் கணக்கான குழந்தைகள். பெரியவா குடும்பம் பெரிசாய்டுத்து. அவாளுக்கு உங்களை எல்லாம் காப்பாத்தற பொறுப்பு வந்துடுத்து (இதை சொல்லும் போது சிரிக்கிறார்). நீங்களெல்லாம் தான் எனக்கு கெடச்ச பெரிய நிதி. நீங்க எல்லாரும் பரம க்ஷேமமா இருப்பேள்.
இன்னும், எத்தனையோ வருஷமா எனக்கு சப்போர்ட் பண்ணிண்டு இருக்கறவாள பத்தி சொல்லணும். இப்போ, பாராயணத்துக்கு நாழி ஆய்டுத்து. அப்புறம் பேசறேன்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.