Post by radha on Sept 30, 2013 7:40:45 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
2-பெரியவா பாத்துப்பா…
Krishnamurthy Krishnaiyer, Maha Periyavaa, Spiritual September 27, 2013
Periyavaa1
‘மாமி, இன்னைக்கு மறுபடி உங்களைப்பத்தி வரிசை க்ரமமா, இன்னும் விரிவா, விட்டுப்போன முக்கியமான விஷயங்களை சேர்த்து, நீங்க சொன்ன திருத்தங்களை செஞ்சு எழுத ஆரம்பிச்சுருக்கேன், படிச்சு பாருங்கோ’. ‘என்ன டைட்டில் வச்சிருக்கேள்?’. சொன்னேன். வேண்டாம். ‘பெரியவா பாத்துப்பா‘ன்னு வைங்கோ. ‘ஏன் மாமி?’. இந்த ஆஸ்ரமம் தொடங்கினதுலேர்ந்து எல்லாரும் கேக்கற கேள்வி இதுதான் – எப்பிடி மாமி இந்த வயசுல உங்களால இத்தனையும் செய்ய முடியும்? நான் சொல்ற பதில் என்ன தெரியுமோ? ‘நான் பெரியவாள நம்பறேன். அவா பாத்துப்பா’. ‘அது சரி மாமி, எனக்கும் பெரியவாட்ட பக்தி இருக்கு, ஆனா, பிராக்டிகலா பாக்கறச்சே நம்ப முடியல, பயமா இருக்கு’. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இந்த ஆஸ்ரமம் ஆரம்பிக்கும் போது கூட எனக்கு வெறும் பாடசாலை மட்டும் தான் மனசுல இருந்தது. ஆனா, பெரியவா வேற பெரிசா முடிவு பண்ணிருக்கா. அவாதான் செய்யறா. எனக்கு என்ன தெரியும்? நான் வெறும் பொம்மை. அவர் ஆட்டுவிக்கறார், நான் ஆடறேன், அவ்ளோதான்.
-
ஒரு தடவை எங்கிட்ட பெரியவா சொன்னார் ‘நான் ஏழை சந்நியாசி மா. நீ பின்னாடி பெரிய கார்யம் எல்லாம் செய்யப்போறே’ன்னு. நான் நெனச்சுண்டேன் ‘பெரியவா எப்பிடி எங்கிட்ட நாடகம் ஆடறேள். என்னமா உங்களை மறைச்சுக்கறேள்’ன்னு. ஆனா, இப்போ புரியறது, பெரியவா எதை மனசுல வச்சுண்டு அப்பிடியெல்லாம் பேசினாள்னு. வேத பாடசாலை, கோசாலை, கோவில் வேலை, ஸ்தபதி வேலைன்னு இத்தனையும் நடக்கறதே, இதையெல்லாம் யார் பாத்துக்கறா? அவாதான். என்னால ஒரு சொம்பைக்கூட தூக்க முடியல. இந்த இடத்துலேர்ந்து கெளம்பினா என்னோட சக்தியெல்லாம் போய்டறது. அப்பிடிப்பட்ட என்னை ஒரு கருவியா வச்சுண்டு அவர் எல்லாத்தையும் நடத்திக்கறார். அதனால, ‘பெரியவா பாத்துப்பா‘ன்னு தலைப்பு வைங்கோ. அது, அவரோட பக்தாள் எல்லாருக்கும் ஒரு நம்பிக்கையையும் கொடுக்கும்.
பெரியவா என்னை எப்படியெல்லாம் காப்பாத்தி இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கார் தெரியுமா? 1965 – 70-க்குள்ள நான் பம்பாய் போயிருந்தேன். ஸாண்டாக்ரூஸ்ல தான் என்னோட மச்சினர் வீடு. ஊருக்கு கெளம்பறதுக்கு முன்னாடி கொஞ்சம் சாமான்கள் வாங்கலாம்னு என்னோட ஓர்ப்படியும் நானும் போனோம். ரயில்வே லைன் கிராஸ் பண்ணும் போது பின்னாடி இருக்கற ஜனம் எல்லாம் எதோ ஹிந்தில கத்தறா. திரும்பி பாக்கறேன். கேட் அடைக்கற கட்டை கீழ இறங்கிடுத்து. ஒரு ஷணம் தான். என்னோட தலைல விழுந்திருக்கும்.அப்புறம், சாமான் எல்லாம் வாங்கிண்டு திரும்ப வரச்சே ரயில் ரொம்ப வேகமா பக்கத்துல வந்துடுத்து. என்னோட ஓர்ப்படி என்னை இழுத்து அந்த பக்கமா தள்ளினா. சிராய்ப்பு காயத்தோட தப்பிச்சேன். அன்னிக்கு தான் எனக்கு ஒரு சொப்னமும் வந்துது. என்னை ஏன் இப்பிடி இந்த சிறைல தள்ளி கஷ்டப்படுத்தறேள்னு கேக்கறேன். ராமனும், லக்ஷ்மணனுமா வந்து, பூட்டை தொறந்துட்டு போறா. ராமன் தான் பெரியவா. பெரியவா தான் ராமன்.
SriRama
இன்னொரு சம்பவமும் சொல்றேன் கேளுங்கோ. இது, திருஆனைக்கா வந்தப்றம் நடந்தது. ஒரு நாள் கஸ்தூரி மஞ்சள் சாக்குப் பை மேல காயப் போட்டிருந்தேன். வேலைக்காரி மழை வந்துடுத்துன்னு சொன்னா. ஒடனே ஓடிப்போய் அப்பிடியே சாக்குப்பையை சுருட்டிட்டேன். உஸ்ஸ்ஸ் னு சப்தம் வந்தது. அது என்னன்னு புரியறதுக்குள்ள ஒரு இடுக்கு வழியா அஞ்சடி நீள பாம்பு கீழ விழுந்து சர சர ன்னு ஊர்ந்து போய்டுத்து. நான் பிரமிச்சுப்போய் பாத்துண்டே இருந்தேன்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர. ஜய ஜய சங்கர.
Share this:
2-பெரியவா பாத்துப்பா…
Krishnamurthy Krishnaiyer, Maha Periyavaa, Spiritual September 27, 2013
Periyavaa1
‘மாமி, இன்னைக்கு மறுபடி உங்களைப்பத்தி வரிசை க்ரமமா, இன்னும் விரிவா, விட்டுப்போன முக்கியமான விஷயங்களை சேர்த்து, நீங்க சொன்ன திருத்தங்களை செஞ்சு எழுத ஆரம்பிச்சுருக்கேன், படிச்சு பாருங்கோ’. ‘என்ன டைட்டில் வச்சிருக்கேள்?’. சொன்னேன். வேண்டாம். ‘பெரியவா பாத்துப்பா‘ன்னு வைங்கோ. ‘ஏன் மாமி?’. இந்த ஆஸ்ரமம் தொடங்கினதுலேர்ந்து எல்லாரும் கேக்கற கேள்வி இதுதான் – எப்பிடி மாமி இந்த வயசுல உங்களால இத்தனையும் செய்ய முடியும்? நான் சொல்ற பதில் என்ன தெரியுமோ? ‘நான் பெரியவாள நம்பறேன். அவா பாத்துப்பா’. ‘அது சரி மாமி, எனக்கும் பெரியவாட்ட பக்தி இருக்கு, ஆனா, பிராக்டிகலா பாக்கறச்சே நம்ப முடியல, பயமா இருக்கு’. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இந்த ஆஸ்ரமம் ஆரம்பிக்கும் போது கூட எனக்கு வெறும் பாடசாலை மட்டும் தான் மனசுல இருந்தது. ஆனா, பெரியவா வேற பெரிசா முடிவு பண்ணிருக்கா. அவாதான் செய்யறா. எனக்கு என்ன தெரியும்? நான் வெறும் பொம்மை. அவர் ஆட்டுவிக்கறார், நான் ஆடறேன், அவ்ளோதான்.
-
ஒரு தடவை எங்கிட்ட பெரியவா சொன்னார் ‘நான் ஏழை சந்நியாசி மா. நீ பின்னாடி பெரிய கார்யம் எல்லாம் செய்யப்போறே’ன்னு. நான் நெனச்சுண்டேன் ‘பெரியவா எப்பிடி எங்கிட்ட நாடகம் ஆடறேள். என்னமா உங்களை மறைச்சுக்கறேள்’ன்னு. ஆனா, இப்போ புரியறது, பெரியவா எதை மனசுல வச்சுண்டு அப்பிடியெல்லாம் பேசினாள்னு. வேத பாடசாலை, கோசாலை, கோவில் வேலை, ஸ்தபதி வேலைன்னு இத்தனையும் நடக்கறதே, இதையெல்லாம் யார் பாத்துக்கறா? அவாதான். என்னால ஒரு சொம்பைக்கூட தூக்க முடியல. இந்த இடத்துலேர்ந்து கெளம்பினா என்னோட சக்தியெல்லாம் போய்டறது. அப்பிடிப்பட்ட என்னை ஒரு கருவியா வச்சுண்டு அவர் எல்லாத்தையும் நடத்திக்கறார். அதனால, ‘பெரியவா பாத்துப்பா‘ன்னு தலைப்பு வைங்கோ. அது, அவரோட பக்தாள் எல்லாருக்கும் ஒரு நம்பிக்கையையும் கொடுக்கும்.
பெரியவா என்னை எப்படியெல்லாம் காப்பாத்தி இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கார் தெரியுமா? 1965 – 70-க்குள்ள நான் பம்பாய் போயிருந்தேன். ஸாண்டாக்ரூஸ்ல தான் என்னோட மச்சினர் வீடு. ஊருக்கு கெளம்பறதுக்கு முன்னாடி கொஞ்சம் சாமான்கள் வாங்கலாம்னு என்னோட ஓர்ப்படியும் நானும் போனோம். ரயில்வே லைன் கிராஸ் பண்ணும் போது பின்னாடி இருக்கற ஜனம் எல்லாம் எதோ ஹிந்தில கத்தறா. திரும்பி பாக்கறேன். கேட் அடைக்கற கட்டை கீழ இறங்கிடுத்து. ஒரு ஷணம் தான். என்னோட தலைல விழுந்திருக்கும்.அப்புறம், சாமான் எல்லாம் வாங்கிண்டு திரும்ப வரச்சே ரயில் ரொம்ப வேகமா பக்கத்துல வந்துடுத்து. என்னோட ஓர்ப்படி என்னை இழுத்து அந்த பக்கமா தள்ளினா. சிராய்ப்பு காயத்தோட தப்பிச்சேன். அன்னிக்கு தான் எனக்கு ஒரு சொப்னமும் வந்துது. என்னை ஏன் இப்பிடி இந்த சிறைல தள்ளி கஷ்டப்படுத்தறேள்னு கேக்கறேன். ராமனும், லக்ஷ்மணனுமா வந்து, பூட்டை தொறந்துட்டு போறா. ராமன் தான் பெரியவா. பெரியவா தான் ராமன்.
SriRama
இன்னொரு சம்பவமும் சொல்றேன் கேளுங்கோ. இது, திருஆனைக்கா வந்தப்றம் நடந்தது. ஒரு நாள் கஸ்தூரி மஞ்சள் சாக்குப் பை மேல காயப் போட்டிருந்தேன். வேலைக்காரி மழை வந்துடுத்துன்னு சொன்னா. ஒடனே ஓடிப்போய் அப்பிடியே சாக்குப்பையை சுருட்டிட்டேன். உஸ்ஸ்ஸ் னு சப்தம் வந்தது. அது என்னன்னு புரியறதுக்குள்ள ஒரு இடுக்கு வழியா அஞ்சடி நீள பாம்பு கீழ விழுந்து சர சர ன்னு ஊர்ந்து போய்டுத்து. நான் பிரமிச்சுப்போய் பாத்துண்டே இருந்தேன்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர. ஜய ஜய சங்கர.
Share this: