Post by radha on Sept 30, 2013 7:36:43 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
1-பெரியவா பாத்துப்பா…
Krishnamurthy Krishnaiyer, Maha Periyavaa, Spiritual September 26, 2013
திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல். மஹா பெரியவாளின் பரம பக்தை. அவரே எல்லாம் என்று, நம்மைப் போல் அல்லாமல், மிக வித்யாசமாக, வாழ்ந்து கொண்டிருப்பவர். அப்படியென்ன வித்யாசம்? நொச்சியம் (மாதவ பெருமாள் கோவில்) கொள்ளிடக் கரையில் ஒரு சின்ன இடத்தில், வேத பாடசாலை, கோ சாலை நடத்திக் கொண்டு, அதனினும் பெரிய ஆசையாக அம்பாள், கணபதி, சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, வேத வியாசர், ஆதி சங்கரர், நம் பெரியவாள் உள்ளடக்கிய கோவிலை கட்டி வருகிறார். இதற்கு அடுத்த கட்டமாக நாம் அங்கு போகும் போது தங்குவதற்கு 20 வீடுகளும் கூட. அதுவும், தனக்குப் பின்னால் ஆசிரமம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக. இவையனைத்தும் முடிந்த பின், அநாதை பிரேத சம்ஸ்காரம், ஞான வாபி, ஸ்ரார்த்த கட்டம் இவற்றை ஏற்படுத்தும் உத்தேசமும் உண்டு. அதற்கு வசதியாக ஆஸ்ரமத்தின் பின் புறத்தில் கொள்ளிடத்தின் வடகரை. இதையெல்லாம் செய்து கொண்டு வரும் இவர் வயது என்ன தெரியுமா? எண்பது ! சரி, இவருக்கு என்ன அப்படி ஒரு ஈர்ப்பு ஸ்ரீ பெரியவாளிடத்தில், அவருக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டுமென்று? இந்த கேள்விக்கு விடை காண ஐம்பத்திரண்டு ஆண்டுகள் பின் நோக்கி செல்வோம்.
1961. ஸ்ரீ பெரியவாள் பூந்தமல்லி ரோட்டில் கேம்ப். எந்த இடம் என்று மாமிக்கு ஞாபகம் இல்லை. ‘அப்போ எனக்கு உலக அனுபவமே கெடயாது. ஒண்ணும் தெரியாது’ என்று ஆரம்பிக்கிறார். ’ஒரு நாள் மத்தியான நேரம். எல்லாரும் பெரியவாளை பாத்து ஆசிர்வாதம் வாங்கறாளேன்னு நானும் போனேன். பெரியவா ஒரு பந்தல் கீழே உக்காந்துண்டு இருந்தா. பந்தல் ஒரே ஓட்டை. சூர்ய, சந்திராள் எல்லாம் அது வழியா அவர பாத்துட்டு போவா போல இருக்கு. சில குழந்தைகள் அவர சுத்தி விளையாடிண்டு இருந்தது. நான் ஒரு கம்பத்தை பிடிச்சுண்டு அவர பாத்துண்டே, மானசீகமா என் மனசுல இருந்ததை அவர்ட்ட சொல்லிண்டு, பிரார்த்தனை செஞ்சுண்டு இருந்தேன். அப்போ ஒருத்தர் குனிஞ்சு, தன்னோட வாயை கையால பொத்திண்டு, பெரியவா காதுல என்னவோ சொன்னா. பெரியவா சட்டுன்னு எழுந்துண்டா. விடு விடுன்னு நடந்தா. என்னை தாண்டி போகும் போது ‘நீ அமோகமா இருப்பே‘ன்னு சொல்லிண்டே வேகமா போய்ட்டா. அப்போ எனக்கு எதுவும் புரியல. அப்பிடியே நின்னுண்டு இருந்தேன். ஆனா, இப்போ நெனச்சு பாக்கறப்போ, பெரியவா என்னை இதுக்குத்தான் தயார் பண்ணிண்டு இருந்திருக்கான்னு தெரியறது. அப்புறம் கொஞ்ச வருஷத்துக்கு பெரியவா தன்னை எங்கிட்டேயிருந்து மறச்சுண்டுட்டா. குடும்ப வாழ்க்கைல என்னை ஈடுபடுத்தி, மாயையால அவரோட பிரக்ஞை இல்லாம பண்ணிட்டா. அதுக்கப்றம் பெரியவா என்னை எப்படி ஆட்கொண்டா அப்படிங்கறத சொல்றேன் கேளுங்கோ’.
பெரியவா தன்னை கொடுத்து, மாமியை தடுத்தாட்கொண்ட கதை வளரும்…
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
1-பெரியவா பாத்துப்பா…
Krishnamurthy Krishnaiyer, Maha Periyavaa, Spiritual September 26, 2013
திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல். மஹா பெரியவாளின் பரம பக்தை. அவரே எல்லாம் என்று, நம்மைப் போல் அல்லாமல், மிக வித்யாசமாக, வாழ்ந்து கொண்டிருப்பவர். அப்படியென்ன வித்யாசம்? நொச்சியம் (மாதவ பெருமாள் கோவில்) கொள்ளிடக் கரையில் ஒரு சின்ன இடத்தில், வேத பாடசாலை, கோ சாலை நடத்திக் கொண்டு, அதனினும் பெரிய ஆசையாக அம்பாள், கணபதி, சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, வேத வியாசர், ஆதி சங்கரர், நம் பெரியவாள் உள்ளடக்கிய கோவிலை கட்டி வருகிறார். இதற்கு அடுத்த கட்டமாக நாம் அங்கு போகும் போது தங்குவதற்கு 20 வீடுகளும் கூட. அதுவும், தனக்குப் பின்னால் ஆசிரமம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக. இவையனைத்தும் முடிந்த பின், அநாதை பிரேத சம்ஸ்காரம், ஞான வாபி, ஸ்ரார்த்த கட்டம் இவற்றை ஏற்படுத்தும் உத்தேசமும் உண்டு. அதற்கு வசதியாக ஆஸ்ரமத்தின் பின் புறத்தில் கொள்ளிடத்தின் வடகரை. இதையெல்லாம் செய்து கொண்டு வரும் இவர் வயது என்ன தெரியுமா? எண்பது ! சரி, இவருக்கு என்ன அப்படி ஒரு ஈர்ப்பு ஸ்ரீ பெரியவாளிடத்தில், அவருக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டுமென்று? இந்த கேள்விக்கு விடை காண ஐம்பத்திரண்டு ஆண்டுகள் பின் நோக்கி செல்வோம்.
1961. ஸ்ரீ பெரியவாள் பூந்தமல்லி ரோட்டில் கேம்ப். எந்த இடம் என்று மாமிக்கு ஞாபகம் இல்லை. ‘அப்போ எனக்கு உலக அனுபவமே கெடயாது. ஒண்ணும் தெரியாது’ என்று ஆரம்பிக்கிறார். ’ஒரு நாள் மத்தியான நேரம். எல்லாரும் பெரியவாளை பாத்து ஆசிர்வாதம் வாங்கறாளேன்னு நானும் போனேன். பெரியவா ஒரு பந்தல் கீழே உக்காந்துண்டு இருந்தா. பந்தல் ஒரே ஓட்டை. சூர்ய, சந்திராள் எல்லாம் அது வழியா அவர பாத்துட்டு போவா போல இருக்கு. சில குழந்தைகள் அவர சுத்தி விளையாடிண்டு இருந்தது. நான் ஒரு கம்பத்தை பிடிச்சுண்டு அவர பாத்துண்டே, மானசீகமா என் மனசுல இருந்ததை அவர்ட்ட சொல்லிண்டு, பிரார்த்தனை செஞ்சுண்டு இருந்தேன். அப்போ ஒருத்தர் குனிஞ்சு, தன்னோட வாயை கையால பொத்திண்டு, பெரியவா காதுல என்னவோ சொன்னா. பெரியவா சட்டுன்னு எழுந்துண்டா. விடு விடுன்னு நடந்தா. என்னை தாண்டி போகும் போது ‘நீ அமோகமா இருப்பே‘ன்னு சொல்லிண்டே வேகமா போய்ட்டா. அப்போ எனக்கு எதுவும் புரியல. அப்பிடியே நின்னுண்டு இருந்தேன். ஆனா, இப்போ நெனச்சு பாக்கறப்போ, பெரியவா என்னை இதுக்குத்தான் தயார் பண்ணிண்டு இருந்திருக்கான்னு தெரியறது. அப்புறம் கொஞ்ச வருஷத்துக்கு பெரியவா தன்னை எங்கிட்டேயிருந்து மறச்சுண்டுட்டா. குடும்ப வாழ்க்கைல என்னை ஈடுபடுத்தி, மாயையால அவரோட பிரக்ஞை இல்லாம பண்ணிட்டா. அதுக்கப்றம் பெரியவா என்னை எப்படி ஆட்கொண்டா அப்படிங்கறத சொல்றேன் கேளுங்கோ’.
பெரியவா தன்னை கொடுத்து, மாமியை தடுத்தாட்கொண்ட கதை வளரும்…
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.