Post by radha on Sept 8, 2013 4:20:35 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
செப்., 9 - விநாயகர் சதுர்த்தி
விநாயகர், எலி வாகனத்தில் வரும் எளிய தெய்வம். கரும்பு, மோதகம் போன்ற எளிய உணவுகளை, நைவேத்தியமாக ஏற்றுக் கொள்வார். இவரை வணங்க, கற்பூரம் கூட தேவையில்லை; கையும், காதும் இருந்தால் போதும். தலையில் குட்டி, காதைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டால் போதும். இப்படி தலையில் குட்டிக் கொள்வதற்கு, புராண காரணம் உண்டு.
அகத்தியர், தன் மனைவி லோப முத்ராவை, நீராய் மாற்றி, கமண்டலத்தில் நிரப்பி, தென்பொதிகைக்கு எடுத்து வந்தார். அப்போது, காக உருவில் வந்த விநாயகப் பெருமான், அக்கமண்டல நீரை, தட்டி விட்டு ஓடி விட்டார். கவிழ்த்த கமண்டல நீர், அவ்விடத்திலிருந்து ஆறாக ஓடியது. காகம் தட்டியதும், பரந்து, விரிந்து ஓடியதால், காவிரி என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது.
கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை, அகத்தியர் திரும்பிப் பார்த்தார்; அதைக் காணவில்லை. ஆனால், காகம் நின்ற இடத்தில், திடீரென, ஒரு சிறுவன் தோன்றி, முனிவரைப் பார்த்துச் சிரித்தான். "செய்வதையும் செய்துவிட்டு, சிரிக்கிறானே...' என நினைத்து, கோபமடைந்த அகத்தியர், அவன் தலையில் குட்ட முயன்றார். உடனே. அச்சிறுவன், விநாயகப் பெருமானாக, அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார்.
அன்றுமுதல், விநாயகரை வணங்கும் முன், தலையில் குட்டும் வழக்கம் உருவானது. இதுபோல, அவருக்கு தோப்புக்கரணம் போடவும் ஒரு காரணம் உண்டு.
கஜமுகாசுரன் என்னும் அசுரன், விநாயகரைப் போலவே யானை முகம் கொண்டவன். இவன் தேவர்களுக்கு, பல்வேறு கொடுமைகளைச் செய்து, "தன்னைக் காணும் போதெல்லாம் தோப்புக் கரணம் போடவேண்டும்' என்று, நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் அவன் சொன்னதை செய்தனர். பின், இது குறித்து, விநாயகரிடம் முறையிட்டனர். தேவர்களுக்காக மனம் இரங்கிய விநாயகர், கஜமுகாசுரனுடன் போரிடச் சென்ற போது, அவரையும் தோப்புக்கரணம் போடுமாறு கட்டளையிட்டான் கஜமுகன். கோபமடைந்த விநாயகர், தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும், அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன், தேவர்கள், விநாயகப் பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர்.
விநாயருக்கு வேழம் என்னும் யானை முகம். யானையின் கண்கள் சிறியவை. ஆனால், பார்வைக்கூர்மை அதிகம். விநாயகரின் பிடியிலிருந்து பாவம் செய்யும் யாரும் தப்ப முடியாது. யாராவது தன்னை துன்புறுத்தினால், அதை மனதிலேயே வைத்திருந்து, பழிவாங்கும் இயல்புடையது யானை. அதுபோல், தன் பக்தர்களை சிரமப்படுத்துவோரை விநாயகர் எளிதில் விடமாட்டார். விநாயகர் உருவத்தைப் போல் அவரின் உள்ளமும் பரந்து விரிந்தது. வேழமுகத்தானை, வணங்கித் தொடங்கும் எல்லா செயலும் வெற்றியடையும்.
விநாயகர் வழிபாடு மிகவும் எளிமையானது. அவரை வணங்க தரையில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல் போதுமானது. எளிய உணவான மோதகம் அவருக்கு பிடிக்கும். இவற்றைப் படைத்து, "ஓம் சக்தி விநாயக நம' என்ற, மந்திரத்தை சதுர்த்தியன்று
108 முறை சொல்ல ஆரம்பித்து, அடுத்த சதுர்த்தி வரை தொடர்ந்து சொல்லி வந்தால் போதும், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
***
செப்., 9 - விநாயகர் சதுர்த்தி
விநாயகர், எலி வாகனத்தில் வரும் எளிய தெய்வம். கரும்பு, மோதகம் போன்ற எளிய உணவுகளை, நைவேத்தியமாக ஏற்றுக் கொள்வார். இவரை வணங்க, கற்பூரம் கூட தேவையில்லை; கையும், காதும் இருந்தால் போதும். தலையில் குட்டி, காதைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டால் போதும். இப்படி தலையில் குட்டிக் கொள்வதற்கு, புராண காரணம் உண்டு.
அகத்தியர், தன் மனைவி லோப முத்ராவை, நீராய் மாற்றி, கமண்டலத்தில் நிரப்பி, தென்பொதிகைக்கு எடுத்து வந்தார். அப்போது, காக உருவில் வந்த விநாயகப் பெருமான், அக்கமண்டல நீரை, தட்டி விட்டு ஓடி விட்டார். கவிழ்த்த கமண்டல நீர், அவ்விடத்திலிருந்து ஆறாக ஓடியது. காகம் தட்டியதும், பரந்து, விரிந்து ஓடியதால், காவிரி என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது.
கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை, அகத்தியர் திரும்பிப் பார்த்தார்; அதைக் காணவில்லை. ஆனால், காகம் நின்ற இடத்தில், திடீரென, ஒரு சிறுவன் தோன்றி, முனிவரைப் பார்த்துச் சிரித்தான். "செய்வதையும் செய்துவிட்டு, சிரிக்கிறானே...' என நினைத்து, கோபமடைந்த அகத்தியர், அவன் தலையில் குட்ட முயன்றார். உடனே. அச்சிறுவன், விநாயகப் பெருமானாக, அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார்.
அன்றுமுதல், விநாயகரை வணங்கும் முன், தலையில் குட்டும் வழக்கம் உருவானது. இதுபோல, அவருக்கு தோப்புக்கரணம் போடவும் ஒரு காரணம் உண்டு.
கஜமுகாசுரன் என்னும் அசுரன், விநாயகரைப் போலவே யானை முகம் கொண்டவன். இவன் தேவர்களுக்கு, பல்வேறு கொடுமைகளைச் செய்து, "தன்னைக் காணும் போதெல்லாம் தோப்புக் கரணம் போடவேண்டும்' என்று, நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் அவன் சொன்னதை செய்தனர். பின், இது குறித்து, விநாயகரிடம் முறையிட்டனர். தேவர்களுக்காக மனம் இரங்கிய விநாயகர், கஜமுகாசுரனுடன் போரிடச் சென்ற போது, அவரையும் தோப்புக்கரணம் போடுமாறு கட்டளையிட்டான் கஜமுகன். கோபமடைந்த விநாயகர், தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும், அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன், தேவர்கள், விநாயகப் பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர்.
விநாயருக்கு வேழம் என்னும் யானை முகம். யானையின் கண்கள் சிறியவை. ஆனால், பார்வைக்கூர்மை அதிகம். விநாயகரின் பிடியிலிருந்து பாவம் செய்யும் யாரும் தப்ப முடியாது. யாராவது தன்னை துன்புறுத்தினால், அதை மனதிலேயே வைத்திருந்து, பழிவாங்கும் இயல்புடையது யானை. அதுபோல், தன் பக்தர்களை சிரமப்படுத்துவோரை விநாயகர் எளிதில் விடமாட்டார். விநாயகர் உருவத்தைப் போல் அவரின் உள்ளமும் பரந்து விரிந்தது. வேழமுகத்தானை, வணங்கித் தொடங்கும் எல்லா செயலும் வெற்றியடையும்.
விநாயகர் வழிபாடு மிகவும் எளிமையானது. அவரை வணங்க தரையில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல் போதுமானது. எளிய உணவான மோதகம் அவருக்கு பிடிக்கும். இவற்றைப் படைத்து, "ஓம் சக்தி விநாயக நம' என்ற, மந்திரத்தை சதுர்த்தியன்று
108 முறை சொல்ல ஆரம்பித்து, அடுத்த சதுர்த்தி வரை தொடர்ந்து சொல்லி வந்தால் போதும், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
***