Post by uma2806 on May 30, 2013 15:17:23 GMT 5.5
மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ்.சீதாராமன், சென்னை - 28.
எனக்கு விபரம் தெரிந்த நாள்களிலிருந்து ஒரு சந்தேகம் இருந்து வந்தது. வாழ்க்கையில் நாம் எத்தனையோ பாவ-புண்ணியச் செயல்களைச் செய்கிறோம். உடலை உகுத்தபின் மேலுலகம் சென்று பாவ-புண்ணியத்துக்கேற்ப சொர்க்கம் – நரகம் முதலியவற்றில் இன்ப-துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பிறகு, (வீடு பேறு அடையாத வரையில்) அடுத்த பிறவியில், முன் பிறவிகளில் செய்த பாவ – புண்ணிய மூட்டைகளுடன் பிறக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.அப்படிப் பார்த்தால், ஒரே காரியத்துக்காக இரண்டு தடவை தண்டனை அல்லது பரிசு பெறுகிறோம் என்றாகிறது.
இப்போது நடைமுறையிலிருக்கும் நமது சட்டங்களிலேயே கூட, ‘ஒருவன், ஒரு குற்றத்துக்காக இரண்டு தடவை தண்டனை அனுபவிக்கக்கூடாது’ என்ற நியாயமான விதி இருக்கும்போது, நம்முடைய முன்னோர்கள், இப்படி (மேலே நரகவாசம், கீழே இழிபிறப்பு என்று) இரண்டு தடவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருப்பார்களா? (புண்ணிய பலனும் இரண்டு தடவைதான் – மேலே சொர்க்கம்; கீழே மறுபிறவியில் செழுமையான பரம்பரையில் பிறப்பு.) இது பொருத்தமாக இல்லை என்று எனக்குச் சந்தேகம்.
பல பண்டிதர்களைக் கேட்டேன். ஏதோ சமாதானம் சொன்னார்கள். என் மனம் ஏற்கவில்லை.
ஒருநாள், பெரியவாள் அருளுரையின் போது கூறினார்கள் :
“தண்ணீரின் தன்மை நமக்கெல்லாம் தெரியும். அதை அடுப்பில் வைத்து சூடு படுத்தினால் வெந்நீர் ஆகிறது. ஆனால், அதன் திரவத்தன்மை மறைந்து விடுவதில்லை. அதேபோல், ரெப்ரிஜரேட்டரில் கொஞ்ச நேரம் வைத்தால், ஜில்லென்று ஆகிறது. அப்படியும் அதன் திரவத்தன்மை போவதில்லை.
ஆனால், வெப்பம் அதிகமாக அதிகமாக, நீர், ஆவியாகப் போய்விடுகிறது, குளிர்ச்சி, ஓர் அளவுக்கு மேல் சென்றதும், தண்ணீர் ஐஸ்கட்டியாகிவிடுகிறது.
அதுபோல்தான் நாம் செய்யும் பாவமும் புண்ணியமும்! இவை இரண்டும், கட்டுப் பாடான ஓர் அளவில் இருக்கும்போது, நம்முடைய அடுத்த பிறவிக்கு வந்து சேர்கின்றன. அதை நாம் அனுபவிக்கிறோம்.. சுக-துக்கம் என்பதாக.ஆனால் அவை இரண்டும் – உஷ்ணமும் குளிர்ச்சியும் – ஓர் அளவைத் தாண்டியதும், அதிகமாக இருக்கும் பகுதியை, மேலே சொர்க்கம் – நரகம் என்று அனுபவித்துவிட்டு, மீதி மூட்டையுடன் பூமிக்கு வந்து அனுபவிக்கிறோம்.
மோட்சத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும், சொர்க்கவாசம், நரகவாசம் – கால எல்லை உண்டு. ‘க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி.’ செய்த புண்ணியத்தை மேல் உலகங்களில் சௌக்கியமாக அனுபவித்துத் தீர்த்துவிட்டால், மறுபடியும் இங்கே வரவேண்டியதுதான். நரகவாசமும் அப்படித்தான். பாவச்சுமை குறைந்துவிட்டால், அங்கிருந்து வெளியே வரலாம். இங்கே வந்து, ஓர் அளவுக்குள் இருக்கும் மீதிப்பாவத்தை, எவ்வெப்படியோ பிறந்து, கஷ்டஜீவனம் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால்தான், தர்ம கார்யங்களையே செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேணும் என்று சாஸ்திரக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்…”
ஞான சூரியனுக்கு முன், சந்தேகப் பனி எப்படி நிற்க முடியும்?
பெரியவாளுடைய இந்தச் சொற்பொழிவை நான் தற்செயலாகத்தான் கேட்க நேரிட்டது! அது யார் செய்த புண்ணியமோ!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
நினைவு கூர்ந்தவர் : எஸ்.சீதாராமன், சென்னை - 28.
எனக்கு விபரம் தெரிந்த நாள்களிலிருந்து ஒரு சந்தேகம் இருந்து வந்தது. வாழ்க்கையில் நாம் எத்தனையோ பாவ-புண்ணியச் செயல்களைச் செய்கிறோம். உடலை உகுத்தபின் மேலுலகம் சென்று பாவ-புண்ணியத்துக்கேற்ப சொர்க்கம் – நரகம் முதலியவற்றில் இன்ப-துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பிறகு, (வீடு பேறு அடையாத வரையில்) அடுத்த பிறவியில், முன் பிறவிகளில் செய்த பாவ – புண்ணிய மூட்டைகளுடன் பிறக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.அப்படிப் பார்த்தால், ஒரே காரியத்துக்காக இரண்டு தடவை தண்டனை அல்லது பரிசு பெறுகிறோம் என்றாகிறது.
இப்போது நடைமுறையிலிருக்கும் நமது சட்டங்களிலேயே கூட, ‘ஒருவன், ஒரு குற்றத்துக்காக இரண்டு தடவை தண்டனை அனுபவிக்கக்கூடாது’ என்ற நியாயமான விதி இருக்கும்போது, நம்முடைய முன்னோர்கள், இப்படி (மேலே நரகவாசம், கீழே இழிபிறப்பு என்று) இரண்டு தடவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருப்பார்களா? (புண்ணிய பலனும் இரண்டு தடவைதான் – மேலே சொர்க்கம்; கீழே மறுபிறவியில் செழுமையான பரம்பரையில் பிறப்பு.) இது பொருத்தமாக இல்லை என்று எனக்குச் சந்தேகம்.
பல பண்டிதர்களைக் கேட்டேன். ஏதோ சமாதானம் சொன்னார்கள். என் மனம் ஏற்கவில்லை.
ஒருநாள், பெரியவாள் அருளுரையின் போது கூறினார்கள் :
“தண்ணீரின் தன்மை நமக்கெல்லாம் தெரியும். அதை அடுப்பில் வைத்து சூடு படுத்தினால் வெந்நீர் ஆகிறது. ஆனால், அதன் திரவத்தன்மை மறைந்து விடுவதில்லை. அதேபோல், ரெப்ரிஜரேட்டரில் கொஞ்ச நேரம் வைத்தால், ஜில்லென்று ஆகிறது. அப்படியும் அதன் திரவத்தன்மை போவதில்லை.
ஆனால், வெப்பம் அதிகமாக அதிகமாக, நீர், ஆவியாகப் போய்விடுகிறது, குளிர்ச்சி, ஓர் அளவுக்கு மேல் சென்றதும், தண்ணீர் ஐஸ்கட்டியாகிவிடுகிறது.
அதுபோல்தான் நாம் செய்யும் பாவமும் புண்ணியமும்! இவை இரண்டும், கட்டுப் பாடான ஓர் அளவில் இருக்கும்போது, நம்முடைய அடுத்த பிறவிக்கு வந்து சேர்கின்றன. அதை நாம் அனுபவிக்கிறோம்.. சுக-துக்கம் என்பதாக.ஆனால் அவை இரண்டும் – உஷ்ணமும் குளிர்ச்சியும் – ஓர் அளவைத் தாண்டியதும், அதிகமாக இருக்கும் பகுதியை, மேலே சொர்க்கம் – நரகம் என்று அனுபவித்துவிட்டு, மீதி மூட்டையுடன் பூமிக்கு வந்து அனுபவிக்கிறோம்.
மோட்சத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும், சொர்க்கவாசம், நரகவாசம் – கால எல்லை உண்டு. ‘க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி.’ செய்த புண்ணியத்தை மேல் உலகங்களில் சௌக்கியமாக அனுபவித்துத் தீர்த்துவிட்டால், மறுபடியும் இங்கே வரவேண்டியதுதான். நரகவாசமும் அப்படித்தான். பாவச்சுமை குறைந்துவிட்டால், அங்கிருந்து வெளியே வரலாம். இங்கே வந்து, ஓர் அளவுக்குள் இருக்கும் மீதிப்பாவத்தை, எவ்வெப்படியோ பிறந்து, கஷ்டஜீவனம் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால்தான், தர்ம கார்யங்களையே செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேணும் என்று சாஸ்திரக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்…”
ஞான சூரியனுக்கு முன், சந்தேகப் பனி எப்படி நிற்க முடியும்?
பெரியவாளுடைய இந்தச் சொற்பொழிவை நான் தற்செயலாகத்தான் கேட்க நேரிட்டது! அது யார் செய்த புண்ணியமோ!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!