Post by radha on May 29, 2013 2:18:15 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
52. நடைமறை பழகாமல் கற்பதோடு மட்டும் நின்ற கல்வி மனத்தை மகிழ்விப்பதாயினும் கிளிப்பிள்ளை கற்ற அளவுதான். அதனால் என்ன பயன்?
53. நல்லோரின் வழியைப் பின்பற்றிப் பெற்றது சிறிதளவேயாயினும் அது பெரிதே.
54.தீய எண்ணத்தை உள்ளத்தினுள் நன்கு மறைத்து வைத்தவரைக் கண்டிப்பவர் சூரியனின் புதல்வன் மாயனே.
55. உள்ளத்து வலிவில்லாதவருக்கு வழி காட்டுதல் பயன்படாது.
56. குருடனுக்கு விளக்கும், செவிடனுக்குப் பாட்டும் வீண்.
57. கண்ணால் குருடன் மேல். தர்மத்தில் குருடன் மேலானவல்ல.
58. குருடனை விஞ்சுபவன் எவன்?
59. உணவளிப்பது மிகச் சிறந்தது. கல்வியளிப்பது அதனைவிடச் சிறந்தது. உணவால் உண்ட வேளைக்கு மட்டும் மன நிறைவு, கல்வியால் வாழ்நாள் முழுதும் மன நிறைவு.
60. பிறருதவியால் பதவிபெற்ற நீசன் பெரும்பாலும் அணுக எளியவனாகமாட்டான்.
61. மக்கள் பிறரது செல்வத்தையும் தனது அறிவாற்றலையும் ஸமமாக எடை போடுவதில்லை.
62. போலியான அறிவு முதிர்ச்சியைக் காட்டுகிற விதண்டைப் பேச்சால் அநியாயத்தை நியாயமாகவும், நியாயத்தை அநியாயமாகவும் திரித்துக் காட்டுகிற அந்த அற்பமான கல்வியால் என்ன பலன்?
63. நேர்மையற்ற வழியில் செல்பவனது செல்வம் நீடித்திராது.
64.வம்ச வழியே கல்வி பெற்ற அறிஞருக்கும் வம்ச வழியே செல்வம் பெற்ற தனிகருக்கும் இதயம் செருக்குறாது.
65. அபகாரம் செய்தவனிடத்திலும் நல்ல முறையில் பழகுபவனே நல்லவன்.
66. கல்விபெற்ரும் அகந்தையால் கண் மூடியவர் அடிவைக்கத் தகாத இடத்தில் அடிவைப்பர்,
67. வெளியில் நின்று பார்ப்பவனுக்குக் குறை மட்டும் தெரியும்.
68. தன்வந்தரியே மருத்துவராயினும் ஆயுள் முடிந்தவனிடம் என்ன செய்வார்?
69. தன் பேச்சில் அழகு கண்டு மகிழ்பவர் உண்டு. பிறர் பேச்சில் திருப்தி பெறும் நல்லோர் எத்தநை பேர்.
70. தன் உடலையும் புலனின்பத்தையயும் விடப் புகழையே செல்வமாக மதிப்பவருக்குப் புகழே மிகப் பெரிது.
71. காமத்தால் குருடானவன் ஒரு தனிப் பிறவி. பகலிலும், இரவிலும் அவன் எதனையும் காணமாட்டான்.
72. அவனவன் தனக்குரிய வாய்ப்பையே எதிர்பார்ப்பான்.
73. நெருக்கடிகள் (தாம் நிகழ்வதற்கு முன்) இவன் மென்மைமிக்கவன்.. (தாங்க இயலாதவன்) இவன் திடமானவன் (தாங்குபவன்) எனவா எதிர்பார்க்கும்?
74.பலரறியாதிருப்பினும் மற்றவரால் இயலாத பணியைச் செய்து முடிப்பதே மனிதருக்குப் புகழ் தருவதாகும்.
75.ஆற்றல் மிக்கவனும் தன் ஆற்றலை முறைப்படி வெளிப்படுத்தாதிருந்தால் அவமதிக்கப்படுகிறான்.
76. அந்தந்த நேரத்திற்குப் பொருந்தாததைக் கூறுபவன், பிருஹஸ்பதியாயினும் தன் அறிவின்மையை வெளிப்படுத்துவதுடன் நிலைத்த அவமதிப்பையும் பெறுகிறன்.
77. உழைப்பும் அறிவாற்றலும் மிக்கவனால் அடைய இயலாததொன்றுமில்லை.
78. கேட்பவன் விரும்பாவிடினும் தக்க நல்வழி கூறுபவன் அரிது. அப்படிச் சொல்வதைக் கேட்பவனும் அரிது.
79. கெட்டதோ, நல்லதோ விதி எழுதியதை எவனால்மாற்ற இயலும்?
80. இரும்பும் காய்ச்சப் பெறின் மென்மை பெறும் எனில் மனிதர் எம்மாத்திரம்?
81. தற்பெருமையில்லாதவருக்குச் செல்வமும், ஆயுளும் ஒரு பொருட்டாகுமா?
82. நல்லவன், தன் கோரிக்கை வீணாகுமோ என்ற பயத்தால் தன் விருப்பத்திற்கு உரிய பொருளையும் கேட்காமல் நடு நிலையைக் கடைபிடிப்பான்.
83. இன்றைய வாழ்வில் நன்மையையும் மறுமையில் மேன்மையையும் பெற உதவுவதே தர்மம்.
84. மந்திரமாகத் தகாத எழுத்து கிடையாது. மருந்தாகப் பயன்படாத வேரும் பணிக்கு உதவாத மனிதனும் கிடையாது. உரியபணியில் பொருத்துபவர் அங்கு இல்லை.
85. காலால் தன்னைத் தீண்டியவனை ரத்தம் குடிக்கவா பாம்பு கடிக்கிறது? காலால் தன்னைத் தீண்டியதைப் பொறுக்காததால் (அவமதிப்பைப் பொறுக்காதலால்) அல்லவா தீண்டியது?
86. பொறாமையின்றி விருப்பு வெறுப்பின்றி தன்னை எவருக்கும் எதிரியாக்கிக் கொள்ளாத ஒருவனால்தான்
மக்களின் ஆதரவைப் பெரமுடியும்.
87. (திருப்பாற்கடலிலருந்து தோன்றிய) அமுதம் ராஹ§விற்கு அழிவைத் தந்தது. விஷம் சிவபெருமானது கழுத்தணியானது.
88. அறிவில்லாதவனது செல்வம் கேடுவிளைவிக்கும்.
89. ஏழ்மையால் வருந்துபவனுக்கு யாசிக்கத்தகாதவர் என எவருமில்லை. பெரியோருக்கு உதவத் தகாதவன் என எவருமில்லை.
90. நல்லோரது உபதேச மொழி என்றும் தானும் இகழப்பெறாதது.
91. முந் செய்த வினைகளின் பின் விளைவு எதிர்பார்ப்பிற்கு மாறுபட்டிருக்கும்.
92. காக்கக் கடமைப்பட்டவர் காக்காத போது அது தெய்வத்தால் காக்கப்படுகிறது.
93. பிறர் மனம் புண்பட நடப்பது நல்லோர் வழியில்லை.
94. பொருளை இழந்தது, மனத்தாபம், வீட்டினுள்ளவரின் நடைமுறை பிசகுதல், ஏமாற்றம், அவமதிப்பு இவற்றை அறிவாளி வெளியிடக்கூடாது.
95. மனம் நாடியதனைத்தும் பொருட்படுத்தத் தக்கதல்ல. அவற்றைப் பெறுவதால் மட்டும் இன்பம் சிறிதுமில்லை என்பதே உண்மை.
96. பொருள் நாட்டம் மிக்கவருக்கு, குருவும் (பெரியவர்களும்) இல்லை. உறவினருமில்லை.
97. பெண் எனும் செல்வம் பிரரது உடமையல்லவா?
98. உதவி நாடி வந்தவனுக்குக் கொடுப்பதற்கல்லாமல் செல்வத்திடம் என்ன உரிமை?
99. அரைகுறையாக நிரம்பிய குடம் சத்தம் போடும் (தளும்பும்) .
100. சாணை தீட்டப் பெறாதவரை சிறந்த ரத்தினங்களும் அரச கிரீடத்தில் இடம் பெறுவதில்லை.
101. கிடைக்கப் பெறாத பொருளை நாடுபவனுக்கு, அது கிடைக்காத வரை ஏக்கம், பெற்றபின் அழிவதால் ஏற்பட்ட வருத்தம் என்ற இரு நிலைகள் உண்டு.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
52. நடைமறை பழகாமல் கற்பதோடு மட்டும் நின்ற கல்வி மனத்தை மகிழ்விப்பதாயினும் கிளிப்பிள்ளை கற்ற அளவுதான். அதனால் என்ன பயன்?
53. நல்லோரின் வழியைப் பின்பற்றிப் பெற்றது சிறிதளவேயாயினும் அது பெரிதே.
54.தீய எண்ணத்தை உள்ளத்தினுள் நன்கு மறைத்து வைத்தவரைக் கண்டிப்பவர் சூரியனின் புதல்வன் மாயனே.
55. உள்ளத்து வலிவில்லாதவருக்கு வழி காட்டுதல் பயன்படாது.
56. குருடனுக்கு விளக்கும், செவிடனுக்குப் பாட்டும் வீண்.
57. கண்ணால் குருடன் மேல். தர்மத்தில் குருடன் மேலானவல்ல.
58. குருடனை விஞ்சுபவன் எவன்?
59. உணவளிப்பது மிகச் சிறந்தது. கல்வியளிப்பது அதனைவிடச் சிறந்தது. உணவால் உண்ட வேளைக்கு மட்டும் மன நிறைவு, கல்வியால் வாழ்நாள் முழுதும் மன நிறைவு.
60. பிறருதவியால் பதவிபெற்ற நீசன் பெரும்பாலும் அணுக எளியவனாகமாட்டான்.
61. மக்கள் பிறரது செல்வத்தையும் தனது அறிவாற்றலையும் ஸமமாக எடை போடுவதில்லை.
62. போலியான அறிவு முதிர்ச்சியைக் காட்டுகிற விதண்டைப் பேச்சால் அநியாயத்தை நியாயமாகவும், நியாயத்தை அநியாயமாகவும் திரித்துக் காட்டுகிற அந்த அற்பமான கல்வியால் என்ன பலன்?
63. நேர்மையற்ற வழியில் செல்பவனது செல்வம் நீடித்திராது.
64.வம்ச வழியே கல்வி பெற்ற அறிஞருக்கும் வம்ச வழியே செல்வம் பெற்ற தனிகருக்கும் இதயம் செருக்குறாது.
65. அபகாரம் செய்தவனிடத்திலும் நல்ல முறையில் பழகுபவனே நல்லவன்.
66. கல்விபெற்ரும் அகந்தையால் கண் மூடியவர் அடிவைக்கத் தகாத இடத்தில் அடிவைப்பர்,
67. வெளியில் நின்று பார்ப்பவனுக்குக் குறை மட்டும் தெரியும்.
68. தன்வந்தரியே மருத்துவராயினும் ஆயுள் முடிந்தவனிடம் என்ன செய்வார்?
69. தன் பேச்சில் அழகு கண்டு மகிழ்பவர் உண்டு. பிறர் பேச்சில் திருப்தி பெறும் நல்லோர் எத்தநை பேர்.
70. தன் உடலையும் புலனின்பத்தையயும் விடப் புகழையே செல்வமாக மதிப்பவருக்குப் புகழே மிகப் பெரிது.
71. காமத்தால் குருடானவன் ஒரு தனிப் பிறவி. பகலிலும், இரவிலும் அவன் எதனையும் காணமாட்டான்.
72. அவனவன் தனக்குரிய வாய்ப்பையே எதிர்பார்ப்பான்.
73. நெருக்கடிகள் (தாம் நிகழ்வதற்கு முன்) இவன் மென்மைமிக்கவன்.. (தாங்க இயலாதவன்) இவன் திடமானவன் (தாங்குபவன்) எனவா எதிர்பார்க்கும்?
74.பலரறியாதிருப்பினும் மற்றவரால் இயலாத பணியைச் செய்து முடிப்பதே மனிதருக்குப் புகழ் தருவதாகும்.
75.ஆற்றல் மிக்கவனும் தன் ஆற்றலை முறைப்படி வெளிப்படுத்தாதிருந்தால் அவமதிக்கப்படுகிறான்.
76. அந்தந்த நேரத்திற்குப் பொருந்தாததைக் கூறுபவன், பிருஹஸ்பதியாயினும் தன் அறிவின்மையை வெளிப்படுத்துவதுடன் நிலைத்த அவமதிப்பையும் பெறுகிறன்.
77. உழைப்பும் அறிவாற்றலும் மிக்கவனால் அடைய இயலாததொன்றுமில்லை.
78. கேட்பவன் விரும்பாவிடினும் தக்க நல்வழி கூறுபவன் அரிது. அப்படிச் சொல்வதைக் கேட்பவனும் அரிது.
79. கெட்டதோ, நல்லதோ விதி எழுதியதை எவனால்மாற்ற இயலும்?
80. இரும்பும் காய்ச்சப் பெறின் மென்மை பெறும் எனில் மனிதர் எம்மாத்திரம்?
81. தற்பெருமையில்லாதவருக்குச் செல்வமும், ஆயுளும் ஒரு பொருட்டாகுமா?
82. நல்லவன், தன் கோரிக்கை வீணாகுமோ என்ற பயத்தால் தன் விருப்பத்திற்கு உரிய பொருளையும் கேட்காமல் நடு நிலையைக் கடைபிடிப்பான்.
83. இன்றைய வாழ்வில் நன்மையையும் மறுமையில் மேன்மையையும் பெற உதவுவதே தர்மம்.
84. மந்திரமாகத் தகாத எழுத்து கிடையாது. மருந்தாகப் பயன்படாத வேரும் பணிக்கு உதவாத மனிதனும் கிடையாது. உரியபணியில் பொருத்துபவர் அங்கு இல்லை.
85. காலால் தன்னைத் தீண்டியவனை ரத்தம் குடிக்கவா பாம்பு கடிக்கிறது? காலால் தன்னைத் தீண்டியதைப் பொறுக்காததால் (அவமதிப்பைப் பொறுக்காதலால்) அல்லவா தீண்டியது?
86. பொறாமையின்றி விருப்பு வெறுப்பின்றி தன்னை எவருக்கும் எதிரியாக்கிக் கொள்ளாத ஒருவனால்தான்
மக்களின் ஆதரவைப் பெரமுடியும்.
87. (திருப்பாற்கடலிலருந்து தோன்றிய) அமுதம் ராஹ§விற்கு அழிவைத் தந்தது. விஷம் சிவபெருமானது கழுத்தணியானது.
88. அறிவில்லாதவனது செல்வம் கேடுவிளைவிக்கும்.
89. ஏழ்மையால் வருந்துபவனுக்கு யாசிக்கத்தகாதவர் என எவருமில்லை. பெரியோருக்கு உதவத் தகாதவன் என எவருமில்லை.
90. நல்லோரது உபதேச மொழி என்றும் தானும் இகழப்பெறாதது.
91. முந் செய்த வினைகளின் பின் விளைவு எதிர்பார்ப்பிற்கு மாறுபட்டிருக்கும்.
92. காக்கக் கடமைப்பட்டவர் காக்காத போது அது தெய்வத்தால் காக்கப்படுகிறது.
93. பிறர் மனம் புண்பட நடப்பது நல்லோர் வழியில்லை.
94. பொருளை இழந்தது, மனத்தாபம், வீட்டினுள்ளவரின் நடைமுறை பிசகுதல், ஏமாற்றம், அவமதிப்பு இவற்றை அறிவாளி வெளியிடக்கூடாது.
95. மனம் நாடியதனைத்தும் பொருட்படுத்தத் தக்கதல்ல. அவற்றைப் பெறுவதால் மட்டும் இன்பம் சிறிதுமில்லை என்பதே உண்மை.
96. பொருள் நாட்டம் மிக்கவருக்கு, குருவும் (பெரியவர்களும்) இல்லை. உறவினருமில்லை.
97. பெண் எனும் செல்வம் பிரரது உடமையல்லவா?
98. உதவி நாடி வந்தவனுக்குக் கொடுப்பதற்கல்லாமல் செல்வத்திடம் என்ன உரிமை?
99. அரைகுறையாக நிரம்பிய குடம் சத்தம் போடும் (தளும்பும்) .
100. சாணை தீட்டப் பெறாதவரை சிறந்த ரத்தினங்களும் அரச கிரீடத்தில் இடம் பெறுவதில்லை.
101. கிடைக்கப் பெறாத பொருளை நாடுபவனுக்கு, அது கிடைக்காத வரை ஏக்கம், பெற்றபின் அழிவதால் ஏற்பட்ட வருத்தம் என்ற இரு நிலைகள் உண்டு.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM