Post by radha on May 23, 2013 14:55:19 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Kanchi Maha Periavaa- My Guru
Bhaskaran Shivaraman காஞ்சி முனிவருடன் — சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
Posted: 21 May 2013
ஒருமுறை என்னுடன் பணிபுரியும் சகாவின் குடும்பத்துடன் சென்றபோதுதான். என் சகாவின் மனைவி ஆறாத் துயரத்துடன் இருந்தார். மன அமைதி தேடி அவர்கள் காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இது ஒருவருக்கும் தெரியாது. வந்தவர்கள், பரமாச்சார்யாரின் முன்னால் சில நிமிடம் சிறு குழுவாக ஒரே சமயத்தில் உட்கார அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தங்களுடன் பழம் முதலிய பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். எனது சகாவின் மனைவி ஒரு பெட்டி நிறைய உலர்ந்த பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அந்தப் பெட்டி பல அறைகள் கொண்டதாகவும் ஒவ்வொரு அறையும் வெவ்வேறு உலர்ந்த பழங்கள் கொண்டதாகவும் இருந்தது. அத்தனையும் பரமாச்சார்யார் முன் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவரது சீடர்களில் ஒருவர் அவற்றை அப்பால் எடுத்துச் செல்வார். பரமாச்சார்யார் எப்போதும் இதில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால் அன்று பெட்டியை அவர் முன்னால் இருந்து அகற்ற, ஒருவர் எடுத்தபோது ஒரு குழந்தையைப்போல அவர் அதைத் தடுத்தார். பெட்டியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். பின் உடனே பெட்டி மூடியைத் திறக்கும்படி வற்புறுத்தினார். குனிந்து அதில் உள்ளவற்றைப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வைக் குறைவினால் அவற்றில் இருந்த சிலவற்றை அவரால் அறிய முடியவில்லை. உடன் சீடர்களில் ஒருவர் அதிலிருந்த திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, அத்திப்பழம் முதலியவற்றைப் பற்றி அவரிடம் தெரிவித்தார்.
மகிழ்ந்து போன அவர், மாசற்ற ஒரு குழந்தையைப் போல, அனைவரும் அதிசயிக்கும்படியாக, அந்தப் பெட்டியுடனும் அதிலிருந்த பொருள்களுடனும் பதினைந்து நிமிடங்கள் விளையாடினார். அங்கு வந்திருந்த அனைவரும் இதை ஒரு அபூர்வ ஆன்மீக அனுபவமாக ரசித்துச் சிரித்தார்கள். பல ஆண்டுகளாகச் சிரித்து அறியாத சிரிப்பையே மறந்துபோன என் சகாவின் மனைவிகூடத் துயரத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் சமர்ப்பித்த பொருள்களைஅவர் விசேஷமாக நடத்திய பாங்கு, அவளைப் பிரத்தியேகமாக வாழ்த்தி ஆசி வழங்கியதாக அவள் உணர்ந்தாள். அவளது மனவேதனை துடைத்து எறியப்பட்டது என்பதை நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறிவிட்டது.
===========================================================
மடத்தில் எனது அடுத்த சந்திப்பு ஆரவாரம் மிகுந்த அனுபவமாக இருந்தது. அந்த முறை காஞ்சி முனிவரைத் தரிசிக்க விரும்பிய முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்றேன். அந்த சமயத்தில் யாரோ பரமாச்சார்யாரிடம் நான் தமிழ்நாடு அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், நான் காஷ்மீரைச் சேர்ந்தவள் என்றும் சொல்லி இருக்கலாம் என்றும் நான் நினைக்கிறேன். திடீரென அவர் எனக்குத் தமிழ் நன்கு தெரியுமா என்று கேட்டார். நான் நன்கு தமிழ் அறிவேன் என்று தெரிவித்தேன். உடனே அவரது உதவியாளரிடம் ஏதோ சொல்ல அவர் உள்ளே ஓடி உடனடியாக ஒரு தட்டு நிறைய வாழைப் பழங்களுடன் வந்தார். பரமாச்சார்யார் தட்டை சுட்டிக்காட்டி அந்தப் பழத்தின் பெயரைக் கேட்டார்.
நான் ‘பழம்’ என்றேன்.
“ஆம், என்ன பழம்?” என்றார்.
“பச்சை வாழைப்பழம்” என்றேன்.
நான் நிம்மதியாகப் பெருமூச்சு விடுவதற்குள் என் முன்னால் இன்னொரு தட்டு வாழைப்பழம் வைக்கப்பட்டது. அதைப்பார்த்து விட்டு நான் “ரஸ்தாளிப் பழம்” என்றேன். அடுத்து இன்னொரு தட்டு வந்தது. “மலைவாழை” என்று சொன்னேன். அடுத்த வினாடியே இன்னொரு தட்டு வருகை தந்தது! அதிர்ஷ்டவசமாக அதை நான் புரிந்து கொண்டு “பூவன் பழம்” என்றேன். அடுத்த தடவைதான் நான் பெரும் தொந்தரவில் இருந்தது எனக்கு உறைத்தது. இந்த மண்ணில் விளையும் அத்தனை வாழைப் பழங்களின் பெயரையும் சொல்வது எனக்குச் சாத்தியமானதாக இல்லை. ஒவ்வொன்றாகத் தட்டுகள் வந்து கொண்டிருந்தபோது யாரும் நான் தோற்றுப் போக விரும்பவில்லை. ஆகவே அவரது அடியவர்கள் பக்கத்தில் இருந்து எனக்கு ஜாடையாகத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். கடுமையான ஆனால் ஆரவாரமான இந்தச் சோதனை முடிந்த பிறகு, நான் தமிழ்த் தேர்வில் வெற்றிபெற்று விட்டதாகப்பெரியவர் பிரகடனம் செய்தார். எப்போதுமே இப்படி பரமாச்சார்யார் தமது நகைச்சுவை உணர்வை மனப்பூர்வமாக வெளிப்படுத்துவதில்லை. அதனால் அன்று நிறைந்திருந்த கூட்டம், அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில் தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தனர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.
Kanchi Maha Periavaa- My Guru
Bhaskaran Shivaraman காஞ்சி முனிவருடன் — சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
Posted: 21 May 2013
ஒருமுறை என்னுடன் பணிபுரியும் சகாவின் குடும்பத்துடன் சென்றபோதுதான். என் சகாவின் மனைவி ஆறாத் துயரத்துடன் இருந்தார். மன அமைதி தேடி அவர்கள் காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இது ஒருவருக்கும் தெரியாது. வந்தவர்கள், பரமாச்சார்யாரின் முன்னால் சில நிமிடம் சிறு குழுவாக ஒரே சமயத்தில் உட்கார அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தங்களுடன் பழம் முதலிய பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். எனது சகாவின் மனைவி ஒரு பெட்டி நிறைய உலர்ந்த பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அந்தப் பெட்டி பல அறைகள் கொண்டதாகவும் ஒவ்வொரு அறையும் வெவ்வேறு உலர்ந்த பழங்கள் கொண்டதாகவும் இருந்தது. அத்தனையும் பரமாச்சார்யார் முன் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவரது சீடர்களில் ஒருவர் அவற்றை அப்பால் எடுத்துச் செல்வார். பரமாச்சார்யார் எப்போதும் இதில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால் அன்று பெட்டியை அவர் முன்னால் இருந்து அகற்ற, ஒருவர் எடுத்தபோது ஒரு குழந்தையைப்போல அவர் அதைத் தடுத்தார். பெட்டியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். பின் உடனே பெட்டி மூடியைத் திறக்கும்படி வற்புறுத்தினார். குனிந்து அதில் உள்ளவற்றைப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வைக் குறைவினால் அவற்றில் இருந்த சிலவற்றை அவரால் அறிய முடியவில்லை. உடன் சீடர்களில் ஒருவர் அதிலிருந்த திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, அத்திப்பழம் முதலியவற்றைப் பற்றி அவரிடம் தெரிவித்தார்.
மகிழ்ந்து போன அவர், மாசற்ற ஒரு குழந்தையைப் போல, அனைவரும் அதிசயிக்கும்படியாக, அந்தப் பெட்டியுடனும் அதிலிருந்த பொருள்களுடனும் பதினைந்து நிமிடங்கள் விளையாடினார். அங்கு வந்திருந்த அனைவரும் இதை ஒரு அபூர்வ ஆன்மீக அனுபவமாக ரசித்துச் சிரித்தார்கள். பல ஆண்டுகளாகச் சிரித்து அறியாத சிரிப்பையே மறந்துபோன என் சகாவின் மனைவிகூடத் துயரத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் சமர்ப்பித்த பொருள்களைஅவர் விசேஷமாக நடத்திய பாங்கு, அவளைப் பிரத்தியேகமாக வாழ்த்தி ஆசி வழங்கியதாக அவள் உணர்ந்தாள். அவளது மனவேதனை துடைத்து எறியப்பட்டது என்பதை நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறிவிட்டது.
===========================================================
மடத்தில் எனது அடுத்த சந்திப்பு ஆரவாரம் மிகுந்த அனுபவமாக இருந்தது. அந்த முறை காஞ்சி முனிவரைத் தரிசிக்க விரும்பிய முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்றேன். அந்த சமயத்தில் யாரோ பரமாச்சார்யாரிடம் நான் தமிழ்நாடு அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், நான் காஷ்மீரைச் சேர்ந்தவள் என்றும் சொல்லி இருக்கலாம் என்றும் நான் நினைக்கிறேன். திடீரென அவர் எனக்குத் தமிழ் நன்கு தெரியுமா என்று கேட்டார். நான் நன்கு தமிழ் அறிவேன் என்று தெரிவித்தேன். உடனே அவரது உதவியாளரிடம் ஏதோ சொல்ல அவர் உள்ளே ஓடி உடனடியாக ஒரு தட்டு நிறைய வாழைப் பழங்களுடன் வந்தார். பரமாச்சார்யார் தட்டை சுட்டிக்காட்டி அந்தப் பழத்தின் பெயரைக் கேட்டார்.
நான் ‘பழம்’ என்றேன்.
“ஆம், என்ன பழம்?” என்றார்.
“பச்சை வாழைப்பழம்” என்றேன்.
நான் நிம்மதியாகப் பெருமூச்சு விடுவதற்குள் என் முன்னால் இன்னொரு தட்டு வாழைப்பழம் வைக்கப்பட்டது. அதைப்பார்த்து விட்டு நான் “ரஸ்தாளிப் பழம்” என்றேன். அடுத்து இன்னொரு தட்டு வந்தது. “மலைவாழை” என்று சொன்னேன். அடுத்த வினாடியே இன்னொரு தட்டு வருகை தந்தது! அதிர்ஷ்டவசமாக அதை நான் புரிந்து கொண்டு “பூவன் பழம்” என்றேன். அடுத்த தடவைதான் நான் பெரும் தொந்தரவில் இருந்தது எனக்கு உறைத்தது. இந்த மண்ணில் விளையும் அத்தனை வாழைப் பழங்களின் பெயரையும் சொல்வது எனக்குச் சாத்தியமானதாக இல்லை. ஒவ்வொன்றாகத் தட்டுகள் வந்து கொண்டிருந்தபோது யாரும் நான் தோற்றுப் போக விரும்பவில்லை. ஆகவே அவரது அடியவர்கள் பக்கத்தில் இருந்து எனக்கு ஜாடையாகத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். கடுமையான ஆனால் ஆரவாரமான இந்தச் சோதனை முடிந்த பிறகு, நான் தமிழ்த் தேர்வில் வெற்றிபெற்று விட்டதாகப்பெரியவர் பிரகடனம் செய்தார். எப்போதுமே இப்படி பரமாச்சார்யார் தமது நகைச்சுவை உணர்வை மனப்பூர்வமாக வெளிப்படுத்துவதில்லை. அதனால் அன்று நிறைந்திருந்த கூட்டம், அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில் தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தனர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.