|
Post by Sumi on Mar 2, 2012 8:58:15 GMT 5.5
பாதுகாப்பாள் பராசக்தி
* நம் உடல் சுத்தமாக, தண்ணீரில் குளிக்கிறோம், ஆனால், அம்பிகையைத் தியானித்தால், தியானம் என்ற அந்த புனித நீரில் நம் மனமும் சுத்தமாகிறது.
* பசியோ, கஷ்டமோ தாங்க முடியாமல் போனால் "அம்மா' என்று கத்தி கண்ணீர் விடுகிறோம். காரணம் உலகத்துக்கெல்லாம் தாயாக விளங்கும் பராசக்தி ஓடிவந்து நம் துயரை நீக்குவாள் என்ற நம்பிக்கையே.
* சஞ்சலமாகிய சேற்றிலிருந்து எழவேண்டும் என்றால், கரையில் இருக்கும் ஈஸ்வரன் என்ற கெட்டியான பொருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* மெய், வாக்கு, மனம், பணம் இவற்றால் நாம் பாவம் செய்கிறோம். இவற்றால் நல்ல செயல்கள் செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.
* அன்பு தான் அழகு, காருண்யம் தான் லாவண்யம். ஒரு நாள் ஜுரம் அடித்தால், சிறிது கோபதாபம் வந்தால் முகத்தின் அழகு போய்விடுகிறது. ஆனால், அம்பாளின் அருளைப் பெற்றால் அதன் அழகு மறையாமல் நிற்கிறது.
|
|
|
Post by krsiyer on Mar 3, 2012 15:28:46 GMT 5.5
His Greatness ! Thanks for sharing. Jaya Jaya Sankara, Hara Hara Sankara !
|
|