Post by anusham163 on Apr 15, 2013 12:26:34 GMT 5.5
விநாயகருடைய வடிவம் என்பதே, வடமொழியில் ‘ஆத்ம ஸ்வரூபம்’ என்று கூறப்பெறுகிற பேரறிவுடலாகும். இந்த அறிவு மயமான உடலிலே மூலாதாரக் கனலை இயக்குகின்ற மண்டல வட்டமே தங்கத்தால் ஆகிய அரைஞாண் ஆகும். இந்த உடலை இதன் மருங்கில் இருக்கும் ஒளி உடல் ஆளுகிறது. அந்த ஒளி உடல் பூந்துகில் ஆடைபோன்று பரவுடலின் மீது மருங்குசுற்றி அமைந்திருக்கிறது. மூலக்கனல் அதனுடைய இயக்கத்திலே மாற்றம் அடைந்து தொழிற்படும்போது, ஒளி உடலிலே பொலிவு முழுமை பெற்று அதன் ஆற்றலிலே ஏறிப் பாய்கிறது. அப்போது அந்த அறிவுமயமான நுண் உடலில் ஒளித்துகள்கள் வெளியே தெறிக்கின்றன. அந்தத் தெறிக்கும் நிலையை அழகு எரிக்கும் நிலை என்று செய்யுள் பாடுகின்றது..
இன்றைய விஞ்ஞானிகள், இன்றைய நுண்கருவிகளைக் கொண்டு இக்காலத்து அறிவியல் ஆற்றலை ஆராய்ந்து வருகிறார்கள். அண்மையில் நமது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ நிபுணர், மனித உடம்பின் மருங்கிலே மன்னி நிற்கிற ஒளி உடலைப் படம் பிடித்து ஆராய்வதற்குரிய ஒரு பெரிய விஞ்ஞான உத்தியை நவீன முறையில் வளர்த்துள்ளார். இந்த முறையின்படி மனிதனுடைய பரு உடலுக்குக் கேடு வருவதற்கு முன்பே, ஒளி உடலில் அதன் அறிகுறியைக் கண்டுபிடித்து விடலாம் என்று தமது ஆராய்ச்சியை வெளியிட்டிருக்கிறார். அதாவது பரு உடலை ஆராய்ந்தோமானால் அதை ஏற்கெனவே பீடித்துள்ள நோயைத்தான் கண்டுபிடிக்க முடியும். உடம்புக்குள்ளே புகுந்துள்ள திருடனைக் கண்டுபிடிப்பது போல, எக்ஸ்ரே போன்ற நுண்ணொளிக் கருவிகள் மூலம் கண்டு பிடிக்கிறோம். ஆனால் திருடனை ஒளி உடல் நமக்கு முங்கூட்டியே காட்டி விடுகிறது.
மிகப்பெரிய நோய்கள் மனித உடம்பை அணுக முனைகின்றன என்பதை, அவை அணுகுவதற்கு முன்பே கண்டுபிடிக்க வேண்டுமானால், ஒளி உடலைத்தான் படம் எடுக்க வேண்டும்; பரு உடலின் எக்ஸ்ரே படம் முன்னெச்சரிக்கையை அறிவிப்பது இல்லை. இதுவே அண்மைக்காலத்து மாபெரும் கண்டுபிடிப்பாகும்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால், ஒலி உடலானது பொலிவைக் கதிர் வீச்சுகளாகத் தெறிக்க அல்லது எரிக்கத் தொடங்கிவிட்டால், அந்த ஒளி உடம்பிற்குரிய பரு உடலானது பேரறிவின் மயமான தூய புரியட்டமாக மாறிவிட்டது என்பதே!
சாதாரண மனித உடம்புக்கே இந்த விதி பொருந்துமானால், இன்னும் எத்தனை மடங்கு பெரிதாக இந்த உண்மை இறைவடிவுக்குப் பொருந்தும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதைத்தான் ‘பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்’ வளர்ந்து அழகை எரிப்பதாக அவ்வையார் பாடுகின்றார்.
தொடரும்………….