|
Post by Sumi on Feb 25, 2012 12:38:51 GMT 5.5
புராணப்படிப்பு வேண்டும்
* நல்லது கெட்டது பற்றி பாடம் கற்பிக்காமல், காலவாரியாக பல ராஜாக்கள் சண்டைபோட்டதை சரித்திரம் என்ற பெயரால் கற்றுக் கொடுப்பதில் எந்த பயனுமில்லை. வாழ்க்கைக்கு பயன்படும் படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம்.
* புராணங்கள் பாவ புண்ணியங்கள் தொடர்பாக மக்களுக்கு பாடம் கற்பித்து, அவர்களை தர்மத்திடம் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் தேர்வு செய்து தருகிறது. தர்மசாலிகளாக இருந்து அந்த ஜன்மாவிலேயே உயர்வடைந்தவர்கள் அல்லது தர்மத்தை விட்டதால், அந்தப் பிறவியிலேயே கெடுதல் அடைந்தவர்களின் கதைகளே புராணங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
* நல்லவர்களாக இருந்து நல்ல செயல்களை செய்து நன்மை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியே இருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். தற்கால வரலாற்றைப் படிப்பதால் ஆத்மலாபத்தை அடைய முடியாது. புராண படிப்பால் தான் நல்லது கெட்டதை உணர்ந்து கொள்ள முடியும்.
|
|
|
Post by krsiyer on Feb 25, 2012 14:58:46 GMT 5.5
Good, thanks for sharing. His Greatness ! Jaya Jaya Sankara, Hara Hara Sankara !
|
|