Post by uma2806 on Apr 1, 2013 12:20:08 GMT 5.5
மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : ஸ்ரீமடம் பாலு
பக்கம் : 100, 101
கமால் ஜூம்லெட் என்ற லெபனான் நாட்டு அமைச்சர், மஹாபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர். அத்வைத தத்துவக் கோட்பாடுகளை சென்னை, மும்பை மற்றும் கேரளாவிலிருந்த பல மகாபண்டிதர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்.
அவர், பெரியவாளைத் தரிசிக்க வரும்போது, இஸ்லாமிய சம்பிரதாயப்படி, “சலாமாலேகும்” என்று சொல்லி வணக்கம் தெரிவிப்பார்.
ஒரு தடவை, பல கூடைகளில் மாதுளை, ஆப்பிள் என்று வகைவகையான பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.
பெரியவாள் ஒரு மாதுளையைக் கையில் எடுத்துப் புரட்டிப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். அதாவது கமால் ஜூம்லெட் சமர்ப்பித்தவைகளை தான் ஏற்றுக் கொண்டுவிட்டதை அவருக்கு உணர்த்தி, அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்து கொண்டிருந்தார்கள்!
கமாலின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. பெரியவாளும், ஸ்ரீமடத்துத் தொண்டர்களும் மிக உயர்ந்த ரக மாதுளை – ஆப்பிள்களை சாப்பிடப் போகிறார்கள் என்ற நினைப்பே அவருக்கு அமுதமாய் இனித்தது.
பெரியவாள், “இதுகளெல்லாம் ரொம்ப ஒசத்தியோன்னு அவரைக் கேளு” என்றார்கள்.
“ஆமாம், ஆமாம்! இவைகளை விட உயர்ந்த ரகம் எங்கேயும் இல்லை…”
பெரியவா, ஒரு தொண்டரை அருகில் அழைத்தார்கள்.
“பக்கத்திலே ஹரிஜன் காலனி ஏதாவது இருக்கோ”
“இருக்கு… பத்து நிமிஷ நடை தூரம்…”
“எல்லாக் கூடையையும் எடுத்துண்டு போய், அங்கே உள்ள எல்லோருக்கும் கொடுத்துட்டு வா. காலி கூடையையும் அவாகிட்டேயே கொடுத்துடு…”
தொண்டர் தயங்கினார். கமால் எதிரிலேயே அவர் கொண்டுவந்த பழங்களை இப்படித் (துர்)விநியோகம் பண்ணினால், அவர் மனம் நொந்து போகமாட்டாரா என்று எண்ணியிருக்கலாம்.
பெரியவாள் : “அவாளெல்லாம் பரம ஏழைகள். இந்த மாதிரிப் பழங்களையெல்லாம் பார்த்துக்கூட இருக்கமாட்டா…. அவா சாப்பிடட்டும்.”
இந்த சம்பாஷணை, சமிக்ஞைகளைக் கேட்டுக் கொண்டிருந்த கமால், சிஷ்யரிடம், “வாட்?” என்று கேட்டார். சிஷ்யர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், “இந்தப் பழங்கள் எல்லாவற்றையும் பரம ஏழைகளுக்கு விநியோகம் செய்யும்படி பெரியவாள் ஆக்ஞை” என்றார்.
கமாலின் உள்ளம் கொதித்தது. (மன்னிக்கவும். கமாலின் உள்ளம் குதித்தது; களித்தது).
“ஓ! அல்லாஹ்… அல்லாஹ்…. அல்லாஹ்…” என்று இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு, பரவசமாகக் கத்தினார்.
பெரியவாள், அல்லா மட்டுமல்ல; எல்லாமாக இருப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
நினைவு கூர்ந்தவர் : ஸ்ரீமடம் பாலு
பக்கம் : 100, 101
கமால் ஜூம்லெட் என்ற லெபனான் நாட்டு அமைச்சர், மஹாபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர். அத்வைத தத்துவக் கோட்பாடுகளை சென்னை, மும்பை மற்றும் கேரளாவிலிருந்த பல மகாபண்டிதர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்.
அவர், பெரியவாளைத் தரிசிக்க வரும்போது, இஸ்லாமிய சம்பிரதாயப்படி, “சலாமாலேகும்” என்று சொல்லி வணக்கம் தெரிவிப்பார்.
ஒரு தடவை, பல கூடைகளில் மாதுளை, ஆப்பிள் என்று வகைவகையான பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.
பெரியவாள் ஒரு மாதுளையைக் கையில் எடுத்துப் புரட்டிப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். அதாவது கமால் ஜூம்லெட் சமர்ப்பித்தவைகளை தான் ஏற்றுக் கொண்டுவிட்டதை அவருக்கு உணர்த்தி, அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்து கொண்டிருந்தார்கள்!
கமாலின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. பெரியவாளும், ஸ்ரீமடத்துத் தொண்டர்களும் மிக உயர்ந்த ரக மாதுளை – ஆப்பிள்களை சாப்பிடப் போகிறார்கள் என்ற நினைப்பே அவருக்கு அமுதமாய் இனித்தது.
பெரியவாள், “இதுகளெல்லாம் ரொம்ப ஒசத்தியோன்னு அவரைக் கேளு” என்றார்கள்.
“ஆமாம், ஆமாம்! இவைகளை விட உயர்ந்த ரகம் எங்கேயும் இல்லை…”
பெரியவா, ஒரு தொண்டரை அருகில் அழைத்தார்கள்.
“பக்கத்திலே ஹரிஜன் காலனி ஏதாவது இருக்கோ”
“இருக்கு… பத்து நிமிஷ நடை தூரம்…”
“எல்லாக் கூடையையும் எடுத்துண்டு போய், அங்கே உள்ள எல்லோருக்கும் கொடுத்துட்டு வா. காலி கூடையையும் அவாகிட்டேயே கொடுத்துடு…”
தொண்டர் தயங்கினார். கமால் எதிரிலேயே அவர் கொண்டுவந்த பழங்களை இப்படித் (துர்)விநியோகம் பண்ணினால், அவர் மனம் நொந்து போகமாட்டாரா என்று எண்ணியிருக்கலாம்.
பெரியவாள் : “அவாளெல்லாம் பரம ஏழைகள். இந்த மாதிரிப் பழங்களையெல்லாம் பார்த்துக்கூட இருக்கமாட்டா…. அவா சாப்பிடட்டும்.”
இந்த சம்பாஷணை, சமிக்ஞைகளைக் கேட்டுக் கொண்டிருந்த கமால், சிஷ்யரிடம், “வாட்?” என்று கேட்டார். சிஷ்யர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், “இந்தப் பழங்கள் எல்லாவற்றையும் பரம ஏழைகளுக்கு விநியோகம் செய்யும்படி பெரியவாள் ஆக்ஞை” என்றார்.
கமாலின் உள்ளம் கொதித்தது. (மன்னிக்கவும். கமாலின் உள்ளம் குதித்தது; களித்தது).
“ஓ! அல்லாஹ்… அல்லாஹ்…. அல்லாஹ்…” என்று இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு, பரவசமாகக் கத்தினார்.
பெரியவாள், அல்லா மட்டுமல்ல; எல்லாமாக இருப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!