Post by uma2806 on Mar 25, 2013 11:44:51 GMT 5.5
உரையாசிரியர்: திரு எம். சுப்புராம சர்மா
மூலம் : மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பகுதி
ஒற்றைக்காலில் தரிசனம்
பெல்காம் நகரில் சாதுர்மாஸ்ய விரதம்.
மும்பை வேத ரக்ஷண நிதிக்குழுவினர் (சுமார் 150 பேர்) தரிசனத்துக்கு வருவதாக முன்னதாகவே தகவல் கொடுத்திருந்தோம்.
‘சாதுர்மாஸ்ய விரத’த்தைப் பக்திப் பரவசத்துடன் நடத்திவந்த உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்தார்கள் பெரியவா.
“எனக்காக (வேதத்துக்காக) உழைக்கும் பக்தர்கள் மும்பையிலிருந்து வருகிறார்கள். அவர்களை நல்ல முறையில் வரவேற்க வேணும்…”
பெரியவா ஒரு வார்த்தை சொன்னால் போதாதா!
ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்கெல்லாம் மாலை மரியாதை; வழி நெடுகிலும் தோரணங்கள்! கோலாகலம், உற்சாகம், அமர்க்களம்!
எங்களுக்கெல்லாம் ரொம்பவும் திகைப்பாக இருந்தது. நாங்கள் என்ன முக்கியப் பிரமுகர்களா? கோடீஸ்வரகளா? பலவித அலுவல்கள் செய்துவரும் சாதாரண மக்கள். எங்களுக்கு ஏன் இவ்வளவு தடபுடலான வரவேற்பு?
எங்களில் ஒருவர், உள்ளூர்ப் பிரமுகரைக் கேட்டேவிட்டார்.
“என்னது… ஸ்ரீசரணாளே ஆக்ஞாபித்துவிட்டார்கள். வேத ரக்ஷணத்துக்காகப் படாத பாடுபட்டு, நிதி திரட்டி, எடுத்துக்கொண்டு மும்பையிலிருந்து பக்தர்கள் வருகிறார்கள். வேத மாதாவை ரக்ஷிக்க உழைக்கும் மகாபுண்ணியசாலிகள். அவர்களுக்குத் தக்கபடி மரியாதையுடன் வரவேற்கணும்… நாங்கள் ஏதோ, எங்களால் முடிந்த அளவுக்கு கொஞ்சமாகத்தான் செய்திருக்கிறோம்….”
ஆகா…. இந்தக் கோலாகல வரவேற்பு, வயிற்றைக் கழுவிக் கொள்ள நாங்கள் செய்துவரும் லௌகிக அலுவல்களுக்காக அல்ல; வேதத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் மாபெரும் பணியில் அணில் தொண்டு செய்து வருகிறோமே, அதற்காக…..
இதற்கெல்லாம் காரணம் பெரியவாளுடைய எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம் மட்டுமல்ல, இதற்கெல்லாம் மேலே மேலே இருக்கக்கூடிய மகத்தான ஓர் இயல்பு – தெய்வாம்சம்.
முகாம் இருந்த இடத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். நீராடல் முதலியன முடித்துக்கொண்டு, பெரியவாள் தரிசனம் கொடுக்கும் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு, தைத்ரீய உபநிஷத் பாராயணம் செய்யத் தொடங்கினோம். ஸ்ரீ ஸ்வாமிகள் மண்டபத்திற்குள் நேராக வராமல், மண்டபத்தைச் சுற்றிவரத் தொடங்கினார்கள். எங்களுக்கெல்லாம் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஏன் எங்களைக் கண்டு கொள்ளாமல் – எங்கள் பாராயணத்தைக் கேட்காமல் – சுற்றிக்கொண்டு போகிறார்களே… எங்கே?
நாங்கள் என்ன ஏமாந்த சோணகிரிகளா? அவர்களை விட்டுவிடுவோமா? உடனே மண்டபத்திலிருந்து எல்லோரும் எழுந்து, பெரியவா சுற்றிவரும் வழியில், வராந்தாவில் போய் நின்றுகொண்டு உபநிஷத் பாராயணத்தைத் தொடர்ந்தோம்.
என்ன துரதிர்ஷ்டம்!
பெரியவா எங்களைப் பார்த்ததும், வராந்தாவிலிருந்து இறங்கி – எங்களைத் தவிர்ப்பது போல் – கீழே இறங்கி மண்டபத்தை வலம் வருவதுபோல் சுற்றி நடக்க ஆரம்பித்தார்கள்.
என்ன செய்வது? மறுபடியும் மண்டபத்துக்கே வந்து, பாராயணத்தைத் தொடர்ந்து நடத்தினோம்.
ஆச்சரியம்! பெரியவா, அந்த மண்டபத்தை வலம் வந்துவிட்டு, வழக்கமாகத் தரிசனம் கொடுக்கும் இடத்துக்கு வந்து, சுவரில் சாய்ந்து, ஒற்றைக்காலால் நின்றபடியே, மும்பைக்குழுவின் தலைவர் ஸ்ரீகோகுலம் அவர்களை அருகில் அழைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு ஒவ்வொருவராக அழைத்து, சுமார் ஒன்றரை மணிநேரம் ஒற்றைக்காலில் நின்ற நிலையிலேயே எங்களுக்கு அநுக்ரஹம் செய்தார்கள்.
ரொம்பவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
ஆனால், ‘உபநிஷத் பாராயணம் செய்த மண்டபத்துக்குள் ஏன் நேராக வரவில்லை? நாங்கள் என்ன தவறு செய்தோம்?’ என்ற ஆதங்கம் மறையவில்லை.
வேத பாராயணம் செய்பவர்களையும், அது நடக்கும் இடத்தையும் பிரதட்க்ஷிணம் செய்ய வேண்டும். அதனால்தான், அந்த மண்டபத்தையே வலமாக வந்தார்கள்.
ஒற்றைக்காலால் தவம் செய்வதுபோல் நிற்பானேன் என்றால், அப்படி நின்று அநுக்ரஹம் செய்வதன் மூலம், வேதபாராயணம் செய்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும், பலவகையில் உதவி செய்தவர்களுக்கும் க்ஷேமம் உண்டாகும் என்று பின்னர் தெரிந்துகொண்டு மிகவும் சமாதானம் அடைந்தோம்.
பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர்.
வேதமாதா அவர்களை அவ்வளவு தீவிரமாக ஆட்கொண்டிருந்தாள்.
தரிசனம் முடிந்தவுடன் எங்கள் எல்லோரிடமும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுடன் மும்பை வழக்கறிஞர், ஸ்ரீவித்யா உபாஸகர், குஜராத்திக்காரர் ஆர்.ஸி.அஞ்ஜாரியா என்பவரும் வந்திருந்தார். அவரை ஸ்ரீஸுக்தம் சொல்லும்படி ஆணையிட்டு, அதைக் கேட்டு ரசித்தார்கள் பெரியவா.
டாக்டர் கிரிதாரி சர்மா என்ற ஒரு மார்வாரிக்காரர் சுக்ல யஜுர்வேதம் மாத்யந்தின சாகையைச் சேர்ந்தவர். தன் சாகையை அத்யயனம் செய்தவர். பிரபலமான இருதய நோய் நிபுணராக இருந்தாலும், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரு புதல்வர்களுக்கும் வீட்டிலேயே வேதாத்யயனம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய புத்திரர்களுக்கு வேதம் கற்பிக்கும் ஆசிரியரும் வந்திருந்தார். அவர்கள் சாகையிலிருந்து ஒரு பகுதியை பாராயணம் சொல்லக்கேட்டு ஆனந்தித்தார்கள் பெரியவாள். வேத அத்யாபகருக்கு உயர்ந்த சால்வையைப் போர்த்தச் செய்து பாராட்டினார்கள்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
மூலம் : மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பகுதி
ஒற்றைக்காலில் தரிசனம்
பெல்காம் நகரில் சாதுர்மாஸ்ய விரதம்.
மும்பை வேத ரக்ஷண நிதிக்குழுவினர் (சுமார் 150 பேர்) தரிசனத்துக்கு வருவதாக முன்னதாகவே தகவல் கொடுத்திருந்தோம்.
‘சாதுர்மாஸ்ய விரத’த்தைப் பக்திப் பரவசத்துடன் நடத்திவந்த உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்தார்கள் பெரியவா.
“எனக்காக (வேதத்துக்காக) உழைக்கும் பக்தர்கள் மும்பையிலிருந்து வருகிறார்கள். அவர்களை நல்ல முறையில் வரவேற்க வேணும்…”
பெரியவா ஒரு வார்த்தை சொன்னால் போதாதா!
ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்கெல்லாம் மாலை மரியாதை; வழி நெடுகிலும் தோரணங்கள்! கோலாகலம், உற்சாகம், அமர்க்களம்!
எங்களுக்கெல்லாம் ரொம்பவும் திகைப்பாக இருந்தது. நாங்கள் என்ன முக்கியப் பிரமுகர்களா? கோடீஸ்வரகளா? பலவித அலுவல்கள் செய்துவரும் சாதாரண மக்கள். எங்களுக்கு ஏன் இவ்வளவு தடபுடலான வரவேற்பு?
எங்களில் ஒருவர், உள்ளூர்ப் பிரமுகரைக் கேட்டேவிட்டார்.
“என்னது… ஸ்ரீசரணாளே ஆக்ஞாபித்துவிட்டார்கள். வேத ரக்ஷணத்துக்காகப் படாத பாடுபட்டு, நிதி திரட்டி, எடுத்துக்கொண்டு மும்பையிலிருந்து பக்தர்கள் வருகிறார்கள். வேத மாதாவை ரக்ஷிக்க உழைக்கும் மகாபுண்ணியசாலிகள். அவர்களுக்குத் தக்கபடி மரியாதையுடன் வரவேற்கணும்… நாங்கள் ஏதோ, எங்களால் முடிந்த அளவுக்கு கொஞ்சமாகத்தான் செய்திருக்கிறோம்….”
ஆகா…. இந்தக் கோலாகல வரவேற்பு, வயிற்றைக் கழுவிக் கொள்ள நாங்கள் செய்துவரும் லௌகிக அலுவல்களுக்காக அல்ல; வேதத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் மாபெரும் பணியில் அணில் தொண்டு செய்து வருகிறோமே, அதற்காக…..
இதற்கெல்லாம் காரணம் பெரியவாளுடைய எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம் மட்டுமல்ல, இதற்கெல்லாம் மேலே மேலே இருக்கக்கூடிய மகத்தான ஓர் இயல்பு – தெய்வாம்சம்.
முகாம் இருந்த இடத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். நீராடல் முதலியன முடித்துக்கொண்டு, பெரியவாள் தரிசனம் கொடுக்கும் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு, தைத்ரீய உபநிஷத் பாராயணம் செய்யத் தொடங்கினோம். ஸ்ரீ ஸ்வாமிகள் மண்டபத்திற்குள் நேராக வராமல், மண்டபத்தைச் சுற்றிவரத் தொடங்கினார்கள். எங்களுக்கெல்லாம் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஏன் எங்களைக் கண்டு கொள்ளாமல் – எங்கள் பாராயணத்தைக் கேட்காமல் – சுற்றிக்கொண்டு போகிறார்களே… எங்கே?
நாங்கள் என்ன ஏமாந்த சோணகிரிகளா? அவர்களை விட்டுவிடுவோமா? உடனே மண்டபத்திலிருந்து எல்லோரும் எழுந்து, பெரியவா சுற்றிவரும் வழியில், வராந்தாவில் போய் நின்றுகொண்டு உபநிஷத் பாராயணத்தைத் தொடர்ந்தோம்.
என்ன துரதிர்ஷ்டம்!
பெரியவா எங்களைப் பார்த்ததும், வராந்தாவிலிருந்து இறங்கி – எங்களைத் தவிர்ப்பது போல் – கீழே இறங்கி மண்டபத்தை வலம் வருவதுபோல் சுற்றி நடக்க ஆரம்பித்தார்கள்.
என்ன செய்வது? மறுபடியும் மண்டபத்துக்கே வந்து, பாராயணத்தைத் தொடர்ந்து நடத்தினோம்.
ஆச்சரியம்! பெரியவா, அந்த மண்டபத்தை வலம் வந்துவிட்டு, வழக்கமாகத் தரிசனம் கொடுக்கும் இடத்துக்கு வந்து, சுவரில் சாய்ந்து, ஒற்றைக்காலால் நின்றபடியே, மும்பைக்குழுவின் தலைவர் ஸ்ரீகோகுலம் அவர்களை அருகில் அழைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு ஒவ்வொருவராக அழைத்து, சுமார் ஒன்றரை மணிநேரம் ஒற்றைக்காலில் நின்ற நிலையிலேயே எங்களுக்கு அநுக்ரஹம் செய்தார்கள்.
ரொம்பவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
ஆனால், ‘உபநிஷத் பாராயணம் செய்த மண்டபத்துக்குள் ஏன் நேராக வரவில்லை? நாங்கள் என்ன தவறு செய்தோம்?’ என்ற ஆதங்கம் மறையவில்லை.
வேத பாராயணம் செய்பவர்களையும், அது நடக்கும் இடத்தையும் பிரதட்க்ஷிணம் செய்ய வேண்டும். அதனால்தான், அந்த மண்டபத்தையே வலமாக வந்தார்கள்.
ஒற்றைக்காலால் தவம் செய்வதுபோல் நிற்பானேன் என்றால், அப்படி நின்று அநுக்ரஹம் செய்வதன் மூலம், வேதபாராயணம் செய்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும், பலவகையில் உதவி செய்தவர்களுக்கும் க்ஷேமம் உண்டாகும் என்று பின்னர் தெரிந்துகொண்டு மிகவும் சமாதானம் அடைந்தோம்.
பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர்.
வேதமாதா அவர்களை அவ்வளவு தீவிரமாக ஆட்கொண்டிருந்தாள்.
தரிசனம் முடிந்தவுடன் எங்கள் எல்லோரிடமும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுடன் மும்பை வழக்கறிஞர், ஸ்ரீவித்யா உபாஸகர், குஜராத்திக்காரர் ஆர்.ஸி.அஞ்ஜாரியா என்பவரும் வந்திருந்தார். அவரை ஸ்ரீஸுக்தம் சொல்லும்படி ஆணையிட்டு, அதைக் கேட்டு ரசித்தார்கள் பெரியவா.
டாக்டர் கிரிதாரி சர்மா என்ற ஒரு மார்வாரிக்காரர் சுக்ல யஜுர்வேதம் மாத்யந்தின சாகையைச் சேர்ந்தவர். தன் சாகையை அத்யயனம் செய்தவர். பிரபலமான இருதய நோய் நிபுணராக இருந்தாலும், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரு புதல்வர்களுக்கும் வீட்டிலேயே வேதாத்யயனம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய புத்திரர்களுக்கு வேதம் கற்பிக்கும் ஆசிரியரும் வந்திருந்தார். அவர்கள் சாகையிலிருந்து ஒரு பகுதியை பாராயணம் சொல்லக்கேட்டு ஆனந்தித்தார்கள் பெரியவாள். வேத அத்யாபகருக்கு உயர்ந்த சால்வையைப் போர்த்தச் செய்து பாராட்டினார்கள்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!