|
Post by Sumi on Mar 6, 2013 14:25:31 GMT 5.5
காஞ்சிபுரத்தில் பெரியவா தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஸுமங்கலி பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் ஏதோ விண்ணப்பம் குடுக்க நினைத்தவள் போல அவருக்கு அருகிலேயே ஒதுங்கி நின்றாள். பெரியவா, என்ன வேணும்? என்பது போல் அவளைப் பார்த்தார். நிஜமாகவே மனஸ் உருகி ஒரு ப்ரார்த்தனையை அவரிடம் வேண்டினாள்...... "பெரியவா.......நா, தீர்க்க ஸுமங்கலியா இருக்கணும்...... பெரியவாதான் அநுக்ரஹம் பண்ணணும் " சுற்றி இருந்தவர்களும் மனஸை கூராக்கிக் கொண்டு பெரியவாளின் திருவாக்கை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். "ஒங்காத்துக்கு யார் வந்து கேட்டாலும், வயறு நெறைய்..ய சாப்பாடு போடு! தீர்த்தம் குடு! பிச்சைக்காரா வந்து கேட்டா... கட்டாயமா அவாளுக்கு தர்மம் பண்ணு!...... நீ தீர்க்க ஸுமங்கலியா இருப்பே!.." திருக்கரத்தை தூக்கி ஆசிர்வாதம் பண்ணிவிட்டு, குங்குமப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். அந்த அம்மாவுக்கோ பரம ஸந்தோஷம்! "கட்டாயம்.....அப்டியே பண்றேன் பெரியவா......." சொன்னவாறு செய்யவும் செய்தாள். தன்னுடைய எண்பத்தாறாவது வயஸில் ஸுமங்கலியாக சிவலோக ப்ராப்தி அடைந்தாள். "நம்ம வீடுகளுக்கு யார் வந்தாலும், அவாளுக்கு வயறு நன்னா நெறையற மாதிரி, முகம் சுளிக்காம, சந்தோஷமா சாப்பாடு போட்டாலும், தர்மம்ன்னு யார் வந்தாலும் நம்மால முடிஞ்சதை தாராளமா குடுத்தாலும்.... இகலோக சௌக்யமும், பரலோக சௌக்யமும் நிச்சயமா கெடைக்கும்!.." இது பெரியவாளுடைய அருள்வாக்கு. தன்னுடைய பக்தர்களிடமும் அடிக்கடி இதை வலியுறுத்துவார். Source: Facebook
|
|
|
Post by krsiyer on Mar 6, 2013 16:45:06 GMT 5.5
great - thanks for sharing ! Jaya jaya sankara, hara hara sankara !
|
|