|
Post by madambakkamshanks on Feb 18, 2013 21:59:48 GMT 5.5
உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே (உனைப் பாடும் தொழிலன்றி வேறு இல்லை - மெட்டு )
உனைத் தேடி வந்தேனே காஞ்சியிலே எனைக் காத்து அருளுவாயே மாமுனியே உனைக் காண உயர்வோமே வாழ்வினிலே உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே பெரியவா... மஹா பெரியவா . . .
காஞ்சியில் அமர்ந்திட்ட காலடி சங்கரா - நீ வாஞ்சையுடன் அருள்புரியும் காமாக்ஷி சங்கரா செஞ்சுடர் முகம் அதனில் புன்சிரிப்பே என்றும் அஞ்சிடும் பக்தருக்கு ஆர்ப்பரிப்பே
நெஞ்சம்முழுதும் சஞ்சலம் கொண்டு தவித்தேனே - நீ பஞ்சாய் அவற்றை பறக்கச் செய்வாயே தஞ்சம் அடைந்திட்ட பக்தருக் கருளும் தயாபரனே - நீ மஞ்சள் மாலை வெய்யிலாய் அருளும் மகேஸ்வரனே
அஞ்ஞான இருளை நீக்க வந்த ஆதவனே - நீ விஞ்ஞானத்தால் மெய்ஞானம் வளர்த்த வேதியனே நஞ்சை உண்ட நீலகண்டனாய் காப்பவனே - நீ பஞ்சை போல் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டியவா
மஞ்சத்தை தவிர்த்து காஞ்சியில் அமர்ந்த குருபரனே - எங்கள் நெஞ்சத்தை கொள்ளை கொண்ட நஞ்சுண்ட கண்டனே செஞ்சுடர் வண்ண காவி உடுத்திய செந்தாமரையே - நீ வெஞ்சுடர் நெற்றியில் வெண்ணீறு பூசிய வெள்ளி நிலவே
பிஞ்சு மனத்தால் பிதற்றிட உடன் அருள் புரிபவனே - உன் அஞ்சு விரலால் அஞ்சும் நெஞ்சிற்கு அபயம் அளிப்பவனே பஞ்சு திரியாய் வாழ்ந்து பகலில் ஒளி தந்தவா - உன் பிஞ்சு நெஞ்சம் சொன்னதை பஞ்சாய் பற்றிட முயல்வோமே
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 18.02.2013
"Life without God is like an unsharpened pencil - it has no point."
Happy moments, praise God. Difficult moments, seek God. Quiet moments, worship God. Painful moments, trust God. Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். ♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
|
|
|
Post by Sumi on Feb 19, 2013 9:09:02 GMT 5.5
Outstanding! There is so much bhakti and devotion in the song.
Thank you very much for sharing.
|
|
|
Post by nyogeshwaran on Feb 19, 2013 10:03:43 GMT 5.5
Very touching .
|
|
|
Post by Kanchi Periva on Feb 19, 2013 14:39:34 GMT 5.5
Excellent, thanks for sharing
|
|