|
Post by Sumi on Feb 15, 2012 8:08:44 GMT 5.5
நடப்பது இறைவன் செயல்
* ஒருவருக்கு ஆனந்தத்தை தரும் சம்பவம் மற்றொருவருக்கு துக்கத்தை தருகிறது. எது நடக்க வேண்டுமோ அது இறைவன் செயல் என்று நினைப்பதே சரியாகும்.
* உடல், வாய், மனம், பணம் என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம். பாவத்திற்கு பிராயச்சித்தமாக அந்த நான்காலும் புண்ணியம் செய்ய வேண்டும். உடலால் பரோபகாரம், வாயால் தெய்வ நாமத்தைச் சொல்வது, மனதால் தியானம், பணத்தால் தர்மம் முதலியவை செய்ய வேண்டும்.
* சம்பாதிப்பதாலும், வேண்டாத பொருட்களை தேடிப்போவதாலும் காலவிரயம் ஏற்படுகிறது. இதனால் ஆத்மசாந்தி குலைகிறது. நாம் உயிர்வாழ இந்த பொருள் அவசியம்தானா என கணக்கு பார்த்து செலவழிப்பதே உண்மையில் கணக்காயிருப்பதாகும்.
* குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் அடையும்.
* ஆசையின்றி ஒரு செயலைச் செய்தால் பாவமில்லை. ஆசைப்பட்டு செய்வது தான் பாவம். நமக்காக இல்லாமல் பிறருக்காக செய்யும் செயலே உயர்ந்தது.
|
|
|
Post by krsiyer on Feb 15, 2012 11:20:45 GMT 5.5
Jaya Jaya Sankara, Hara Hara Sankara !
|
|