Post by Sumi on Jan 20, 2013 12:02:44 GMT 5.5
Source: Maha Periyavaal Darisana Anubhavangal – Part 4
Author: Shri N. Subramanian
Typed and contributed by our respected Forum member Shri Sankara Narayanan
கோபாலபுரத்தில், எங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள் ஒரு பெரிய மாமரம் இருந்தது. உருவத்தில்தான் ‘மா’ (பெரிய) வே தவிர, ஒரு பூ கூட பூத்ததில்லை. பூவே இல்லை என்னும்போது, வடுவாவது, காயாவது ?
‘வெட்டிவிடலாம்’ என்ற எண்ணம் தலைதூக்கியது. பல வருஷங்களாக இருப்பதுடன் குளீந்த நிழலும் காற்றும் கொடுத்து வந்ததால், வெட்டுவதற்கு மனமும் வரவில்லை. ஆனால், ஒரு மாவடு கூடக் கொடுப்பதில்லையே ? உபயோகமில்லாத அந்த மரத்தை வெட்டி விட்டு, வேறொருமாங்கன்றை வைத்து வளர்த்தால், நல்ல பலன் கிடைக்குமே?
இப்படியெல்லாம் சிந்தனைப் போராட்டம்!
1964 – ஆம் ஆண்டு மகாப் பெரியவாள் சென்னைக்கு விஜயம் செய்தார்கள்.
கோபாலபுரம் அன்பர்களின் வேண்டுகோளின்படி, அந்தப் பகுதிக்கும் வருகை தந்தார்கள். எங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பயனாக, எங்கள் கிருஹத்தில் நான்கு நாள்கள் தங்கினார்கள்.
காலை முதல், மாலை வரை ஜே, ஜே என்று கூட்டம். எல்லா பக்தர்களுக்கும் தரிசனம் கொடுப்பதற்கு வசதியாக, அந்த மாமரத்தடியில் – கல்லால மரத்தின் கீழ் தக்ஷிணா மூர்த்தி வீற்றிருந்ததைப் போல அமர்ந்து கொண்டு சம்பாஷணைகள் செய்தார்கள். மரத்தின் நிழலிலும் காற்றிலும் தெய்வீகப் பொலிவுடன் உட்கார்ந்து கொண்டு அன்பர்களைக் கடாக்ஷித்தார்கள்; சில சமயங்களில், அங்கேயே ஓய்வும் எடுத்துக்கொண்டார்கள்.
‘பூத்துக் காய்க்காத மரம்’ என்று ஏச்சுக்கு உள்ளான அதே மரம், இப்போது கைலாசபதிக்கு உகந்த இடமாயிற்று.
அந்த மரம் இல்லாதிருந்தால், தென்னங்கீற்றுப் பந்தல் போட்டிருக்கலாம்தான். ஆனால், இந்த இயற்கைச் சூழல் தோன்றியிருக்காது.
முகாம் குடிந்து, பெரியவா வேறொரு பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், அவர்களுடைய திருவடிகள் பதிந்த சுவடுகள், மாமரத்தின் அடியிலிருந்து மறையவில்லை.
என்ன ஆச்சரியம் ! அந்த வருஷம் மாம்பழக் காலத்தில், அந்த மாமரத்தில் ஏராளமான பூக்கள்; வடுக்கள்; காய்கள்; பழங்கள் ....
பழச்சுவையோ, தேன்சுவை !
எங்கள் தெருவில், அந்த மரத்தின் பழங்களை சுவைக்காதவர்களே இல்லை.
மாங்காய்ப் பழுத்ததும், மகாப் பெரியவாளுக்கு ஒரு கூடை நிறைய அர்ப்பணம் செய்துவிட்டுப் பின்னர் வினியோகம் செய்வதை வழக்கமாக கொண்டோம்.
எங்கள் தகப்பனாரால் செல்லமாகப் போற்றப்பட்ட அந்த மரம், நாற்பது வருடங்கள் கனியைக் கொடுத்தது.
என் தகப்பனார் மறைந்தார். எங்களுக்கும் உறவினர்களுக்கும் துயரம். ஆனால், மகாஸ்வாமிகளின் உரம் செறிந்த பாதங்கள் பட்ட பின்னர், உயிர்த்தெழுந்த அந்த மரத்துக்கும் துயரம் தாளவில்லை போலும் !. சிறுகச் சிறுக, தன் சக்தியை இழந்து, எங்கள் தகப்பனார் வருஷாப்தீகத்துக்குள், அவரையே பின்பற்றிச் சென்று விட்ட்து.
பெரியவாளின் திருப்பாதங்கள், அறத்தின் திருபாதங்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், அவை, உரம் செறிந்த பாதங்கள் என்பதை, நாங்கள் கண்களாலே கண்டோம்.
Author: Shri N. Subramanian
Typed and contributed by our respected Forum member Shri Sankara Narayanan
கோபாலபுரத்தில், எங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள் ஒரு பெரிய மாமரம் இருந்தது. உருவத்தில்தான் ‘மா’ (பெரிய) வே தவிர, ஒரு பூ கூட பூத்ததில்லை. பூவே இல்லை என்னும்போது, வடுவாவது, காயாவது ?
‘வெட்டிவிடலாம்’ என்ற எண்ணம் தலைதூக்கியது. பல வருஷங்களாக இருப்பதுடன் குளீந்த நிழலும் காற்றும் கொடுத்து வந்ததால், வெட்டுவதற்கு மனமும் வரவில்லை. ஆனால், ஒரு மாவடு கூடக் கொடுப்பதில்லையே ? உபயோகமில்லாத அந்த மரத்தை வெட்டி விட்டு, வேறொருமாங்கன்றை வைத்து வளர்த்தால், நல்ல பலன் கிடைக்குமே?
இப்படியெல்லாம் சிந்தனைப் போராட்டம்!
1964 – ஆம் ஆண்டு மகாப் பெரியவாள் சென்னைக்கு விஜயம் செய்தார்கள்.
கோபாலபுரம் அன்பர்களின் வேண்டுகோளின்படி, அந்தப் பகுதிக்கும் வருகை தந்தார்கள். எங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பயனாக, எங்கள் கிருஹத்தில் நான்கு நாள்கள் தங்கினார்கள்.
காலை முதல், மாலை வரை ஜே, ஜே என்று கூட்டம். எல்லா பக்தர்களுக்கும் தரிசனம் கொடுப்பதற்கு வசதியாக, அந்த மாமரத்தடியில் – கல்லால மரத்தின் கீழ் தக்ஷிணா மூர்த்தி வீற்றிருந்ததைப் போல அமர்ந்து கொண்டு சம்பாஷணைகள் செய்தார்கள். மரத்தின் நிழலிலும் காற்றிலும் தெய்வீகப் பொலிவுடன் உட்கார்ந்து கொண்டு அன்பர்களைக் கடாக்ஷித்தார்கள்; சில சமயங்களில், அங்கேயே ஓய்வும் எடுத்துக்கொண்டார்கள்.
‘பூத்துக் காய்க்காத மரம்’ என்று ஏச்சுக்கு உள்ளான அதே மரம், இப்போது கைலாசபதிக்கு உகந்த இடமாயிற்று.
அந்த மரம் இல்லாதிருந்தால், தென்னங்கீற்றுப் பந்தல் போட்டிருக்கலாம்தான். ஆனால், இந்த இயற்கைச் சூழல் தோன்றியிருக்காது.
முகாம் குடிந்து, பெரியவா வேறொரு பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், அவர்களுடைய திருவடிகள் பதிந்த சுவடுகள், மாமரத்தின் அடியிலிருந்து மறையவில்லை.
என்ன ஆச்சரியம் ! அந்த வருஷம் மாம்பழக் காலத்தில், அந்த மாமரத்தில் ஏராளமான பூக்கள்; வடுக்கள்; காய்கள்; பழங்கள் ....
பழச்சுவையோ, தேன்சுவை !
எங்கள் தெருவில், அந்த மரத்தின் பழங்களை சுவைக்காதவர்களே இல்லை.
மாங்காய்ப் பழுத்ததும், மகாப் பெரியவாளுக்கு ஒரு கூடை நிறைய அர்ப்பணம் செய்துவிட்டுப் பின்னர் வினியோகம் செய்வதை வழக்கமாக கொண்டோம்.
எங்கள் தகப்பனாரால் செல்லமாகப் போற்றப்பட்ட அந்த மரம், நாற்பது வருடங்கள் கனியைக் கொடுத்தது.
என் தகப்பனார் மறைந்தார். எங்களுக்கும் உறவினர்களுக்கும் துயரம். ஆனால், மகாஸ்வாமிகளின் உரம் செறிந்த பாதங்கள் பட்ட பின்னர், உயிர்த்தெழுந்த அந்த மரத்துக்கும் துயரம் தாளவில்லை போலும் !. சிறுகச் சிறுக, தன் சக்தியை இழந்து, எங்கள் தகப்பனார் வருஷாப்தீகத்துக்குள், அவரையே பின்பற்றிச் சென்று விட்ட்து.
பெரியவாளின் திருப்பாதங்கள், அறத்தின் திருபாதங்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், அவை, உரம் செறிந்த பாதங்கள் என்பதை, நாங்கள் கண்களாலே கண்டோம்.