Post by kramans on Feb 10, 2012 13:45:47 GMT 5.5
ஒரு முறை கல்கத்தாவில் கேம்ப் போட்டார் பெரியவா, இருந்த
நூறு நாளும் தடங்கலில்லாமல் பூஜைக்கு வில்வம் கிடைத்தது.இது
எப்படி சாத்தியமாகிறது என்று மடத்தில் கேட்டபோது,யாரோ ஒரு
பக்தன் தினமும் கொண்டு தருவதாகத் தெரிந்தது. அவரை, தான்
அவசியம் பார்க்க வேண்டுமென்று சொல்லவே, அடுத்த நாள்
பெரியவா முன்பு அவர் அழைத்து வரப்பட்டார். அந்த இளைஞனைப்
பார்த்து , "நான் நூறு நாளும் சந்திரமௌலீஸ்வரருக்கு வில்வார்ச்சனை
பண்ண நீதான் உதவினாய். நீ ஒரு நாள் மடத்திலே பிட்சாவந்தனம்
பண்ணலாமே.." என்றார்.கல்கத்தாவைச் சேர்ந்த அவனுக்கு
அது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. பெரியவாளைப் பார்த்து
"வில்வம் கொண்டு வந்திருக்கேன்!" என்று தன்னையும்
விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம்
சிறிதும் இல்லாமல், ஏதோ மடத்தில் பூஜை நடக்கிறது.நமக்குக்
கிடைக்கிற வில்வத்தை தந்து விட்டு ஆபீஸ் போகலாமே என்று
எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவன் அவன்
.
ஆதிசங்கரர் சிவபெருமானிடம், "நான் உன் பக்தர்களில்
கடையானவன்.: நீ எல்லோருக்கும் அனுக்கிரகம் பண்ணி விட்டுக்
கடைசியிலேதான் என் பக்கம் திரும்புவாயென்று தோன்றுகிறது.
ஒன்று செய்...நீ கடைப்பட்டவர்களை முதலில் கவனிப்பது
என்று வைத்துக் கொள். அப்போது முதலில் நான் உன் கண்
பார்வையில் விழுந்து அருள் பெறுவேன்!" என்கிறார்.".அடக்கமாக
இருப்பவர்களை சுவாமி தானே தேடிப்போய் ஆட்கொள்வார்."
இளைஞன் சொன்னான்: "எங்கள் குடும்பம் பெரிது. நான்
ஒருவன்தான் சம்பாதிக்கிறேன். பிட்சாவந்தனத்துக்கு செலவு
ஆகுமே, எங்களால் முடியாதென்று நினைக்கிறேன்!"
பெரியவா சொன்னார்: "பிட்சாவந்தனம் என்றதும் பயந்து
விட்டாயா? தேவையே இல்லை. காலையில் வீட்டில்
எல்லோரையும் குளித்துவிட்டு இங்கே வரச்சொல். நீயும் வா.
வரும்போது வில்வத்துடன் இன்னும் என்ன முடியுமோ
எடுத்துக்கோ. பூஜை பண்ணுவதைப் பாருங்கள்.பிரசாதம்
கிடைக்கும். பிறகு எல்லோரும் சாப்பிட்டு விட்டுப் போகலாம்
இதுதான் பிட்சாவந்தனம்!"
"அட ! இவ்வளவுதானா! இப்படியென்றால் தினமுமே
குடும்பத்துடன் வந்திருக்கலாமே!" என்று இளஞன்
நினைத்திருக்கக்கூடும். மறுநாள் எல்லாரையும் அழைத்து
வந்தான்.பூஜை முடிந்தது. பிரசாதம் தரும்போது பெரியவா
"உனக்கு என்ன வேணும்" என்று கேட்டார்."இனிப் பிறவி
இல்லாமல் இருக்க வேண்டும்" என்று பிரகலாதனைப்போல்
அவன் கேட்டான்
இது நடந்து சில நாட்களுக்குப் பின் கதிராமங்கலத்தில் ஒரு
நாள் பெரியவா பூஜையெல்லாம் முடிந்து பகலில் ஒரு
ஆற்றங்கரைக்குப் போனார். ஏழு கூர்ச்சம் பண்ணித்
தரச் சொல்லி அதையும் எடுத்துக்கொண்டார். இதென்ன,
விபரீதமாய்! பெரியவா கூர்ச்சமெல்லாம் எடுக்கும்
சம்பிரதாயம் இல்லையே? என்று எல்லார் முகத்திலும்
கேள்விக்குறி.
நதியில் ஒவ்வொரு கூர்ச்சமாகப் போட்டுப் போட்டு ஏழு
முழுக்கு போட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு
அம்மா, ஸ்வாதீனமாகப் பெரியவாளிடம் பேசக் கூடியவள்:
"பெரியவா ஒரு சந்தேகத்தை தீர்த்து வைக்கணும்.
வழக்கமில்லாத வழக்கமா பெரியவா அகாலத்தில் ஸ்னானம்
பண்ணறதும்,கூர்ச்சத்தை பிரித்துப் போடறதும் எதற்குன்னு
புரியலயே!" என்று கேட்கிறாள்.
பெரியவா, கல்கத்தாவில் ஒரு இளைஞன் வில்வம் கொண்டு
கொடுத்ததையும், தனக்கு பிறவா வரம் வேண்டுமென்று
கேட்டதையும் சொன்னார். "அவனுக்கு இன்னும் ஏழு ஜென்மா
பாக்கி இருந்தது. எல்லாத்தையும் தொலைக்கத்தான் இப்படிச்
செய்தென்" என்று எல்லார் சந்தேகத்தையும் தீர்த்து வைத்தார்.
எத்தனையோ வினைப்பயன்களை அனுபவித்துக் கரைக்க
வேண்டிய ஜென்மாக்களை, ஒரு கூர்ச்சத்தை அவிழ்த்துப் போடும்
நேரத்தில் ஒருவரால் தொலைக்க முடியும் என்றால், அவர்
இறைவனாகத்தானே இருக்க முடியும்! இப்பேர்ப்பட்டவருக்கு ஒரு
கைங்கர்யம் செய்தால், பிறவி வேண்டாமென்று கேட்கக்கூட
வேண்டாம். அவராகவே யாருக்கு என்ன வேண்டுமோ அளிக்க
வல்லவர்.அவ்யாஜ கருணாமூர்த்தி,சர்வேஸ்வரன்,சர்வக்ஞன்
என்ற எல்லாமே அவருக்கு அழகாகப் பொருந்துகிறது.
[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
டைப் செய்யப்பட்டது]..
நூறு நாளும் தடங்கலில்லாமல் பூஜைக்கு வில்வம் கிடைத்தது.இது
எப்படி சாத்தியமாகிறது என்று மடத்தில் கேட்டபோது,யாரோ ஒரு
பக்தன் தினமும் கொண்டு தருவதாகத் தெரிந்தது. அவரை, தான்
அவசியம் பார்க்க வேண்டுமென்று சொல்லவே, அடுத்த நாள்
பெரியவா முன்பு அவர் அழைத்து வரப்பட்டார். அந்த இளைஞனைப்
பார்த்து , "நான் நூறு நாளும் சந்திரமௌலீஸ்வரருக்கு வில்வார்ச்சனை
பண்ண நீதான் உதவினாய். நீ ஒரு நாள் மடத்திலே பிட்சாவந்தனம்
பண்ணலாமே.." என்றார்.கல்கத்தாவைச் சேர்ந்த அவனுக்கு
அது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. பெரியவாளைப் பார்த்து
"வில்வம் கொண்டு வந்திருக்கேன்!" என்று தன்னையும்
விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம்
சிறிதும் இல்லாமல், ஏதோ மடத்தில் பூஜை நடக்கிறது.நமக்குக்
கிடைக்கிற வில்வத்தை தந்து விட்டு ஆபீஸ் போகலாமே என்று
எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவன் அவன்
.
ஆதிசங்கரர் சிவபெருமானிடம், "நான் உன் பக்தர்களில்
கடையானவன்.: நீ எல்லோருக்கும் அனுக்கிரகம் பண்ணி விட்டுக்
கடைசியிலேதான் என் பக்கம் திரும்புவாயென்று தோன்றுகிறது.
ஒன்று செய்...நீ கடைப்பட்டவர்களை முதலில் கவனிப்பது
என்று வைத்துக் கொள். அப்போது முதலில் நான் உன் கண்
பார்வையில் விழுந்து அருள் பெறுவேன்!" என்கிறார்.".அடக்கமாக
இருப்பவர்களை சுவாமி தானே தேடிப்போய் ஆட்கொள்வார்."
இளைஞன் சொன்னான்: "எங்கள் குடும்பம் பெரிது. நான்
ஒருவன்தான் சம்பாதிக்கிறேன். பிட்சாவந்தனத்துக்கு செலவு
ஆகுமே, எங்களால் முடியாதென்று நினைக்கிறேன்!"
பெரியவா சொன்னார்: "பிட்சாவந்தனம் என்றதும் பயந்து
விட்டாயா? தேவையே இல்லை. காலையில் வீட்டில்
எல்லோரையும் குளித்துவிட்டு இங்கே வரச்சொல். நீயும் வா.
வரும்போது வில்வத்துடன் இன்னும் என்ன முடியுமோ
எடுத்துக்கோ. பூஜை பண்ணுவதைப் பாருங்கள்.பிரசாதம்
கிடைக்கும். பிறகு எல்லோரும் சாப்பிட்டு விட்டுப் போகலாம்
இதுதான் பிட்சாவந்தனம்!"
"அட ! இவ்வளவுதானா! இப்படியென்றால் தினமுமே
குடும்பத்துடன் வந்திருக்கலாமே!" என்று இளஞன்
நினைத்திருக்கக்கூடும். மறுநாள் எல்லாரையும் அழைத்து
வந்தான்.பூஜை முடிந்தது. பிரசாதம் தரும்போது பெரியவா
"உனக்கு என்ன வேணும்" என்று கேட்டார்."இனிப் பிறவி
இல்லாமல் இருக்க வேண்டும்" என்று பிரகலாதனைப்போல்
அவன் கேட்டான்
இது நடந்து சில நாட்களுக்குப் பின் கதிராமங்கலத்தில் ஒரு
நாள் பெரியவா பூஜையெல்லாம் முடிந்து பகலில் ஒரு
ஆற்றங்கரைக்குப் போனார். ஏழு கூர்ச்சம் பண்ணித்
தரச் சொல்லி அதையும் எடுத்துக்கொண்டார். இதென்ன,
விபரீதமாய்! பெரியவா கூர்ச்சமெல்லாம் எடுக்கும்
சம்பிரதாயம் இல்லையே? என்று எல்லார் முகத்திலும்
கேள்விக்குறி.
நதியில் ஒவ்வொரு கூர்ச்சமாகப் போட்டுப் போட்டு ஏழு
முழுக்கு போட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு
அம்மா, ஸ்வாதீனமாகப் பெரியவாளிடம் பேசக் கூடியவள்:
"பெரியவா ஒரு சந்தேகத்தை தீர்த்து வைக்கணும்.
வழக்கமில்லாத வழக்கமா பெரியவா அகாலத்தில் ஸ்னானம்
பண்ணறதும்,கூர்ச்சத்தை பிரித்துப் போடறதும் எதற்குன்னு
புரியலயே!" என்று கேட்கிறாள்.
பெரியவா, கல்கத்தாவில் ஒரு இளைஞன் வில்வம் கொண்டு
கொடுத்ததையும், தனக்கு பிறவா வரம் வேண்டுமென்று
கேட்டதையும் சொன்னார். "அவனுக்கு இன்னும் ஏழு ஜென்மா
பாக்கி இருந்தது. எல்லாத்தையும் தொலைக்கத்தான் இப்படிச்
செய்தென்" என்று எல்லார் சந்தேகத்தையும் தீர்த்து வைத்தார்.
எத்தனையோ வினைப்பயன்களை அனுபவித்துக் கரைக்க
வேண்டிய ஜென்மாக்களை, ஒரு கூர்ச்சத்தை அவிழ்த்துப் போடும்
நேரத்தில் ஒருவரால் தொலைக்க முடியும் என்றால், அவர்
இறைவனாகத்தானே இருக்க முடியும்! இப்பேர்ப்பட்டவருக்கு ஒரு
கைங்கர்யம் செய்தால், பிறவி வேண்டாமென்று கேட்கக்கூட
வேண்டாம். அவராகவே யாருக்கு என்ன வேண்டுமோ அளிக்க
வல்லவர்.அவ்யாஜ கருணாமூர்த்தி,சர்வேஸ்வரன்,சர்வக்ஞன்
என்ற எல்லாமே அவருக்கு அழகாகப் பொருந்துகிறது.
[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
டைப் செய்யப்பட்டது]..