|
Post by Sumi on Dec 10, 2012 12:57:48 GMT 5.5
திருச்சியில் கணபதி என்கிற பக்தர், தன பெற்றோருடன் மகானை தரிசிக்க போனார். அவருக்கு வேலை கிடைப்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. மகானிடம் அதை சொன்னார். கணபதியிடம், திருச்சியில் என்னென்ன பெரிய பாங்குகள் இருக்கின்றன என்று கேட்டு இருக்கிறார், மகான். கணபதியும் சொன்னார். சில நாட்கள் கழித்து இரண்டு இடங்களில் வேலைக்கு சேரும்படி கணபதிக்கு ஆர்டர் வந்தது. சென்னையில் ஒன்று, திருச்சியில் ஒன்று. சென்னை வேலை நிரந்தரம். திருச்சி வேலை தற்காலிகமானது. குழம்பிபோன கணபதி, இதற்கும் மகானை அணுகி யோசனை கேட்டார். "திருச்சி பாங்க உத்தியோகத்தில் போய் சேர்" - இந்த பதிலும் கணபதிக்கு நெடுநேரம் பெரியவா தரிசனத்துக்கு பிறகு 4 மணிக்கு கிடைத்த உத்தரவு. தற்காலிகமான பாங்க உத்தியோகத்திற்கு போக சொல்கிறாரே மகான் என்று மனதில் கலக்கத்தோடு பாங்க உத்தியோகத்திற்கு போனார். இது லீவில் போய்விட்டவருக்கான உத்தியோகம். அவர் திரும்பவும் வந்து உத்தியோகத்தில் சேர்ந்துவிட்டால், கணபதி வீட்டிற்கு திரும்ப வேண்டியதுதான்! ஆனால் , நடந்தது என்ன? லீவில் போனவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பலனாக, அந்த நல்ல பாங்க வேலை கணபதிக்கு கிடைத்தது. கருணை வள்ளலான மகானின் தீர்க தரிசனத்தை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தார் கணபதி. உள்ளன்போடு அணுகி பிராதிப்பவர் யாராக இருந்தாலும், மகானிடம் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதில் இதுவும் ஒன்று.
|
|
|
Post by mkaraman on Jun 20, 2013 17:04:49 GMT 5.5
The respected member's concluding line is SATHYA VAAKKU
|
|