|
Post by Sumi on Nov 29, 2012 15:30:02 GMT 5.5
முனிவர்
இளைத்த மேனி, பனித்த தலை, முதுகு வளையாத வேக நடை, கரும்பிலும் இனிதான சொற்கள், கண்ணாடியாய் மின்னும் கண்கள்.
எப்போதும் இதழ்களில் புன்சிரிப்பு. எவரும் சமமெனக் கருதும் உபசரிப்பு. எங்கும் காணக் கிடைக்கும் எளிமை, எஃகைத் தோற்கடிக்கும் மன வலிமை.
எப்போதும் உடன் இருக்கும் பொறுமை, தனக்கென்று ஏதும் இல்லா வெறுமை, உலக இன்பங்களில் நாட்டம் இன்மை, துயருற்றோர் வாட்டம் போக்கும் தன்மை.
வேத நெறிகளினின்று வழுவாமை, பற்றற்றான் பற்றினின்று பிறழாமை, இவை கொண்டு வாழ்ந்தார் ஒருவர். அவர் தான் நம் காஞ்சி மாமுனிவர்.
source: posted by member 'rgsrinivasan' on indusladies.com
|
|
|
Post by Kanchi Periva on Nov 30, 2012 7:36:53 GMT 5.5
Very nice post, thanks for sharing
|
|