Post by Sumi on Oct 23, 2012 12:12:58 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 9 of 11
இந்த நம்பிக்கையோடு பழைய வழிமுறைகளைக் காதில் போடுகிறேன். பழையது என்பதற்காகவே அது உதவாது என்று ஒதுக்கிவிடவும் கூடாது. புதிசு, பழசு என்பதால் ஒன்று வேண்டும். வேண்டாம் என்பதில்லை. அதன் பிரயோஜனம் என்ன என்பதைப் பரீசித்துப் பார்த்தே எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது தள்ள வேண்டும். அல்லது இருக்கிற புதிசையும் எடுத்துக் கொள்வோம். அப்படியே புதிசில் இருக்கிற கெட்டதுகளைத் தள்ளுவோம். பழசில் இருக்கும் நல்லதுகளை எடுத்துக் கொள்வோம். காளிதாசன்கூட இப்படித்தான் சொல்கிறான்.
ஆசையாகக் கூப்பிட்டு எனக்கு உபசாரம் செய்கிற உங்களிடம், முதலில் உங்களுடைய புது வழிகளில் இத்தனை கெடுதல் இருக்கிறது என்று சொல்ல எனக்கே மனசு வரவில்லைதான். மற்ற விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தேன். பக்தி ஞானம், கலாச்சாரம், ஊர்க்கதை எல்லாம் சொன்னேன். அதெல்லாம் நல்ல விஷயங்கள்தான். ஆனாலும் அவை எல்லாம் கிளை, பூ, பழம், மாதிரி என்றால், அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக ஒரு வேர் இருக்கிறது. அது வேதம்தான். வேராத வேத ரக்ஷ்ணம் இல்லாமல் வேறு எதுவுமே இல்லை. இதை விட்டுவிட்டு மற்றதைச் சொல்லிப் பயனில்லை. இந்த மூல கைங்கரியத்தைச் சொல்வதென்றால், குறைகளைச் சொல்லத்தான் வேண்டும். மற்ற விஷயங்களைப் பேசிக் கொஞ்ச நாளைக் கழித்தபின், இத்தனை நாள் உங்களில் பழகிவிட்டதால், எனக்கே உங்களிடம் சிநேகிதம், ஸ்வாதீனம் வந்துவிட்டது. குறையைச் சொல்ல முன்போலத் தயங்கவேண்டாம் என்று வேத விஷயத்துக்கு வருகிறேன்.
இதற்காக, இத்தனை நாள் உங்களை இத்தனை சிரமப்படுத்தி, இத்தனை பணச்செலவு வைத்தது போதாது என்று நிநோரா மாதிரி நானும் ஒரு ஸம்பந்தி தானம் கேட்கிறேன். அவரவரும் அத்யயனம் செய்து, தங்கள் பிள்ளைக்கும் செய்விக்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் இது அவசியம் செய்ய வேண்டியதுதான். அதைவிட அவசியமாக முதலில் செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, இப்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு நடந்து வருகிற வேத பாடசாலைகள் மூடிப்போகாமல் அவற்றைத் தொடர்ந்து நடைபெறப் பண்ண வேண்டும். இதற்காக வித்யார்த்திகள், (மாணவர்கள்) அத்யாபகர்கள் (ஆசிரியர்கள்) இருவருக்கும் உதவி செய்ய வேண்டும். இன்னும் பல பாடசாலைகள் வைத்து வேத மூலத்தை சொல்லிக் கொடுப்பது, அப்புறம் அதன் காரியத்தை வேத பாஷ்யத்தை சொல்லிக் கொடுப்பது, இவற்றில் பரீட்சை வைப்பது ஆகிய காரீயங்களைச் செய்ய வேண்டும். படிக்கிற காலத்தில் வித்தியார்த்திகளுக்கு ஸ்டைஃபண்ட் (உபகாரச் சம்பளம்) கொடுக்க வேண்டும். பரீட்சையில் பாஸ் பண்ணியவுடன் மார்க்கைப் பொறுத்துக் கணிசமான சம்பாவனை செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் வேதம் இருக்கும். இதற்கெல்லாம் மூலதனம் வேண்டும்.
(to be continued....)
[/b]
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 9 of 11
இந்த நம்பிக்கையோடு பழைய வழிமுறைகளைக் காதில் போடுகிறேன். பழையது என்பதற்காகவே அது உதவாது என்று ஒதுக்கிவிடவும் கூடாது. புதிசு, பழசு என்பதால் ஒன்று வேண்டும். வேண்டாம் என்பதில்லை. அதன் பிரயோஜனம் என்ன என்பதைப் பரீசித்துப் பார்த்தே எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது தள்ள வேண்டும். அல்லது இருக்கிற புதிசையும் எடுத்துக் கொள்வோம். அப்படியே புதிசில் இருக்கிற கெட்டதுகளைத் தள்ளுவோம். பழசில் இருக்கும் நல்லதுகளை எடுத்துக் கொள்வோம். காளிதாசன்கூட இப்படித்தான் சொல்கிறான்.
ஆசையாகக் கூப்பிட்டு எனக்கு உபசாரம் செய்கிற உங்களிடம், முதலில் உங்களுடைய புது வழிகளில் இத்தனை கெடுதல் இருக்கிறது என்று சொல்ல எனக்கே மனசு வரவில்லைதான். மற்ற விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தேன். பக்தி ஞானம், கலாச்சாரம், ஊர்க்கதை எல்லாம் சொன்னேன். அதெல்லாம் நல்ல விஷயங்கள்தான். ஆனாலும் அவை எல்லாம் கிளை, பூ, பழம், மாதிரி என்றால், அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக ஒரு வேர் இருக்கிறது. அது வேதம்தான். வேராத வேத ரக்ஷ்ணம் இல்லாமல் வேறு எதுவுமே இல்லை. இதை விட்டுவிட்டு மற்றதைச் சொல்லிப் பயனில்லை. இந்த மூல கைங்கரியத்தைச் சொல்வதென்றால், குறைகளைச் சொல்லத்தான் வேண்டும். மற்ற விஷயங்களைப் பேசிக் கொஞ்ச நாளைக் கழித்தபின், இத்தனை நாள் உங்களில் பழகிவிட்டதால், எனக்கே உங்களிடம் சிநேகிதம், ஸ்வாதீனம் வந்துவிட்டது. குறையைச் சொல்ல முன்போலத் தயங்கவேண்டாம் என்று வேத விஷயத்துக்கு வருகிறேன்.
இதற்காக, இத்தனை நாள் உங்களை இத்தனை சிரமப்படுத்தி, இத்தனை பணச்செலவு வைத்தது போதாது என்று நிநோரா மாதிரி நானும் ஒரு ஸம்பந்தி தானம் கேட்கிறேன். அவரவரும் அத்யயனம் செய்து, தங்கள் பிள்ளைக்கும் செய்விக்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் இது அவசியம் செய்ய வேண்டியதுதான். அதைவிட அவசியமாக முதலில் செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, இப்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு நடந்து வருகிற வேத பாடசாலைகள் மூடிப்போகாமல் அவற்றைத் தொடர்ந்து நடைபெறப் பண்ண வேண்டும். இதற்காக வித்யார்த்திகள், (மாணவர்கள்) அத்யாபகர்கள் (ஆசிரியர்கள்) இருவருக்கும் உதவி செய்ய வேண்டும். இன்னும் பல பாடசாலைகள் வைத்து வேத மூலத்தை சொல்லிக் கொடுப்பது, அப்புறம் அதன் காரியத்தை வேத பாஷ்யத்தை சொல்லிக் கொடுப்பது, இவற்றில் பரீட்சை வைப்பது ஆகிய காரீயங்களைச் செய்ய வேண்டும். படிக்கிற காலத்தில் வித்தியார்த்திகளுக்கு ஸ்டைஃபண்ட் (உபகாரச் சம்பளம்) கொடுக்க வேண்டும். பரீட்சையில் பாஸ் பண்ணியவுடன் மார்க்கைப் பொறுத்துக் கணிசமான சம்பாவனை செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் வேதம் இருக்கும். இதற்கெல்லாம் மூலதனம் வேண்டும்.
(to be continued....)
[/b]