Post by radha on Oct 13, 2012 1:55:26 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
நலம் தரும் நாமஜபம்! — ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை நாள் (26.10.12)
நாவுக்கு ருசியான ஒன்று ராமநாமம்’ என்கிறார் சத்குரு தியாகராஜர்.
பக்தமீரா, கிருஷ்ண நாம ஸ்மரணையினாலேயே ஸ்ரீகிருஷ்ணருடன் கலந்தாள்.
திருப்பாவையில், ஆண்டாள் நாச்சியார் நாம மகிமையையே குறிப்பிட்டு சொல்கிறாள்.
‘நாராயணா’ என்னும் நாமம் சொல்லியதால் பிறவிப்பயனே அஜாமிளனுக்குக் கிடைத்தது என்றால், இறைவன் எவ்வளவு கருணை உள்ளம் படைத்தவன் என்பது விளங்கும். இத்தகைய நாம ஸ்மரணை, ஒரு மானிடனுக்கு தெய்வ வாழ்வைத் தந்தது என்றால், நாம ஜபத்தைச் செய்து கொண்டிருப்பவனுக்கு எத்தனை இனியவைகள் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
அப்படி நாம மகிமையை திசையெங்கும் பரப்பியவர்; நாம சங்கீர்த்தன குருவாக விளங்கியவர் ஸ்ரீபோதேந்திரர். அதனாலேயே, பகவன் நாம போதேந்திரர் என்றும் போற்றப்படுபவர்.
யஸ்ய ஸ்மரன மாத்ரேண நாம பக்தி:
ப்ரஜாயதே
தம் நமாமி யதிச்ரேஷ்ட்டம்
போதேந்திரம் ஜகதாம் குரும்
‘எவருடைய ஸ்மரணத்தால், எவரை நினைப்பதால், பகவானின் திருநாமத்தில் பக்தி உண்டாகிறதோ, அந்தத் துறவி ராஜரும், ஜகத் குருவுமான போதேந்திர ஸ்வாமிகளை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள்.
இன்று செய்யப்படும் சம்பிரதாய பஜனைகள் அனைத்துக்கும் வித்திட்டவர் இவர்தான். பலரும் தங்கள் பஜனையில் பாடுவது இவருடைய பாடல்களைத்தான். காஞ்சி பீடத்தின் 59வது ஆசார்யராக விளங்கிய ஸ்வாமிகள், தினமும் 1,08,000 முறை நாம ஜபம் செய்தவர். பீடத்தின் பொறுப்பில் இருப்பதால், முழுப்பணியாக நாமசங்கீர்த்தனத்தில், அதைப் பரப்புவதில் ஈடுபட முடியவில்லை என்று கருதி, ஸ்ரீமடத்தின் நிர்வாகத்தை அடுத்த வாரிசிடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினார் ஸ்ரீபோதேந்திரர்.
அப்படி அவர் வந்து தங்கிய இடம் தான் கோவிந்தபுரம். கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை செல்லும் வழியில், காவிரிக் கரையில் அமைந்துள்ளது இவருடைய பிருந்தாவனம். தம்முடைய வாழ்நாளெல்லாம் ராமநாமத்தை தாம் ஜபித்ததோடு மட்டுமல்லாமல், பலருக்கும் உபதேசித்தவர் ஸ்வாமிகள். ‘ராம’ நாமஜபம் செய்பவராய் இருந்தாலும், சிவநாமத்தை பரப்பும் பணியில் ஈடுபாடு கொண்டிருந்த ஸ்ரீதர ஐயாவாளிடம் பேரன்பு கொண்டிருந்தவர்.
‘பகவந் நாமரஸோ தயம்’ உட்பட நாமங்களின் பெருமையை விளக்கும் எட்டு நூல்களை எழுதியுள்ள ஸ்வாமிகள், இன்றைக்குச் சுமார் 320 ஆண்டுகளுக்கு முன், புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று தம்மை மறைத்துக் கொண்டார். மகான்கள் நம்மைக் கடைத்தேற்றும் பொருட்டே, தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் அதிஷ்டானங்களை தரிசிப்பதும், ஆராதனைகளில் கலந்து கொள்வதும் நம்மை காப்பாற்றிக் கொள்ளும் வழி.
ஆராதனை நாள் (26.10.12)
தொடர்புக்கு: ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் டிரஸ்ட், கோவிந்தபுரம். 0435-2470620; 2940622
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
நலம் தரும் நாமஜபம்! — ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை நாள் (26.10.12)
நாவுக்கு ருசியான ஒன்று ராமநாமம்’ என்கிறார் சத்குரு தியாகராஜர்.
பக்தமீரா, கிருஷ்ண நாம ஸ்மரணையினாலேயே ஸ்ரீகிருஷ்ணருடன் கலந்தாள்.
திருப்பாவையில், ஆண்டாள் நாச்சியார் நாம மகிமையையே குறிப்பிட்டு சொல்கிறாள்.
‘நாராயணா’ என்னும் நாமம் சொல்லியதால் பிறவிப்பயனே அஜாமிளனுக்குக் கிடைத்தது என்றால், இறைவன் எவ்வளவு கருணை உள்ளம் படைத்தவன் என்பது விளங்கும். இத்தகைய நாம ஸ்மரணை, ஒரு மானிடனுக்கு தெய்வ வாழ்வைத் தந்தது என்றால், நாம ஜபத்தைச் செய்து கொண்டிருப்பவனுக்கு எத்தனை இனியவைகள் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
அப்படி நாம மகிமையை திசையெங்கும் பரப்பியவர்; நாம சங்கீர்த்தன குருவாக விளங்கியவர் ஸ்ரீபோதேந்திரர். அதனாலேயே, பகவன் நாம போதேந்திரர் என்றும் போற்றப்படுபவர்.
யஸ்ய ஸ்மரன மாத்ரேண நாம பக்தி:
ப்ரஜாயதே
தம் நமாமி யதிச்ரேஷ்ட்டம்
போதேந்திரம் ஜகதாம் குரும்
‘எவருடைய ஸ்மரணத்தால், எவரை நினைப்பதால், பகவானின் திருநாமத்தில் பக்தி உண்டாகிறதோ, அந்தத் துறவி ராஜரும், ஜகத் குருவுமான போதேந்திர ஸ்வாமிகளை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள்.
இன்று செய்யப்படும் சம்பிரதாய பஜனைகள் அனைத்துக்கும் வித்திட்டவர் இவர்தான். பலரும் தங்கள் பஜனையில் பாடுவது இவருடைய பாடல்களைத்தான். காஞ்சி பீடத்தின் 59வது ஆசார்யராக விளங்கிய ஸ்வாமிகள், தினமும் 1,08,000 முறை நாம ஜபம் செய்தவர். பீடத்தின் பொறுப்பில் இருப்பதால், முழுப்பணியாக நாமசங்கீர்த்தனத்தில், அதைப் பரப்புவதில் ஈடுபட முடியவில்லை என்று கருதி, ஸ்ரீமடத்தின் நிர்வாகத்தை அடுத்த வாரிசிடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினார் ஸ்ரீபோதேந்திரர்.
அப்படி அவர் வந்து தங்கிய இடம் தான் கோவிந்தபுரம். கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை செல்லும் வழியில், காவிரிக் கரையில் அமைந்துள்ளது இவருடைய பிருந்தாவனம். தம்முடைய வாழ்நாளெல்லாம் ராமநாமத்தை தாம் ஜபித்ததோடு மட்டுமல்லாமல், பலருக்கும் உபதேசித்தவர் ஸ்வாமிகள். ‘ராம’ நாமஜபம் செய்பவராய் இருந்தாலும், சிவநாமத்தை பரப்பும் பணியில் ஈடுபாடு கொண்டிருந்த ஸ்ரீதர ஐயாவாளிடம் பேரன்பு கொண்டிருந்தவர்.
‘பகவந் நாமரஸோ தயம்’ உட்பட நாமங்களின் பெருமையை விளக்கும் எட்டு நூல்களை எழுதியுள்ள ஸ்வாமிகள், இன்றைக்குச் சுமார் 320 ஆண்டுகளுக்கு முன், புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று தம்மை மறைத்துக் கொண்டார். மகான்கள் நம்மைக் கடைத்தேற்றும் பொருட்டே, தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் அதிஷ்டானங்களை தரிசிப்பதும், ஆராதனைகளில் கலந்து கொள்வதும் நம்மை காப்பாற்றிக் கொள்ளும் வழி.
ஆராதனை நாள் (26.10.12)
தொடர்புக்கு: ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் டிரஸ்ட், கோவிந்தபுரம். 0435-2470620; 2940622
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam