Post by radha on Oct 11, 2012 6:14:51 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA>,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:-கல்கி magazine
அருள்வாக்கு: எதற்காக இந்த அரசாங்கம்?
ராஜங்கம் எதற்காக இருக்கிறது? ஒரு தேசத்தில் அதிக பலம் உள்ளவர்கள் குறைக்க பலம் உள்ளவரை ஹிம்ஸிக்கலாம். பெரிய கூட்டத்தார் சிறிய கூட்டத்தாரை சிறிய கூட்டத்தாரை கஷ்டப்படுத்தலாம். பலர் சேரந்து ஒருவன நிர்ப்பந்தப்படுத்தி அவனது சொத்து, வீடு முதலியவற்றை ஆக்கிரமித்து கொள்ளலாம். இப்படி எல்லாம் நேராமல் தேசத்தில் ஒழுங்கு இருக்க செய்வதற்கு ஏற்பட்டதே ராஜாங்கம்.
தப்பு செய்பவர்களை அவ்விதம் செய்யாமலிருக்க செய்வதற்காக ராஜாங்கம் என்ன செய்கிறது? தண்டனை தருகிறது. தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதாலேயே பலர் தப்பு செய்யாமல் தடுக்க படுகிறார்கள். இம்சை செய்த ஒருவனுக்கு அவன் செய்ததை காட்டிலும் ராஜாங்கம் அதிக இம்சை தருகிறது. பத்து ரூபாயை ருவன் திருடுவதால், திருட்டு கொடுத்தவருக்கு சிறிது கஷ்டம் உண்டாகிறது. திருடியவனுக்கோ அதை விட பெரி கஷ்டமாக பல நாட்கள் சிறைவாசம் விதிக்கப்படுகிறது. இப்படி செய்தால் தான் அவன் மீண்டும் அந்த தப்பு பண்ண மாட்டான். மற்றவர்களும் அவ்த தப்பை பண்ணப்பயப்படுவார்கள் என்கிற அடிப்படையில் தண்ட நீதி அமைந்திருக்கிறது. பனித இயல்புபடி பார்க்கும்போது இதையும் ஒப்புக்கொள்ளவே நேருகிறத.
ஆனால் இதனிலும் சிலாக்கியமான ஓர் உயாயத்தையும் அரசாங்கம் அதே சமயத்தில் விருத்தி செய்ய வேண்டும். குற்றம் இழைத்த பின் ஒருவரை தண்டிப்பதும், ஒருவர் சுடாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்னைக்காக பயந்தே குற்றம் செய்யாமல் இருக்க செய்வதும் இரண்டாம்படசம் தான். குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் இருக்க செய்வது தான் சிலாக்கியமானது.
முதலில் ஒருவன் இம்சை தருவது. பிறகு அரசாங்கம் அவனுக்கு அதை விட அதிக இம்சை தருவது என்கிற அர்த் சாஸ்தி நீதியை கடைப்பிடிக்க வேண்டியிருந்தாலும் இந்த அர்த்த சாஸ்திரமும் தர்ம சாஸ்திரத்தின் காலில் விழுந்து கிடக்க வேண்டியது தான் என்பதை ராஜாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். தர்மசாஸ்திரபடி ஒழுகும் சத்துக்கள் உருவாவதற்கு உரிய சூழ்நிலையை அரசாங்கம் காப்பாற்றி கொடுத்தால் ஜனங்களுக்கு குற்றம் செய்கிற உணர்வே குறைந்து போய் விடும். தர்மம் அறிந்தவர்கள், தர்மத்தை அநுஷ்டிப்பவர்கள் விருத்தியாவதற்கு வசதி இருந்தால் அவர்கள் மற்றவர்களிடமும் சாந்தத்தை பரப்புவர்கள். சண்டை, பூசல், குற்றம் எல்லாம் குறையும்.
முதலில் ராஜாங்க பதவியில் உள்ளவர்கள் தர்மசீலர்களாய் இருக்க வேண்டும். இவர்கள் செய்வதும், சொல்வதும் சொந்த நன்மைக்காக அல்ல. நம் நன்மைக்காக தான் என்று ஜனங்கள் நம்பிக்கை வைக்க கூடிய தர்மிஷடர்கள் தர்மப்படியே ராஜாங்கம் நடத்த வேண்டும். இவ்விதம் தமர்மிஷடர்கள் தர்மங்களை சாந்தமாக எடுத்து சொன்னால் ஜனங்கள் அதன்படியே நடப்பார்கள். ராஜாங்கத்தார் மட்டும் இந்த காரியத்தை செய்ய முடியாது. தர்மசீலர்களான மற்றவர்களும் சேர்ந்து இந்த காரியத்தை செய்ய வேண்டும். தர்மிஷ்டர்கள் இந்த கைங்கரியம் செய்வதற்கு உகந்த சூழ்நிலையை ராஜாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும்.
போலீஸையும், கோர்ட்டையும் விருத்தி செய்வதை விட தர்மக்ஞர்களை விருத்தி பண்ணுவதில் ராஜாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலன்களை கருதாமல், உபதேசத்தை பணம் பண்ணும் தொழிலாக்காமல் பரோபகாரமே லட்சியமாக கொண்டு சாந்தமாக தர்மங்களை எடுத்து சொல்கிறவர்களுக்கு ராஜாங்கம் உற்சாகம் தர வேண்டும். இந்த உற்சாத்தாலேயே மேலும் பலர் அவ்விதம் உருவாவார்கள்.
கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிமாகின்ற என்றே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும். பழைய கால ராஜாக்கள் கோர்ட்டுகளுக்கு பதிலாக கோயில்களை கட்டி வந்தார்கள். பழைய கோயில்களை புதுப்பித்தார்கள். அந்த கோயில்களிலேயே பொழுதுபோக்கு க்கான சகல கலைகளும் கூட தெய்விகமாக்கப்பட்டு அர்ப்பணமாயின. ஜனங்களும், ஆலய வழிபாடு செய்து சாந்தர்களாக இருந்தார்கள். இப்போதுள்ளது போல சமூக சச்சரவு, பூசல் எல்லாம் அப்போது இல்லை.
சட்டம்போட்டு குற்றம் செய்யாமல் தடுப்பதை விட ஒரு நல்ல மார்க்கதை காட்டி அதில் ஜனங்களை திருப்பி தேசத்தில் சாந்தியை உண்டாக்குவது தான் சிலாக்கியம். இந்த சாந்தி தான் நிலைத்து நிற்கும். சாந்தர்களுக்கும், சத்துக்களுக்கும் தர்மிஷ்டர்களுக்கும் ராஜாங்கம் மதிப்பு தந்தாலே தேசத்திலே இந்த நல்ல பண்புகள் விருத்தியாகும்.
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
Source:-கல்கி magazine
அருள்வாக்கு: எதற்காக இந்த அரசாங்கம்?
ராஜங்கம் எதற்காக இருக்கிறது? ஒரு தேசத்தில் அதிக பலம் உள்ளவர்கள் குறைக்க பலம் உள்ளவரை ஹிம்ஸிக்கலாம். பெரிய கூட்டத்தார் சிறிய கூட்டத்தாரை சிறிய கூட்டத்தாரை கஷ்டப்படுத்தலாம். பலர் சேரந்து ஒருவன நிர்ப்பந்தப்படுத்தி அவனது சொத்து, வீடு முதலியவற்றை ஆக்கிரமித்து கொள்ளலாம். இப்படி எல்லாம் நேராமல் தேசத்தில் ஒழுங்கு இருக்க செய்வதற்கு ஏற்பட்டதே ராஜாங்கம்.
தப்பு செய்பவர்களை அவ்விதம் செய்யாமலிருக்க செய்வதற்காக ராஜாங்கம் என்ன செய்கிறது? தண்டனை தருகிறது. தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதாலேயே பலர் தப்பு செய்யாமல் தடுக்க படுகிறார்கள். இம்சை செய்த ஒருவனுக்கு அவன் செய்ததை காட்டிலும் ராஜாங்கம் அதிக இம்சை தருகிறது. பத்து ரூபாயை ருவன் திருடுவதால், திருட்டு கொடுத்தவருக்கு சிறிது கஷ்டம் உண்டாகிறது. திருடியவனுக்கோ அதை விட பெரி கஷ்டமாக பல நாட்கள் சிறைவாசம் விதிக்கப்படுகிறது. இப்படி செய்தால் தான் அவன் மீண்டும் அந்த தப்பு பண்ண மாட்டான். மற்றவர்களும் அவ்த தப்பை பண்ணப்பயப்படுவார்கள் என்கிற அடிப்படையில் தண்ட நீதி அமைந்திருக்கிறது. பனித இயல்புபடி பார்க்கும்போது இதையும் ஒப்புக்கொள்ளவே நேருகிறத.
ஆனால் இதனிலும் சிலாக்கியமான ஓர் உயாயத்தையும் அரசாங்கம் அதே சமயத்தில் விருத்தி செய்ய வேண்டும். குற்றம் இழைத்த பின் ஒருவரை தண்டிப்பதும், ஒருவர் சுடாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்னைக்காக பயந்தே குற்றம் செய்யாமல் இருக்க செய்வதும் இரண்டாம்படசம் தான். குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் இருக்க செய்வது தான் சிலாக்கியமானது.
முதலில் ஒருவன் இம்சை தருவது. பிறகு அரசாங்கம் அவனுக்கு அதை விட அதிக இம்சை தருவது என்கிற அர்த் சாஸ்தி நீதியை கடைப்பிடிக்க வேண்டியிருந்தாலும் இந்த அர்த்த சாஸ்திரமும் தர்ம சாஸ்திரத்தின் காலில் விழுந்து கிடக்க வேண்டியது தான் என்பதை ராஜாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். தர்மசாஸ்திரபடி ஒழுகும் சத்துக்கள் உருவாவதற்கு உரிய சூழ்நிலையை அரசாங்கம் காப்பாற்றி கொடுத்தால் ஜனங்களுக்கு குற்றம் செய்கிற உணர்வே குறைந்து போய் விடும். தர்மம் அறிந்தவர்கள், தர்மத்தை அநுஷ்டிப்பவர்கள் விருத்தியாவதற்கு வசதி இருந்தால் அவர்கள் மற்றவர்களிடமும் சாந்தத்தை பரப்புவர்கள். சண்டை, பூசல், குற்றம் எல்லாம் குறையும்.
முதலில் ராஜாங்க பதவியில் உள்ளவர்கள் தர்மசீலர்களாய் இருக்க வேண்டும். இவர்கள் செய்வதும், சொல்வதும் சொந்த நன்மைக்காக அல்ல. நம் நன்மைக்காக தான் என்று ஜனங்கள் நம்பிக்கை வைக்க கூடிய தர்மிஷடர்கள் தர்மப்படியே ராஜாங்கம் நடத்த வேண்டும். இவ்விதம் தமர்மிஷடர்கள் தர்மங்களை சாந்தமாக எடுத்து சொன்னால் ஜனங்கள் அதன்படியே நடப்பார்கள். ராஜாங்கத்தார் மட்டும் இந்த காரியத்தை செய்ய முடியாது. தர்மசீலர்களான மற்றவர்களும் சேர்ந்து இந்த காரியத்தை செய்ய வேண்டும். தர்மிஷ்டர்கள் இந்த கைங்கரியம் செய்வதற்கு உகந்த சூழ்நிலையை ராஜாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும்.
போலீஸையும், கோர்ட்டையும் விருத்தி செய்வதை விட தர்மக்ஞர்களை விருத்தி பண்ணுவதில் ராஜாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலன்களை கருதாமல், உபதேசத்தை பணம் பண்ணும் தொழிலாக்காமல் பரோபகாரமே லட்சியமாக கொண்டு சாந்தமாக தர்மங்களை எடுத்து சொல்கிறவர்களுக்கு ராஜாங்கம் உற்சாகம் தர வேண்டும். இந்த உற்சாத்தாலேயே மேலும் பலர் அவ்விதம் உருவாவார்கள்.
கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிமாகின்ற என்றே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும். பழைய கால ராஜாக்கள் கோர்ட்டுகளுக்கு பதிலாக கோயில்களை கட்டி வந்தார்கள். பழைய கோயில்களை புதுப்பித்தார்கள். அந்த கோயில்களிலேயே பொழுதுபோக்கு க்கான சகல கலைகளும் கூட தெய்விகமாக்கப்பட்டு அர்ப்பணமாயின. ஜனங்களும், ஆலய வழிபாடு செய்து சாந்தர்களாக இருந்தார்கள். இப்போதுள்ளது போல சமூக சச்சரவு, பூசல் எல்லாம் அப்போது இல்லை.
சட்டம்போட்டு குற்றம் செய்யாமல் தடுப்பதை விட ஒரு நல்ல மார்க்கதை காட்டி அதில் ஜனங்களை திருப்பி தேசத்தில் சாந்தியை உண்டாக்குவது தான் சிலாக்கியம். இந்த சாந்தி தான் நிலைத்து நிற்கும். சாந்தர்களுக்கும், சத்துக்களுக்கும் தர்மிஷ்டர்களுக்கும் ராஜாங்கம் மதிப்பு தந்தாலே தேசத்திலே இந்த நல்ல பண்புகள் விருத்தியாகும்.
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam