Post by radha on Oct 10, 2012 3:06:18 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
சப்தமாதர்கள் யோகநாயகியர்--Source:- Kalaimagal magazine June'12
பாரத தேசத்தின் செய்வீகக் கலைகளில் யோகக் கலையும் ஒன்று. யோகம் என்பதற்கு இணைப்பது என்பது பொருள். இறைவனோடு நம்மை இணைக்கும் கலை, யோகக் கலை. உலகைப் படைத்து, காத்து, அழித்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் மும்மூர்த்திகளும் யோகத்தில் நிலைபெற்றவர்களாக விளங்குகின்றனர். இவர்களை யோகப்பிரம்மன், யோக நாராயணர் யோகேஸ்வரன் என்று அன்பர்கள் அழைக்கின்றனர்.
யோக வித்தையானது, இறைவனின் முழு அருளையும் சாதகனுக்கு எளிதில் வழங்கவல்லது. அன்பர்களுக்கு யோகவித்தையை எளிதில் சிந்திக்கச் செய்பவளாக இருப்பதால் அம்பிகை யோக நாயகி என்று அழைக்கப்படுகிறார். திருப்பெருந்துறையில் அம்பிகையை யோகநாயகியாகக் காண்கிறோம். யோக நாயகியின் பரிவாரத் தெய்வங்களாக அஷ்டமாதர்கள் உள்ளனர்.
அந்தகாசுரனை அழிக்க அஷ்டமாதர்களைச் சிவபெருமான் தோற்றுவித்திருந்த போதிலும், பின்னாளில் அவர்கள் சிவபெருமானை வழிபட்டு யோகக் கலையின் தெய்வங்களாகி விட்டனர் என்பர். யோக வித்தையில் இவர்கள் தனிச் சிறப்புடன் போற்றப் படுகின்றனர். இப்பகுதியில் யோகக் கலையில் சப்தமாதர்கள் பெற்றுள்ள நிலைகளைக் காணலாம்.
சப்தமாதர்கள் வழிபாடு கிராமியக் காவல் தெய்வ வழிபாடாக நமக்குத் தோன்றினாலும், யோகக் கலையில் சாதகர்களுக்குக் குண்டலினி சக்தி விழித்தெழுந்து பயணிக்கும் பல்வேறு நிலைகளில்ந வீற்றிருந்து அருள்புரியும் தெய்வங்களாகக் கூறப்படுகின்றன. யோக வித்தை பயிலும், சாதகன், அதன் முழுப்பலனையும் சப்தமாதர்களின் துணையின்றிப் பெற முடியாது என்பது சாதகர்களின் கருத்து.
மானுடன் உடலில் யோக நிலைகளைக் குறிக்கும் வகையில் ஆறு சக்கரங்கள் உள்ளன. இவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா எனப்படுகின்றன. இவற்றை அடுத்து கபாலவாயிலும், அதைத் தாண்டி தலையின் உச்சி மீது தலைகீழாக மலர்ந்துள்ள ஆயிரம் இதழ் தாமரையான பிரமரந்திரம் எனப்படும் தலமும் உள்ளன.
சாதகனின் அரிய முயற்சியால் மூலாதாரத்தில் உறங்கும் நிலையில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியானது யோகக் கனலாலா விழிப்புற்று, சுவாதிஷ்டானம் முதலிய ஆதாரங்களைக் கடந்து பிரமரந்திரத்தில் உள்ள தாமரையை மலரச் செய்து அதில் வாசம் செய்யும் சிவனிடம் இணைகிறது. அப்பொழுது பெருகும் அமிர்தம் உடலெங்கும் பரவுகிறது. அவ்வேளையில் பேரின்பம் தோன்றும். எல்லையற்ற அந்த இன்பத்தில் சாதகனை நிலைத்திருக்கச் செய்வதே யோகக் கலையின் அற்புத நிலையாகும். யோக நூல்கள் குண்டலினி சக்தி இருக்கும் இடமான மூலாதாரமானது முக்கோண வடிவில் மாணிக்கம் பால் செந்நிறத்தில் இருப்பதாகக் கூறுகின்றன. மூலாதாரத்தின் தெய்வங்கள் விநாயகரும், பிராமியுமாவர். பிராமி சாதகனுக்கு யோகக் கலையின் நுணுக்கங்களை அறிவிக்க விநாயகர் மூச்சுப் பயிற்சியால் உண்டாகும் யோகக் கனலால் குண்டலினி சக்தியை எழுப்புகிறார் இந்த ஞானம் அம்சமந்திரம் எனப்படும். இந்த மந்திரத்தைக் குறிக்கும் அன்ன வடிவை பிராமி வாகனமாகக் கொண்டுள்ளாள். மூலாதாரத்தின் சக்தி பிராமி ஆவாள். இங்கு சாதகனுக்கு தியான வேளையில் கரும்சிவப்பு நிறம் உடலெங்கும் பரவி இருப்பது போல் தோன்றும்.
அடுத்ததான சுவாதிஷ்டானமானது சதுர வடிவில், நடுவில் ஆறிதழ் கொண்ட தாமரையாக விளங்குகிறது. இதன் தெய்வம் பிரம்மாவும், சரஸ்வதியுமாவர். இவர்களுடன் இங்கு மகேஸ்வரியும் வீற்றிருக்கிறாள். யோக சாதகனுக்கு மகேசுவரி அளவற்ற ஆற்றலைத் தருகிறாள். இந்த இடம் செம்பொன் மஞ்சள் நிறமாகும் (ஆரஞ்சு வண்ணம்).
சுவாதிஷ்டானத்தைக் குண்டலினி சக்தி அடையும்போது அங்கு வீற்றிருக்கும் மகேசுவரி அருள்புரிகிறாள். அவளுடைய அருளுடன் குண்டலினி சக்தி விரைந்து மேலெழுந்து மணிபூரகத்தை அடைகிறது.
மணிபூரகத்தின் தெய்வம் கௌமாரி. மூன்றாம்பிறை வடிவிலான இதன் மத்தியில் பத்திதழ்க் கமலம் உள்ளது. பசிய மஞ்சள் நிறமான இவ்விடத்தின் கடவுளர் மகாலட்சுமி, மகாவிஷ்ணு ஆவார். மணிபூரகத்தில் கௌமாரியின் அருள்பெற்று, அதையடுத்த யோகஸ்தானமான அனாகதம் என்னும் சக்கரத்தை அடையும் குண்டலினி சக்தியை வைஷ்ணவி தேவி சிறப்பிக்கச் செய்கிறாள்.
அநாகதம் பச்சை வண்ணத்தில் முக்கோண வடிவில் திகழ இதனுள் பன்னிரண்டு இதழ்த் தாமரை உள்ளது. இங்கு உருத்திரனும் உருத்திராணியும் வீற்றிருக்கின்றனர். யோக சக்தியான வைஷ்ணவியின் அருளுடன் அநாகதத்திலிருந்து ஐந்தாம் நிலையமான விசுக்தித் தானத்தை குண்டலினி சக்தி எட்டும்போது இங்கு வீற்றிருக்கும் வாராகியின் அருள் கிடைக்கிறது. விசுக்தித்தானம் நீலநிறமானது. அறு கோணத்தின் நடுவில் பதினான்கு இதழ்க்கமலம் கொண்டது. அதில் மகேஸ்வரன் மகேஸ்வரியுடன் வீற்றிருக்கிறார். விசுக்தியில் ஆதார யோக சக்தியான வாராகி வீற்றிருக்கிறாள். அவளது அருள் பெற்று விசுக்தியிலிருந்து புருவ மத்தியாகிய ஆக்ஞா சக்கரத்தை குண்டலினி சக்தி அடைய இந்திராணியின் அருள் உதவுகிறது.
ஆக்ஞா சக்கரம் அறைவட்ட வடிவில் வெளிர் நீலத்தில் ஒளிர்வது. இதன் நடுவே மூன்றிதழ் தாமரை இருக்க, அங்கு சதாசிவர் மனோன்மணியுடன் விளங்குகிறார். அவன் அருளால் சாதகனுக்கு அஷ்டமாசித்திகள் கை வருகின்றன. உலகிலுள்ள அனைத்த சுகங்களும் அவன் வசமாகும். இந்திரனுக்கு இணையான போகங்களை இந்த சக்தியின் பயனால் அடைவர். பெரும்பாலான சாதகர்கள் இந்தச் சுகங்களில் மயங்கி கீழேயே சுழன்று கொண்டிருக்கின்றனர்.
இதைக் கடந்து கபால வாயிலைத் திறக்க வேண்டும். இது யோகக் கோட்டையின் பிரதான வாயில். இது திறந்தால் மட்டுமே யோகபுரியான பிரமரந்திரத்தை அடைய முடியும். அதற்குச் சாதகனுக்கு பெரும் சக்தி தேவைப்படுகிறது. அந்தச் சக்தியை அருளும் தெய்வம் மகாசண்டி விளங்குகின்றாள். பயங்கர யுத்தத்தை நொடியில் செய்து முடிப்பவளான இத்தேவி சாதகன் கபால வாயிலை எளிதில் திறக்க உதவுகிறாள்.
கபால வாயில் திறந்ததும் குண்டலினி சக்தி நீல நிற ஒளியுடன் வெளிப்பட்டு, பிரமரந்திரத்தில் ஆயிரம் தாமரை இதழ்களுடன் விளங்க அங்கு வீற்றிருக்கும் சிவனிடம் ஐக்கியம் அடைந்து விடுகிறது. அவ்வேளையில் அந்த தாமரை விரிய அதனை இடமாகக் கொண்டு அர்த்தநாரீசுவரராகப் பெருமான் நடனமாடுகிறார். ஆயிரம் இதழ் தாமரை மலரில் இருந்து பெருகும் ஆனந்த அமிர்தம் உயிரை நனைத்து அதற்கு அமரத் தன்மையை அளிக்கிறது.
இந்த யோக சாதனையின் நெடும்பாதையில் சாதகனுக்குப் பிரம்ம சாத்தன் துணை வருகிறான். சாதகன் (வாசிக்குதிøயாகிய) மூச்சுக் காற்றையே அவன் தனது குதிரையாகக் கொண்டு உயிரின் துணையான குண்டலினி சக்தியின் பயணத்தைச் சிறப்பாக முடித்து உயிரை அமரத்துவம் பெற வைக்கிறான். எனவே சப்தமாதர்களுடன் அவனை யோக பட்டையம் தரித்த யோகேசுவரனாக அமைத்துள்ளனர். இவன் தலைமுடி வட்டணையாக முடியப்பட்டுள்ளது. அதில் கங்கை இளம்பிறை ஆகியன உள்ளன.
சப்தமாதர்களை யோக நாயகியராகக் கொண்டாடும் மரபு நெடுங்காலமாக உள்ளது. யோகசாதகர்கள் சப்தமாதர்களைச் சிறப்புடன் வழிபடுகின்றனர்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
சப்தமாதர்கள் யோகநாயகியர்--Source:- Kalaimagal magazine June'12
பாரத தேசத்தின் செய்வீகக் கலைகளில் யோகக் கலையும் ஒன்று. யோகம் என்பதற்கு இணைப்பது என்பது பொருள். இறைவனோடு நம்மை இணைக்கும் கலை, யோகக் கலை. உலகைப் படைத்து, காத்து, அழித்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் மும்மூர்த்திகளும் யோகத்தில் நிலைபெற்றவர்களாக விளங்குகின்றனர். இவர்களை யோகப்பிரம்மன், யோக நாராயணர் யோகேஸ்வரன் என்று அன்பர்கள் அழைக்கின்றனர்.
யோக வித்தையானது, இறைவனின் முழு அருளையும் சாதகனுக்கு எளிதில் வழங்கவல்லது. அன்பர்களுக்கு யோகவித்தையை எளிதில் சிந்திக்கச் செய்பவளாக இருப்பதால் அம்பிகை யோக நாயகி என்று அழைக்கப்படுகிறார். திருப்பெருந்துறையில் அம்பிகையை யோகநாயகியாகக் காண்கிறோம். யோக நாயகியின் பரிவாரத் தெய்வங்களாக அஷ்டமாதர்கள் உள்ளனர்.
அந்தகாசுரனை அழிக்க அஷ்டமாதர்களைச் சிவபெருமான் தோற்றுவித்திருந்த போதிலும், பின்னாளில் அவர்கள் சிவபெருமானை வழிபட்டு யோகக் கலையின் தெய்வங்களாகி விட்டனர் என்பர். யோக வித்தையில் இவர்கள் தனிச் சிறப்புடன் போற்றப் படுகின்றனர். இப்பகுதியில் யோகக் கலையில் சப்தமாதர்கள் பெற்றுள்ள நிலைகளைக் காணலாம்.
சப்தமாதர்கள் வழிபாடு கிராமியக் காவல் தெய்வ வழிபாடாக நமக்குத் தோன்றினாலும், யோகக் கலையில் சாதகர்களுக்குக் குண்டலினி சக்தி விழித்தெழுந்து பயணிக்கும் பல்வேறு நிலைகளில்ந வீற்றிருந்து அருள்புரியும் தெய்வங்களாகக் கூறப்படுகின்றன. யோக வித்தை பயிலும், சாதகன், அதன் முழுப்பலனையும் சப்தமாதர்களின் துணையின்றிப் பெற முடியாது என்பது சாதகர்களின் கருத்து.
மானுடன் உடலில் யோக நிலைகளைக் குறிக்கும் வகையில் ஆறு சக்கரங்கள் உள்ளன. இவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா எனப்படுகின்றன. இவற்றை அடுத்து கபாலவாயிலும், அதைத் தாண்டி தலையின் உச்சி மீது தலைகீழாக மலர்ந்துள்ள ஆயிரம் இதழ் தாமரையான பிரமரந்திரம் எனப்படும் தலமும் உள்ளன.
சாதகனின் அரிய முயற்சியால் மூலாதாரத்தில் உறங்கும் நிலையில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியானது யோகக் கனலாலா விழிப்புற்று, சுவாதிஷ்டானம் முதலிய ஆதாரங்களைக் கடந்து பிரமரந்திரத்தில் உள்ள தாமரையை மலரச் செய்து அதில் வாசம் செய்யும் சிவனிடம் இணைகிறது. அப்பொழுது பெருகும் அமிர்தம் உடலெங்கும் பரவுகிறது. அவ்வேளையில் பேரின்பம் தோன்றும். எல்லையற்ற அந்த இன்பத்தில் சாதகனை நிலைத்திருக்கச் செய்வதே யோகக் கலையின் அற்புத நிலையாகும். யோக நூல்கள் குண்டலினி சக்தி இருக்கும் இடமான மூலாதாரமானது முக்கோண வடிவில் மாணிக்கம் பால் செந்நிறத்தில் இருப்பதாகக் கூறுகின்றன. மூலாதாரத்தின் தெய்வங்கள் விநாயகரும், பிராமியுமாவர். பிராமி சாதகனுக்கு யோகக் கலையின் நுணுக்கங்களை அறிவிக்க விநாயகர் மூச்சுப் பயிற்சியால் உண்டாகும் யோகக் கனலால் குண்டலினி சக்தியை எழுப்புகிறார் இந்த ஞானம் அம்சமந்திரம் எனப்படும். இந்த மந்திரத்தைக் குறிக்கும் அன்ன வடிவை பிராமி வாகனமாகக் கொண்டுள்ளாள். மூலாதாரத்தின் சக்தி பிராமி ஆவாள். இங்கு சாதகனுக்கு தியான வேளையில் கரும்சிவப்பு நிறம் உடலெங்கும் பரவி இருப்பது போல் தோன்றும்.
அடுத்ததான சுவாதிஷ்டானமானது சதுர வடிவில், நடுவில் ஆறிதழ் கொண்ட தாமரையாக விளங்குகிறது. இதன் தெய்வம் பிரம்மாவும், சரஸ்வதியுமாவர். இவர்களுடன் இங்கு மகேஸ்வரியும் வீற்றிருக்கிறாள். யோக சாதகனுக்கு மகேசுவரி அளவற்ற ஆற்றலைத் தருகிறாள். இந்த இடம் செம்பொன் மஞ்சள் நிறமாகும் (ஆரஞ்சு வண்ணம்).
சுவாதிஷ்டானத்தைக் குண்டலினி சக்தி அடையும்போது அங்கு வீற்றிருக்கும் மகேசுவரி அருள்புரிகிறாள். அவளுடைய அருளுடன் குண்டலினி சக்தி விரைந்து மேலெழுந்து மணிபூரகத்தை அடைகிறது.
மணிபூரகத்தின் தெய்வம் கௌமாரி. மூன்றாம்பிறை வடிவிலான இதன் மத்தியில் பத்திதழ்க் கமலம் உள்ளது. பசிய மஞ்சள் நிறமான இவ்விடத்தின் கடவுளர் மகாலட்சுமி, மகாவிஷ்ணு ஆவார். மணிபூரகத்தில் கௌமாரியின் அருள்பெற்று, அதையடுத்த யோகஸ்தானமான அனாகதம் என்னும் சக்கரத்தை அடையும் குண்டலினி சக்தியை வைஷ்ணவி தேவி சிறப்பிக்கச் செய்கிறாள்.
அநாகதம் பச்சை வண்ணத்தில் முக்கோண வடிவில் திகழ இதனுள் பன்னிரண்டு இதழ்த் தாமரை உள்ளது. இங்கு உருத்திரனும் உருத்திராணியும் வீற்றிருக்கின்றனர். யோக சக்தியான வைஷ்ணவியின் அருளுடன் அநாகதத்திலிருந்து ஐந்தாம் நிலையமான விசுக்தித் தானத்தை குண்டலினி சக்தி எட்டும்போது இங்கு வீற்றிருக்கும் வாராகியின் அருள் கிடைக்கிறது. விசுக்தித்தானம் நீலநிறமானது. அறு கோணத்தின் நடுவில் பதினான்கு இதழ்க்கமலம் கொண்டது. அதில் மகேஸ்வரன் மகேஸ்வரியுடன் வீற்றிருக்கிறார். விசுக்தியில் ஆதார யோக சக்தியான வாராகி வீற்றிருக்கிறாள். அவளது அருள் பெற்று விசுக்தியிலிருந்து புருவ மத்தியாகிய ஆக்ஞா சக்கரத்தை குண்டலினி சக்தி அடைய இந்திராணியின் அருள் உதவுகிறது.
ஆக்ஞா சக்கரம் அறைவட்ட வடிவில் வெளிர் நீலத்தில் ஒளிர்வது. இதன் நடுவே மூன்றிதழ் தாமரை இருக்க, அங்கு சதாசிவர் மனோன்மணியுடன் விளங்குகிறார். அவன் அருளால் சாதகனுக்கு அஷ்டமாசித்திகள் கை வருகின்றன. உலகிலுள்ள அனைத்த சுகங்களும் அவன் வசமாகும். இந்திரனுக்கு இணையான போகங்களை இந்த சக்தியின் பயனால் அடைவர். பெரும்பாலான சாதகர்கள் இந்தச் சுகங்களில் மயங்கி கீழேயே சுழன்று கொண்டிருக்கின்றனர்.
இதைக் கடந்து கபால வாயிலைத் திறக்க வேண்டும். இது யோகக் கோட்டையின் பிரதான வாயில். இது திறந்தால் மட்டுமே யோகபுரியான பிரமரந்திரத்தை அடைய முடியும். அதற்குச் சாதகனுக்கு பெரும் சக்தி தேவைப்படுகிறது. அந்தச் சக்தியை அருளும் தெய்வம் மகாசண்டி விளங்குகின்றாள். பயங்கர யுத்தத்தை நொடியில் செய்து முடிப்பவளான இத்தேவி சாதகன் கபால வாயிலை எளிதில் திறக்க உதவுகிறாள்.
கபால வாயில் திறந்ததும் குண்டலினி சக்தி நீல நிற ஒளியுடன் வெளிப்பட்டு, பிரமரந்திரத்தில் ஆயிரம் தாமரை இதழ்களுடன் விளங்க அங்கு வீற்றிருக்கும் சிவனிடம் ஐக்கியம் அடைந்து விடுகிறது. அவ்வேளையில் அந்த தாமரை விரிய அதனை இடமாகக் கொண்டு அர்த்தநாரீசுவரராகப் பெருமான் நடனமாடுகிறார். ஆயிரம் இதழ் தாமரை மலரில் இருந்து பெருகும் ஆனந்த அமிர்தம் உயிரை நனைத்து அதற்கு அமரத் தன்மையை அளிக்கிறது.
இந்த யோக சாதனையின் நெடும்பாதையில் சாதகனுக்குப் பிரம்ம சாத்தன் துணை வருகிறான். சாதகன் (வாசிக்குதிøயாகிய) மூச்சுக் காற்றையே அவன் தனது குதிரையாகக் கொண்டு உயிரின் துணையான குண்டலினி சக்தியின் பயணத்தைச் சிறப்பாக முடித்து உயிரை அமரத்துவம் பெற வைக்கிறான். எனவே சப்தமாதர்களுடன் அவனை யோக பட்டையம் தரித்த யோகேசுவரனாக அமைத்துள்ளனர். இவன் தலைமுடி வட்டணையாக முடியப்பட்டுள்ளது. அதில் கங்கை இளம்பிறை ஆகியன உள்ளன.
சப்தமாதர்களை யோக நாயகியராகக் கொண்டாடும் மரபு நெடுங்காலமாக உள்ளது. யோகசாதகர்கள் சப்தமாதர்களைச் சிறப்புடன் வழிபடுகின்றனர்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam