Post by Sumi on Oct 8, 2012 9:13:16 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 15 of 21
வேதங்களை மட்டும் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்று வைத்திருந்தார்களோ, அதற்கும் இதே கதிதான் உண்டாகியிருக்கும். வேத சப்தங்கள் லோகத்தில் இருந்துகொண்டு, சமஸ்த ஜீவராசிகளுக்கு க்ஷேமத்தைக் கொடுப்பதற்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.
எழுதி வைத்துவிட்டால் அசிரத்தை வந்துவிடும் என்று நம் முன்னோர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதத்தை எழுதிப் படிப்பவன் (லிகித பாடகன்) அதமன் என்று வைத்தார்கள்.தமுழிலோ வேதத்துக்கு எழுதாக் கிளவி என்றே பெயர். ஸம்ஸ்கிருதத்தில் வேதத்துக்கு ஸ்ருதி என்று ஒரு பெயர். ஸ்ருதி என்றாலும் காதால் கேட்கப்பட்ட வேண்டியது, அதாவது எழுத்தில் படிக்கக்கூடாதது என்றே அர்த்தம். வாயால் சொல்லி, காதால் கேட்டு மனப்பாடம் பண்ணுவது என்பதால்தான் இது பகுதி நேர (part- time ) வேலையில்லாமல் முழு நேர (whole time ) வேலையாயிற்று. ஒருத்தர் பாதம் பாதமாக சொல்லிக் கொடுப்பதும், சிஷ்யர்கள் ஒவ்வொரு பாதத்தையும் இரண்டு முறை ஸந்தை சொல்லுவதுமாக, வேத சப்தமானது சூழல் முழுதும் நிரம்பப் பரவிவந்தது. இப்படி எத்தனையோ ஆயிரம் தலைமுறைகள் பெரிய சமுத்திரமாக விரிந்து கிடக்கிற வேத சாகைகளை வாய்மொழியாகவே வாழ வைத்து இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை கொண்டு வந்துவிட்டார்கள். இந்த லக்ஷம் காலப் பயிரை நமக்கு பகவதாக்ஞையாக வந்த கடமையை நாம் நாசம் செய்துவிட்டால் அதைவிடப் பாபம் வேறில்லை.
வேதம் போய்விட்டால், அதற்கப்புறம் பிராம்மணன் என்று தனி ஜாதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்போது, பார்ப்பானே வெளியே போ என்று சொல்கிற மாதிரி எங்கேயாவது, குயவனே வெளியே போ. வண்ணானே வெளியே போ என்கிற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோமா. மாறாகக் குயவர்களோ வண்ணார்களோ திடீரென்று ஒர் ஊரைவிட்டுப் போகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாவது இருத்தி வைத்துக் கொள்வார்கள். காரணம் என்ன. குயவனால், வண்ணானால் சமூகத்திற்குப் பிரயோஜனம் இருக்கிறது.
(to be continued.....)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 15 of 21
வேதங்களை மட்டும் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்று வைத்திருந்தார்களோ, அதற்கும் இதே கதிதான் உண்டாகியிருக்கும். வேத சப்தங்கள் லோகத்தில் இருந்துகொண்டு, சமஸ்த ஜீவராசிகளுக்கு க்ஷேமத்தைக் கொடுப்பதற்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.
எழுதி வைத்துவிட்டால் அசிரத்தை வந்துவிடும் என்று நம் முன்னோர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதத்தை எழுதிப் படிப்பவன் (லிகித பாடகன்) அதமன் என்று வைத்தார்கள்.தமுழிலோ வேதத்துக்கு எழுதாக் கிளவி என்றே பெயர். ஸம்ஸ்கிருதத்தில் வேதத்துக்கு ஸ்ருதி என்று ஒரு பெயர். ஸ்ருதி என்றாலும் காதால் கேட்கப்பட்ட வேண்டியது, அதாவது எழுத்தில் படிக்கக்கூடாதது என்றே அர்த்தம். வாயால் சொல்லி, காதால் கேட்டு மனப்பாடம் பண்ணுவது என்பதால்தான் இது பகுதி நேர (part- time ) வேலையில்லாமல் முழு நேர (whole time ) வேலையாயிற்று. ஒருத்தர் பாதம் பாதமாக சொல்லிக் கொடுப்பதும், சிஷ்யர்கள் ஒவ்வொரு பாதத்தையும் இரண்டு முறை ஸந்தை சொல்லுவதுமாக, வேத சப்தமானது சூழல் முழுதும் நிரம்பப் பரவிவந்தது. இப்படி எத்தனையோ ஆயிரம் தலைமுறைகள் பெரிய சமுத்திரமாக விரிந்து கிடக்கிற வேத சாகைகளை வாய்மொழியாகவே வாழ வைத்து இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை கொண்டு வந்துவிட்டார்கள். இந்த லக்ஷம் காலப் பயிரை நமக்கு பகவதாக்ஞையாக வந்த கடமையை நாம் நாசம் செய்துவிட்டால் அதைவிடப் பாபம் வேறில்லை.
வேதம் போய்விட்டால், அதற்கப்புறம் பிராம்மணன் என்று தனி ஜாதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்போது, பார்ப்பானே வெளியே போ என்று சொல்கிற மாதிரி எங்கேயாவது, குயவனே வெளியே போ. வண்ணானே வெளியே போ என்கிற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோமா. மாறாகக் குயவர்களோ வண்ணார்களோ திடீரென்று ஒர் ஊரைவிட்டுப் போகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாவது இருத்தி வைத்துக் கொள்வார்கள். காரணம் என்ன. குயவனால், வண்ணானால் சமூகத்திற்குப் பிரயோஜனம் இருக்கிறது.
(to be continued.....)