Post by radha on Oct 4, 2012 7:33:43 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
யுகம் வேறு; ஸ்லோகம் ஒன்று!
ராமர், ஸ்ரீகிருஷ்ணர் இருவரும் ஒரே ஸ்லோகத்தை உபதேசித்தனர் என்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம், ஸ்ரீராமாயணத்தில் இருமுறையும், மகாபாரதத்தில் ஒருமுறையும் அதே ஸ்லோகம் வருகிறது. திரேதாயுகத்தில் ஸ்ரீராமன் சொன்ன அதே ஸ்லோகத்தை, த்வாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனும் சொல்லியிருக்கிறார்.
வால்மீகி முனிவர் புனைந்த ஸ்லோகத்தை, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, வியாச பகவானும் விவரித்திருப்பது அந்த ஸ்லோகத்தின் மகத்துவத்தைக் குறிக்கிறது.
ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தின் கடைசி பாகம் 105வது அத்தியாயத்தில் ஸ்ரீராமன், பரதன் சந்திப்பு; பரதன் ஸ்ரீராமனை மறுபடி அயோத்திக்கு வந்து ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறான். அதை மறுக்கும்போது, ஸ்ரீராமன் முதல்முறை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்கிறார். உலகத்தின் நிலையாமை மற்றும் தவிர்க்க முடியாத நான்கு விஷயங்கள் இதில் விவரிக்கப்படுகின்றன.
மனிதன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு பல பொருட்களைச் சேர்த்து வைக்கிறான்; கடைசியில் ஒரு நாள் அனைத்தையும் விட்டுவிட்டுப் போக வேண்டும். எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும், ஒருநாள் ஓய்வு பெற வேண்டும். வாழ்வின் எல்லா உறவுகளும் (தாய் – தந்தை, மனைவி – மக்கள், உறவினர், நண்பர்கள்) ஒருநாள் பிரியவேண்டும். இந்த மூன்றுக்கும் காரணம் பிறப்பு, இறப்பு.
இதே ஸ்லோகத்தைத் தமிழில் சொன்னால்:
‘பொருள் சேர்த்து வைப்பது
இழப்பதற்காக;
மேலே ஏறுவது கீழிறங்குவதற்காக;
ஒன்று சேர்வது பிரிந்து போவதற்காக;
பிறப்பது இறப்பதற்காக.’
அதனால், ஹே பரதா! நான் நிலையற்ற அரச பதவிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. உன் தாயின் விருப்பப்படி, நீ அயோத்தி அரசனாக ராஜ்யபாரம் செய்” என்று ஸ்ரீராமன் உபதேசித்தார்.
அடுத்து, ராமாயணத்திலேயே உத்தர காண்டம் கடைசிப் பகுதியில் 52வது அத்தியாயத்தில் ஸ்ரீராமனின் ஆக்ஞைப்படி, சீதையைக் காட்டில் விட்டுவிட்டு, அயோத்தி அரண்மனையை அடைகிறான் லக்ஷ்மணன். தன்னை வணங்கிய தம்பியின் முகத்தில் கப்பிக் கொண்டிருந்த விவரிக்க இயலாத சோகத்தைக் கண்டு, ஸ்ரீராமன் மேலே சொல்லப்பட்ட அதே ஸ்லோகத்தைச் சொல்லி, அவனைத் தேற்றுகிறார் ராமர்.
விதியின் வழி இதுதான். அதனால் புத்திமானானவன் மனைவி, மக்கள், நண்பர்கள், செல்வம் இவற்றின்மேல் அதிகப் பற்று வைக்கக்கூடாது; ஏனெனில் அவை ஒருநாள் நம்மை விட்டுப் போவது திண்ணம்” என்று ஸ்ரீராமன் லக்ஷ்மணனுக்கு உபதேசிக்கிறார்.
அனுகீதோபதேசம்: மஹாபாரத யுத்தம் முடிந்த பின், 14வது பர்வம் ‘அஸ்வ மேதிக பர்வ’த்தில் அனுகீதோபதேசத்தில் இதே ஸ்லோகம் வருகிறது. யுத்தம் முடிந்தபிறகு, ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் லோகாபிராமமாகப் பேசிக் கொண்டிருக்கையில், அர்ஜுனன் யுத்த களத்தில் உபதேசித்த பகவத் கீதையை மறுபடியும் கேட்க வேண்டுமென பிரார்த்திக்கிறான். அப்போது சொன்னதே அனு கீதை.
உலகில் எல்லாமே ஆதி, அந்தம் உள்ளவை. ஆனால், ஞானம் மட்டும் அழிவற்றது என்ற தத்துவத்தை விளக்க 45வது அத்தியாயத்தில், ‘சர்வே க்ஷயாந்தா’ என்கிற அதே ஸ்லோகத்தை உபதேசிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இந்த ஸ்லோகம் சாதகர்களுக்கு ஞானம், பக்தி, வைராக்கியம் தரவல்லது; தினமும் பாராயணம் செய்ய உகந்தது.
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
யுகம் வேறு; ஸ்லோகம் ஒன்று!
ராமர், ஸ்ரீகிருஷ்ணர் இருவரும் ஒரே ஸ்லோகத்தை உபதேசித்தனர் என்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம், ஸ்ரீராமாயணத்தில் இருமுறையும், மகாபாரதத்தில் ஒருமுறையும் அதே ஸ்லோகம் வருகிறது. திரேதாயுகத்தில் ஸ்ரீராமன் சொன்ன அதே ஸ்லோகத்தை, த்வாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனும் சொல்லியிருக்கிறார்.
வால்மீகி முனிவர் புனைந்த ஸ்லோகத்தை, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, வியாச பகவானும் விவரித்திருப்பது அந்த ஸ்லோகத்தின் மகத்துவத்தைக் குறிக்கிறது.
ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தின் கடைசி பாகம் 105வது அத்தியாயத்தில் ஸ்ரீராமன், பரதன் சந்திப்பு; பரதன் ஸ்ரீராமனை மறுபடி அயோத்திக்கு வந்து ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறான். அதை மறுக்கும்போது, ஸ்ரீராமன் முதல்முறை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்கிறார். உலகத்தின் நிலையாமை மற்றும் தவிர்க்க முடியாத நான்கு விஷயங்கள் இதில் விவரிக்கப்படுகின்றன.
மனிதன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு பல பொருட்களைச் சேர்த்து வைக்கிறான்; கடைசியில் ஒரு நாள் அனைத்தையும் விட்டுவிட்டுப் போக வேண்டும். எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும், ஒருநாள் ஓய்வு பெற வேண்டும். வாழ்வின் எல்லா உறவுகளும் (தாய் – தந்தை, மனைவி – மக்கள், உறவினர், நண்பர்கள்) ஒருநாள் பிரியவேண்டும். இந்த மூன்றுக்கும் காரணம் பிறப்பு, இறப்பு.
இதே ஸ்லோகத்தைத் தமிழில் சொன்னால்:
‘பொருள் சேர்த்து வைப்பது
இழப்பதற்காக;
மேலே ஏறுவது கீழிறங்குவதற்காக;
ஒன்று சேர்வது பிரிந்து போவதற்காக;
பிறப்பது இறப்பதற்காக.’
அதனால், ஹே பரதா! நான் நிலையற்ற அரச பதவிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. உன் தாயின் விருப்பப்படி, நீ அயோத்தி அரசனாக ராஜ்யபாரம் செய்” என்று ஸ்ரீராமன் உபதேசித்தார்.
அடுத்து, ராமாயணத்திலேயே உத்தர காண்டம் கடைசிப் பகுதியில் 52வது அத்தியாயத்தில் ஸ்ரீராமனின் ஆக்ஞைப்படி, சீதையைக் காட்டில் விட்டுவிட்டு, அயோத்தி அரண்மனையை அடைகிறான் லக்ஷ்மணன். தன்னை வணங்கிய தம்பியின் முகத்தில் கப்பிக் கொண்டிருந்த விவரிக்க இயலாத சோகத்தைக் கண்டு, ஸ்ரீராமன் மேலே சொல்லப்பட்ட அதே ஸ்லோகத்தைச் சொல்லி, அவனைத் தேற்றுகிறார் ராமர்.
விதியின் வழி இதுதான். அதனால் புத்திமானானவன் மனைவி, மக்கள், நண்பர்கள், செல்வம் இவற்றின்மேல் அதிகப் பற்று வைக்கக்கூடாது; ஏனெனில் அவை ஒருநாள் நம்மை விட்டுப் போவது திண்ணம்” என்று ஸ்ரீராமன் லக்ஷ்மணனுக்கு உபதேசிக்கிறார்.
அனுகீதோபதேசம்: மஹாபாரத யுத்தம் முடிந்த பின், 14வது பர்வம் ‘அஸ்வ மேதிக பர்வ’த்தில் அனுகீதோபதேசத்தில் இதே ஸ்லோகம் வருகிறது. யுத்தம் முடிந்தபிறகு, ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் லோகாபிராமமாகப் பேசிக் கொண்டிருக்கையில், அர்ஜுனன் யுத்த களத்தில் உபதேசித்த பகவத் கீதையை மறுபடியும் கேட்க வேண்டுமென பிரார்த்திக்கிறான். அப்போது சொன்னதே அனு கீதை.
உலகில் எல்லாமே ஆதி, அந்தம் உள்ளவை. ஆனால், ஞானம் மட்டும் அழிவற்றது என்ற தத்துவத்தை விளக்க 45வது அத்தியாயத்தில், ‘சர்வே க்ஷயாந்தா’ என்கிற அதே ஸ்லோகத்தை உபதேசிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இந்த ஸ்லோகம் சாதகர்களுக்கு ஞானம், பக்தி, வைராக்கியம் தரவல்லது; தினமும் பாராயணம் செய்ய உகந்தது.
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam