Post by radha on Oct 1, 2012 8:27:18 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
பொன் உருக காய்ந்து மண் உருக மழை பொழியும் விந்தை மாதமே புரட்டாசி என்பர்
மாதங்களில் மார்கழியாக தானிருந்தும் கலியுகத்தில் புரட்டாசி மாதத்திற்கு ஏற்றம் தந்தவர் ஸ்ரீமந் நாராயணன். புனிதம் நிறைந்த பரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் அவரே வாமனனாக அவதரித்தார்.
* கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணலான பலராமனின் அவதாரமும் புரட்டசசி மாதம் துவிதியை திதியில் ஏற்பட்டது.
* புரட்டாசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கும் தலைவியான சரஸ்வதி தேவி அவதரித்தாள் என்கிறது புராணம்.
* புரட்டாசி மாதத்திற்கு கன்யா மாதம் என்ற பெயரும் உண்டு. சூரிய பகவான் இந்த கன்யா ராசியில் சஞ்சரிப்பதால் புரட்டாசி மாதம் கன்யா மாதமாயிற்று. கன்யா ராசியின் அதிபதி புதன் கிரகமாகும். ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதன் கிரகத்தின் அதிதேவதை மகா விஷ்ணு பிரத்யதி தேவதை ஸ்ரீமத் நாராயணனே ஆவார்.
*புரட்டாசி திங்களில் வந்த மங்களமான ஒரு சனிக்கிறமையன்று தான் சனீஸ்வர பகவான் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதனால் புனிதாமான புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும்.
*புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்தை நிகழ்த்தி அசுரர்களை அழித்தார். எனவே புரட்டாசி மாதம் நிறைமதி நாளன்று சிவனுக்கு சிவப்பு பட்டாடை அணிவித்து நூறு புஷ்பராக மணிகளை மாலையாக கோத்து அத்துடன் கொன்றை மாலையணிவித்து அதிரசம், அபிஷேகம் செய்து வழிபட்டால் பொருட்செல்வம் பெருகி இன்பங்களை எண்ணிய வண்ணம் அடையலாம் என்கின்றன பக்தி நூல்கள்.
*திருப்பதியில் புரட்டாசியில் நடைபறும் பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாள் நடைபெறும் கருடோற்சவம் மிக முக்கியமானது. அந்த சமயத்தில் பயன்படுத்துவதற்காக பிரமாண்டமாக ஆறு குடைகளை தயாரித்து, திருப்பதிக்கு அனுப்பி பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். இந்த குடைகளை சென்னை ஆதிகேசவபெருமாள் கோயிலிருந்து திருப்பதிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும் வைபவத்தையே திருப்பதி குடை விழா என்கிறார்கள்.
* கருடோற்சவத்துக்கு குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
* திருப்பதிக்கு குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்போது ஆங்காங்கு உள்ள மக்கள் இந்த குடைகளை ஏழுமலையானின் அம்சமாகவே கருதி சகல மரியாதைகளும் செய்து வணங்குகிறார்கள்.
*குடைகள் கருடோற்சவத்தன்று மலையுச்சியை அடைந்ததும் கோயில் அது‘காரிகள் வரவேற்பளித்து குடைகளை பெற்று கொண்டு பதில் மரியாதையும் செய்கிறார்கள். அன்று இரவு ஏறுமலையான் கருடவாகனத்தில் வீதி வலம் வரும்போது இந்த குடைகளை பிடிக்கிறார்கள்.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
பொன் உருக காய்ந்து மண் உருக மழை பொழியும் விந்தை மாதமே புரட்டாசி என்பர்
மாதங்களில் மார்கழியாக தானிருந்தும் கலியுகத்தில் புரட்டாசி மாதத்திற்கு ஏற்றம் தந்தவர் ஸ்ரீமந் நாராயணன். புனிதம் நிறைந்த பரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் அவரே வாமனனாக அவதரித்தார்.
* கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணலான பலராமனின் அவதாரமும் புரட்டசசி மாதம் துவிதியை திதியில் ஏற்பட்டது.
* புரட்டாசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கும் தலைவியான சரஸ்வதி தேவி அவதரித்தாள் என்கிறது புராணம்.
* புரட்டாசி மாதத்திற்கு கன்யா மாதம் என்ற பெயரும் உண்டு. சூரிய பகவான் இந்த கன்யா ராசியில் சஞ்சரிப்பதால் புரட்டாசி மாதம் கன்யா மாதமாயிற்று. கன்யா ராசியின் அதிபதி புதன் கிரகமாகும். ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதன் கிரகத்தின் அதிதேவதை மகா விஷ்ணு பிரத்யதி தேவதை ஸ்ரீமத் நாராயணனே ஆவார்.
*புரட்டாசி திங்களில் வந்த மங்களமான ஒரு சனிக்கிறமையன்று தான் சனீஸ்வர பகவான் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதனால் புனிதாமான புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும்.
*புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்தை நிகழ்த்தி அசுரர்களை அழித்தார். எனவே புரட்டாசி மாதம் நிறைமதி நாளன்று சிவனுக்கு சிவப்பு பட்டாடை அணிவித்து நூறு புஷ்பராக மணிகளை மாலையாக கோத்து அத்துடன் கொன்றை மாலையணிவித்து அதிரசம், அபிஷேகம் செய்து வழிபட்டால் பொருட்செல்வம் பெருகி இன்பங்களை எண்ணிய வண்ணம் அடையலாம் என்கின்றன பக்தி நூல்கள்.
*திருப்பதியில் புரட்டாசியில் நடைபறும் பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாள் நடைபெறும் கருடோற்சவம் மிக முக்கியமானது. அந்த சமயத்தில் பயன்படுத்துவதற்காக பிரமாண்டமாக ஆறு குடைகளை தயாரித்து, திருப்பதிக்கு அனுப்பி பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். இந்த குடைகளை சென்னை ஆதிகேசவபெருமாள் கோயிலிருந்து திருப்பதிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும் வைபவத்தையே திருப்பதி குடை விழா என்கிறார்கள்.
* கருடோற்சவத்துக்கு குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
* திருப்பதிக்கு குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்போது ஆங்காங்கு உள்ள மக்கள் இந்த குடைகளை ஏழுமலையானின் அம்சமாகவே கருதி சகல மரியாதைகளும் செய்து வணங்குகிறார்கள்.
*குடைகள் கருடோற்சவத்தன்று மலையுச்சியை அடைந்ததும் கோயில் அது‘காரிகள் வரவேற்பளித்து குடைகளை பெற்று கொண்டு பதில் மரியாதையும் செய்கிறார்கள். அன்று இரவு ஏறுமலையான் கருடவாகனத்தில் வீதி வலம் வரும்போது இந்த குடைகளை பிடிக்கிறார்கள்.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam