Post by Sumi on Sept 30, 2012 7:24:32 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 7 of 21
எத்தனையோ கிரமத்துடன் இயங்கிவரும் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் போது இதையெல்லாம் செய்கிற பேறறிவு ஒன்ரு இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்தப பரமாத்மாவிடம்தான் நாம் பார்க்கிற சகல வஸ்துக்களும் நாம் கேட்கிற இத்தனை சப்தங்களும் உண்டாயிருக்கின்றன. முதலில் சப்தப் பிரபஞ்சம் ஆகாயத்தில் உம்டான பின்தான் நாம் கண்களால் பார்க்கிற பிரபஞ்சம் உம்டாயிற்று. ஆகாயத்தில் இந்த சப்தங்கள் அநைத்தும் இருக்கின்றன. வெளிப் பிரபஞ்சத்திலெல்லாம் மனிதனின் உடல் இருக்கின்றன. வெளியிலிருக்கிற ஆகாயம் ஜீவனின் இதயத்திலும் இருக்கிறது. யோகிகள் சமாதி நிலையில் இந்த ஹிருதயாகாசத்தை அநுபவிக்கிறார்கள். அப்போது உள், வெளி என்ற பேதம் நீங்கி, சகலமும் ஒன்றாகி விடுகின்றன. இந்த நிலையில் யோகிகளுக்கு ஆகாசத்திலுள்ள சப்தங்களைக் கிரகித்து லோகத்துக்குத் தர முடிகிறது. லோக க்ஷேமாந்தமான இந்த சப்த கோவைகளே வேத மந்திரங்களாகும். இவற்றை யாறும் உண்டாக்கவில்லை.
ஒவ்வொரு வேத மந்திரமும் ஒரு ரிஷியன் பேரில் இருந்தாலும், உண்மையில் அந்த அந்த மந்திரத்தை இயற்றவில்லை. ஒரு மந்திரத்துக்கு இன்னார் என்கிறபோது ஆகாசத்தில் அநாதியாக உள்ள அந்த ரிஷியே முதலில் கண்டு கொண்டு உலகுக்கு வெளியிட்டார் என்றே அர்த்தம். மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்) என்றுதாந் அர்த்தம் சொல்லியிருக்கிறது. மந்த்ரகர்தா (மந்த்ரத்தைச் செய்தவர்) என்றல்ல. நம் உடம்புக்குள் சுவாஸம் பலவிதமாக அசைந்து கொடுத்தே நம் வாழ்க்கை நடப்பதுபோல், இந்த சப்த அசைவுகளாலேயே பிரபஞ்ச வாழ்க்கை நடப்பதால் பரமாத்மாவின் மூச்சே வேத மந்திரங்கள். எனவே, இவையன்றி பரமாத்மா இல்லை. அதாவது, பரமாத்மாவைப் போலவே இவையும் அநாதியானவை.
இந்த வேத மந்திரங்களில் விச்ஷம் என்ன வென்றால், அர்த்தம் இல்லாமல் வெறும் சப்த ரூபத்திலேயே அவை லோக க்ஷேமத்தைச் செய்கின்றன. ஆனால் இதுமட்டுமில்லை. அவற்றுக்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது. சகல வேதங்களும் பரம தாத்பரியமாக, ஒரே சத்தியம்தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது என்று சொல்கின்றன. இது தவிர அவை சப்தங்களாக இருக்கிறபோதே அந்தந்த சப்தத்துக்குறிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்த தேவதையின் சாக்ஷ£த்காரத்தையும் அநுக்கிரகத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.
(to be continued...)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 7 of 21
எத்தனையோ கிரமத்துடன் இயங்கிவரும் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் போது இதையெல்லாம் செய்கிற பேறறிவு ஒன்ரு இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்தப பரமாத்மாவிடம்தான் நாம் பார்க்கிற சகல வஸ்துக்களும் நாம் கேட்கிற இத்தனை சப்தங்களும் உண்டாயிருக்கின்றன. முதலில் சப்தப் பிரபஞ்சம் ஆகாயத்தில் உம்டான பின்தான் நாம் கண்களால் பார்க்கிற பிரபஞ்சம் உம்டாயிற்று. ஆகாயத்தில் இந்த சப்தங்கள் அநைத்தும் இருக்கின்றன. வெளிப் பிரபஞ்சத்திலெல்லாம் மனிதனின் உடல் இருக்கின்றன. வெளியிலிருக்கிற ஆகாயம் ஜீவனின் இதயத்திலும் இருக்கிறது. யோகிகள் சமாதி நிலையில் இந்த ஹிருதயாகாசத்தை அநுபவிக்கிறார்கள். அப்போது உள், வெளி என்ற பேதம் நீங்கி, சகலமும் ஒன்றாகி விடுகின்றன. இந்த நிலையில் யோகிகளுக்கு ஆகாசத்திலுள்ள சப்தங்களைக் கிரகித்து லோகத்துக்குத் தர முடிகிறது. லோக க்ஷேமாந்தமான இந்த சப்த கோவைகளே வேத மந்திரங்களாகும். இவற்றை யாறும் உண்டாக்கவில்லை.
ஒவ்வொரு வேத மந்திரமும் ஒரு ரிஷியன் பேரில் இருந்தாலும், உண்மையில் அந்த அந்த மந்திரத்தை இயற்றவில்லை. ஒரு மந்திரத்துக்கு இன்னார் என்கிறபோது ஆகாசத்தில் அநாதியாக உள்ள அந்த ரிஷியே முதலில் கண்டு கொண்டு உலகுக்கு வெளியிட்டார் என்றே அர்த்தம். மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்) என்றுதாந் அர்த்தம் சொல்லியிருக்கிறது. மந்த்ரகர்தா (மந்த்ரத்தைச் செய்தவர்) என்றல்ல. நம் உடம்புக்குள் சுவாஸம் பலவிதமாக அசைந்து கொடுத்தே நம் வாழ்க்கை நடப்பதுபோல், இந்த சப்த அசைவுகளாலேயே பிரபஞ்ச வாழ்க்கை நடப்பதால் பரமாத்மாவின் மூச்சே வேத மந்திரங்கள். எனவே, இவையன்றி பரமாத்மா இல்லை. அதாவது, பரமாத்மாவைப் போலவே இவையும் அநாதியானவை.
இந்த வேத மந்திரங்களில் விச்ஷம் என்ன வென்றால், அர்த்தம் இல்லாமல் வெறும் சப்த ரூபத்திலேயே அவை லோக க்ஷேமத்தைச் செய்கின்றன. ஆனால் இதுமட்டுமில்லை. அவற்றுக்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது. சகல வேதங்களும் பரம தாத்பரியமாக, ஒரே சத்தியம்தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது என்று சொல்கின்றன. இது தவிர அவை சப்தங்களாக இருக்கிறபோதே அந்தந்த சப்தத்துக்குறிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்த தேவதையின் சாக்ஷ£த்காரத்தையும் அநுக்கிரகத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.
(to be continued...)