Post by radha on Sept 29, 2012 3:31:28 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
வெள்ளிமணி
--Dinamani
பொன்னும் மண்ணும் சமமே...
பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். அதிலும் இம்மாதத்தின் சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள். இந்த வரலாறு சுவாரஸ்யமானது.
மன்னன் தொண்டைமான் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். அவனுக்கு ஆலயம் எழுப்பி தினமும் பொன் மலர்களால் பூஜித்து வந்தான். இவ்வாறு ஒருநாள் பூஜிக்கும் வேளையில் பொன் மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுந்தன. அதிர்ச்சியடைந்த மன்னன் தொடர்ந்து பூஜையை நடத்த மண் மலர்களும் விழுந்த வண்ணம் இருந்தன. தனது பூஜையில் ஏதேனும் தவறு நடந்துவிட்டதோ என்ற அச்சம் தொண்டைமானுக்கு ஏற்பட்டது.
இது ஒருபுறமிருக்க, குருவை என்ற கிராமத்தில் பீமய்யா என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு கால் ஊனம். ஆனாலும் தமது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் நேர்மை தவறாதவன். திருமால் மீதும் குறைவில்லா பக்தி கொண்டவன். பரமனும் அவன் பக்திக்கு இரங்கி தனது திருவுருவத்தை அவனது கனவில் காட்டினார். இவ்வாறு பீமய்யாவின் கனவில் திருமால் தோன்றிய நாள் புரட்டாசி மாதம், சனிக்கிழமை. அகமகிழ்ந்த பீமய்யா கனவில் வந்த திருமாலின் உருவத்தை மண்ணால் செய்தான். மலர் தூவி வழிபட்டான். சனிக் கிழமை தோறும் தவறாமல் விரதம் இருந்தான். நாளாக நாளாக திருமாலின் மீது அளவிட முடியாத பக்தி பெருக, தொழில் செய்யும்போதே மாலவனின் நினைவில் ஆழ்ந்துவிடுவான். மண்பாண்டங்கள் செய்துகொண்டிருக்கும்போதே பெருமாளின் நினைவில் களி மண்ணையே மலர்களாக பாவித்து அர்ச்சிப்பான்.
இந்நிலையில் குழப்பத்திலிருந்த தொண்டைமானின் கனவில் தோன்றிய திருமால், ""எனது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. அதை நீ சென்று பார்த்தால் உனக்கு உண்மை புரியும்'' என்றார்.
தொண்டைமானும் பீமய்யா செய்யும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். தினமும் செய்வது போல் பீமய்யா தான் வடிவமைத்திருந்த பெருமாளின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே கண் மூடியபடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான். இதைக் கண்டு மெய் சிலிர்த்து, ஓடோடிச் சென்று பீமய்யாவை ஆரத் தழுவிய தொண்டைமான், ""நான் பொன் மலர்களால் பூஜித்தாலும் முழு பக்தியுடன் மண் மலர்களால் நீ செய்யும் பூஜையே வேங்கடவனைக் கவர்ந்துள்ளது'' என்றான். ""உன் பக்தியின் பெருமையை பிறர் சொல்ல என்றைக்கு நீ அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்'' என்று திருமால் கனவில் கூறியிருந்தபடி பீமய்யாவும் வைகுண்டம் அடைந்தான். இவ்வாறு உண்மையான பக்திக்கு முன்னால் பொன்னும், மண்ணும் வேறல்ல என்று பரந்தாமன் பீமய்யா மூலம் உணர்த்தினான். பீமய்யாவின் கனவில் அவன் காட்சியளித்த புரட்டாசி, சனிக்கிழமைக்கும் மகத்துவம் ஏற்பட்டது.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
வெள்ளிமணி
--Dinamani
பொன்னும் மண்ணும் சமமே...
பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். அதிலும் இம்மாதத்தின் சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள். இந்த வரலாறு சுவாரஸ்யமானது.
மன்னன் தொண்டைமான் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். அவனுக்கு ஆலயம் எழுப்பி தினமும் பொன் மலர்களால் பூஜித்து வந்தான். இவ்வாறு ஒருநாள் பூஜிக்கும் வேளையில் பொன் மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுந்தன. அதிர்ச்சியடைந்த மன்னன் தொடர்ந்து பூஜையை நடத்த மண் மலர்களும் விழுந்த வண்ணம் இருந்தன. தனது பூஜையில் ஏதேனும் தவறு நடந்துவிட்டதோ என்ற அச்சம் தொண்டைமானுக்கு ஏற்பட்டது.
இது ஒருபுறமிருக்க, குருவை என்ற கிராமத்தில் பீமய்யா என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு கால் ஊனம். ஆனாலும் தமது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் நேர்மை தவறாதவன். திருமால் மீதும் குறைவில்லா பக்தி கொண்டவன். பரமனும் அவன் பக்திக்கு இரங்கி தனது திருவுருவத்தை அவனது கனவில் காட்டினார். இவ்வாறு பீமய்யாவின் கனவில் திருமால் தோன்றிய நாள் புரட்டாசி மாதம், சனிக்கிழமை. அகமகிழ்ந்த பீமய்யா கனவில் வந்த திருமாலின் உருவத்தை மண்ணால் செய்தான். மலர் தூவி வழிபட்டான். சனிக் கிழமை தோறும் தவறாமல் விரதம் இருந்தான். நாளாக நாளாக திருமாலின் மீது அளவிட முடியாத பக்தி பெருக, தொழில் செய்யும்போதே மாலவனின் நினைவில் ஆழ்ந்துவிடுவான். மண்பாண்டங்கள் செய்துகொண்டிருக்கும்போதே பெருமாளின் நினைவில் களி மண்ணையே மலர்களாக பாவித்து அர்ச்சிப்பான்.
இந்நிலையில் குழப்பத்திலிருந்த தொண்டைமானின் கனவில் தோன்றிய திருமால், ""எனது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. அதை நீ சென்று பார்த்தால் உனக்கு உண்மை புரியும்'' என்றார்.
தொண்டைமானும் பீமய்யா செய்யும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். தினமும் செய்வது போல் பீமய்யா தான் வடிவமைத்திருந்த பெருமாளின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே கண் மூடியபடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான். இதைக் கண்டு மெய் சிலிர்த்து, ஓடோடிச் சென்று பீமய்யாவை ஆரத் தழுவிய தொண்டைமான், ""நான் பொன் மலர்களால் பூஜித்தாலும் முழு பக்தியுடன் மண் மலர்களால் நீ செய்யும் பூஜையே வேங்கடவனைக் கவர்ந்துள்ளது'' என்றான். ""உன் பக்தியின் பெருமையை பிறர் சொல்ல என்றைக்கு நீ அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்'' என்று திருமால் கனவில் கூறியிருந்தபடி பீமய்யாவும் வைகுண்டம் அடைந்தான். இவ்வாறு உண்மையான பக்திக்கு முன்னால் பொன்னும், மண்ணும் வேறல்ல என்று பரந்தாமன் பீமய்யா மூலம் உணர்த்தினான். பீமய்யாவின் கனவில் அவன் காட்சியளித்த புரட்டாசி, சனிக்கிழமைக்கும் மகத்துவம் ஏற்பட்டது.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam