Post by Sumi on Sept 26, 2012 8:17:41 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 3 of 21
ஏதோ சுவாரியஸ்யமாகப் பேச்சு கச்சேரி கேட்கலாம் என்ற அளவிலாவது, எத்தனையோ தினுசான அரசியல் (POLITICAL) மீட்டிங்குகள் இருக்கிறபோதுகூட, இங்கே என்னிடம் நீங்கள் வந்திருப்பதால் உங்களில் யாறும் இப்படித் தங்களை முழு rationalist ஆகச் (பகுத்தறிவாளர்) சொல்லிக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்து, வேதம் ஏன் சம்பிரதாயப்படி இனியும் இருக்க வேண்டும் என்பதற்குக்கூட காரணம் சொல்கிறேன். ஒரு வேளை அப்படியில்லாதவர்களாகளுக்குச் சாமியார் சொல்வதும் கொஞ்சம் சரியாக இருக்கும் போலிருக்கிறதே என்று தோன்றினாலும் தோன்றலாம்.
வேத சப்தம், வேத சப்தம் என்ற சப்தத்துக்கு முக்கியத்துவம் தருவதுதானே புரிபடாமல் இருக்கிறது. சரி, சப்தம் என்பது எப்படி உண்டாகிறது. எங்கே ஒரு அதிர்வு (vibration) சலனம் ( movement , motion ) இருந்தாலும் அங்கே சப்தம் உண்டாகி விடுகிறது. இது பகுத்தறிவு சாஸ்திரமான ஸயன்ஸே சொல்கிற விஷயம். தொனியில் சில விதமான சலனங்களை உண்டாக்கிப் பல தினுசான பேச்சுச் சப்தங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.
சப்தங்கள் காதுக்குக் கேட்கிறவையாகவே தோன்றுகின்றன. ஆனால் சிலவற்றைக் காதுக்குக் கேட்க முடியாத மின்சார அலைகளாக மாற்ற முடியும் என்று ரேடியோ, டெலிபோன் முதலியவற்றைப் பார்த்தால் தெரிகிறது. நாம் பார்ப்பது, கேட்பது எல்லாமே இந்த மின்சார அலைகள்தான். பார்க்கிறவனும் கேட்கிறவனும், அவனுடைய மூளையும்கூடத்தான் என்று சொல்கிற அளவுக்கு ஸயன்ஸ் கொண்டுவந்துவிட்டது. இது இருக்கட்டும்.
லோகத்தில் இத்தனை கோடி ஜட வஸ்துகள் மலையும், பூமியும், ஆறும், சமுத்திரமும் உண்டாயிருக்கின்றன. ஜீவராசிகள் விதவிதமாக உண்டாயிருக்கின்றன. இத்தனையும் எதிலிருந்தோதான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஏதோ ஒன்று இப்படி சிருஷ்டிக்கிறபோது பல தினுசாக அசைந்து கொடுத்து, எத்தனையோ சலனங்களின் மீதுதான் இத்தனையும் தோன்றியிருக்க வேண்டும். சலனத்துக்கெல்லாம் சப்தம் உண்டு என்றால், சிருஷ்டி முழுவதற்கும் முந்திப் பலவித சப்தங்கள் உண்டாயிருக்க வேண்டும். இந்த சிருஷ்டியில் ஒன்றுக்கொன்று வாழ்வளித்துக் கொள்கிறது. இப்படிப் பரஸ்பரம் போஷித்துக் கொள்கிறபோது பலவிதமான சலனங்கள் அல்லது சப்தங்கள் உண்டாக்கத்தான் வேண்டும். ஸ்தூலமாக காரியங்களில்தான் சலனம் இருக்கிறதென்று இல்லை. நாம் நினைத்தும்கூட ஒருவிதமான மின்சார கரெண்டின் ஒட்டம்தான் என்று ஸயன்ஸில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் நம்முடைய எண்ணம் ஒவ்வொன்றுக்கும்கூட ஒரு சலனமும் ஆனபடியால் சப்தமும் இருந்தாக வேண்டும். இந்த சப்தங்கள் ரொம்ப ரொம்ப சூக்ஷ்மமாக இருப்பதால் நம் காதுகளுக்குக் கேட்கவில்லை. பாக்டீரியா கிருமி நம் கண்ணுக்குத் தெரியவில்லை. மைக்ராஸ்கோப்பினால் பார்த்தால் அது தெரிகிறது. அப்படியே நம் காதுகளுக்குக் கேட்காத சூக்ஷ்ம சப்தங்கள் நிறைய இருக்கின்றன.
(to be continued....)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 3 of 21
ஏதோ சுவாரியஸ்யமாகப் பேச்சு கச்சேரி கேட்கலாம் என்ற அளவிலாவது, எத்தனையோ தினுசான அரசியல் (POLITICAL) மீட்டிங்குகள் இருக்கிறபோதுகூட, இங்கே என்னிடம் நீங்கள் வந்திருப்பதால் உங்களில் யாறும் இப்படித் தங்களை முழு rationalist ஆகச் (பகுத்தறிவாளர்) சொல்லிக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்து, வேதம் ஏன் சம்பிரதாயப்படி இனியும் இருக்க வேண்டும் என்பதற்குக்கூட காரணம் சொல்கிறேன். ஒரு வேளை அப்படியில்லாதவர்களாகளுக்குச் சாமியார் சொல்வதும் கொஞ்சம் சரியாக இருக்கும் போலிருக்கிறதே என்று தோன்றினாலும் தோன்றலாம்.
வேத சப்தம், வேத சப்தம் என்ற சப்தத்துக்கு முக்கியத்துவம் தருவதுதானே புரிபடாமல் இருக்கிறது. சரி, சப்தம் என்பது எப்படி உண்டாகிறது. எங்கே ஒரு அதிர்வு (vibration) சலனம் ( movement , motion ) இருந்தாலும் அங்கே சப்தம் உண்டாகி விடுகிறது. இது பகுத்தறிவு சாஸ்திரமான ஸயன்ஸே சொல்கிற விஷயம். தொனியில் சில விதமான சலனங்களை உண்டாக்கிப் பல தினுசான பேச்சுச் சப்தங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.
சப்தங்கள் காதுக்குக் கேட்கிறவையாகவே தோன்றுகின்றன. ஆனால் சிலவற்றைக் காதுக்குக் கேட்க முடியாத மின்சார அலைகளாக மாற்ற முடியும் என்று ரேடியோ, டெலிபோன் முதலியவற்றைப் பார்த்தால் தெரிகிறது. நாம் பார்ப்பது, கேட்பது எல்லாமே இந்த மின்சார அலைகள்தான். பார்க்கிறவனும் கேட்கிறவனும், அவனுடைய மூளையும்கூடத்தான் என்று சொல்கிற அளவுக்கு ஸயன்ஸ் கொண்டுவந்துவிட்டது. இது இருக்கட்டும்.
லோகத்தில் இத்தனை கோடி ஜட வஸ்துகள் மலையும், பூமியும், ஆறும், சமுத்திரமும் உண்டாயிருக்கின்றன. ஜீவராசிகள் விதவிதமாக உண்டாயிருக்கின்றன. இத்தனையும் எதிலிருந்தோதான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஏதோ ஒன்று இப்படி சிருஷ்டிக்கிறபோது பல தினுசாக அசைந்து கொடுத்து, எத்தனையோ சலனங்களின் மீதுதான் இத்தனையும் தோன்றியிருக்க வேண்டும். சலனத்துக்கெல்லாம் சப்தம் உண்டு என்றால், சிருஷ்டி முழுவதற்கும் முந்திப் பலவித சப்தங்கள் உண்டாயிருக்க வேண்டும். இந்த சிருஷ்டியில் ஒன்றுக்கொன்று வாழ்வளித்துக் கொள்கிறது. இப்படிப் பரஸ்பரம் போஷித்துக் கொள்கிறபோது பலவிதமான சலனங்கள் அல்லது சப்தங்கள் உண்டாக்கத்தான் வேண்டும். ஸ்தூலமாக காரியங்களில்தான் சலனம் இருக்கிறதென்று இல்லை. நாம் நினைத்தும்கூட ஒருவிதமான மின்சார கரெண்டின் ஒட்டம்தான் என்று ஸயன்ஸில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் நம்முடைய எண்ணம் ஒவ்வொன்றுக்கும்கூட ஒரு சலனமும் ஆனபடியால் சப்தமும் இருந்தாக வேண்டும். இந்த சப்தங்கள் ரொம்ப ரொம்ப சூக்ஷ்மமாக இருப்பதால் நம் காதுகளுக்குக் கேட்கவில்லை. பாக்டீரியா கிருமி நம் கண்ணுக்குத் தெரியவில்லை. மைக்ராஸ்கோப்பினால் பார்த்தால் அது தெரிகிறது. அப்படியே நம் காதுகளுக்குக் கேட்காத சூக்ஷ்ம சப்தங்கள் நிறைய இருக்கின்றன.
(to be continued....)