Post by Sumi on Sept 25, 2012 8:52:30 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 2 of 21
மற்ற தொழில்கள் நின்று போனால் சமூகம் பாதிக்கப் படுவதுபோல், வேத அத்யயனம் நின்றால் எப்படிப் பாதிக்கப்படும் என்று தெரியவில்லை.
இது புரிய வேண்டுமென்றால் வேதம் என்பது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவிவிஷயத்தை முழுக்க அறிவினால் ஆராய்ந்து மட்டும் பிரயோஜனம் இல்லை. அநுபவஸ்தர்கள் சொல்வதை நம்பினால்தான் உண்டு.
இப்படிச் சொன்னவுடனேயே ஆக்ஷேபனை வந்துவிடக் கூடும். அதெப்படி சார், நாங்கள் பகுத்தறிவாளிகள் (RATIONALISTS) முழுக்க எங்கள் அறிவுக்குள் அகப்படுகிறது என்றால் தான் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது. எல்லா விஷயங்களுமே மனுஷ்ய அறிவுக்குள் அகப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று எப்படி உரிமை கொண்டாடலாம். எத்தனையோ ஜீவராசிகளில் இவன் ஒருத்தன். இவனுடைய லாபரட்டரியில் நடக்கிற காரியங்கள் ஒரு மாட்டின் அறிவுக்குப் புரியுமா என் புத்திக்குப் புரியாததால் இந்த பெனதிக விதிகள் (LAWS) இருக்கவே முடியாது என்று மாடு சொல்லலாமா. மாடு வரைக்கும் போக வேண்டாம். மநுஷ்யர்களிலேயே ஃபிஸிக்ஸ் படிக்காதவர்களுக்கு அவை எப்படிப் புரியும். ஆனால், அதை நன்றாகப் படிப்பவர்கள் சொல்வதால், படிக்காதவர்களும் நம்புகிறார்கள். அவர்கள் செய்கிற உபகாரணங்களால் பிரத்யக்ஷமாக நடக்கிற காரியங்களைப் பார்த்து விதிகளை எல்லோருமே ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியே சாஸ்திரத்தை அநுஷ்த்தவர்கள் வேதத்தைப் பற்றிச் சொல்வதை நம்ப வேண்டும். இதுவரைக்கும் அது பிரத்யக்ஷமாகத் தந்திருக்கிற பலன்களிலிருந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரிய பிரத்யக்ஷ பலன் இதுவரை ஹிந்து சமூகம் எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் தாக்குப்பிடித்து விழாமலே இருக்கிற ஒரே பழைய மதம் என்பதும், இந்த மதத்தில்தான் லோகத்துக்குள்ளேயே, மிகஅதிகமான மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதுமே ஆகும். எங்கள் அறிவுக்கு வரவேண்டும் என்று ஜனங்கள் சொல்லாமல் நம்பி ஏற்றதாலேயே, இதுவரை சிரேயஸை அடைந்து வந்திருக்கிறார்கள்.
மனுஷ்ய அறிவின் எல்லையை அகண்டமாக ஆனவர்களே ரிஷிகள். அவர்களின் மூலமே வேத மந்திரங்கள் லோகத்துக்கு வந்திருக்கின்றன என்பது அடிப்படைக் கொள்கை. அம்மாதிரி மனுஷ்யர்கள் ஆத்ம சக்தி பெறவே முடியாது என்று சொல்லிவிட்டால், அப்புறம் பேச்சே இல்லை. பிரத்தியக்ஷமாக இருக்கிற மகான்களையும், ஸித்திமான்களையும் வேண்டுமானால் சுட்டிக்காட்டி, இவர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சக்திகள் இருக்கிறதே, இதைப் பார்த்தாவது நம்புங்கள் என்று சொல்லலாம். அவர்கள் செய்வதெல்லாம் மோசம். ஏமாற்று வித்தை என்று பதில் சொல்லிவிட்டால் பிறகு பேச்சில்லை. இப்போது நாம் இருக்கிற நிலையில் நம் புத்திக்கு என்ன எட்டுகிறதோ அதற்கு மேற்பட்டதாக எதுவும் இருக்க முடியாது என்பதேதான் ரொம்பவும் பகுத்தறிவற்ற வாதமாயிருக்கிறது. இதை அப்படிச் சொல்பவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
(to be continued....)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 2 of 21
மற்ற தொழில்கள் நின்று போனால் சமூகம் பாதிக்கப் படுவதுபோல், வேத அத்யயனம் நின்றால் எப்படிப் பாதிக்கப்படும் என்று தெரியவில்லை.
இது புரிய வேண்டுமென்றால் வேதம் என்பது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவிவிஷயத்தை முழுக்க அறிவினால் ஆராய்ந்து மட்டும் பிரயோஜனம் இல்லை. அநுபவஸ்தர்கள் சொல்வதை நம்பினால்தான் உண்டு.
இப்படிச் சொன்னவுடனேயே ஆக்ஷேபனை வந்துவிடக் கூடும். அதெப்படி சார், நாங்கள் பகுத்தறிவாளிகள் (RATIONALISTS) முழுக்க எங்கள் அறிவுக்குள் அகப்படுகிறது என்றால் தான் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது. எல்லா விஷயங்களுமே மனுஷ்ய அறிவுக்குள் அகப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று எப்படி உரிமை கொண்டாடலாம். எத்தனையோ ஜீவராசிகளில் இவன் ஒருத்தன். இவனுடைய லாபரட்டரியில் நடக்கிற காரியங்கள் ஒரு மாட்டின் அறிவுக்குப் புரியுமா என் புத்திக்குப் புரியாததால் இந்த பெனதிக விதிகள் (LAWS) இருக்கவே முடியாது என்று மாடு சொல்லலாமா. மாடு வரைக்கும் போக வேண்டாம். மநுஷ்யர்களிலேயே ஃபிஸிக்ஸ் படிக்காதவர்களுக்கு அவை எப்படிப் புரியும். ஆனால், அதை நன்றாகப் படிப்பவர்கள் சொல்வதால், படிக்காதவர்களும் நம்புகிறார்கள். அவர்கள் செய்கிற உபகாரணங்களால் பிரத்யக்ஷமாக நடக்கிற காரியங்களைப் பார்த்து விதிகளை எல்லோருமே ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியே சாஸ்திரத்தை அநுஷ்த்தவர்கள் வேதத்தைப் பற்றிச் சொல்வதை நம்ப வேண்டும். இதுவரைக்கும் அது பிரத்யக்ஷமாகத் தந்திருக்கிற பலன்களிலிருந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரிய பிரத்யக்ஷ பலன் இதுவரை ஹிந்து சமூகம் எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் தாக்குப்பிடித்து விழாமலே இருக்கிற ஒரே பழைய மதம் என்பதும், இந்த மதத்தில்தான் லோகத்துக்குள்ளேயே, மிகஅதிகமான மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதுமே ஆகும். எங்கள் அறிவுக்கு வரவேண்டும் என்று ஜனங்கள் சொல்லாமல் நம்பி ஏற்றதாலேயே, இதுவரை சிரேயஸை அடைந்து வந்திருக்கிறார்கள்.
மனுஷ்ய அறிவின் எல்லையை அகண்டமாக ஆனவர்களே ரிஷிகள். அவர்களின் மூலமே வேத மந்திரங்கள் லோகத்துக்கு வந்திருக்கின்றன என்பது அடிப்படைக் கொள்கை. அம்மாதிரி மனுஷ்யர்கள் ஆத்ம சக்தி பெறவே முடியாது என்று சொல்லிவிட்டால், அப்புறம் பேச்சே இல்லை. பிரத்தியக்ஷமாக இருக்கிற மகான்களையும், ஸித்திமான்களையும் வேண்டுமானால் சுட்டிக்காட்டி, இவர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சக்திகள் இருக்கிறதே, இதைப் பார்த்தாவது நம்புங்கள் என்று சொல்லலாம். அவர்கள் செய்வதெல்லாம் மோசம். ஏமாற்று வித்தை என்று பதில் சொல்லிவிட்டால் பிறகு பேச்சில்லை. இப்போது நாம் இருக்கிற நிலையில் நம் புத்திக்கு என்ன எட்டுகிறதோ அதற்கு மேற்பட்டதாக எதுவும் இருக்க முடியாது என்பதேதான் ரொம்பவும் பகுத்தறிவற்ற வாதமாயிருக்கிறது. இதை அப்படிச் சொல்பவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
(to be continued....)